ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143241 topics in this forum
-
முன்னரங்க நிலைகளுக்கு சென்று போராளிகளுடன் கலந்துரையாடிய மக்கள் [செவ்வாய்க்கிழமை, 30 மே 2006, 18:58 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். வடமராட்சி கிழக்கு மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்குச் சென்று போராளிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். வடமராட்சி கிழக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் இசையூரான் தலைமையில் வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கொடுக்குளாய், உடுத்துறை, வேம்படி, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோவில், குடத்தனை, பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் முன்னரங்க நிலைப் பகுதிகளுக்குச் சென்றனர். களமுனைத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளைச் சந்தித்த அவர்கள், போராளிகளுக்கு உலர் உணவுகளை வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: தயா மாஸ்டர் வெலிக்கந்தை ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக நீர்ப்பாசனத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிங்களத் தொழிலாளர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தடையைத் தொடர்ந்து திட்டமிட்டு இந்தப் படுகொலையை சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தியுள்ளனர். துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் அக்கிராமத்தில் இயங்கி வந்தனர். இப்படுகொலைக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்…
-
- 1 reply
- 1.5k views
-
-
அவுஸ்திரேலியாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற உரிமைக்குரல். - பாண்டியன் - ஆழனெயலஇ 29 ஆயல 2006 13:10 புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி நிகழ்வான உரிமைக்குரல் அவுஸ்திரேலியாவில் இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவிலுள்ள நடுவன் அரசின் நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவே தமிழ் மக்களை காப்பாற்று என கோஷம் எழுப்பினர். (படங்கள் இணைப்பு) அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலுமிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணச் சிரமங்களையும் பாராது உரிமைக்குரலி;ல் கலந்துகொண்டனர். சர்வதேச சமூகத்தின் தற்போதைய நிலையையும் சிறீலங்கா அரசின் படுகொலைகளையும் அதனால் தமிழ்மக்கள்…
-
- 5 replies
- 2.3k views
-
-
தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு! வேணு Sunday, 21 May 2006 மட்டக்களப்பு மாவட்ட துணை தளபதி ரமணன் சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் இன்று மாலை வீரச்சாவைத் தழுவினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாலை 4:30 மணிக்கு வவுணதீவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள முன்னணி அரண் பகுதியில் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா இராணுவத்தினர், தற்போதும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் வகையில் சினைப்பர் தாக்குதலை தமது நிலைகளில் இருந்து மேற்கொண்டனர் என்று அந்த தகவல் மேலும் தெரி…
-
- 43 replies
- 7.8k views
-
-
நடுக்கடலில் படகில் தத்தளித்த 9 பேர் மீட்பு இலங்கையைச் சேர்ந்தவர்கள் போர்பந்தர்இ மே.29- குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் ஒரு படகு தத்தளிப்பதை இந்திய கடலோரக் காவல்படையினர் கண்டறிந்தனர். உடனே அவர்கள் அந்த இடத்துக்கு ரோந்து கப்பலில் விரைந்தனர். அங்கு இலங்கையைச் சேர்ந்த ஒரு படகு இயந்திரக் கோளாறு காரணமாக பழுதுபட்டதால் அதில் இருந்த 9 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டு கப்பலில் அழைத்து வந்தனர். போர்பந்தர் வந்து சேர்ந்ததும்இ அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடா தடை பற்றி நக்கிரன் எழுதிய கட்டுரை. அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060521.htm
-
- 24 replies
- 19.3k views
-
-
பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகம `தினக்குரல்' க்கு விசேட பேட்டி -சோ.ஜெயமுரளி- ` அக்ஷரய' (A Letter of Fire) எனும் சிங்கள திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக கந்தகமவின் இத் திரைப்படத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் தவறான விதத்தில் சித்திரிக்கப்படுவதாகவும் இது சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையெனவும் கூறி கலாசார அமைச்சர் இத் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். தணிக்கை சபையால் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை கலாசார அலுவல்கள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய திரைப்பட கூட்டுத் தாபனம் தடை செய்ய முயற்சிப்பதாக இயக்குநர் அசோக கந்தகம தெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
லெப் கேணல் வீரமணி வீரமரணம் களமுனைக் கட்டளைத்தளபதி வீரமணி தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்தார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. தளபதி வீரமணியின் வித்துடல் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு;ள்ளது. இவரது வித்துடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உட்பட பெருமளவு போராளிகளும் மக்களும் அஞ்சலி செலுத்தினர். (தலைப்பு திருத்தப்பட்டு மேலதிக செய்தியும் சங்கதி தளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது)
-
- 20 replies
- 5.4k views
-
-
வாழ்வியல் உரிமைகளுக்காகவும், அடிப்படைச் சுதந்திரங்களுக்காகவும்-ஏன் தம் இனத்தின் தனித்துவமான இருப்பை உறுதிப்படுத்தவும் வேண்டி-ஈழத் தமிழர்கள் நடத்திவரும் போராட்டத்தின் சரிதம் நீண்டது; நெருக்கடிகள் நிறைந்தது; கொந்தளிப்பான இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ச்சியாகக் கொடூரங்களையும், அடக்குமுறை களையும், கொடும் போரையும் எதிர்கொண்டவர்கள் தமிழர்கள். அந்த வரலாற்று ஓட்டத்திலே மற்றொரு மைல் கல்லிலே நாம் இன்று நிற்கின்றோம். சுயநிர்ணயத்துக்கான தமிழரின் இந்த அரசியல், இராணுவப் போராட்ட வரலாறு சுமார் ஆறு தசாப்த காலத்துக்கு நீண்டு செல்கின்றது. இந்தப் படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வழிமுறைகளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பல்வேறு முயற்சிகளில் தமிழ…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் 19052006 அன்று விடுதலைப்புலிகளை தடை செய்கிறர்கள் இதற்கு உங்கள் கருத்து என்ன?
