Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படம்: தமிழ்நெற் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளில் பிரம்மாண்டமாக இயங்கும் விடுதலைப் புலிகள்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி தகவல் [திங்கட்கிழமை, 1 மே 2006, 20:04 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் கடல்சார் வர்த்த நடவடிக்கையில் செயற்படுவதற்கான பிரம்மாண்ட கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியும் ஆய்வு மையம் ஒன்றைச் சேர்ந்தவருமான விஜய் சகுஜா தெரிவித்துள்ளார். "செயலூக்கம் உள்ள விடுதலைப் புலிகளின் கடல் வர்த்தக கட்டமைப்பு" என்ற தலைப்பில் 14 பக்க ஆய்வு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் வடக்கு கிழக்கில் பெருமளவிலான பரப்பளவை தங்கள் கட்டுப்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்துள்ள…

    • 1 reply
    • 1.2k views
  2. வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் கிபிர் விமானங்கள் பாரிய குண்டு வீச்சு - பாண்டியன் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44 இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீ லங்கா வான் படையின் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக் குதலை ஆரம்பித்துள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இருந்து இந்தச்செய்தி பதிவு செய்யும் 6-45 மணிவரை தாக்குதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது. இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 6 குண்டுகள் வீசப்பட்டுள்ளது இதுவரை சேதவ…

    • 42 replies
    • 6.8k views
  3. புலிகளின் சொந்தக் கடற்கலங்களில் போராளிகள் வெற்றிகரமாக பயணம்!! [திங்கட்கிழமை, 1 மே 2006, 02:23 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கலங்களில் விடுதலைப் புலிகள் தளபதிகள் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமையன்று பயணித்தனர். திருமலையிலிருந்து முல்லைத் தீவுக்கு விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் அடங்கிய முதல் குழுவினர் இரவு 10.30 மணியளவில் வந்தடைந்தனர். போராளிகளுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை. முல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு போராளிகள் கடற்கலங்களில் பயணித்த போது சிறிலங்கா கடற்படையினரது தாக்குதல்களுக்கு பதில்கொடுத்தபடியே வெற்றிகரமாக திருகோணமலையைச் சென்றடைந்தனர். திருகோணமலையிலிருந்து திரும்பும் போது சிறிலங்கா கடற்படையினர் எதுவித தலைய…

    • 1 reply
    • 1.2k views
  4. புல்மோட்டை இராணுவத் தளம் மீது பதிலடித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் என்னும் வெளிவரவில்லை. இருப்பினும் 350 வரையிலான குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாடசாலையில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது தகவல்: கள உறவு

    • 2 replies
    • 1.4k views
  5. போதனை வேண்டாம் திருமலை மாவட்டம் கோமரங்கடவலையில் ஆறு சிங்கள விவசாயிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் குற்றம் சாட்டியுள் ;ளார். அவர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலி களே இப்படுகொலைகளைப் புரிந்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதில் உள்ள வினோதம் என்னவெனில் இக்கொலைகள் குறித்து அவர் முதலில் தெரிவிக்கும் போது இத்தகைய சம்பவம் இடம் பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து உறுதி செய்யப்பட்டு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதாவது அப்பேட்டி வழங்கப்படும் போது இக்கொலைகள் குறித்த தகவலை அவரால் முழுமையாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. ஆனால் இக்கொலைகளை விடுதலைப் புலிகளே செய்தா…

  6. கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல்: 20 பேர் பலி ஏப்ரல் 30, 2006 கொழும்பு: ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கருணாவின் முகாம்களின் மீது விடுதலைப் புலிகள் அதிரடி ரெய்ட் நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத் தகவலை விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகப் பிரிவின் தலைவர் பூலித் தேவன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் பாடமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். கருணாவின் முகாம்களை தீ வைத்து எரித்ததோடு, ராணுவம் அவர்களுக்கு வழங்கிய ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக பூலித் தேவன் கூறியுள்ளார். கருணாவின் முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோத…

