Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை மட்டுப்படுத்தப்படாத யுத்தமாக விரியும் ` அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு முழு யுத்தத்துக்குரிய அளவில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இரு தரப்பினருமே தாங்கள் யுத்த நிறுத்த உடன் பாட்டைக் கடைப்பிடிக்க விரும்புகின்றார்கள் என்றே கூறி வருகின்றனர். அதுதான் அத்தரப்புகளின் ஒரே நிலைப்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள், நோர்வே அனு சரணைத் தரப்பினர் முதல் சர்வதேச சமூகத்தினர் வரை அனைவரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தரப்புகளின் செய்திகள், தகவல்கள், நம்பிக்கை கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விடுதலைப் புலி களின் நிலைப் பாட்டையும் இலங்கை அரசுத் தலைமை எடைபோடுகின்றது போலும். மோதல் நடைபெறு…

    • 0 replies
    • 1.9k views
  2. விமானத் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது: முன்னாள் சிறிலங்கா விமானப்படைத் தளபதி [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 21:09 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் விமானத் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மாவிலாறு நீருக்காகத்தான் இந்தத் தாக்குதல் என்பது உண்மையாக இருக்குமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உண்மையாக பேச்சு நடத்தி 48 மணிநேரத்தில் நீரைப் பெற்றிருக்க முடியும். நாம் இந்தப் போரைத் தவிர்த்திருகலாம். ஆனால் எதிர்பாரதவிதமாக இருதரப்பும் மோத வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்தை போருக்குத் தள்ளியது ஜே.வி.பி.தான…

  3. நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் - உல்வ் ஹென்றிக்சன். நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் கொண்டிருப்பதாக கண்காணிப்புக் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. இன்று பி.பி.சி செய்தி சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிச்சன் தமிழீழ விடுதலைப் புலிகளின் வழித்துணையுடன் மாவிலாறு அணைக்கட்டைத் திறக்கச் சென்றபோது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டதன் மூலம் தவறான அணுமுறையை சிறீலங்கா அரசாங்கம் கையாண்டிருப்பதாக கண்காணிப்புக் குழுத் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குப் பதிலாக சிறிது நேரம் சிறீலங்கா அரசா…

  4. ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணும் விடயம் நேரத்தை வீணடிக்கும் செயல் - எரிக் சொல்ஹெய்ம். யுத்தத்தின் மூலம் தீர்வு காணமுடியும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பும் பட்சத்தில் ராஜதந்திர ரீதியில் தீர்வைக் காணுமாறு கூறுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சுமூகமான இணக்கப்பாடு காணப்பட்டதுடன் மாவிலாறு அணையைக் கைப்பற்றுவதற்கான வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்ததன் மூலம் சிறப்பு சமாதான தூதுவர் ஹன்சன் பெளயரின் பயணத்தை சிறீலங்கா அரசாங்கம் அர்த்தமற்றதாக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தின…

  5. திங்கள் 07-08-2006 18:06 மணி தமிழீழம் [நிலாமகன்] தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரும் ஹன்சன் பெளயரின் 2வது முயற்சியும் படுதோல்வி. மாவிலாற்று நீர்த் தடுப்பு விவகாரத்தை அடுத்து எழுந்துள்ள இராணுவ மோதல்கைள முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் நோர்வே எடுத்து இரண்டாவது முயற்றியும் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தங்கியிருந்த நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் இன்று காலை 10 மணியளவில் திருமலை சென்றுள்ளார். ஹன்சன் பெளயர் உலங்கு வானூர்த்தி மூலம் திருமலையில் சென்று இறங்கிய அடுத்த 5 நிமிடங்களில் சிறீலங்காப் படையினர் பல்குழல் எறிகணைத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நடத்தியுள்ளனர். சிறீலங்கா படையின் திருமலை…

    • 0 replies
    • 1k views
  6. [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 19:05 ஈழம்] [தாயக செய்தியாளர்] கண்டி கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட உபுல் செனிவிரட்னவின் தீவிரமான செயற்பாடுகள் குறித்த ஒரு பார்வை: - அமெரிக்க மற்றும் பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் கிளர்ச்சி முறியடிப்பு கொள்கைகளை கடைப்பிடித்து, பிரச்சனைக்குரிய மக்கள் மத்தியில் திகிலூட்டும் நாசகார செயல்களை கட்டவிழ்த்துவிடும் முகமாக சிறிலங்கா அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவர் ஆவார். - உளவியல் யுத்த முறையின் இன்னோர் பரிமாணத்தை செயற்படுத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ள, பயங்கரவாத முறியடிப்பு யுத்த முறையில் கைதேர்ந்த சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் எனக் கூறப்படுப…

    • 0 replies
    • 752 views
  7. காட்டிக்கொடுப்பில் முஸ்லீம்கள் Witnesses told Reuters that local Muslims helped the military identify suspected rebel sympathizers. http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage1

