Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். அல்லைப்பிட்டி மக்கள் தமது ஊரிலிருந்து இடம்பெயர்ந்து 15 பாரவுூர்திகளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். இவ்வாறு பாரவுூர்திகளில் இடம்பெயரும் மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் அவர்களும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களான UNICEF,UNHCR GTZ ,கரித்தாஸ், ஆகியனவும் வழித்துணை வழங்கியிருக்கின்றனர். இடம் பெயரும் மக்களை வழிமறித்த ஊர்காவற்துறைப்பொலிஸார் யாழ்ப்பாணத்திலுள்ள 512 வது படைப்பிரிவிற்கு இந்த இடப்பெயர்வு குறித்து அறிவித்ததை அடுத்து அங்கு வந்த நு}ற்றுக்கணக்கான இராணுவத்தினர் இடம்பெயரும் மக்கள் மீது விசாரணைகளையும், சோதனைக் கெடுபிடிகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த இடப்பெயர்வு குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.…

  2. உத்தேச தடை முயற்சி இறுதித்தீர்வுக்கு பாரிய பங்கம்: அன்ரன் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச தடையானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை எட்டுவதற்கு பெருந்தடையாக அமையும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் தீவிர பரிசீலனைகள் மற்றும் அவை தொடர்பான உத்தேச தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாலசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது, விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச தடையானது அமைதி முயற்சிகளின் தேக்க நிலைக்கான நிஜநாயகரான ம…

  3. தேசியத் தலைவருக்கு தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது: செ.வ.தமிழேந்தி தாயக விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு தமிழ்மக்கள் அனைவரும் தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தமிழேந்தி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நிதித்துறை கணக்காய்வுப் பொறுப்பாளர் அறவாணன் தலைமையில் சமகால அரசியல் கருத்தரங்கு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிதித்துறைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் சமகால அரசியல் நிலவரம் குறித்து செ.வ.தமிழேந்தி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய சிறப்புரையில் தெரிவித்துள்ளதாவது: தமிழினத்தை…

    • 2 replies
    • 1.9k views
  4. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் அமைதிச் சூழல் ஓரளவு துளிவிட்டபோதும், உருப்படியான முன்னேற்றத்தை அது அடையவில்லை. இத்தகையதொரு சூழல் ரணில் ஆட்சிக் காலத்தில் நிலவியது. ரணில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் சந்திரிகா அம்மையாரின் கைகளிலிருந்தபோது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தி பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்காது போர் நிறுத்த உடன்பாட்டை பலவீனப்படுத்துகின்ற அளவிற்குப் போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன. அவை கைச்சாத்திடப்பட்டன. அவ்வாறான ஒரு நிலையில் அரச தரப்பு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை மட்டும் நடாத்தி விட்டு நியாயப்படுத்த முடியாது. மாறாக விடுதலைப்புலிகளும் தாக்குதல் நடத்தலாம். கடந…

    • 0 replies
    • 1.5k views
  5. ஐரோப்பியம் ஒன்றிய தடை விதித்தால் அமைதி முயற்சிகளுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும்: பாலசிங்கம் எச்சரிக்கை சர்வதேசத்தின் மேலதிக எந்த ஒரு தடை நடவடிக்கையும் அது ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமைதி முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்மறையாக பாதிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கக் கூடும் என்ற செய்திகள் தொடர்பாக தமிழ்நெட் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தும் வகையிலான தென்னிலங்கை கடும்போக்காளர்களின் இந்த கோரிக்கையானது ஆயுத வழித்தீர்வை கைக்கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாகும். தமிழீழ விடுதல…

    • 13 replies
    • 2.6k views
  6. புலிகளுடன் தொடர்புடைய சொத்துக்கள், வங்கிக் கணக்குகளை உறைநிலையில் வைக்குக - ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடடிவக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணையகத்திடமும் அங்கத்துவ நாடாளுமன்றமிடமும் வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. 19 சரத்துக்களைக் கொண்டமைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானத்தின் 15வது சரத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வரிவிதிப்பதை சகல வழிகளிலும் தடுத்து நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தொடர்பு…

    • 1 reply
    • 1.9k views
  7. திருகோணமலையில் அரச பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு காரணமாக திருகோணமலையிலுள்ள தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் பெருந்தொகையில் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அவ்வாறே வெளியேறுபவர்களில் பெரும்பான்மையோர் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் இருக்கும் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், பலர் இந்தியாவுக்குச் செல்வதற்காக வன்னிப் பகுதியை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருகோணமலை நகரத்துக்கு அடுத்துள்ள திருக்கடலூர், கேணியடி ஆகிய கிராமங்களில் வசித்து வந்த பெருந்தொகையான குடும்பங்களும் …

