Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 06-01-2006 21:55 மணி தமிழீழம் [நிருபர் நல்லகண்ணு] இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளேன் - மு.கருணாநிதி கொழும்பிலும் மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய ஆளும் கூட்டணி கட்சிகளின் ஒன்றான திராவிட முன்னோற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் திராவிட முன்னேற்றகழக தலைவரை சென்னையில் இன்று சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டு வரும் நிலைமை தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்துள்ள கலைஞர் இலங்கையில் வா…

    • 0 replies
    • 1.4k views
  2. Appeal to EU for action against Sri Lanka I have signed an online petition, Appeal to EU for action against Sri Lanka. You may wish to support this cause by clicking on the link below and following the instructions. http://www.gopetition.com/online/7817.html Thanks

    • 2 replies
    • 1.6k views
  3. ஈவிரக்கமற்ற புலிகள் இயக்கம் மீது கடும் நிலைப்பாடு எடுக்கவேண்டும் அமெரிக்காவிடம் மங்கள வேண்டுகோள் விடுதலைப்புலிகளை அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான, ஈன இரக்கமற்ற கொலைகார இயந்திரம் என்று விபரித்திருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புலிகள் தொடர்பில் அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நிதியளிக்கும் புலம் பெயர்ந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் வாஷிங்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது; புலிகள் விடுதலை இயக்கமொன்றுடன் தொடர்பு கொள்ளவில்லை. அல்- ஹைடாவை விட மிகவும் அபாயகரமான ஈவு …

    • 8 replies
    • 2.2k views
  4. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இந்திய விஜயம் எம்.கே. ஈழவேந்தன் எம்.பி. மகிந்த ராஜபக்‌ஷவின் இந்தியப் பயணம் படுதோல்வியில் முடிவுற்றுள்ளதென்று அனைத்துத் தமிழ் செய்தி இதழ்களும் வெளியிட்டுள்ள செய்தி எமக்குத் தெம்பு தருகின்றது. ஆனால், இது கொண்டு அனைத்தும் இனிது முடிவுற்றுள்ளதென்று நாம் ஏமாறக் கூடாது. தமிழகத் தலைவர்களும் டில்லியில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற 40 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இடிப்பார் இலாதார் கெடும்" என்ற வள்ளுவன் கூற்றில் முழு நம்பிக்கை வைத்து இடிக்கு மேல் இடி இடித்ததன் விளைவு டெல்லி அரசு ஓரளவு இறங்கி வந்து ஈழத்தமிழர் சிக்கலில் அக்கறை காட்டுகின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் தலைமைப்பீடம் ஒன்றுபட்டுக் குரலெழுப்பியிராவிடின் டில்லியில் இந்…

  5. நாளை கொழும்பில் மாபெரும் கண்டனப் பேரணி தலை நகர் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் தமிழ்மக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினரால் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்கு முறைகள், கைதுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டனப் பேரணி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச் சந்தியில் இடம்பெறும். மேலக மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டனப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, புதிய இடதுசாரி முன்னணி, புதிய ஜனநாயகக் கட்சி என்பன முழுமையான ஆதரவு…

    • 1 reply
    • 1.5k views
  6. புலிகளுடனான அமைதிப் பேச்சுகளை நோர்வே தவிர்ந்த வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் நடத்துவதற்கு இலங்கை அரசு தயா ராக இருக்கிறது. அதற்கான பிரதிபலிப்பை புலிகளிடம் இருந்து தாம் எதிர்பார்த்திருக் கின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துத் தமது அமைச்சரவைச் சகாக்களுக்கு தெரிவித் திருக்கின்றார். வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்னிரவு சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்றது. அப்போதே மேற்படி தகவலை ஜனாதி பதிஇ ஏனைய அமைச்சர்களுக்குத் தெரிவித்தார். ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டை அரசுத் தலைமை தளர்த்திக் கொண்டுள்ளது. ஆனாலும் புலிகளின் கோரிக் கையான நோர்வேயில்தான் பேச்சு என்ற நிலைப்பாட்டுக்கு அரசுத் …

    • 5 replies
    • 1.8k views
  7. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது - நோர்வே தெரிவிப்பு Written by Ellalan Thursday, 05 January 2006 ஐரோப்பிய ஒன்றியததின் பயங்கரவாதப் பட்டியலை நோர்வேயால் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜொனார்ஸ் கார்ஸ்ரோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப்பட்டியல் ஒன்று இல்லை என்ற போதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மையத்தின் கீழ் சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 54 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு அமைப்பும் ஐ.நாவினால் தடைசெய்யப்படவில்லை. இந்த நிலையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் காரண…

  8. வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. …

    • 14 replies
    • 3k views
  9. 04.01.2006 சிப்பாய்க்கு புதுவருட வாழ்த்து சொன்ன நபருக்கு நேர்ந்த கதி படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில்…

  10. Started by கீதா,

    யாழில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தீஸ்வரா கல்லுரிக்கு முன்பாகவுள்ள அபுபக்கர் வீதியில்வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுட

