ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142575 topics in this forum
-
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் காலமானார் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் டறொன்ட் புறூவ் ஹொவ்டே (வயது 67) நோர்வேயில் நேற்று புதன்கிழமை காலமானார். இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து மார்ச் 2002 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 2003 ஆம் ஆண்டு வரை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக பணியாற்றினார். அதன் பின்னர் பெப்ரவரி 2004 ஆம் ஆண்டு மீண்டும் அவர் இலங்கை திரும்பினார். சர்வதேச அளவிலான கண்காணிப்புக் குழுக்களில் டறொன்ட் புறூவ் ஹொவ்டே பணியாற்றியுள்ளார். லெபனானில் 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். புதினம்
-
- 5 replies
- 1.4k views
-
-
மீண்டும் யாழில் பயங்கரம்! யாழில் ஆறு தமிழர்களின் உடல்கள்!! ஜ திங்கட்கிழமைஇ 15 மே 2006 ஸ ஜ ஜோசெப் ஸ யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் சுற்றாடலில் தமிழ் மக்கள் ஆறுபேரின் உடல்கள் இரத்தக்கறைகளுடன் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும், தெரியவருகின்றது. நகரில் சன நடமாட்டம் எதுவும் இன்றி வெறிச்சோடிக்கிடப்பதாகவும், நகர வீதிகள் எல்லாம் மயானம் போல் காட்சியளிப்பதாகவும் தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் விரைவில்… http://www.nitharsanam.com/?art=17293
-
- 3 replies
- 1.6k views
-
-
செய்து முடி; அல்லது செத்து மடி! -தேசியத்தலைவர் பற்றி ஆனந்தவிகடனில் வந்த கட்டுரையினை பார்க்க http://www.tamilnaatham.com/pdf_files/lead...r2006_05_14.pdf
-
- 1 reply
- 2k views
-
-
பி.பி.சி தமிழர் கொலைகளை மறைப்பதேன். - பி.பி.சி பணிப்பாளரிடம் நேரடியாக முறையிடுங்கள். 004420-7557-3798 தொடர்புகொண்டு உங்கள் எதிர்பை தெரிவியுங்கள் Chapman.Nigel@bbc.co.uk Nigel.Chapman@bbc.co.uk bernard.gabony@bbc.co.uk
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்; குடாநட்டில் இருந்து மக்கள் பாதுகாப்புகருதி அவசரமாக வெளியேறி வன்னிக்கு செல்வும் - தி.மகேஸ்வரன். யாழ்; குடாநாட்டில் வாழ்ந்துவரும் இளைஞர் யுவதிகள் உட்பட அனைவரையும் உடனடியாக தற்காலிகமாக யாழ் குடாநாட்டில் இருந்து வெளியேறி வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுமாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அவசர கோரிக்கை ஒண்றினை விடுத்தள்ளார். யாழ் குடாநாடு உட்பட வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு புூரன அதிகாரித்தை இரகசியமாக வழங்கியுள்ளது. தினமுதும் 15 பொதுமக்கள் யாழ் குடாநாட்டில் இலங்கை அரச படையினரால் கொல்லப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது பலருடைய உடல்கள் எங்கு மறைக்கபடுகிறது என்றுகூட எவருக்கும் தெரியாது …
-
- 0 replies
- 1.3k views
-
-
கரணவாயில் கிளேமோர் தாக்குதல். - பண்டார வன்னியன் - ஆழனெயலஇ 15 ஆயல 2006 10:04 யாழ்.வடமராட்சி கரணவாயில் இன்று காலை 8.50 மணிக்கு கிளேமோர் தாக்குதல் ஒன் று இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மூத்த விநாயகர் கோவிலடியில் சிறீலங்காப் படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால் சிறீலங்கா படைத்தரப்பிற்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தாக்குதலையடுத்து வீதிப்போக்குவரத்தைத் தடைசெய்த படையினர் தேடுதல் நடவடிக்கைளை மேற்;கொண்டுள்ளனர். sankathi
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மற்றொரு சர்வதேச வலை இலங்கையில் ஈழத் தமிழர்களுடைய இனப்பிரச்சினையைக்கையாளுகின
-
- 2 replies
- 1.8k views
-
-
ஊர்காவற்துறையில் இளைஞரின் சடலம் மீட்பு யாழ் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுடன் இந்த இளைஞர் சடலம் மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் பருத்திடைப்பு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 24 அகவையுடைய தம்பு கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல்:சங்கதி
-
- 24 replies
- 3.9k views
-
-
அன்பிற்குரியவர்களுக்கு, சிறிலங்கா அரசு வலிந்து முன்னெடுத்துள்ள போரிற்கு முகம்கொடுப்பதற்காக இங்கே மண்ணும் மக்களும் தயாராகிவருகின்றனர். இந்த வேளையிலே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எமது உறவுகள் சிரமேற்கொண்டு செய்யவேண்டிய தலையாய பணி ஒன்று மட்டுமே. அதாவது எமது போராட்டத்தினது தார்மீக நிலை குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் புலத்திலே மிகவும் முனைப்போடு முன்னெடுக்கப் படவேண்டும். குறிப்பாக தற்போதைய நிலவரங்களின் உண்மைத்தன்மை அவற்றிற்கான மூலகாரணியான சிங்களத்தின் உண்மை முகம் என்பன சர்வதேசத்திலே அம்பலப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக இன்று (11-05-2006) எமது கடற்பரப்பிலே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின் பக்கச்சார…
-
- 4 replies
- 2.1k views
-
-
எமது சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியமில்லை எனில் சிங்களப் படைகளுக்கும் சாத்தியமில்லை: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்குவரத்துக்கள் சுதந்திரமான நடமாட்டங்கள் சாத்தியப்படும் வரை சிறிலங்காப் படைகளின் சுதந்திரமான நடமாட்டங்களையும், போக்குவரத்துக்களையும் அனுமதிக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைப் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுடனான சந்திப்பின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது த…