    • 0 replies
    • 982 views
  7. செய்தியறிக்கையில் கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது தமிழோசை இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர். தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார். ஆ…

  8. சம்பூர் வான் தாக்குதலை கண்காணிப்புக் குழு கண்டித்துள்ளது திருகோணமலை வான் தாக்குதல்களில் சேதமடைந்த பகுதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இம்மாதம் 25 மற்றும் 26 ம் தேதிகளில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என போர் நிறுத்த கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எத்தரப்பும் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதையும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசை இது போன்ற நடவடிக்கைகளில் மேலும் ஈடுபடவேண்டாம் எனவும், அவ்வாறு செய்தால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிலைகுலைய வைத்து, அங்குள்ள மோதல்க…

  9. அமெரிக்க==> மக்களையோ சொத்துகளையோ புலிகள் தாக்கவில்லை: அமெரிக்கா அறிவிப்பு. அமெரிக்க மக்களையோ அமெரிக்க சொத்துக்களையோ இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தவிலை என அமெரிக்கா இராஜங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பட்டியிலில் இணைந்த அமைப்புக்கள் தொடர்பில் வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட வாகனம் ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தாக்குதல் நடந்த சமயம் குறித்த வாகனத்தில் சிறீலங்கா படையினர் பயணம் செய்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதிவழங்குவதை இனம் காண்பதற்கு அமெரிக்காவுக்கு சிறீலங்கா ஒத்துழைப்பு வழங்…

    • 0 replies
    • 834 views
  10. உதவி வழங்கும் இணைத் தலமை நாடுகள் மற்றும் ஏனைய தேச சமூகத்தின் கவனத்திற்கு, 24 மாசி 2006 ஜெனிவா-1 இன்பின்னர் நேற்று 27-சித்திரை 2006 வரை சிறீலங்கா அரசபடைகளாலும் அவர்களது மேற்பார்வையிலுள்ள கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட 103 இனபடுகொலைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை. http://www.ltteps.org/mainpages/images/200..._HQ_of_LTTE.pdf http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17950 கண்காணிப்புக் குழுவும் ஒவ்வொரு சம்பவம் நடந்தபின்னரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்கள் முடிந்தளவு விசாரணை நடத்துகிறார்கள் குறிப்புகள் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக ஏன் விட யோசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் யார…

  11. பழிவாங்கும் படலத்தைத் தொடருவோம் - திருமலை பொங்கியெழும் மக்கள் படை. திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியர்களால் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து பெருநிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத்தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஓரளவு நிலைகளை மாற்றியிருந்த போது மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புத் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் தமிழ் பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறீலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலைப…

  12. (2 ஆம் இணைப்பு) திருமலையில் தொடரும் முப்படைத் தாக்குதல்: 13 பேர் படுகொலை [புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 08:58 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் இன்று புதன்கிழமையும் சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள் தாக்குதல்களில் மொத்தம் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூதூர் கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் விமானப் படையினரின் கிபீர் - மிக் 29 ரக விமானங்கள், குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன. சுங்கன்குழியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. திருமலை மூதூர் கிழக்கில் …

  13. கொழும்பில் கைது செய்யப்பட்ட 5 தமிழர்களின் தலை துண்டிப்பு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன 5 தமிழர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவிசாவளை சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புவாக்பிட்டிய மற்றும் தெகியோவிட்ட ஆகிய இடங்களில் இந்த தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் தமிழ் இளைஞர்களது சடலங்களாக இருக்கலாம் என்று கருதுவதாக அப்பிரதேச சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்தும் ஆண்களின் சடலங்கள் என்றும் அவர்களது உடைகள் பெரும்பகுதி களையப்பட்டும் பாரிய வெட்டுக் காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக சி…

    • 1 reply
    • 1.3k views
  14. கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா? எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது. புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)…

    • 5 replies
    • 1.5k views
  15. தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திய தாக்குதல்களைப் பார்வையிடும் உல்ப் ஹென்றிக்சன்

