ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருகோணமலை கோமரங்கடவெல களனியபுரத்தில் மாலை 5 மணியளவில் நெல் வயலில் இருந்த சிங்கள விவசாயிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர். http://www.eelampage.com/?cn=25724
-
- 9 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவக் குழுவினராலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் இலங்கை ஒரு பயங்கரமான போரை நோக்கிச் செல்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல்: வடக்கு-கிழக்கின் நிலைமை மிகவும் மோசமடைந்து சீர்குலைந்துள்ளது. கடந்த டிசம்பர் மற்றும் சனவரியைப் போல் நிழல் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு மிக மோசமான நிலை உருவாகி உள்ளது. ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலைகள் மீது துணை இராணுவக் குழுவினரது உதவியுடன் தாக்குதல்கள் தொடங்கிவைக்கப்பட்டன. சிறிலங்கா அரச படைகளால் கருணா குழுவினருக்கு பாதுகாப்பு வழங்க…
-
- 0 replies
- 810 views
-
-
வெலிகந்தையில் நேரடி மோதல் - இரு படையினர் படுகாயம் பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களிற்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை நேரடி மோதல் இடம்பெற்றுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 6.30 மணியளவில் படையினரின் சோதனை நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து படையினரும் பதில் தாக்குதல் நடத்தி யுள்ளனர். சுமார் இருபது நிமிடநேரம் இரு தரப்பினருக்கும் துப்பாக்கிகள் மூலம் நேரடி மோதலில் ஈடுபட்டனர். இதன்போது படைத்தரப்பில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காலை 9.30 மணிவரை அப்பகுதியில் படையினர் பாரிய தேடுதலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. sankathi.com
-
- 0 replies
- 1k views
-
-
ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்ற அரசு தயார் கருணா குழு தொடர்பான வீடியோ பதிவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. அமைச்சர் ரம்புக்வெல்ல சரியான காரணங்கள் இருப்பின் ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னரைப் போல் இராணுவ உலங்குவானூர்தி ஏன் தற்போது வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது: கிழக்கில் இருந்து கிளிநொச்சிக்கு விடுதலைப்புலிப் போராளிகளை அழைத்து வர பொதுப்பயண உலங்குவானூர்தியை ஒழுங்கு செய்வது தொடர்பாக தெரிவித்துள்ளோம். 32 போர…
-
- 0 replies
- 978 views
-
-
இரத்தத்தில் குளிக்கும் மண் இலங்கை மண் இன்னொரு தடவை இரத்தத்தில் குளித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்றது. தாயகத்தின் முக்கியமான அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியதைப் போல இந்தத் தசாப்தத்தில் இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தில் ஒரு இரத்தக் குழம்பாக மிதந்தாக வேண்டுமா என்பது தெரியவில்லை. என்றாலும் இரத்தம் சிந்தும் போர் ஒன்று நிகழ்ந்து தான் ஆக வேண்டியுள்ளது. இந்தக் கொடுமையான போர் தமிழ் மக்களால் விரும்பப்படாத ஒன்று என்ற போதிலும் அதுதான் தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் விரும்பி ஏற்கின்ற ஒன்றாக இருக்கின்றது என்பது உண்மையாகும். சமாதானத்துக்கான காலம் என்பது இப்போது இல்லை. ஒப்புக்கு அப்படி ஒரு காலம் இருப்பதாக சர்வதேசமும் வசதிக்காக சிறிலங்காவும் சொல்லிக் கொண்டிருக்கின…
-
- 0 replies
- 827 views
-
-
மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம்: மன்னார் அரசியல்துறை எச்சரிக்கை தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா படையினரது தாக்குதல்கள் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்க நேரிடும் என்று மன்னார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இனியவன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மடுப்பகுதியில் சிறிலங்காப்படையினரும், ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரும் இணைந்து நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிலங்காப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொலைக் கெடுபிடிகள் வௌ;வேற…
