ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
உதவி வழங்கும் இணைத் தலமை நாடுகள் மற்றும் ஏனைய தேச சமூகத்தின் கவனத்திற்கு, 24 மாசி 2006 ஜெனிவா-1 இன்பின்னர் நேற்று 27-சித்திரை 2006 வரை சிறீலங்கா அரசபடைகளாலும் அவர்களது மேற்பார்வையிலுள்ள கைக்கூலிகளாலும் நடத்தப்பட்ட 103 இனபடுகொலைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் விரிவான அறிக்கை. http://www.ltteps.org/mainpages/images/200..._HQ_of_LTTE.pdf http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17950 கண்காணிப்புக் குழுவும் ஒவ்வொரு சம்பவம் நடந்தபின்னரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறார்கள் முடிந்தளவு விசாரணை நடத்துகிறார்கள் குறிப்புகள் எடுக்கிறார்கள், புகைப்படம் எடுக்கிறார்கள். இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு அறிக்கையாக ஏன் விட யோசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தையும் யார…
-
- 0 replies
- 917 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள் தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் 28.04.2006 ம் திகதிக்கு முன்னர் சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................ பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க. இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள். நன்றி: http://www.ibctamil.co.uk/
-
- 20 replies
- 4.7k views
-
-
கொழும்பில் கைது செய்யப்பட்ட 5 தமிழர்களின் தலை துண்டிப்பு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன 5 தமிழர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவிசாவளை சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புவாக்பிட்டிய மற்றும் தெகியோவிட்ட ஆகிய இடங்களில் இந்த தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் தமிழ் இளைஞர்களது சடலங்களாக இருக்கலாம் என்று கருதுவதாக அப்பிரதேச சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்தும் ஆண்களின் சடலங்கள் என்றும் அவர்களது உடைகள் பெரும்பகுதி களையப்பட்டும் பாரிய வெட்டுக் காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக சி…
-
- 1 reply
- 1.3k views
-
-
கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா? எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது. புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகளும் நடத்திய தாக்குதல்களைப் பார்வையிடும் உல்ப் ஹென்றிக்சன்
-
- 2 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்ததற்கு பதிலாக மகிந்தர் தமது போர் முகத்தை வெளிப்படுத்தியுள்ளார். திட்டமிட்ட முறையில் திருமலையிலும் மட்டக்களப்பிலும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பன வெளிப்படுத்துகின்றன. சிறிலங்கா படைத்தளபதி மீதான தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக அதற்கான பொறுப்பை விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீது கண்டனம் தெரிவிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடியாதவை. லக்ஸ்மன் கதிர்காமர் அதியுயர் பாதுகாப்புக்களுடன் இருந்தவர். அவர் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கான பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தியிருந்தனர். ஆனால் இதுவர…
-
- 0 replies
- 766 views
-
-
சிறிலங்கா அரசும், சிங்களப் படைகளும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இலங்கை விவகாரத்தில் சமீப காலமாக இந்தியா தமது கவனத்தைச் செலுத்தியுள்ள போதிலும், சிறிலங்கா அரசின் தேசவிரோத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இது தமிழ் மக்களுக்குக் கவலையளிக்கின்றது. ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாயிலை மூடியிருக்கும் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. ஜே.ஆர். பிரேமதாஸா, விஜயதுங்கா, சந்திரிகா காலத்தை விட மகிந்தரின் ஆட்சியில் குறிப்பிட்ட நாட்களுக்கு தமிழ் மக்கள் அதிகளவு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செயற்பட்…
-
- 0 replies
- 722 views
-
-
அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்களின் படங்கள் சில. படங்களை இணைப்புகளை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம். http://www.yarl.com/forum/files/DSC09719.JPG http://www.yarl.com/forum/files/DSC09720.JPG http://www.yarl.com/forum/files/DSC09726.JPG http://www.yarl.com/forum/files/DSC09729.JPG http://www.yarl.com/forum/files/DSC09730.JPG படங்கள்: நன்றி: http://www.eelavision.com
-
- 0 replies
- 763 views
-
-
தாக்குதல் தொடர்ந்தால் பதில் தாக்குதல்: புலிகள் எச்சரிக்கை திருமலையில் முப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்பு இராணுவத் தாக்குதல்கள் நடத்த நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளதாவது: திருகோணமலையில் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆர்ட்டிலரிகளாலும் பீரங்கிகளாலும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதல் நீடித்தால் தற்பாதுகாப்பு இராணுவத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர் என்றார் புலித்தேவன். திருமலை நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை …
-
- 0 replies
- 844 views
-
-
