ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
Stop violence, enter talks, Anti-war group tells GoSL, LTTE [TamilNet, May 18, 2006 11:29 GMT] Condemning the increasing levels of violence committed by Liberation Tigers and by the "armed groups and forces within and outside" Sri Lanka's Military, Kumar Rupesinghe, chairman of National Anti War Front, in a press release issued Thursday in Colombo urged the LTTE and the Government of Sri Lanka to "implement the agreements reached in the High Table in Geneva," and to "immediately resume the talks which were initiated in Geneva." Full text of the press release follows: We call upon the President and Prabhakaran to meet immediately. STATEMENT BY THE NATIO…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேசியத் தலைவருக்கு தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது: செ.வ.தமிழேந்தி தாயக விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு தமிழ்மக்கள் அனைவரும் தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் செ.வ.தமிழேந்தி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நிதித்துறை கணக்காய்வுப் பொறுப்பாளர் அறவாணன் தலைமையில் சமகால அரசியல் கருத்தரங்கு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிதித்துறைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் சமகால அரசியல் நிலவரம் குறித்து செ.வ.தமிழேந்தி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய சிறப்புரையில் தெரிவித்துள்ளதாவது: தமிழினத்தை…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஐரோப்பியம் ஒன்றிய தடை விதித்தால் அமைதி முயற்சிகளுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும்: பாலசிங்கம் எச்சரிக்கை சர்வதேசத்தின் மேலதிக எந்த ஒரு தடை நடவடிக்கையும் அது ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமைதி முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்மறையாக பாதிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கக் கூடும் என்ற செய்திகள் தொடர்பாக தமிழ்நெட் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தும் வகையிலான தென்னிலங்கை கடும்போக்காளர்களின் இந்த கோரிக்கையானது ஆயுத வழித்தீர்வை கைக்கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாகும். தமிழீழ விடுதல…
-
- 13 replies
- 2.6k views
-
-
புலிகளின் பதிலடி: நாகர்கோவில், மணலாறு சிறிலங்கா காவலரண்கள் மீட்பு! [வியாழக்கிழமை, 18 மே 2006, 07:00 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். நாகர்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா இராணுவத்தினரின் இரு முன்னரங்க காவலரண்கள் புலிகள் வசமாகியுள்ளன. தமது பதிலடி நடவடிக்கையின் போது இராணுவத்தின் முன்னணி காவலரண்கள் இரண்டையும் எரித்து நிர்மூலமாக்கி அழித்த விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்காப் படையினர் முன்னணிக் காவலரண்களிலிருந்து பின்வாங்கி ஓடியுள்ளனர். மீ…
-
- 2 replies
- 2.2k views
-
-
புலிகளின் பதிலடி: நாகர்கோவில், மணலாறு சிறிலங்கா காவலரண்கள் மீட்பு! [வியாழக்கிழமை, 18 மே 2006, 07:00 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். நாகர்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா இராணுவத்தினரின் இரு முன்னரங்க காவலரண்கள் புலிகள் வசமாகியுள்ளன. தமது பதிலடி நடவடிக்கையின் போது இராணுவத்தின் முன்னணி காவலரண்கள் இரண்டையும் எரித்து நிர்மூலமாக்கி அழித்த விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்காப் படையினர் முன்னணிக் காவலரண்களிலிருந்து பின்வாங்கி ஓடியுள்ளனர். மீண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவுத்தளமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரி தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களைக் கவனிக்கும் அமெரிக்க அரச துறை துணை உதவிச் செயலாளரான டொனால்ட் கேம்ப் இந்தச் செய்தியை கொழும்பில் விட்டிருக்கின்றார். இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சக்திகள் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இந்தியா விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்தது. இந்தியா தடை செய்த போது கொழும்பு அரசியல் விமர்சகர்கள் இனி விடுதலைப்புலிகளால் தலைநிமிர முடியாது எனக் கூறி வந்தனர். ஆனால் இந்தியாவின…
-
- 2 replies
- 1.6k views
-
-