  11. படையினர் ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறியவர் வீதியோரம் முழந்தாளில் நிற்க நேர்ந்தது. இந்தச் சம்பவம் புத்தாண்டு தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த படையினருக்கு புதுவருட வாழ்த்துக் கூற அந்த வீதியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் விரும்பினார். நடந்துவந்துகொண்டிருந்த படையினரில் ஒருவரை அணுகிய அவர் மேற்கத்தைய பாணியில் கைலõகு கொடுத்து ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கைலாகு கொடுத்த சிப்பாய் அடுத்த வினாடியே இந்தக் கைதானே எங்கள் மீது குண்டு எறிகின்றது என்று கூறி வாழ்த்துத் தெரிவித்த நபரை வீதியோரம் முழந்தாளில் நிற்குமாறு பணித்தார். தாம் ரோந்து சென்று திரும்பும்வரை அந்த இடத்தைவிட்டு வி…

  12. மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: தங்கள் சுகத்திற்காகவும் தங்களின் நல்லாட்சி சிறந்தோங்கவும் ஈழ தேசத்தவரின் இதயபூர்வமான நல்லாசிகள் என்றும் உரித்தாகுக. தாய்த் தமிழகத்தின் இனக்குழுமம் ஆகிய ஈழத் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் இன உரிமைகளும் வாழ்வியல் அடிப்படைகளும் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரசால் மறுக்கப்பட்டு வருவதை தாங்கள் நன்கு அறிவீ…

    • 5 replies
    • 1.4k views
  13. கொழும்பு மாநகரின் பாதுகாப்பு அதிஉயர் பட்சமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். எனவே கொழும்பு மாநகரின் பாதுகாப்பு குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறினார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் நோக்கம் எனவும் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை முன்னிட்டு எந்நேரமும் விழிப்புடன் உள்ளதாகவும் பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவ புலனாய்வுத் துறையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்கள் பலவற்றில் விசேட பிரிவுக…

    • 1 reply
    • 1.6k views
  14. மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: ஒரு போராளி உட்பட இருவர் உயிரிழந்தனர்! மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை போராளி ஜெயானந்தன் மற்றும் வினோத் என்ற பொதுமகன் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் முள்ளிக்குளம் பகுதி வழையங்காட்டுப் பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். உயிரிழந்த போராளி ஜெயானந்தன்இ ஏற்கனவே தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலி…

  15. கொதிக்கிறது திருமலை திருகோணமலையில் நேற்று ஐந்து அப்பாவி மாணவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இன்று திருமலையில் அனைத்து வணிக நிலையங்களும், மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிற்கு மாணவர்கள் வராமையாலும், அலுவலகங்களிற்கு ஊழியர்கள் செல்லாiமாயலும் அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இன்று வழமை மறுப்புப் போராட்டத்திற்கு எந்த அமைப்பும் அழைப்பு விடுக்காத போதும், மக்களால் இந்த வழமை மறுப்புப் போராட்டம் நடாத்தப்படுகிறது. அரச அலுவலகங்களிலும் வரவு குறைவாக இருந்ததை முன்னிட்டு ஏனையவர்களும் வீடுதிரும்பியுள்ளனர் எனத்தெரியவருகின்றது. அத்தோடு இன்று காலையிலேயே மக்கள் ஒரு வித பதட்டத்துடனேயே காலையில் அவசர அவசரமாக வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதே வேளை பெரும் எண்ணிக்கையான சிறீ …

    • 107 replies
    • 10.7k views
  16. சிறிலங்கா இராணுவ வன்முறைகளைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர். பாஸ்கரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி வழக்கறிஞர் அதியமான், நன்றி புதினம் கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் சீமான், புகழேந்தி தங்கராசு, தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் நிர்வாகி அ. பத்மநாபன், உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் பத்மநாபன், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை நிர்…

    • 0 replies
    • 1.4k views
  17. யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; ஒருவர் படுகாயம்!! ஜசெவ்வாய்க்கிழமைஇ 3 சனவரி 2006இ 14:39 ஈழம்ஸ ஜயாழ். நிருபர்ஸ யாழ். நகரில் உள்ள அண்ணா கோப்பிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் வழமை போன்று பொதுமக்களைத் தாக்கியதுடன் யாழ். நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.…

    • 0 replies
    • 1.5k views
  18. இவருக்கு உதவுங்கள் "அப்ளாஸ்ரிக் அனீமியா' என்ற நோயினால் பாதிக்கப் பட்ட சாவகச்சேரி கண்டி வீதியைச் சேர்ந்த 22 வயதான பாலகுமார் றோயல்குமார் என்ற இளைஞன் பரோபகாரிகளிடமிருந்து நிதி உதவி கோருகிறார். இவருக்கு உதவிடும் பொருட்டு சாவக்சேரி லயன்ஸ் கழகத்தினர் றோயல்குமாரின் பெயரில் சாவகச்சேரி மக் கள் வங்கிக் கிளையில் கணக்கினை ஆரம்பித்துள்ளனர். இந்த இளைஞனின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 2070245340 என்னும் கணக்கு இலக்கத்திற்கு நிதியினை அனுபிவைக்கலாம். சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எலும்பு மச்சை மாற்றீட்டுச் சத்திரசிகிச்சை மேற் கொள்வதற்கு 22 லட்சம் ரூபாவும் இதற்குத் தேவையான மருந்துகளை கொள் வனவு செய்வதற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் தேவையென மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர். கர…