போதனை வேண்டாம் திருமலை மாவட்டம் கோமரங்கடவலையில் ஆறு சிங்கள விவசாயிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் குற்றம் சாட்டியுள் ;ளார். அவர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப்புலி களே இப்படுகொலைகளைப் புரிந்தனர் எனத் தெரிவித்துள்ளார். இதில் உள்ள வினோதம் என்னவெனில் இக்கொலைகள் குறித்து அவர் முதலில் தெரிவிக்கும் போது இத்தகைய சம்பவம் இடம் பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து உறுதி செய்யப்பட்டு மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதாவது அப்பேட்டி வழங்கப்படும் போது இக்கொலைகள் குறித்த தகவலை அவரால் முழுமையாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. ஆனால் இக்கொலைகளை விடுதலைப் புலிகளே செய்தா…
-
- 4 replies
- 1.7k views
-
-
மூதூர்படகுத்துறைமீது விமானத்தாக்குதல். ஐந்து முஸ்லீம் பொதுமக்கள் பலி. 8பேர் காயம். (திருகோணமலை) நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடற்சியாக இன்றும் சிறிலங்கா படைத்தரப்பு மக்கள் வாழ்விடங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. விமானத்தாக்குதல்கள் பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் கடற்படை பீரங்கித்தாக்குதல்கள் என இவை தொடர்கின்றன. இன்று காலை திருமலை விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிமீது ஆட்லெறி மற்றும் விமானத்தாக்குதல்கள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்களில் இதுவரை பதின்நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெருந்தொகையானோர் காயமடைந்தும் உள்ளனர். இது இவ்விதமிருக்க இன்று காலை 8.10அளவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் …
-
- 0 replies
- 859 views
-
-
(2 ஆம் இணைப்பு) திருமலையில் தொடரும் முப்படைத் தாக்குதல்: 13 பேர் படுகொலை [புதன்கிழமை, 26 ஏப்ரல் 2006, 08:58 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் இன்று புதன்கிழமையும் சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதாக திருமலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு நாள் தாக்குதல்களில் மொத்தம் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூதூர் கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் விமானப் படையினரின் கிபீர் - மிக் 29 ரக விமானங்கள், குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன. சுங்கன்குழியையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. திருமலை மூதூர் கிழக்கில் …
-
- 6 replies
- 1.5k views
-
-
புலிகள் சும்மா இருக்க மாட்டார்கள் - தமிழ்ச்செல்வன் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/pdf_files/juni..._2006_04_25.pdf
-
- 1 reply
- 1.1k views
-
-
திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க தவறியது சிறிலங்கா அரசு: மனித உரிமை அமைப்பு சாடல்! திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க சிறிலங்கா அரசு தவறிவிட்டது என்று Human Rights Watch எனும் மனித உரிமை அமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் Human Rights Watch அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிராட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருகோணமலையில் குண்டு வெடிக்க வைக்கப்பட்ட பிறகு ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்களது வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் தாக்கப்பட்டபோது சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள சிறிலங்கா அரச படையினர் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். விடுதலைப் புலிகளால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகி…
-
- 1 reply
- 890 views
-
-
கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு (கிளிநொச்சி) கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் நாம் போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக நிலவும் செய்தி தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழ்.கோண்டாவில்ப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுச் சம்பவத்தில் சிறீலங்காப்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த ஆனைப்பந்திச் சந்திப்பகுதியிலும் படையினர் மீது கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஸ்ரீலங்காப் படையாளி ஒருவர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். படையாளியும், 20 அகவையுடைய ஜெகதீஸ்வரி, 21 அகவையுடைய கந்தையா விமலன், 15அகவையுடைய அருட்செல்வம் சாஜிராஜ் ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர் நன்றி: புதினம்
-
- 0 replies
- 1.1k views
-
-
வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் கிபிர் விமானங்கள் பாரிய குண்டு வீச்சு - பாண்டியன் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44 இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீ லங்கா வான் படையின் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக் குதலை ஆரம்பித்துள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இருந்து இந்தச்செய்தி பதிவு செய்யும் 6-45 மணிவரை தாக்குதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது. இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 6 குண்டுகள் வீசப்பட்டுள்ளது இதுவரை சேதவ…
-
- 42 replies
- 6.8k views
-
-