மணலாற்றில் கிளைமோர் தாக்குதல் - ஐந்து படையினர் பலி மணலாற்றுப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தாக்கு தலில் சிறீலங்கா இராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் வானொலி தனது இரவுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. சுற்றுக் காவலில் ஈடுபட்ட படையினர் மீது காலை 7.20 மணிக்கு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஐந்து படையினரும் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது. நன்றி சங்கதி
-
- 0 replies
- 1.1k views
-
-
- நான்கு படையினர் பலி - ஆயுதங்களும் மீட்பு - பாண்டியன் - Wednesday, 17 May 2006 21:45 வவுனியா மாவட்டம், மாமடு பகுதியில் அமைந்திருந்த ஸ்ரீலங்கா படையினரின் காவலரண் ஒன்றின் மீது விடுதலைப் புலிகளால் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பாலமோட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 5.45 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் தமது தரப்பில் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு: சர்வதேச மன்னிப்புச் சபை யாழ். தீவகப் படுகொலை சம்பவ இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈ.பி.டி.யினர் இருறதுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதும் ஒரு உக்கிரமற்ற தணிவான போர் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்ல…
-
- 17 replies
- 3.1k views
-
-
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இன்று பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ்.தீவகத்தில் இடம்பெற்ற படுகொலைகளைக் கண்டித்தும், தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதியில் இடம்பெறும் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்தும், மட்டு. அம்பாறை மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று மட்டக்களப்பு நகரம், வாழைச்சேனை, செங்கலடி, களுவாஞ்சிகுடி பகுதியில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. அதேநேரம் பாடசாலைகள், அரச, அரச சார்பற்ற நிறுவன அலுவலகங்கள் வங்கிகள் என்பனவும் இயங்கவில்லை. மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. இதேவேளை வாழைச்சேனை கறுவாக்கேணியில் நேற்றுக் காலை இனந்தெரியாத சில இளைஞர்களால் லொறி…
-
- 0 replies
- 1.3k views
-
-
யதார்த்தம் புரியாமல் கையாள்வதால் கோட்டை போகும் சந்தர்ப்பங்கள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் என்று தெரிவித்து புலிகள் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட சில தகவல்கள் குறித்து கடந்த 5 ஆம் திகதி இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் இடையில் கடல் வழியாக இலங்கைக் கடற்படை எதிர்ப்பையும் மீறி புலிகள் மேற்கொண்ட கடற் பயணத்தையும் மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஒன்று ஊடுருவி, ஒட்டுப் படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த இரண்டு யுத்த நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜெனீவாப் பேச்சுக்குப் பின் 174 தமிழ் மக்கள் படுகொலை விடுதலைப் புலிகள் அறிவிப்பு. ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்ன்னர் 174 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரச படைகளினால் நிகழ்த்தப்பட்டு வரும் இந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகளை சர்வதேச சமூகமும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் தடுக்கவில்லை என விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை தமிழீழ அரசியற்துறையினர் விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் உள்டளக்கம் வருமாறு.... ஜெனீவாப் பெச்சுக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் நாள் வரையிலான படுகொலைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் முன்னர் விவர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 8 ஆம் நாளுக்குப் பின் மே 15ஆம் நாள் வரையில…
-
- 0 replies
- 914 views
-
-
தமிழீழ சுதந்திர பிரகடனம் செய்யும் நிலைக்கு செல்லும் பொழுது சிறீலங்கா நிர்வாக கட்டமைப்புக்குள் (வங்கிகள் மற்றும் ஏனைய சேமிப்பு முதலீட்டு நிறுவனங்களில்) உள்ள தமிழ் மக்களின் சேமிப்புகள் நிதிகள், தமிழீழத்திற்கு வெளியே சிறீலங்காவில் (உதாரணத்திற்கு கொழும்பு கண்டி போன்ற பிரதேசங்களில்) அசையாச் சொத்துகளில் (வீடுகள்) போன்ற முதலீடுகள் வைத்துள்ளவர்களின் நிலமை என்னவாக இருக்கும்? ஹிந்துஸ்தானிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது பாக்கிஸ்தான் பக்கம் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் சொத்துக்கள் முதலீடுகளின் பொறுமதி பூச்சியம் ஆனது. அதே நிலமை பங்களாதேஸ் பிரிந்த போதும் இருந்தது. இந்த சொத்துக்களை நிதிகளை அரசாங்கம் Enemy Property Act இன் பெயரால் கையகப்படுத்தி மீள்கட்டுமான போன்றவற்றி…