    • 0 replies
    • 1.1k views
  8. புலிகளின் நிபந்தனையை ஏற்க ஹன்சன் பெளயருக்கு உரிமை இல்லை: சிறிலங்கா அரசாங்கம் puthinam Monday, 07 August 2006 தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயர் மற்றும் நோர்வேக் குழுவினருக்கு எதுவித உரிமையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு முன்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் நோர்வே பிரதிநிதிகள் தெரிவித்திருக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவராமல் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு நோர்வேப் பிரதிநிதிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. நீர், அ…

  9. விடுதலைப் புலிகள் தாக்குதலில் 62 கடற்படை வீரர்கள் பலி! ஆகஸ்ட் 07, 2006 திரிகோணமலை: விடுதலைப் புலிகள் இன்று நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 62 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நார்வே தூதர்பாயரின் மத்தியஸ்த்தைத் தொடர்ந்து மதகுகளை திறந்து விட புலிகள் சம்மதித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில், இன்று திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக ராக்கெ…

  10. புலிகள் மீதான இந்தியத் தடை சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது: மு.கருணாநிதி [திங்கட்கிழமை, 7 ஓகஸ்ட் 2006, 17:35 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடை விதிக்கப்பட்டது சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கட்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இது தொடர்பாக ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த 1 ஆம் நாள் விடுதலைப் புலிகளை ஆதரித்து "புரட்சிகர இளைஞர் முன்னணி' என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியது. அந்த அமைப்பினர் விட…

  11. மாவிலாறு அணைக்கட்டை திறப்பதற்கு நாம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என புலிகள் தெரிவித்துள்ளனர். மனிதபிமான அடிப்படையிலேயே மாவிலாற்று நீரை திறந்து விட தேசியத் தலைவர் பணித்ததாகவும். அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் என நோர்வே தூதுவரே தெரிவித்தார் விடுதலைப் புலிகள் அணைக்கட்டை திறப்பதற்கு நிபந்தனைகள் விதித்ததாக பொய் பரப்புரை மேற் கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • 0 replies
    • 790 views
  12. ஜேவிபியை அரசாங்கத்தில் இணைக்க இராணுவ நடவடிக்கை அணைக்கட்டை திறப்பதற்கான படையினரின் வலிந்த தாக்குதல் புலிகளால் முறியடிப்பு. மாவிலாற்று பகுதியை கைப்பற்ற சிறீலங்கா அரசு மீண்டும் மேற் கொண்ட படை நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் எதிர் தாக்குதல் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாரிய மோதல்கள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால் சிறீலங்கா அரசுடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பதிவு

  13. லண்டன் கருப்பு யூலை நிகழ்வினை கரும்புலிகள் தினம் எனப் பொய் சொல்லும் சிங்கள ஊடகம் ரீசேட்டுகளில் பின்லேடனின் பெயரை அனுமதியாத பிரிட்டன் பிரபாகரனின் பதாகை ஊர்வலத்துக்கு தாராள அனுமதி சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ஸ்ரீலங்காவில் இயங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்து அதனைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதி ஐக்கிய இராச்சியத்தில் அந்த அமைப்பைச் சட்டபூர்வமாக அந்நாட்டு அரசாங்கம் தடை செய்து சில வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறு தடை செய்யப்பட்டநிலையிலும் அந்த நாட்டில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் குறைந்துவிடவில்லை. புலிகள் இயக்கத்தினர் தடை செய்யப்படுவதற்கு முன்னர் எவ்வாறு இயங்கி வந்தார்களோ அந்த முறையிலேயே இன்று வரை செயற்பட்டு வருவதுடன் அங்கு வாழும் தமிழ்மக்க…

  14. கண்டியில் கிளைமோர் தாக்குதல் - சிறப்பு அதிரடிப் படையின் உயர் அதிகாரி உபுல் செனிவிரத்தின பலி சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மூத்த காவல்துறை அத்தியட்சகர் உபுல் செனிவிரத்தின இன்று அதிகாலை 4.00 மணியளவில் கண்டியில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பணிக்காக அவர் சென்று கொண்டிந்தவேளை அவரது ஊர்தி கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. நன்றி : சங்கதி

    • 6 replies
    • 2.2k views
  15. மாவிலாறு பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கமே பொறுப்பு: கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு மாவிலாறு அணைக்கட்டு திறப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கம்தான் பொறுப்பு என்று இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் கூறியதாவது: பேச்சுவார்த்தை மூலம் மாவிலாறு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது அல்லாத வேறு ஒரு திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்த நினைக்கிறது. ஆகையால் பேச்சுக்கள் முறிந்துள்ளன. அரசாங்கத்துக்கு நீர் பெறுவதில் விருப்பம் இல்லை. நாங்கள் அரசாங்கம் மீதுதான் குற்றம் சாட்டுகிறோம். விடுதலைப் புலிகளின் மனிதாபிமான நடவடிக்கையைச் சீர்குலைத்த பொறுப்பு …

