ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
மாவிலாறு நோக்கி சிங்களப் படைகள் பாரிய படை நகர்வு - பாண்டியன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 11:59 மாவிலாறு அணைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கல்லாறு படைத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவோடும் வான்படை வானூர்திகளின் குண்டு வீச்சுக்களோடும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய நகர்வை ஆரம்பித்தனர். இவர்களின் நகர்வு முயற்சிக்கு எதிராக போராளிகள் தீவிர தாக்குதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே உக்கிர மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ர…
-
- 7 replies
- 2.2k views
-
-
பத்து நாட்கள் கடந்து விட்ட நிலையிலும், ஜே.வி.பி. வழங்கிய 20 அம்சக் கோரிக்கை குறித்து, மகிந்த அரசிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததால், ஜே.வி.பி.யினர் அதிருப்தியடைந்துள்ளனர். சிறிலங்காவைக் கட்டியெழுப்ப, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கைகோர்த்து செயற்பட முடிவெடுத்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி., அதற்கான முன்நிபந்தனையாக தங்களது 20 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மகிந்த அரசுக்கு நிபந்தனை விதித்தனர். தற்போதைய நிலையில், தங்களது கோரிக்கையை இலகுவாக மகிந்த ஏற்றுக்கொள்வார் என்றும், ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் எந்தப் பக்கமும் அசைய முடியாமல் திக்குமுக்காடும் மகிந்த, தங்களது வலையில் சிக்கிக் கொள்வார் என்றும் இறுமாப்படைந்திருந்த ஜே.வி.பி.யினர், இரண்டாவது வாரமும்…
-
- 0 replies
- 814 views
-
-
படையினரின் வலிந்த தாக்குதல்: திருமலையில் பெரும் சமர் மூண்டது திருமலை நிருபர் Thursday, 10 August 2006 இன்று அதிகாலை 4.00 மணியளவில் சிறிலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்குதல் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர். இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கியதாக முன்னெடுக்கப்படு வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வலிந்த தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகளிடமிருந்து மிகக் கடுமையான எதிர்பை இராணுவம் சந்தித்து வருவதாக படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்த படையினர் கந்தளாய் வைத்தியசாலைக்கு வர ஆரம்பித்து இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. http://www.…
-
- 2 replies
- 1.5k views
-
-
வாகரைக்குச் சென்ற அகதிகள் படகு மீது தாக்குதல் 5 பொதுமக்கள் பலி! பலர் படுகாயம்;! - சோழன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 08:58 திருகோணமலை ஈச்சிலம்பற்று மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து வாகரை நோக்கி இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது, சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ;வெருகல் ஆற்றைக் கடந்து வாகரை செல்வதற்கு படகில் சென்ற அகதிகள் மீது, நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீசியு ள்ளதுடன் இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் பல பொதுமக்கள் படுகாயமடைமந்துள்ளனர். http://sankathi.…
-
- 0 replies
- 775 views
-
-
50 பொதுமக்கள் படுகொலை 200 பேர் காயம். திருமலை நிருபர் Thursday, 10 August 2006 சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலிலும், விமானக் குண்டுத் தாக்குதலிலும் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200 க்கு மேற்பட்டோர் காயம். இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி விமானப் படைகளின் போர் விமானங்கள், ஆட்லறிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 200க்கு மேற்பட்டடோர் காயம டைந்துள்ளார்கள். மேலதிக விபரம் கிடைக்கவில்லை http://www.battieelanatham.com/newsite/ind...=1129&Itemid=37 45 civilians killed in bombardment, SLA re-launches troop movement …
-
- 26 replies
- 5.1k views
-
-
சிறிலங்கா விமானப்படையின் குண்டுவீச்சில் 5 மூதூர் பொதுமக்கள் பலி திருகோணமலை ஈச்சிலம்பற்று மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து வாகரை நோக்கி இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது, சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெருகல் ஆற்றைக் கடந்து வாகரை செல்வதற்கு படகில் சென்ற அகதிகள் மீது, நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீசியுள்ளதுடன் இராணுவ முகாமிலிருந்து கண்மூடித்தனமாக ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த குண்டுவீச்சில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். -புதினம்
