Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டு. மாவட்டத்தில் வெள்ளம் மக்கள் இடம்பெயர்வு! மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெருமாள்வெளி, இலுக்கு, பெரியவட்டவான், குருகனாமடு போன்ற வயல் வெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பாடசாலை, கோயில்கள் போன்ற பொதுக் கட்டடங்களில் இடம் பெயர்ந்துள்ளார்கள். அத்துடன் நகர்ப்பகுதிக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சித்தாண்டி நான்காம் குறிச்சியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்ததில் உள்ளது. மேலும் வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாவடிவேம்பு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள…

  2. சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊ…

    • 3 replies
    • 1.7k views
  3. செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் மதியுரைஞர் வன்னி சென்றுவர அரசு ஹெலி வசதி வழங்குமாம் நோர்வே அனுசரணைக் குழுவின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எதிர்வரும் 25ஆம் திகதி விடுதலைப் புலி களின் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சிக்குச் செல்கின்றார். ஆனால், அங்கு அச்சமயம் விடுதலைப் புலிகளின் மதி யுரைஞர் அன்ரன் பாலசிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல் வெளியிட்டன. இதற்கிடையில் தற்போது லண்டனில் தங்கி இருக்கும் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்காகக் கொழும்பு வருவாராயின், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு அவர் சென்று வருவத…

  4. Started by sooriyamuhi,

    ""எந்தவிதமான ஆத்திரமூட்டல் நடவடிக் கைகளாலும் தடம்புரளாத நாம், சமாதானம் மற்றும் ஐக்கியத்தை நோக்கிப் பயணிப்பதற் கான திடசங்கற்பத்தை இந்தத் தைப்பொங்கல் தினத்தில் எடுத்துக் கொள்வோம்.'' இவ்வாறு தமது தைப்பொங்கல் செய்தி யில் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவர் தைப்பொங்கலை ஒட்டி விடுத்த செய்தி வருமாறு : நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின் உதயமாகும் முதலாவது தைப்பொங்கலின் போது உங்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முது மொழிக்கமைய இந்தத் தை மாதத்தை ஒரு அதிஷ்ட மாதமாக நீங்கள் கருதுகின்றீர்கள். உண்மையிலேயே இந்தத் தை மாதத்துடன் ஆரம்பிக்கின்ற வருடம் உங்களுக்கு நன்மை தரும் அதிஷ்ட வருடமாக அமையக்கூடிய …

  5. மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்படடிருந்த 3 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அலுவலகத்தின் ஜன்னல்இ கதவுகளும் குண்டுவெடித்து சிதறியதில் சேதமடைந்துள்ளது. மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு வலயம் என கருதப்படும் லேக் வீதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 3 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இந்த வீதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எஃப். வரதர் அணியின் அலுவலகம் அமைந்துள்ளதோடு போர் நிறுத்த …

  6. தமிழர் தரப்பை தப்புக்கணக்கு போடுகிறார் சரத் பொன்சேகா: பொங்கியெழும் மக்கள் படை சிங்களத்தின் இன்னுமொரு சப்புமல் குமரவாக தன்னை நிலைநிறுத்த முயலும் சரத் பொன்சேகாஇ தமிழர் தரப்பைப்பற்றி தப்புக்கணக்கு போடுவதுதான் வேடிக்கை என்று யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்கள்இ தமது போராட்ட வரலாற்றில் தமக்கு எதிராக சூழுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீராப்பு பேசி போர் முரசு கொட்டிய இராணுவ தளபதிகளையும் கண்டவர்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல் பிரேமதாசாஇ டி.பி. விஜயதுங்கஇ சமாதானப் புறா சந்திரிகா வரை எல்லோரும் எமது இனத்தை அழிப்பதற்கு…