-
- 4 replies
- 1.9k views
-
-
வவுனியா நகரசபை, பிரதேசசபைகளுக்கான தேர்தல் செப். 30ஆம் திகதிவரை ஒத்திவைப்பு வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அம்பõறை, மட் டக்களப்பு மாவட்டங்களுக்குட்பட்ட ஏனைய சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேசசபை ஆகிய இரண்டு சபைகளுக்குமான தேர்தலே மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணத்திலுள்ள வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் . ஆணையாளர் தயானந்த திஸநாயக்கவிற…
-
- 0 replies
- 801 views
-
-
வவுனியாவில் கருணாவின் நடமாட்டம் உள்ளதாகவும் கண்காணிப்புக்குழு தெரிவிப்பு வடக்கில் தொடரும் தாக்குதல்களுக்கு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றோரே காரணம் வவுனியாவில் கருணாவின் நடமாட்டம் உள்ளதாகவும் கண்காணிப்புக்குழு தெரிவிப்பு வடக்கில் தொடரும் தாக்குதல்களுக்கும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் அதிலிருந்து பிரிந்து சென்று இயங்குபவர்களுமே காரணம் போன்று தோன்றுகின்றது. அரசபடையினர் இதனை மறுத்துரைத்துவரும் போதிலும் இந்தக்குழுவினருக்கு பின்புலமாக நின்று படையினர் உதவிவருகின்றனர் என்று கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக்குழுவின் வவுனியா மாவட்ட தலைவர் “ஜொய்னி சுனினென்னை ஆதாரம் காட்டி ராய்ட்டர் இந்தச் செய்தியைவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
175 தமிழர்கள் படுகொலை- தமிழர்களை முட்டாளாக எண்ணுகிறதா சர்வதேச சமூகம்?: விடுதலைப் புலிகள் கேள்வி ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் மே 15 ஆம் நாள்வரை 175 தமிழர்கள் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்ட போதும் சர்வதேச சமூகம் மௌனம் காப்பதன் மூலம் தமிழர்களை முட்டாளாகக் கருதுகிறார்களா என்று தமிழீழ விடுதலைப் புலிகள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெனீவா பெச்சுக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் நாள் வரையிலான படுகொலைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் முன்னர் விவர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 8ஆம் நாளுக்குப் பின் மே15ஆம் நாள் வரையிலான படுகொலைகள் இந்த அறிக்கையில் இடம்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி வன்னியில் கண்டனப்பேரணிகள். (படங்கள் உள்ளே) தமிழினத்தை சிறிலங்காப் படைகள் கொடூரமாக கொன்றொழித்து வருவதை சர்வதேச சமூகம் கண்டித்து சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிளிநொச்சி வாழ் மக்கள் கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர். கிளிநொச்சி பொது அமைப்புக்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஒழுங்கமைத்த பேரணியில் சிங்களப்பபடைகளின் தமிழினப் படுகொலைகளை சர்வதேச சமூகம் கண்டித்து குரல் கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அல்லைப்பிட்டியில் சிங்களப்படைக் காடையர்களால் பச்சிளம் பாலகி மற்றும் சிறுவன் அவர்களின் பெற்றோர் உறக்கத்தில் வைத்துக் கொல்லப்ட்ட படத்தை மக்கள் தம் கைகளில் தாங்கியிருந்தனர். …
-
- 0 replies
- 973 views
-
-
ஸ்ரீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் நிச்சயமாக வெல்லுவோம். - தளபதி கேணல் பால்ராஜ் (படங்கள் உள்ளே) நாம் அனைவரும் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய ஒரு இறுதிக் காலம் வந்துவிட்டது" இவ்வாறு கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் அவர்கள் லெப்.கேணல் நவம் அவர்களின் 17 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். இன்றைய சூழலைப்பொறுத்தவரை நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. என்றுதான் கூறவேண்டும். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபோது தான் ஜதார்த்தவாதி என்று கூறியமையால் அவருக்கான சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளோம். ஆனால் அதனை அவர் சரியாகப் பயன்படு;த்திக் கொள்ளவில்லை. பிறேமதாஸ ஆட்சிக்காலத்திலும் இதேபோன்ற படுகொலைகள் கண்மூடித்தனமாக நடைபெற்றன. …