-
- 55 replies
- 11.6k views
-
-
மிகஅவசரமான எதிர்ப்புமனு http://www.gopetition.com/online/8663.html
-
- 1 reply
- 2.3k views
-
-
ஐரோப்பிய யூனியனிற்கான எதிர்ப்பு மனுவை மே மாதம் 29 ம் திகதிக்கு முன்பு விபரங்களைப் பூர்த்தி செய்து உடன் அனுப்பி வையுங்கள். Online Petition http://www.gopetition.com/online/8663.html Here you have the opportunity to send a direct message to Foreign Minister Dr. Ursula Plassnik (fields marked * are mandatory). http://www.bmaa.gv.at/view.php3?f_id=1438&...LNG=en&version=
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைத்தமிழினைக் காப்பாற்றிய இந்தி - தட்ஸ் தமிழ் இணையத்தளத்தில் வந்த செய்தி http://thatstamil.oneindia.in/news/2006/05...5/25/hindi.html
-
- 0 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். மடு உயிலங்குளம் பகுதியிலிருந்து மடு தேவாலயம் நோக்கிய திசையில் பயணித்த உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரவேங்கை கயல்வெற்றி என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகவும் வெள்ளாங்குளம் சந்தியை தற்காலிக முகவரியாக கொண்ட மருதலிங்கம் சிவலிங்கம் என்ற போராளி வீரச்சாவடைதுள்ளதுடன், மன்னார் முட்கொம்பனைச் சேர்ந்த செல்லத்துரை விஜயபாலன் (வயது 22) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளை…
-
- 0 replies
- 947 views
-
-
மிகஅவசரமான எதிர்ப்புமனு http://www.gopetition.com/online/8663.html More informaion about humanrights repport and Photos http://nesohr.org/human-rights-reports/ http://www.tchr.net http://tamilink.org.uk/tl/ http://www.tamilcanadian.com/eelam/hrights/ http://www.tamilnation.org/humanrights.htm
-
- 0 replies
- 1.4k views
-
-
தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு: சர்வதேச மன்னிப்புச் சபை யாழ். தீவகப் படுகொலை சம்பவ இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈ.பி.டி.யினர் இருறதுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதும் ஒரு உக்கிரமற்ற தணிவான போர் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்ல…
-
- 17 replies
- 3.1k views
-
-
யாழ். மானிப்பாயில் சிறிலங்கா இராணுவத்தினரால் பதின்மூன்று வயது மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ளார். மானிப்பாய் கல்லுண்டாய்வெளிப் பகுதியில் வைத்தே இச்சம்பவம் நடந்தது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழிமறித்த இராணுவத்தினர் மாணவியை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்டவர் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவரின் மகள் என்று தெரிவிக்கப்படுகின்றது. puthinam
-
- 2 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் பெரியளவில் ஐரோப்பிய யுூனியன் முடிவினை எடுக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரியவருகின்றது. ஐரோப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் தங்கள் மிகஅவசரமான வேண்டுதல்களை ஐரோப்பிய யுூனியனிற்கும் தங்கள் நாட்டு அரசிற்கும் உடனடியாக அனுப்பி ஒரு காத்திரமான எதிர்ப்பை காட்டல் வேண்டும். அனைத்து தமிழ் அமைப்புக்களும் உடனடியாக இன்று 19.05.06 இதனை அனுப்பிடல் வேண்டும். அந்த மனுவில்: 1. சமாதான நடவடிக்கைகள் குழப்பமுறும். உடனடியாகவே சிறீலங்கா போரை ஆரம்பிக்கும். 2. சர்வதேச சமூகத்தை நம்பி பேச்சுக்களுக்கு வந்த தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். 3. ஐரோப்பிய யுூனியன் தடை வித…
-
- 3 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக்கல்லு}ரி மாணவன் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லத்துரை ரமேஸ்கண்ணா (15) என்பவரே இவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் சிறுப்பிட்டி நோக்கி உறவினர்களுடன் சிற்று}ர்தி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளை வழியில் மறித்து சிற்று}ர்தியை சோதனையிட்ட சிறீலங்கா படையினர் குறித்த மாணவனிடம் சிறீலங்கா தேசிய அடையாள அட்டை இல்லை எனக்காரணம் காட்டி அவரைக்கைது செய்துள்ளனர். க.பொ.த(சாஃத) பாPட்சைக்கு தோற்றுவதற்காக மட்டுமே 16 வயதுடையவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறீலங்காவில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. nitharsanam
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மீது இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் நான்கு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக காலை வவுணதீவு முகாமில் இருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையினரால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்தே வவுணதீவு முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் சம்பவம் காலை 6:30 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது. ஈழநாதம்