  16. குடும்பம் குடும்பமாக தூக்கு - பெண்கள் கற்பளிப்பு - சிங்கள ராணுவம் அட்டகாசம் -குமுறும் அகதிகள்! http://thatstamil.oneindia.in/news/2006/08...8/06/lanka.html

    • 1 reply
    • 3.4k views
  17. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19107 இதற்கு குருவிகளின் பதில் இவ்வாறுதான் இருக்கும்: செத்தது தமிழாக்கள் தானே. யார் கவலைப்பட்டார். வேற்றினத்தவர் செத்தால்தான் எங்களுக்கு கவலை. :!: :!: :!:

  18. சிறிலங்கா அரசாங்கத்தைப் போல் யுத்தத்தினூடாகவே தீர்வு காண்போம்;: சி.எழிலன் பதிலடி [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 21:04 ஈழம்] [ம.சேரமான்] மாவிலாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையை நிராகரித்து யுத்தத்தினூடாகத்தான் தீர்வு காண்போம் என்று சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக நாமும் அதே வழியில் தான் தீர்வு காண்போம் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (06.08.06) சி.எழிலன் அளித்துள்ள நேர்காணல்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனும் திருகோணமலை மாவட்ட கண்காணிப்புக் க…

  19. புலிகளின் இணக்கத்தை நிராகரித்து யுத்தத்தைத் தொடங்கியது சிங்கள அரசு மாவிலாறு அணையின் மதகுகளைத் திறக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இணக்கம் தெரிவித்திருந்ததை நிராகரித்து சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா அமைச்சரும் அரச பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பிக்கு அளித்த நேர்காணல்: பயங்கரவாதிகள் அணையைத் திறப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீர்ப்பாசனத் திட்ட பொறியாளர்கள்தான் அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் எந்த வழியிலாவது நாங்கள் திறப்போம். நீர் ஒரு பேச்சுக்களுக்கான கருவியாக இருக்கக் கூடாது. நீர் விநியோதத் திட்டம் தொடர்பான எதனையும் நாங்கள் ஏற்கவில்லை என்றார் அவர். இராணுவப் பேச்ச…

  20. கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.

  21. மூதூர் நகருக்குள் விடுதுலைப் புலிகள் நுழைந்து தாக்குல் நடத்திய போது அவர்களுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதற்கும் சிறிலங்கா காவல்துறையினரை வழி நடத்துவதற்கும் எந்தவொரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியும் மூதூரில் இருந்திருக்கவில்லை என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூரில் நிரந்தரமான உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் இருக்க வேண்டிய போதிலும், சுமார் 5 மாதங்களாக அந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் மூதூரில் தாக்குதல் நடத்திய போது மூதூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரி திருகோணமலையில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். மூதூரில் நிலைமை மோசமாக இருந்ததால் அவரால் மூதூருக்க…

  22. சிறிலங்கா இராணுவத்துக்காக பாகிஸ்தானில் இருந்து 1,100 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 22 சீனத் தயாரிப்பு யுத்த டாங்கிகளுக்கான கொள்வனவில் மோசடி நடந்துள்ளது அம்பலமானதையடுத்து கொள்வனவவை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளார். தலா 15 கோடி ரூபா பெறுமதியான இந்த யுத்த டாங்கிகளை பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று சீனாவிலிருந்து கொள்வனவு செய்து அதனை 50 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு இருந்ததாக அறிந்த மகிந்த இந்த கொள்வனவை நிறுத்துவதற்கு மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளார். சீனாவிலிருந்து நேரடியாக 15 கோடி ரூபாவிற்கு இவற்றைக் கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கையில் பாகிஸ்தான் ஊடாக கொள்வனவு செய்கையில் 35 கோடி ரூபாவை மேலதிகமாக செலுத்துவதன் ஊடாக இந்த கொள்வனவானது மோசடிமிக்க ஒன்ற…

    • 0 replies
    • 929 views
  23. BREAKING NEWS Colombo bombards Maavil Aaru, SLMM officials under attak [TamilNet, August 06, 2006 09:21 GMT] Sri Lanka Monitoring Mission officials, Liberation Tigers Political Head S. Elilan and civilian representatives who went to Maavil Aaru site to re-open the closed sluice gates have come under aerial attack by Sri Lanka Air Force and Sri Lanka Army artillery attack, initial reports said. Norwegian Special Envoy Jon Hanssen Bauer is in direct contact with Royal Norwegian Government and Colombo discussing the latest hostile attacks. SLMM officials have taken cover on the ground from the attacks. Further details are not available at the moment h…

    • 55 replies
    • 7.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.