தென் தமிழீழ தளபதிகளின் கிளிநொச்சி பயணம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கியுள்ளனர். இது தொடர்பாக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹான்சன் பௌயருக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: 25 ஏப்ரல் 2006 திரு ஜோன் ஹான்சன் பௌயர் சிறப்புத் தூதுவர் அன்புள்ள திரு பௌயர் சமாதான முயற்சிகளைப் புத்துயிரூட்டுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கும் நோக்கிலும் இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை உங்களுக்கு அறியத்தரும் நோக்கிலும் இக்கடிதத்தை நான் எழுதுகின்றேன். அரசாங்கமானது ஒரு புறம் தாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்று பிரச்சாரம் செய்வதுடன் மறுபுறத்தில் சமாதானத்தை அழிப்பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி
-
- 28 replies
- 5.4k views
-
-
Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence Security Forces Stand by During Mob Attacks in Trincomalee (New York, April 25, 2006) ? The Sri Lankan government has failed to respond adequately to recent attacks by armed groups on ethnic Tamils and their homes and businesses in Sri Lanka?s eastern Trincomalee district, Human Rights Watch said today. Police and other security forces reportedly stood by as Tamils were attacked on April 12 after an alleged Tamil Tiger bomb at a Trincomalee market killed five persons. Witnesses said that within 15 minutes approximately 100-150 ethnic Sinhalese men armed with clubs and long knives attacked Tamil businesses…
-
- 0 replies
- 892 views
-
-
பழிவாங்கும் படலத்தைத் தொடருவோம் - திருமலை பொங்கியெழும் மக்கள் படை. திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியர்களால் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து பெருநிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத்தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஓரளவு நிலைகளை மாற்றியிருந்த போது மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புத் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் தமிழ் பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறீலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலைப…
-
- 6 replies
- 1.8k views
-
-
கனகம்புளியடியில் நேற்று மாலை 7.15 மணியளவில் சிறிலங்கா படையினர். பயணிகள் பேரூந்து மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனர். நேற்று மாலை 7.15 மணியளவில் கனகம் புளியடி சந்தியில் வைத்து பயணிகள் பேரூந்து மீது சிறிலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடாத்தினர். இதில் குறைந்தத இரு பொது மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அறியப்படுகின்றது. முழமையான சேத விபரங்களை எம்மால் இது வரையில் உறுதிப்படுத்த முடியவில்லை. இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தி ஒரு படையினர் கொல்லப்பட்ட மீசாலையில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் நடைபெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் மீது பேரூந்திலிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட பின்…
-
- 0 replies
- 962 views
-
-
மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். அத்தோடு வீதியில் சென்று கொண்டிருந்த வயது முதிந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி…
-
- 0 replies
- 931 views
-
-
வவுனியா மாவட்டம் வேப்பங்குளம் பகுதியில் கடந்த சனியிரவு 8.00 மணியளவில் இராணுவத்தினரின் உளவுத்துறையைச்சேர்ந்த நால்வரால் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வேப்பங்குளம் பகுதியில் மடுமாதா களஞ்சியம் என்ற வணிக நிலையத்தை நடத்திவரும் பற்குணராஜா இராஜபத்மன் (வயது 31) என்பவராவார். இவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக 17.04.2006 அன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலின் பின் தன்னை இராணுவ உளவுத்துறையைச்சேர்ந்த நால்வர் தொடருவதாகவும், தனக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது பற்றித்தெரியாதென்றும் தனது நெருங்கியவர்களுடன் தொலைபேசியில் சொல்லியுள்ளார். மரணமான அன்றும் இதுவிடயமாக தனது நண்பர்களுடன் கதைத்துள்ளார். இவரின் கொலை நடைபெற்ற இடத்திலிருந்து பதினைந்து மீற்றர்து}ரத்திலும், எழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிஸ்டலுடன் வந்த ஈபிடிபி உறுப்பினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு. இருபாலை சந்தியில் நேற்று இடம் பெற்ற துப்பாகிகச் சூட்டிற்கு காரணமாக இருந்தவர் எனக் கருதப்படும் ஓருவர் துப்பாக்கியுடன் இருபாலைப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார். இன்று நன்பகல் 2.00 மணியளவில் குறிப்பிட்டவர் துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற இடத்திற்கு சையிக்கிளில் தனது காதலியிடம் செல்வதற்காக வந்துள்ளார். குறிப்பிட்டவர் வருவதை அவதானித்தவர்கள் நேற்றை தினம் இவர் போன்று ஒருவரே குறிப்பிட்ட ஆட்டோ சாரதியின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றவர் என இனம் கண்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சென்றவர்கள் தனது காதலியிடம் சென்றவரை பின் தொடாந்து சென்று ப…
-
- 2 replies
- 1.3k views
-