    • 0 replies
    • 1.3k views
  7. சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல்! [சனிக்கிழமை, 14 சனவரி 2006, 02:13 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள அபயபுர கிராமத்தில், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜேசேகர, வழிமறிக்கப்பட்டு, இவரது வாகனம் தாக்கப்பட்டதுடன், இவர்மீதும் தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த சிறீலங்கா பொலிசார், ஆத்திரத்துடன் தாக்குதல் நடாத்திய சிங்கள மக்களைக் கலைத்து, விஜேசேகரவைக் காப்பாற்றியுள்ளனர். சிங்கள விமுக்தி முன்னணி (எஸ்.வி.எஃப்) என்ற அமைப்பினால் நான்கு நாட்களுக்கான கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்றும் ஹர்த்தால் தொடர்கிறது. இந…

    • 2 replies
    • 1.4k views
  8. முதல் சுற்றுப்பேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்? சொல்ஹெய்ம் வந்ததும் இறுதி முடிவு புலிகளுடனான சமரசப்பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளதன் காரணமாக புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க முதற்சுற்றுபேச்சை நோர்வேயில் ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக அவருடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கை வரவிருக்கும் நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான விசேட சமாதான தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வந்ததும் பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுமென தெரியவருகின்றது. நேற்று முன்தினமிரவு மஹிந்த ராஜபக்ஷ தனது சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை அழைத்து சுதந்திரக்கட்சியின்…

  9. திருமலையில் விடுதலைப் புலிகளின் மினி முகாம் மீது படையினர் தாக்குதல் - நான்கு போராளிகளைக் காணவில்லை Written by Paandiyan Friday, 13 January 2006 இன்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டம், பாலம்போட்டாறிற்கு அருகில் உள்ள கதவணைக்குளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மினிமுகாம் ஒன்றின் மீது ஸ்ரீலங்கா படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் இந்த முகாமுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐந்து முதல் பத்துவரையான போராளிகள் இருந்த இந்த முகாம் மீதே படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காத போதும், நான்கு போராளிகள் வரை காணாமல்…

    • 3 replies
    • 1.7k views
  10. இலங்கை ராணுவம் வெறிச்செயல் இதுவரை 28 பெண்கள் பாலியல் வல்லுறவு தப்பி வந்த அகதிப்பெண் கண்ணீர் ராமேசுவரம், ஜன. 12- இலங்கை ராணுவம் கடந்த ஒரு மாதத்திற்குள் 28 தமிழ்பெண்களை கற்பழித்துள்ளதாகவும், சோதனை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்படும் ஆண்களின் கதி பற்றி தெரியவில்லை என்றும் தனுஷ்கோடி வந்த இலங்கை அகதிப்பெண் கண்ணீருடன் கூறினார். இலங்கை புதிய அதிபராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றப் பிறகு விடுதலைப்புலிகளுடன் மோதல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர். தமிழ் ஆதரவு எம்.பி., கடந்தமாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு போர் அபாயம் மேலும் அதிகாpத்துள்ளது. இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான கப்பலை சமீபத்தில் புலிகள் நடுக்கடல…

    • 3 replies
    • 1.6k views
  11. வெள்ளி 13-01-2006 18:53 மணி தமிழீழம் [நிருபர் முகிலன்] அம்பாறை மாந்தோட்டத்தில் கருணா அணியினர் தாக்குதல் 4 பொதுமக்கள் காயம். அம்பாறை கச்சிகுச்சாற்று சூனியப்பகுதியை அண்மித்த மாந்தோட்டப்பகுதியில் பொதுமக்கள் மீது சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரும் சிறீலங்கா படை புலனாய்வுப் பிரிவினரும் கருணா அணியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மணல் நிரப்பப்பட்ட உளவு இயந்திரங்களில் சென்ற இந்த அணியினர் துக்பாக்கிப் பிடிகளினாலும் ஆயுத கம்பிகளினாலும் காரங்கள் எதுவும் இன்றி பொதுமக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்காகி 4 பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியைச் சேர்ந்த 14 ஆயுத தாரிகள் ஈடுபட்டுள்ளதாக உடும்பன்குள அரசியற்துறை…