-
- 4 replies
- 1.7k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய எமது நிர்வாக கடற்பிரதேசத்தில் எமது கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு உரிமை உண்டு என்று இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதிலளித்துள்ளனர். யாழ். வெற்றிலைக்கேணி கடற்சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், விடுதலைப் புலிகளுக்கு இலங்கைக் கடலில் உரிமை இல்லை என்று தெரிவித்திருந்தனர். இதற்குப் பதில் தெரிவித்து கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹென்றிக்சனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்: மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தலைவர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பொருள்: மே 11ஆம் நாள் நடைபெற…
-
- 0 replies
- 908 views
-
-
கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 1) கருணாவின் துரோகம் அரங்கேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார். கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அட…
-
- 29 replies
- 7.2k views
-
-
சர்வதேச தரத்திலான நகச்சுவையாளர்களாக மாறியுள்ள இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4763027.stm வைகாசி 11 நடந்த கடல் சமர்களின் பின்னர் கண்காணிப்புக் குழுவிடுத்துள்ள அறிக்கை அவர்களது செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால் முடக்கப்பட்டு அவர்களை அர்த்தமற்றதாக்கியிருக்கிறத
-
- 2 replies
- 1.5k views
-
-
திருமலை, கிளிநொச்சி, யாழில் சிங்கள முப்படைகள் திடீர் தாக்குதல்! தமிழர் தாயகத்தில் சிறிலங்காவின் முப்படைகளாலும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகள் தொடக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் மூதூர் கடற்கரைச்சேனை, சேனையூர் பகுதிகளை நோக்கி துறைமுகப்பகுதியில் இருந்து படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் மாலை 5 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றது. ஆட்லறி எறிகணைகள் சேனையூர் கடற்கரைச்சேனைப் பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கின்றன. மக்கள் ஏற்கனவே படைத்தாக்குதலால் இடம்பெயர்ந்த காரணத்தால் இழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சில குடும்பங்கள் அப்பகுதியில் மீளச்சென்ற குடியமர்ந்திருக்கின்றன. அவர…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழர்கள் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றச்சாட்டு இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதில் சிறிலங்கா இராணுவத்துக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. வவுனியா கண்காணிப்புக் குழு அதிகாரி ஜோனி சுனினென் இது தொடர்பில் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: தமிழர்கள் மீதான படுகொலையில் அரச படைகளின் தொடர்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட விதம் அனைத்தும் இதைத் தெளிவுபடுத்துகிறது. இராணுவ சோதனைச் சாவடி அருகே 60 மீற்றர் தொலைவில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் படைத்தரப்பினரோ தங்களுக்கு எதுவும் தெரியாது என்கின்றனர். …
-
- 1 reply
- 842 views
-
-
சம்பூரில் தமிழர்கள் மீது குண்டுவீச்சு நடத்தவில்லை: சிறிலங்கா அரசாங்கம் திருகோணமலை சம்பூர் பகுதியில் தமிழர்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்து சிறிலங்கா அரசாங்கம் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றில் பேசியதாவது: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது அறிக்கை எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் மீது அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்கள கடும்போக்காளரும் யாதிக்க கெல உருமையவின் உறுப்பினரும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக பலத்த குற்றச்சாட்டிற்கு இலக்காகியிருந்தவருமான மேஜர் ஜெனரல் ஜனகப்பெரேரா கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கூட்டுப்படைத் தளபதியாகவிருக்கும் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுச் செல்வதால் அந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனகப்பெரேரா நியமனம் பெறவுள்ளார். இவர் தற்பொழுது இந்தோனிசியாவிற்கான உயர்ஸ்தானிகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தகவல்:மட்டக்களப்பு ஈழநாதம் செம்மணி படுகொலைகளுக்கு இவரே பொறுப்பு என்று பலராலும் சொல்லப்பட்டு வந்ததுண்டு. அவுஸ்ரேலியாவிற்கு உயர்தாஸ்னிகராக இருந்தபோது எதிர்ப்பு…
-
- 0 replies
- 861 views
-
-
இன்றைய தினம் நிதர்சனம்.கொம் இல் வெளிவந்துள்ள "யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிங்களப்படைகளின் ஒற்றன் நியமனம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கலாநிதி ஜீவன் ஹூல் அவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய புத்திஜீவிகளில் ஒருவர் என்பது பேராதனைப் பல்கலைக்கழக சமுதாயம் அனைத்திற்கும் தெரிந்த விடயம். அவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராயிருப்பது அனைத்துத் தமிழருக்கும் பெருமை தரும் ஒரு விடயம். நான் நினைக்கிறேன் நிதர்சனம் ராஜன் ஹூல் (UTHR என்ற பெயரில் அடிக்கடி அறிக்கை விடுபவர்) என்பவருடன் கலாநிதி ஜீவன் ஹூலின் பெயரைப் போட்டு, தான் குழம்பியதுமல்லாமல் மற்றவர்களையும் குழப்பி கற்பனையான ஒரு தலையங்கத்தை தனது செய்திக்கு இட்டுள்ளது.