-
- 5 replies
- 1.3k views
-
-
வெள்ளவத்தை, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின்போது பெண்கள் இருவர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப்பின் ஆரம்பமாகி நேற்று அதிகாலை 4 மணிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தவறியவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து தங்கியிருந்தோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
- 2 replies
- 1k views
-
-
லெப். ஜெனரல் பாரமி குலதுங்க மற்றும் மேலும் மூவரின் படுகொலைகள் பற்றி ஆராயவும் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி ஜி.டபிள்யு.எதிரிசூரிய, குலசேன ரணசிங்க, ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கூடவுள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய இவ்வாறான செயல்களை தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை இந்த குழு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.3k views
-
-
கடந்த சனிக்கிழமை லண்டன் சர்வதேச மன்னிப்புசபை மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தேன். இந்நிகழ்வு சில ஒட்டுக்குழுக்களின் ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பினும், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் சிலர் அங்கு சென்றிருந்தோம். அங்கு பல ஒட்டுக்குழுக்களில் இருந்து கடந்த காலங்களில் கொலைகள், கற்பளிப்புகள், கொள்ளைகள் செய்த பலரைக் காணக்கூடியதாக இருந்தது. ஒட்டுகுழுக்களுடன் தொடர்புடைய ஒரு நபர் அங்கு பி.பி.சி செய்தியாளரர் நிமலராஜனை படுகொலை செய்து, கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை பெற்றபோது தப்பியோடி லண்டன் வந்ததாக கூறப்படும் , இன்ரப்போலினால் தேடப்படும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு உறுப்பினரான "நெப்போலியனும்"அங்கு வந்திருப…
-
- 2 replies
- 1.4k views
-
-
கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ACF தன்னார்வ நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தொடர்பில் அமெரிக்கா தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வன்முறைகளை முடிவுக்கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவி புரியும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இயலுமான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான பாதையைத் திறந்துவிட…
-
- 6 replies
- 1.3k views
-
-
வவுனியா வடக்கு நைனாமடுப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட மற்றுமொரு கிளைமோர் தாக்குதலில் கண்காணிப்புக் குழுவினரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இன்று மதியம் சம்பங்குளப் பதியிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வாகனத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் படையினரால் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இக்கிளைமோர் கண்ணிவெடியில் தமிழீழ சுகாதார சேவையின் நடமாடும் மருத்துவ பிரிவினரின் மருத்துவர் ஒருவர் வாகனம் சிக்கி சேதமடைந்துள்ள போதும் வாகனத்திலிருந்த பெண் மருத்துவர் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.
-
- 0 replies
- 848 views
-
-
சிறிலங்கா அரசு தனது இராணுவ பலப் புள்ளி விவரங்களைக் காட்டி தமிழ் மக்களை உளரீதியாக அச்சமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இந்த புள்ளி விவரங்கள் மூலம் வரவேற்பை பெறலாம் என்று சிறிலங்கா அரசு கருதுகின்றது. இதே படை பலத்துடன் தான் சிறிலங்கா படைதரப்பு கடந்த காலங்களில் தோல்விகளைச் சந்தித்தது. தம்மிடம் 95 ஆயிரம் இரணுவத்தினர் உள்ளதாகவும் அந்த இராணுவத்தில் 24 காலாட்படை பிரிக்கேட்கள் 15 ஆயிரம் எஸ்.எல்.என்.ஜி என்ற ஊர்காவல்படை 22 பட்டாலியன்கள் உள்ளதாகவும் சிங்கள இராணுவம் தெரிவிக்கின்றது. தமது இராணுவத்திடம் ரி-55 ரக செக் டாங்கிகள் 65 உம் சீன இலகு டாங்கிகள் உக்ரெய்ன் கவசப் படைத் தாக்குதல் பி.எம்.பி ஊர்திகள்…
-
- 24 replies
- 2.9k views
-
-
மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்கு, இன்று சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த படை நகர்வு, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6:15 மணிக்கு, ஆட்லறி எறிகணை சூட்டாதரவுடன், கல்லாறு காட்டுப் புறங்கள் ஊடாக, மாவிலாற்றை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படையினரை எதிர்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், பதிலடி தாக்குதல்களை தொடுத்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மத்தியில் அரை மணி நேரத்திற்கு மேலாக உக்கிர நேரடி மோதல் இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்கா படையினர், ஆயுதங்களைக் கைவிட்டு, காயமடைந்த சகாக்களை தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தனர். இதனை தொடர்ந்து, தமி…
-
- 22 replies
- 3k views
-
-
http://www.tamilnaatham.com/advert/2006/au.../20060809/TCHR/ பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்துக்கு தொண்டர்கள் தேவை(மனித உரிமை அமைப்பு) பிரான்சில் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை பல முக்கிய சர்வதேச அரங்குகளில் வெற்றிகரமாக பல்வேறு விதமான மனித உரிமைகள் தொடர்பான வேலைகளை செய்து வரும் தமிழர் உரிமை மையத்திற்கு (TCHR)ஏதாவது ஐரோப்பிய மொழியிலும், கணணித்துறையிலும் ஆளுமையும், ஆற்றலும் கொண்ட தொண்டர்கள் உடன் தேவைப்படுகின்றார்கள். ஐரோப்பா, பிரித்தானியா மற்றும் பிறநாடுகளில் உள்ள ஆர்வலர்கள் எமது அமைப்புடன் இணைந்து தொண்டர்களாக பணிபுரிய விரும்பினால் உங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களை கீழ் உள்ள எமது மின்னஞ்சலுக்கோ அல்லது தொலைநகலுக்கோ அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
கருணா அவர்கள் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல். புலிகளின் அதி பயங்கர பாய்ச்சல் காரணமாக, தங்களால் அடைகாக்க இயலாது என சில நாட்களுக்கு முன்பே கை விடப்பட்ட கேணல் கருணா அவர்களை, இந்திய கப்பற்படையிடம் கையளித்தளித்தாகவும், இந்திய நேவி தளத்தில் தற்சமயம் பாதுகாக்கப்பட்டு வரும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புலிகளை தடை செய்துள்ள மேலை நாடுகள் ஏதேனுமொன்றில் தஞ்சமடைய கூடும் என்றும் இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகின்றன. ஓரிரு தினங்களில் முழுத்தகவலும் வெளி(ப்படை)யாகலாம். எழுதியவர்:வணக்கத்துடன் @ 2:40 PM http://vanakkathudan.blogspot.com/2006/08/...og-post_08.html
-
- 40 replies
- 9.1k views
-
-
திருமலை மூதூர் நகரில்இ பிரான்ஸைச் சேர்ந்த யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்துஇ பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூதூர் கிழக்கிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திரும்பிய பின்னர்இ கடந்த சனிக்கிழமை காலை மூதூர் நகரை ஆக்கிரமித்த சிறீலங்கா படையினர்இ யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்துஇ அங்கிருந்த பணியாளர்களை நீள் வரிசையில் நிற்க வைத்துஇ துப்பாக்கி முனையில் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர்இ நிலத்தில் படுக்க வைத்துஇ நெற்றியில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். சிறீலங்கா படைகளின் கொலை வெறியாட்டம் இடம்பெற்ற போதுஇ யுஊகு தன்னார்வ நிறுவனத்தின் பதினேழு பணியாளர்கள் செயலகத்தில் நின்ற போதும்இ இவர்களில் இருவர் செயலகத்தை விட்டு…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் சம்பூர் பகுதியை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றிவிடுவர் என்று ஜே.வி.பி. கூறியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் சம்பூர் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களை ஒடுக்க தற்போது அரசாங்கம் மேற்கொள்ளும் அதே உத்தியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சம்பூர் பிரதேசத்தை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் திருகோணமலை துறைமுகத்தின் பாதுகாப்பு உறுதியானதாக இல்லை. இதனை கடந்த 2002 ஆம் ஆண்டே அமெரிக்காவின் இராணுவ தளபதி தாக்கல் செய்திரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் நோயாளர் காவு வாகனம் மீது கிளைமோர் தாக்குதல்: மருத்துவர் உட்பட 5 பேர் பலி வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நோயாளர் காவு வாகனத்தில் சென்று கொண்டிருந்த மருத்துவர் உட்பட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பண்டாரக்குளத்திற்கும் சம்மளங்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெடுங்கேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டுத் திரும்பிய போதே நோயாளர் காவு வாகனம…