  8. நீண்ட காலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் சிறிய ரக விமானமொன்று கிளி நொச்சி முல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்தினம் மாலை பறந்துள்ளது என கொழும்புச் செய்திகள் சில தெரிவித்தன. விடுதலைப் புலிகளின் இந்த விமானம் இரணைமடு விமான ஓடு தளத்திலிருந்து மேலெழுந்ததாகவும் இதனைத் தமது "ராடர்' திரைகளில் அவதானிக்க முடிந்ததாகவும் படைத்தரப்பினரை மேற்கோள் காட்டி இணை யத் தளமொன்று செய்தி வெளியிட்டது. கடந்த 11 ஆம் திகதி புலிகளி னால் மேற் கொள்ளப்பட்ட வெற்றிலைக்கேணி கடல் தாக்குதலை அடுத்து அரச விமானப் படை கள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றை வன்னிப் பகுதியில் மேற்கொண்டன. இதன் போது, புலிகளின் இரணைமடு விமானத் தளம் அழிக்கப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்தனர். அத்தகைய பாதிப்பு எதுவும் ஏ…

  9. தமிழர் தாயகக் கடற்பிரதேசமான வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கடற்சமரில் 700 படைத்துருப்புக்கள் தப்பியதையடுத்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படை தீவிரம் காட்டுவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இஸ்ரேலிய தயாரிப்பான டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள்தான் சிறிலங்காவின் கடற்படையின் இரத்த நாளமாகும். கடற்பிரதேசங்களை எந்நேரமும் கண்காணித்து வருகிறது. இதுதவிர எம்.வி.பேர்ள்குரூஸ் போன்ற பாரிய கப்பல்களில் படையினரை ஏற்றிச் செல்ல பாதுகாப்பாகவும் இப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சயூரா போன்ற பாரிய கப்பல்கள் ஆழ்கடல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது. சிறிலங்கா கடற்படையின் வலுவானதாக டோரா…

  10. Stop violence, enter talks, Anti-war group tells GoSL, LTTE [TamilNet, May 18, 2006 11:29 GMT] Condemning the increasing levels of violence committed by Liberation Tigers and by the "armed groups and forces within and outside" Sri Lanka's Military, Kumar Rupesinghe, chairman of National Anti War Front, in a press release issued Thursday in Colombo urged the LTTE and the Government of Sri Lanka to "implement the agreements reached in the High Table in Geneva," and to "immediately resume the talks which were initiated in Geneva." Full text of the press release follows: We call upon the President and Prabhakaran to meet immediately. STATEMENT BY THE NATIO…

    • 0 replies
    • 1.2k views
  11. புலிகளின் பதிலடி: நாகர்கோவில், மணலாறு சிறிலங்கா காவலரண்கள் மீட்பு! [வியாழக்கிழமை, 18 மே 2006, 07:00 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். நாகர்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா இராணுவத்தினரின் இரு முன்னரங்க காவலரண்கள் புலிகள் வசமாகியுள்ளன. தமது பதிலடி நடவடிக்கையின் போது இராணுவத்தின் முன்னணி காவலரண்கள் இரண்டையும் எரித்து நிர்மூலமாக்கி அழித்த விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்காப் படையினர் முன்னணிக் காவலரண்களிலிருந்து பின்வாங்கி ஓடியுள்ளனர். மீ…

    • 2 replies
    • 2.2k views
  12. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவுத்தளமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அரச துறை துணை உதவிச் செயலாளரான டொனால்ட் கேம்ப் இந்தச் செய்தியை கொழும்பில் விட்டிருக்கின்றார். இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்தது. இந்தியா தடை செய்த போது கொழும்பு அரசியல் விமர்சகர்கள் இனி விடுதலைப்புலிகளால் தலைநிமிர முடியாது எனக் கூறி வந்தனர். ஆனால் இந்தியாவின…

    • 2 replies
    • 1.6k views
  13. புலிகளின் பதிலடி: நாகர்கோவில், மணலாறு சிறிலங்கா காவலரண்கள் மீட்பு! [வியாழக்கிழமை, 18 மே 2006, 07:00 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். நாகர்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா இராணுவத்தினரின் இரு முன்னரங்க காவலரண்கள் புலிகள் வசமாகியுள்ளன. தமது பதிலடி நடவடிக்கையின் போது இராணுவத்தின் முன்னணி காவலரண்கள் இரண்டையும் எரித்து நிர்மூலமாக்கி அழித்த விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்காப் படையினர் முன்னணிக் காவலரண்களிலிருந்து பின்வாங்கி ஓடியுள்ளனர். மீண்ட…