  19. திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி திருகோணமலை பெரியகடை கடற்கரையில் இன்று இரவு 7:55 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் அங்கிருந்த 5 பேர் உயிரிழந்திருப்பதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இக்குண்டை வீசியதாகவும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடற்கரைக்கு முன்பாகவுள்ள காந்தி சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. தாக்குதலை நடத்தியது யாரென்று தெரியவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர் http://www.newstamilnet.c…

    • 5 replies
    • 2.3k views
  20. இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி கருத்து திமுக தலைவர் கருணாநிதி இலங்கைக்கு இந்திய அரசு இராணுவ உதவி அளிக்காது என்றே தாம் நினைப்பதாகக் கூறியிருக்கிறார். சென்னையில் இன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கப்படக்கூடாது என பாமக, மற்றும் மதிமுக கட்சிகள் குரல் கொடுத்திருப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள், மத்திய அரசும் அதற்கு மாறாக சிந்திப்பதாக தெரியவில்லை என்றார் கருணாநிதி. தொடர்ந்து திமுக வெளிநாட்டுப் பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையினை ஏற்று செயல்படுவதாகத் தெரிகிறதே என்று …

    • 43 replies
    • 8.3k views
  21. பெறுமதி மிக்க உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு அரச படையினருக்கு பொங்கி எழும் மக்கள் படை அறிவுரை வழங்கியுள்ளது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்திலேயே இந்த வேண்டுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது. "பொங்கி எழும் மக்கள் படையினரிட மிருந்து சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களுக்கு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த சிங்கள மொழிப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உங்களைப் பற்றியோ உங்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றியோ எவ்வித அக்கறையுமில்லை. அவர்கள் தங்கள் சுகபோக வாழ்க் கைக்காக உங்களைப் பலிக்கடாவாக்குகிறார்கள். அவர்கள் தமிழ் மக்களை மாத்திர மன்றித் தேவை ஏற்படின் சிங்கள மக்களையும் கொல்வார்கள். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எனக் கூறி ஏதுமறி…

    • 5 replies
    • 2.2k views
  22. போருக்குத் தயாராகும் நாடு! மூடப்பட்டு விட்ட பேச்சுக்கான கதவு நிழல் யுத்தத்தின் அடுத்த கட்டம் என்ன? முழு அளவிலான யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் தினமும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இராணுவத்தினரின் பதில் நடவடிக்கைகள் அப்பாவிப் பொது மக்களையே இலக்கு வைப்பதாயிருப்பதால் அரசுக்கும் படையினருக்குமெதிரான உணர்வு மக்கள் மத்தியில் உச்சமடைந்துள்ளது. போர்நிறுத்தம் அமுலிலுள்ள போதிலும் மோதல்கள் நடைபெறுகின்றன. நிழல்யுத்தத்தின் தொடர்ச்சியே இந்த மோதல்களாகும். நிழல் யுத்தத்தை அரசு தூண்டியதன் விளைவை முழுநாடும் விரைவில் எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. கிழக்கில் கடந்த இரு வருடங்களாக நிலவிய நிழல் யுத்தம் வடக்…

    • 0 replies
    • 1.5k views
  23. Please read this article. http://thamizhsasi.blogspot.com/2006/01/blog-post.html

  24. இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் சுடுமாறு படையினருக்கு உத்தரவு சிறீ லங்கா இராணுவத்தினர் மீது பொதுமக்கள் குழுமிவந்து தாக்குதல் நடத்தினால் அவர்களையும் சூடுவதற்கான உத்தரவை இராணுவத்தினருக்கு தாம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, ஏழாயிரம் உறுப்பினர்களைக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் படையினரை ஒன்றும் செய்துவிட முடியாதென தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் கேள்விக்கு இவ்வாறு தமது வலிமைபற்றி வீரம் பேசியுள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்திவருகின்றனர். இம்முறை மட்டுமின்றி கடந்த காலங்களிலும் இதனையே செய்துவருகின்றனர். முன்னர் எண்பதுகளி…

    • 1 reply
    • 1.7k views
  25. தமிழ் மக்கள் எனது நண்பர்கள் - அவர்களை கைது செய்ய கூறவில்லையாம் - மகிந்த தெரிவிப்பு றுசவைவநn டில Pயயனெலையn ஆழனெயலஇ 02 துயரெயசல 2006 தமிழ் மக்கள் எனது நண்பர்கள், அவர்களுக்கு தீங்கேற்படுவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை, குற்றவாளிகளையும் போதைப் பொருள் விற்பனையாளர் களையுமே கைது செய்யுமாறு கூறினேனே தவிர தமிழ் மக்களையல்ல என சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.இராதாகிருஷ்ணன் நேற்று மகிந்தவுடன் பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராதாகிருஷ்ணனிடம் மகிந்த மேலும் கூறுகையில், குற்…

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.