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா மாவட்டம் தாண்டிக்குளத்தில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் இரு சிறிலங்கா இராணுவத்தினரும்,ஒரு காவல்துறையினருமாக மூவர் கொல்லப்பட்டுள்ளனர் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த இவர்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 9.30 மணிளயவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்மடுவவில் உள்ள இராணுவத்தினருக்கு உணவு எடுத்துச் சென்ற படைத்தரப்பினரே கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானதாக வவுனியா சிறிலங்கா காவல்துறைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினம்
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்கள் மீதான வன்முறை தொடர்ந்தால் தனிநாடு நோக்கி அவர்கள் தள்ளப்படுவர்ஐ.தே.கட்சி எம்.பிக்கள் மத்தியில் ரணில் தெரிவிப்பு வடக்கு கிழக்குத் தமிழர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட் சிக்கு ஆதரவை வழங்காதபோதிலும் அந்த மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கிறது. அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறைகள் தொடர்ந்து தொடுக்கப்படுமானால் தமிழர்கள் தனி நாடொன்றை நோக்கியே தள்ளப்படுவர். இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலை வருமான ரணில் விக்கிரமசிங்க. நாடாளுமன் றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐ.தே.கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே ஐ.தே.க. தலைவர் இவ்வாறு தெரிவித் திருக்கிறார். போர் நிறுத்தப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி ரமணன் சிறிலங்கா பேரினவாத அரசின் கூலிப் படைகளும், கூலிப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் திட்டமிட்ட நயவஞ்சகத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார். தமிழினம் துக்கத்தில் மூழ்கியுள்ள அதேவேளை போராளிகளை இந்தச் சம்பவம் கொதிப்படைய வைத்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இரத்தத்தையும், தசையையும் இழந்து இழந்து கட்டிக்காத்த பொறுமையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. சேனாதி, வாவா, யோகா, டிக்கான், கௌசல்யன் என எத்தனை போராளிகளை, பொறுப்பாளர்களை விலை மதிக்க முடியாத மாவீரர்களை இழந்து இன்று உயர் மட்ட தளபதிகளில் ஒருவரை இழக்கின்ற நிலைக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைமையை மோசமாக்கி விட்டிருக்கின்றது. த…
-
- 0 replies
- 894 views
-
-
ஹெல உறுமயவுக்கும் சிக்கல்! ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் கடந்த வாரம் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்கவேண்டியிருந்தது அமெரிக்க அரசின் கீழ் செயற்படும் டி.கே.பி. அமைப்பு ஹெல உறுமயக் கட்சியை (தேசிய ஹெல உறுமய முன்னர் ஹெ உறு மய என அழைக்கப்பட்டது) பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த் துள்ளதே இதற்குக் காரணமாகும். இதனையடுத்து ஹெல உறுமய தலைவர்களுக்கு நாலா புறங்களிலிருந்து ஈமெயில் தகவல்களும் தொலைபேசிகளும் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் டி.கே.பி அமைப்பின் பட்டியலின்படி சிறிலங்காவில் நான்கு பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. அவையாவன விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈ.பி.டி.பி அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மற்றும் ஹெல உறுமய அமைப்பு என்பனவாகும். திருகோணமøயில் விடுதலைப் புலிகளி…
-
- 0 replies
- 1.1k views
-
-
Tamil schools receive circulars, official communications in Sinhala Tamil medium schools in Sri Lanka have been receiving circulars and other official documents from the Central Ministry of Education in Colombo in Sinhalese language only. No translation is provided because 99% of clerks in all eighteen branches of the Ministry of Education are Sinhalese, a senior ministry official said. During the tenure of President Ms.Chandrika Kumaratunga who also acted as the Minister of Education, her secretary Dr.Ms.Tara de Mel agreed to set up a separate unit in the ministry to look into the needs of Tamil medium schools in the country but it did not materialize despite …
-
- 0 replies
- 1.2k views
-