-
- 0 replies
- 1.2k views
-
-
மகிந்தவின் "பேரம் பேசு பொருளுக்கு" கொழும்பில் அலுவலகம்? [செவ்வாய்க்கிழமை, 8 ஓகஸ்ட் 2006, 19:26 ஈழம்] [தெ.சந்திரநாதன்] அண்மையில் விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக மகிந்த ராஜபக்ச முயன்ற போது, விடுதலைப் புலிகள் தனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தால், தனது நல்லெண்ண நடவடிக்கையாக கருணா குழுவை இல்லாது செய்வதாகத் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரச தலைவரே இவ்வாறு பகிரங்கமாகவே தமது கட்டுப்பாட்டிலேயே கருணா குழு என்ற பெயரிலான ஒரு குழு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது அந்தக் குழுவின் பெயரால் கொழும்பில் ஒரு அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 11/3 A Scob lane, Kollupitiya என்ற முகவரியில் இந்த அலுவலகம…
-
- 18 replies
- 2.7k views
-
-
BREAKING NEWS Maavilaru sluice gates opened by LTTE, civil representatives [TamilNet, August 08, 2006 12:11 GMT] The Liberation Tigers of Tamil Eelam (LTTE) together with civilian representatives in Maavilaru Tuesday evening around 5:00 p.m. opened the sluice gates, said S. Elilan, Trincomalee District Political Head of the Tigers. On Sunday, Head of Sri Lanka Monitoring Mission (SLMM) Major General Ulf Henricsson and Trincomalee Head of SLMM came under artillery fire when they went to Maavilaru with Mr. S. Elilan, to open the sluice gates on humanitarian grounds according to the Norwegian International Development Minister Erik Solheim's request. Trincomalee…
-
- 51 replies
- 6.4k views
-
-
கொழும்பு பம்பலபிட்டியவில் சற்றுமுன் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. மேலதீக விபரம் தொடர்ந்து வரும்....
-
- 12 replies
- 3.3k views
-
-
திருமலையில் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் இரு படையினர் பலி. திருமலையின் வடமுனை வெல்வேரி பகுதியில் இன்று காலை 8 மணியாவில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறீலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 படையினர் படு காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 0 replies
- 827 views
-
-
யுத்த நிறுத்த மீறல் குறித்த சிறீலங்கா அரசாங்கத்தின் ஒப்பிடு தவறானது-உல்வ் ஹென்றிக்சன். யுத்தநிறுத்தமீறல்சம்பந்தமா
-
- 1 reply
- 929 views
-
-
'த(க)ண்ணீருக்கும் அப்பால்...!"-சபேசன் (அவுஸ்திரேலியா)- மாவிலாறு அணையைத் திறக்க வேண்டும் - என்ற ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடைய ஒரு மட்டுப்படுத்தப்பட்ட துரித இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்காவின் அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையினூடாக முற்றாக முறியடித்துள்ளார்கள். சிறிலங்கா அரசு வலிந்து மேற்கொண்ட இந்த இராணுவ நடவடிக்கையை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் மகிந்தபுர, செல்வநகர், 64 அவது மைல்கல் ஆகியவற்றில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் மூதூர் இறங்குதுறைக் கடற்படை முகாம், கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் மற்றும் பச்சன…
-
- 0 replies
- 935 views
-
-
தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உடல்களை எரிக்க எடுத்த முயற்சி தோல்வி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 08 யுரபரளவ 2006 06:27 அக்சன் பாம் தொண்டு நிறுவனம் மாவிலாற்றின் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக சேவையினை வழங்குவதற்காக சென்றபோது சிறிலங்காப் படையினரால் 17 பேர் மிகவும் கோரத்தனமாகக் கொல்லப்பட்டமை தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் இன்றும் அம்பலமாகியுள்ளது. அந்நிறுவனத்தின் கடமைமயாற்றிய அனைவரும் வரிசையாக நிலத்தில் குப்பறப் படுக்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரின் கைகளும் தலையில் வைக்கபட்டு அனைவரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லபட்டுள்ளார்கள். இவர்களின் உடலை கொடுக்க மறுத்த சிறிலங்காப் படையினர் இரவோடு இரவாக எண்ணை ஊற்றி எரிக்க முற்பட்ட…
-
- 24 replies
- 4k views
-