    • 0 replies
    • 1k views
  14. தமிழீழ சுதந்திர பிரகடனம் செய்யும் நிலைக்கு செல்லும் பொழுது சிறீலங்கா நிர்வாக கட்டமைப்புக்குள் (வங்கிகள் மற்றும் ஏனைய சேமிப்பு முதலீட்டு நிறுவனங்களில்) உள்ள தமிழ் மக்களின் சேமிப்புகள் நிதிகள், தமிழீழத்திற்கு வெளியே சிறீலங்காவில் (உதாரணத்திற்கு கொழும்பு கண்டி போன்ற பிரதேசங்களில்) அசையாச் சொத்துகளில் (வீடுகள்) போன்ற முதலீடுகள் வைத்துள்ளவர்களின் நிலமை என்னவாக இருக்கும்? ஹிந்துஸ்தானிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது பாக்கிஸ்தான் பக்கம் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துக்கள் முதலீடுகளின் பொறுமதி பூச்சியம் ஆனது. அதே நிலமை பங்களாதேஸ் பிரிந்த போதும் இருந்தது. இந்த சொத்துக்களை நிதிகளை அரசாங்கம் Enemy Property Act இன் பெயரால் கையகப்படுத்தி மீள்கட்டுமான போன்றவற்றி…

  15. தீவகத்து பிஞ்சுக் குழந்தைகள் செய்த தீது என்ன?: உலகத்தை உலுக்குங்களேன் புலம்பெயர் உறவுகளே...... [ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2006, 20:12 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தனது வரலாற்றுப் பாதையில் முக்கியமான திருப்பத்துக்கு வந்துவிட்டது. அதற்காக தமது உச்சக்கட்டப் பணியை செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் வந்துவிட்டது. இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக தனது உரிமைக்காக போராடிய தமிழினம் தனது போராட்டத்தின் நியாயப்பாட்டையும் நிலைப்பாட்டையும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு புரியவைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப்போய்விட்டது மட்டுமல்லாமல் இந்த தார்மீகப் போராட்டத்தில் தம்முயிரை எ…

  16. மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் - ஐந்து படையினர் பலி மணலாற்றுப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தாக்கு தலில் சிறீலங்கா இராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் வானொலி தனது இரவுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. சுற்றுக் காவலில் ஈடுபட்ட படையினர் மீது காலை 7.20 மணிக்கு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஐந்து படையினரும் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது. நன்றி சங்கதி

    • 0 replies
    • 1k views
  17. - நான்கு படையினர் பலி - ஆயுதங்களும் மீட்பு - பாண்டியன் - Wednesday, 17 May 2006 21:45 வவுனியா மாவட்டம், மாமடு பகுதியில் அமைந்திருந்த ஸ்ரீலங்கா படையினரின் காவலரண் ஒன்றின் மீது விடுதலைப் புலிகளால் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பாலமோட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 5.45 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் தமது தரப்பில் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேவ…

    • 0 replies
    • 1.2k views
  18. யதார்த்தம் புரியாமல் கையாள்வதால் கோட்டை போகும் சந்தர்ப்பங்கள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் என்று தெரிவித்து புலிகள் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட சில தகவல்கள் குறித்து கடந்த 5 ஆம் திகதி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் இடையில் கடல் வழியாக இலங்கைக் கடற்படை எதிர்ப்பையும் மீறி புலிகள் மேற்கொண்ட கடற் பயணத்தையும் மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஒன்று ஊடுருவி, ஒட்டுப் படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த இரண்டு யுத்த நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளும் …

  19. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இன்று பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ்.தீவகத்தில் இடம்பெற்ற படுகொலைகளைக் கண்டித்தும், தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதியில் இடம்பெறும் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்தும், மட்டு. அம்பாறை மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று மட்டக்களப்பு நகரம், வாழைச்சேனை, செங்கலடி, களுவாஞ்சிகுடி பகுதியில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. அதேநேரம் பாடசாலைகள், அரச, அரச சார்பற்ற நிறுவன அலுவலகங்கள் வங்கிகள் என்பனவும் இயங்கவில்லை. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. இதேவேளை வாழைச்சேனை கறுவாக்கேணியில் நேற்றுக் காலை இனந்தெரியாத சில இளைஞர்களால் லொறி…