  12. குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு எல்லாளன் படை எச்சரிக்கை யாழ் குடாநாட்டில் படையினருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை எல்லாளன் படை வெளியிட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் படையினரின் கைக்கூலிகளாகவும் அடிவருடிகளாகவும் இருந்து தொடர்ந்து செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களே எல்லாளன் படை என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. படையினருடன் உறவைப் பேணுவோர், உளவு சொல்வோர், படையினர் வழங்கும் ஆபாச இறுவெட்டுகளை இளைஞர்களுக்கு விநியோகிப்போர். இராணுவத்தின் அப்பக் கடைகளில் காலம் கழிப்போர், பெண்களை படையினருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போர் மற்றும் படையினரின் துணையுடன் க…

  13. உலக மகா வல்லாதிக்கத்திடம் நீதி கோரும் தமிழர் தரப்பு "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல நொந்து போன தமிழர் மனங்களை மேலும் நோகடித்திருக்கின்றார் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர். இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நியாயம் கூறு வதாக நினைத்துக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாகக் கருத்து வெளியிட்டதன் மூலம் அமைதி நிலைக்கு மேலும் ஆப்பு வைத்திருக்கிறார் அவர். "தீண்டத் தகாதவர்கள்' ஆகப் புலிகளைக் கருதிக் கொண்டு, வெறுத்து ஒதுக்கி ஒதுங்கி நடக்கும் அமெரிக்கா, அதன் மூலம் புலிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை ஒதுக்கியது மட்டுமல்லாமல் நீதியையும், நியாயத்தையும் கூட அடியோடு ஒதுக்கியிருக்கின்றது. இலங்கையில் யுத்தநிறுத்தம் இன்று கேள்விக்குறியாகி யுள்ளது என்பது அப்பட்டமான உண்மை. …

  14. வெள்ளி 13-01-2006 16:35 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] யாழ் காங்கேசந்துறை வீதியில் தாக்குதல் படைவீரர் பலி. யாழ்ப்பாணத்தில் இனத் தெரியாதோரின் தாக்குதலில் ஒரு இராவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காங்கேசந்துறை வீதியில் 7ம் கட்டையில் அமைந்துள்ள விசாலாட்சி பாடசாலைக்கு அருகில் மலை 4மணியளவில் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் படைவீரர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் ஒரு படைவீரர் படுகாயமடைந்த நிலையில் பலாலி மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் மக்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் சிலர் காயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர்…

  15. வெள்ளி 13-01-2006 16:13 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்] திருமலையில் கண்காணிப்புக் குழுவின் வாகனம் குழு ஒன்றினால் இடைமறிப்பு. திருகோணமலை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் பயணம் செய்த வாகனம் ஒன்று சிறிமாபுர குழு ஒன்றினால் இடைமறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று காலை 10.30 அளவில் இடம்பெற்றுள்ளது. போர் நிறுத்த கண்காணிப்பாளர்களள் சென்ற வாகனத்தை செல்லவிடாது இந்த குழுவினர் சூழ்ந்து கொண்டதாகவும் கண்காணிப்பாளர்கள் படையினருக்கு அறிவித்த பின்னர் படையினர் ஸ்தலத்திற்கு விரைந்து கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். Pathivu

  16. வெள்ளி 13-01-2006 16:00 மணி தமிழீழம் [நிருபர் நகுலன்] திருமலையில் கிளைமோர்த்தாக்குதல் இராணுவவீரர் பலி. திருகோணமலை கண்டி வீதியில் தம்பலகாமத்திற்கும் 99ஆவது மைல்கல்லுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் இனம் தெரியாதோர் இராணுவ டிரக் வண்டி மீது கிளைமோர் கண்ணிவெடி நடத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இனம் தெரியாதோரின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவவீரர் ஒருவர் உயரிழந்ததோடு மேலும் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இரு படையினரும் திருமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pathivu

  17. யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளதா?: கண்காணிப்பு குழு காட்டமான கேள்வி [வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2006, 15:15 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதா? அப்படியானால் தற்போது இடம்பெற்று வரும் தொடர் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் ஆகியவை தொடர்பில் இருதரப்பினதும் பதில்தான் என்ன என்று இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு காட்டமாக கேட்டு அறிக்கை விடுத்திருக்கிறது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை அடுத்து கண்காணிப்புக்குழு விடுத்துள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தொடரும் தாக்குதல் சம்பவங்க…