  16. சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்ததற்கு பதிலாக மகிந்தர் தமது போர் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிட்ட முறையில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பன வெளிப்படுத்துகின்றன. சிறிலங்கா படைத்தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக அதற்கான பொறுப்பை விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் தெரிவிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடியாதவை. லக்ஸ்மன் கதிர்காமர் அதியுயர் பாதுகாப்புக்களுடன் இருந்தவர். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கான பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தியிருந்தனர். ஆனால் இதுவர…

  17. சிறிலங்கா அரசும், சிங்களப் படைகளும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இலங்கை விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தமது கவனத்தைச் செலுத்தியுள்ள போதிலும், சிறிலங்கா அரசின் தேசவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது தமிழ் மக்களுக்குக் கவலையளிக்கின்றது. ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாயிலை மூடியிருக்கும் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஜே.ஆர். பிரேமதாஸா, விஜயதுங்கா, சந்திரிகா காலத்தை விட மகிந்தரின் ஆட்சியில் குறிப்பிட்ட நாட்களுக்கு தமிழ் மக்கள் அதிகளவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செயற்பட்…

  18. இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி

  19. கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு (கிளிநொச்சி) கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் நாம் போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக நிலவும் செய்தி தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

    • 7 replies
    • 1.9k views
  20. அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்களின் படங்கள் சில. படங்களை இணைப்புகளை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம். http://www.yarl.com/forum/files/DSC09719.JPG http://www.yarl.com/forum/files/DSC09720.JPG http://www.yarl.com/forum/files/DSC09726.JPG http://www.yarl.com/forum/files/DSC09729.JPG http://www.yarl.com/forum/files/DSC09730.JPG படங்கள்: நன்றி: http://www.eelavision.com

  21. தாக்குதல் தொடர்ந்தால் பதில் தாக்குதல்: புலிகள் எச்சரிக்கை திருமலையில் முப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்பு இராணுவத் தாக்குதல்கள் நடத்த நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளதாவது: திருகோணமலையில் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆர்ட்டிலரிகளாலும் பீரங்கிகளாலும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதல் நீடித்தால் தற்பாதுகாப்பு இராணுவத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர் என்றார் புலித்தேவன். திருமலை நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை …

    • 0 replies
    • 837 views
  22. மூதூர்படகுத்துறைமீது விமானத்தாக்குதல். ஐந்து முஸ்லீம் பொதுமக்கள் பலி. 8பேர் காயம். (திருகோணமலை) நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடற்சியாக இன்றும் சிறிலங்கா படைத்தரப்பு மக்கள் வாழ்விடங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. விமானத்தாக்குதல்கள் பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் கடற்படை பீரங்கித்தாக்குதல்கள் என இவை தொடர்கின்றன. இன்று காலை திருமலை விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிமீது ஆட்லெறி மற்றும் விமானத்தாக்குதல்கள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்களில் இதுவரை பதின்நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெருந்தொகையானோர் காயமடைந்தும் உள்ளனர். இது இவ்விதமிருக்க இன்று காலை 8.10அளவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் …

  23. புலிகள் சும்மா இருக்க மாட்டார்கள் - தமிழ்ச்செல்வன் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/pdf_files/juni..._2006_04_25.pdf

  24. திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க தவறியது சிறிலங்கா அரசு: மனித உரிமை அமைப்பு சாடல்! திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க சிறிலங்கா அரசு தவறிவிட்டது என்று Human Rights Watch எனும் மனித உரிமை அமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் Human Rights Watch அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிராட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருகோணமலையில் குண்டு வெடிக்க வைக்கப்பட்ட பிறகு ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்களது வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் தாக்கப்பட்டபோது சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள சிறிலங்கா அரச படையினர் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். விடுதலைப் புலிகளால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகி…

  25. ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை: விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு [ஜெனீவாவில் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தா வரை பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.