    • 0 replies
    • 1.3k views
  20. ஜெனீவாப் பேச்சுக்குப் பின் 174 தமிழ் மக்கள் படுகொலை விடுதலைப் புலிகள் அறிவிப்பு. ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்ன்னர் 174 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரச படைகளினால் நிகழ்த்தப்பட்டு வரும் இந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகளை சர்வதேச சமூகமும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் தடுக்கவில்லை என விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை தமிழீழ அரசியற்துறையினர் விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் உள்டளக்கம் வருமாறு.... ஜெனீவாப் பெச்சுக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் நாள் வரையிலான படுகொலைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் முன்னர் விவர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 8 ஆம் நாளுக்குப் பின் மே 15ஆம் நாள் வரையில…

  21. 175 தமிழர்கள் படுகொலை- தமிழர்களை முட்டாளாக எண்ணுகிறதா சர்வதேச சமூகம்?: விடுதலைப் புலிகள் கேள்வி ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் மே 15 ஆம் நாள்வரை 175 தமிழர்கள் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்ட போதும் சர்வதேச சமூகம் மௌனம் காப்பதன் மூலம் தமிழர்களை முட்டாளாகக் கருதுகிறார்களா என்று தமிழீழ விடுதலைப் புலிகள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெனீவா பெச்சுக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் நாள் வரையிலான படுகொலைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் முன்னர் விவர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 8ஆம் நாளுக்குப் பின் மே15ஆம் நாள் வரையிலான படுகொலைகள் இந்த அறிக்கையில் இடம்…

  22. விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு: 1 போராளி பலி வவுனியா சேமமடுவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போராளியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். சேமமடுப்பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல் மற்றும் இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் வ…

    • 1 reply
    • 1k views
  23. வவுனியாவில் கருணாவின் நடமாட்டம் உள்ளதாகவும் கண்காணிப்புக்குழு தெரிவிப்பு வடக்கில் தொடரும் தாக்குதல்களுக்கு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றோரே காரணம் வவுனியாவில் கருணாவின் நடமாட்டம் உள்ளதாகவும் கண்காணிப்புக்குழு தெரிவிப்பு வடக்கில் தொடரும் தாக்குதல்களுக்கும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் அதிலிருந்து பிரிந்து சென்று இயங்குபவர்களுமே காரணம் போன்று தோன்றுகின்றது. அரசபடையினர் இதனை மறுத்துரைத்துவரும் போதிலும் இந்தக்குழுவினருக்கு பின்புலமாக நின்று படையினர் உதவிவருகின்றனர் என்று கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக்குழுவின் வவுனியா மாவட்ட தலைவர் “ஜொய்னி சுனினென்னை ஆதாரம் காட்டி ராய்ட்டர் இந்தச் செய்தியைவ…

    • 1 reply
    • 1.3k views
  24. வவுனியா நகரசபை, பிரதேசசபைகளுக்கான தேர்தல் செப். 30ஆம் திகதிவரை ஒத்திவைப்பு வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அம்பõறை, மட் டக்களப்பு மாவட்டங்களுக்குட்பட்ட ஏனைய சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேசசபை ஆகிய இரண்டு சபைகளுக்குமான தேர்தலே மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணத்திலுள்ள வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் . ஆணையாளர் தயானந்த திஸநாயக்கவிற…

    • 0 replies
    • 793 views
  25. சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி வன்னியில் கண்டனப்பேரணிகள். (படங்கள் உள்ளே) தமிழினத்தை சிறிலங்காப் படைகள் கொடூரமாக கொன்றொழித்து வருவதை சர்வதேச சமூகம் கண்டித்து சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிளிநொச்சி வாழ் மக்கள் கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர். கிளிநொச்சி பொது அமைப்புக்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஒழுங்கமைத்த பேரணியில் சிங்களப்பபடைகளின் தமிழினப் படுகொலைகளை சர்வதேச சமூகம் கண்டித்து குரல் கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அல்லைப்பிட்டியில் சிங்களப்படைக் காடையர்களால் பச்சிளம் பாலகி மற்றும் சிறுவன் அவர்களின் பெற்றோர் உறக்கத்தில் வைத்துக் கொல்லப்ட்ட படத்தை மக்கள் தம் கைகளில் தாங்கியிருந்தனர். …

    • 0 replies
    • 966 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.