  18. தற்பாதுகாப்புத் தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவு [வெள்ளிக்கிழமை, 13 சனவரி 2006, 04:33 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவத்தினர் தற்பாதுகாப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது: விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளின் போது தற்பாதுகாப்புக்காகத் தாக்குதலை நடத்தவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று நடக்கவும் இராணுவத்துக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச பொற…

  19. திருமலை நிலவரத்தை ஒளிப்பதிவு செய்த பி.பி.சி. செய்தியாளருக்கு காடையர் மிரட்டல் திருகோணமலையின் தற்போதைய நிலவரத்தை வீடியோ படமெடுத்த பி.பி.சி. செய்தியாளர்கள் காடையர்களினால் நேற்று வியாழக்கிழமை கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். உப்புவெளி சந்தியில் வைத்தே நேற்றுக் காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான விவரணச் சித்திரமொன்றை தயாரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக திருகோணமலையில் தகவல் சேகரிக்க சென்றிருக்கும் பி.பி.சி. செய்தியாளர்கள் அப்பகுதி ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்திருக்கும் நிலையில், சிங்கள அமைப்பொன்றும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதால் திருகோணமலை பகுதிகளில் நடைமுறை சூழ்நிலைகளை வீடியோ படமெடுக்க சென…

  20. ஈழத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அமெரிக்க இராணுவ உதவியையும் எதிர்க்க வேண்டும் சோஷலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் ஈழத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அமெரிக்காவின் இராணுவ ரீதியான உதவியினையும் எதிர்க்க முன்வர வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள வர்த்தக சமூகத்தினர் மத்தியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்ரட் ஆற்றிய உரை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கத் தூதுவரின் கருத்தானது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களையும் புண்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்ற…

  21. குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு எல்லாளன் படை எச்சரிக்கை யாழ் குடாநாட்டில் படையினருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை எல்லாளன் படை வெளியிட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் படையினரின் கைக்கூலிகளாகவும் அடிவருடிகளாகவும் இருந்து தொடர்ந்து செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களே எல்லாளன் படை என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. படையினருடன் உறவைப் பேணுவோர், உளவு சொல்வோர், படையினர் வழங்கும் ஆபாச இறுவெட்டுகளை இளைஞர்களுக்கு விநியோகிப்போர். இராணுவத்தின் அப்பக் கடைகளில் காலம் கழிப்போர், பெண்களை படையினருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போர் மற்றும் படையினரின் துணையுடன்…

  22. பெண் உட்பட மூவரின் மரணங்களுக்கு மக்கள் படை உரிமை கோரியது குடாநாட்டில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேரின் மரணங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது. பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சின்னராசா இராசையா, திரு நெல்வேலியில் பஞ்சரத்தினம் பிரணவன், மட்டுவில் சமுர்த்தி உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை பவளராணி ஆகியோரின் கொலைகளுக்குத் தாமே பொறுப்பு என்று பொங்கி எழும் மக்கள் படையின் பெயரில் தெரிவிக்கப்பட்டது. கொல்லப்பட்ட மூவரும் இராணுவப் புலனாய்வாளர் மற்றும் ஒட்டுக் குழுக் களின் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும் அதற்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. http://www.uthayan.com/pag…

  23. கோப்பாய்ப் பகுதியில் சற்று முன் இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் அதில் இராணுவத்திற்கு இழப்புகள் ஏற்பட்டதாகவும் இத்தாக்குதலை அடுத்து பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை பருத்தித்துறையிலும் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றதாக உர்ஜிதப்படுத்ததப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.1k views
  24. தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தம…

    • 11 replies
    • 2.1k views
  25. புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப மகிந்த முடிவு! [வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 18:15 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] இலங்கை அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்காக அமைச்சர்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். சுமார் 10 அமைச்சர்களை இந்த வெளிநாட்டுப் பயணத்தில் அனுப்புவதற்கு மகிந்த தீர்மானித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.