-
- 248 replies
- 31k views
-
-
சரத் பொன்சேக மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்திய பெண் உயிருடன் இருபதாக அறிவிப்பு. லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாக குற்றப் புலாய்வாளர் ஒருவரை மேற்கோள்காட்டி லங்கா நியூஸ் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 8 அடையாள அட்டைகள் காணப்பட்டதாகவும் அவற்றில் வவுனியாவைச் சேர்ந்த அனோஜா குகேந்திரராசா என்பருடைய அடையாள அட்டையும் உள்ளங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் மீட்கப்பட்டதை அடுத்து வவுனியாவுக்கு விரைந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் உயிரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள் தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் 28.04.2006 ம் திகதிக்கு முன்னர் சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................ பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க. இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள். நன்றி: http://www.ibctamil.co.uk/
-
- 20 replies
- 4.7k views
-
-
EPDPஅமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தோழர்களால் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஜ சனிக்கிழமைஇ 25 பெப்ரவரி 2006 ஸ ஜ லக்ஸ்மன் ஸ ஒட்டுக்குழுத் துரோகி டக்ளசின் கோர முகம். மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி டக்ளஸ் தேவானந்தாவிற்கு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. இது நன்றாகத் தெரிந்தும் இவர் ஏன் நாய் வேடம் போட்டார்? யார் இந்த டக்ளஸ் தேவானந்தா? மேலும் வாசிக்க::::::: http://www.nitharsanam.com/?art=15535
-
- 12 replies
- 3.4k views
-
-
இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களும் இராணுவப் பயிற்சியும் வளங்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு உறுதியளித்திருக்கிறார். http://www.wpherald.com/storyview.php?Stor...09-011638-8899r கடந்த வாரம் பார்த்தோமானால் பிரபல இந்திய பத்திரிகைகளில் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை பெறவிரும்புவதாக ஒரு ஆயுதப்பட்டியலை வெளியிட்டிருந்தது. http://72.22.81.139/forum3/viewtopic.php?t=10718 இது வெளிவந்து ஓரிரு நாட்களுக்கு பிறகு இலங்கை அரசு தான் இச் செய்தியைப்பார்த்து அதிர்ச்சி அடைவது போலவும் தமது இரகசியங்கள் எப்படி வெளியாயின என்று தாம் குளம்பிப் போய் இருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டது. உண்மையில் நடந்தது என்னவென்றால், உள்நாட்டெதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவிலிருந்து இலங்…
-
- 0 replies
- 862 views
-
-
வவுணதீவு புளியடி முன்னரங்க நிலைகளை நோக்கி இன்று பிற்பகல் 3:25 மணிக்கு சிறிலங்கா படையினர் மோட்டார் மற்றும் ஆர்.பி.ஜி எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது குறித்து விடுதலைப் புலிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு முறைப்பாடு செய்தனர். கண்காணிப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே திரும்பவும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் நேரடியாகவே சிறிலங்கா அரச படைகளின் யுத்த நிறுத்த மீறல்கள் புலப்படுத்தப்பட்டிருக்கின்
-
- 0 replies
- 866 views
-
-
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை யப்பான் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி நேர்காணல் பின்வருமாறு:- கேள்வி:- இன்றைய சந்திப்பு தொடர்பாக? பதில்:- இன்றைய சந்திப்பில் யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அக்காசி அடங்கிய தூதுக்குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினோம். இன்றைய சந்திப்பில் முக்கியமாக இலங்கை அரசின் இரட்டைத் தன்மைபற்றி விளக்கப்பட்டது. அரசு பேச்சுவார்த்தைக்கு தயாரென்று கூறிக்கொண்டு போலித்தனமான அறிவுப்புக்களை விடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் தமிழர் தாயக பிரதேசத…
-
- 0 replies
- 767 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா படையினரும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டு வரும் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே மீளவும் பேச்சுக்கள் நடைபெறும். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன்பாலசிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தாவது:- சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவதில் அரசு சரியான முறையில் செயற்படவில்லை. போக்குவரத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை தற்போதய நிலைமையினால் மிகவும் மோசமடைந்துள்ளது. தமிழ் மக்கள் மீது ஒட்டுப்படைகளும் சிறிலங்கா படையினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் பேச்சுக்கள் தடைப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. அதேவேளை ஜெனீவாப் பேச்சுக்கள…
-
- 1 reply
- 1.1k views
-