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு: 1 போராளி பலி வவுனியா சேமமடுவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போராளியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். சேமமடுப்பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல் மற்றும் இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் வ…
-
- 1 reply
- 1k views
-
-
2 போராளிகள் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 மே 2006, 20:09 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். வடமராட்சி நாகர்கோவிலில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு போராளிகள் காயமடைந்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் நாகர்கோவில் மற்றும் முகமாலை எல்லைப்புறத்தில், எழுதுமட்டுவாளை அண்டிய கண்டல்காடு பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலைகள்மீது, மாலை 5:45 மணியளவில் நாகர்கோவில் சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து சூனியப் பிரதேசத்தினூடாக நகர்ந்துசென்ற சிறிலங்கா இராணுவத்தினர், இந்தத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்குமிடையில் நேரடிச் சண்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலக்கு மிகத் தெளிவாக இருக்கின்றது - தமிழ்க்குரல் வானொலியில் வந்த ஆய்வு http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060516.htm
-
- 1 reply
- 1.5k views
-
-
குடாநாட்டிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நோக்கி நகரும் மக்கள். யாழ். குடாநாட்டில் மக்கள் மத்தியில் என்றுமில்லாதவாறு பதற்றமும் அச்சமும் மேலோங்கியுள்ளது. குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கோரப்படுகொலைகள், கடத்தல்கள், கைதுகள் காரணமாகவே மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடாநாட்டிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக யாழ். தீவகப் பகுதியில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்சம் நீடித்து வருகின்றது. வயது வேறுபாடின்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் படுகொலை செய்யப்பட்டிருப்பதையடுத்தே பதற்றம் மேலோங்கியுள்ளது. pathivu
-
- 0 replies
- 963 views
-
-
வைத்தியசாலையில் வைத்து கருணா குழு உறுப்பினர் சுட்டுக்கொலை.மற்றொருவர் படுகாயம் - பண்டார வன்னியன் - வுரநளனயலஇ 16 ஆயல 2006 01:47 நேற்று (15.05.06) பிற்பகல் 5 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 9ம் இலக்க நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கருணா அணியினைச் சேர்ந்த கீதகலன் செல்வகுமார்(அகவை 20) இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 01.05.2006 அன்று வெலிக்கந்தையில் விடுதலைப்புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இவர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், பீதி காரணமாக அங்கிருந்து தப்பி வந்து மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள ரிஎம்விபி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும் சுகயீனமுற்ற நிலையில் இவர் மட்…
-
- 0 replies
- 1k views
-
-
கொலை வெறிப்படுகொலைகளின் எதிர்வினையை விரைவில் சிறிலங்கா உணரும்: பா.நடேசன் எச்சரிக்கை தமிழ் மக்கள் மீதான கொலை வெறிப்படுகொலைகளின் எதிர்வினையை சிறிலங்கா விரைவில் உணரும் என்று தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் பா.நடேசன் கூறியுள்ளதாவது: தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இனவாதக் கொள்கையுடன் இராணுவ ரீதியிலான தீர்வை எட்டுவதற்கே முயற்சி செய்கின்றார். கடந்த தேர்தல் மூலம் ஆட்சியை தனதாக்க சிங்களப் பேரினவாதக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுடன் உடன்பாடுகளை எட்டி பேரினவாதக் கொள்கைகளையே தனது தேர்தல் கருவாகக் கொண்டு ஆட்சியை கைப்பற்றியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அமைச்சர்களையும், இராணுவத்தலைமைப் பீட அதிகாரிகளையும் கடும் போக்குக் கொண்…
-
- 0 replies
- 950 views
-
-
கருணா குழுவுடன் அரசும் இராணுவமும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூறுகிறார் கருணா குழுவினரும் அரசாங்கமும் இராணுவமும் இணைந்து செயற்படுகிறார்கள் என்பதை நிரூபிக்க தம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன், அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் யுத்தத்தில் இறுதி வெற்றியை எட்டும் வகையில் எந்தவொரு தரப்புமே இராணுவ பலத்தை கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது; கருணா குழுவினர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தான் செயற்படுகின…
-
- 1 reply
- 1.3k views
-