-
- 0 replies
- 895 views
-
-
மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதிக்குள் ஊடுருவிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் இரு அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆண்டாங்குளம் பகுதியில் இருந்து மடு நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த உந்துருளியில் சென்ற இரு இளைஞர்களும் உயிரிழந்தனர். பெரியபண்டி விரிச்சான்ää மடுää மன்னாரைச் சேர்ந்த 25 அகவையுடைய யோகநாதன் சர்வேந்திரன்ää 20 அகவையுடைய தம்பையா யேசுராஜா (கறா) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கதி
-
- 0 replies
- 1k views
-
-
இருபத்தொரு பேர் சாவு! அறுபது பேர்வரை காயம்! முப்பத்தொரு வர்த்தக நிலையங்கள் எரிப்பு! சேதமதிப்பீடு பன்னிரண்டரைக் கோடி! வாகனங்கள், உடைமைகள் சேதம்! நாற்பத்தொரு வீடுகள் எரிப்பு! தமிழர் தாயகத்தின் தலை நகர் திருமலையில் சிங்களக் காடையர் கும்பலும், சிங்களக் குண்டர்களும் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கையானது தமிழினத்தினைத் திட்டமிட்டு அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத்தலைவர் மாமனிதர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் சோபையிழந்து சோகத்துடன் காணப்பட்ட மக்களுக்குக் கடந்த 12ம் திகதி நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட இனஅழிப்பின் ஒரு உச்ச நடவடிக்கையாக நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நடைபெற்ற சம்பவங்கள் ஒ…
-
- 0 replies
- 876 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து வழிமுறைகளுக்கு சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவிக்காது மறுத்துரைத்திருப்பதன் காரணத்தால் திட்டமிட்டபடி நடைபெறவிருந்த ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் கள நிலவரங்களையும் அவதானிக்கின்றவிடத்து நாலாம் கட்ட ஈழப்போர் நெருங்கி வருவதற்கான சாத்தியங்களே அதிகரித்துள்ளன. முதலில் ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெறாத சூழலை உருவாக்குவதும் போரைத் திணிப்பதும் சிறிலங்கா அரசின் பிரதான நோக்கமாகும். ஏன் ஜெனீவாப் பேச்சுக்களுக்கான சூழலை அரச தரப்பு சீர் குலைக்கின்றது என்பது குறித்து முதலில் ஆராய வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்…
-
- 0 replies
- 999 views
-
-
குடாநாட்டிலிருந்து வன்னிக்கு பொதுமக்கள் இடம்பெயர்வு யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் கொலைகள் காரணமாக பொதுமக்கள் பலர் வன்னிக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். வர்த்தக அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் குடும்பங்கள் உட்பட பலர் தமது பாதுகாப்புக் கருதி வன்னிக்கு இடம்பெயருகின்றனர். குடாநாட்டில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இராணுவ சுற்றிவளைப்புக்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த வாரத்தில் தென்மராட்சி வலிகாமம், யாழ்ப்பாணம், அரியாலைபகுதி, கொக்குவில் பகுதிகளில் திடீர் திடீரென சுற்றி வளைப்பு நடத்திய படையினர் வீடுகள், வளவுகள் ஆகியவற்றை சல்லடை போட்டு தேடு…
-
- 0 replies
- 825 views
-
-
எந்த நேரத்திலும் முறிவடையும் போர் நிறுத்தம்- யாழிலிருந்து உடனே வெளியேறுங்கள்: மக்களுக்கு வேண்டுகோள் [வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 20:25 ஈழம்] [யாழ். நிருபர்] இலங்கையில் எந்த நேரத்திலும் போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் சூழலை இராணுவம் உருவாக்கியுள்ளதால் யாழிலிருந்து உடனடியாக விடுதலைப் புலிகளின் பகுதிக்கு இடம்பெயருங்கள் என்று யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பொதுச்செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: யாழ்.குடா இராணுவக் கொலைக்களமா? அன்பார்ந்த எம் உறவுகளே! யாழ்ப்பாணக் குடாவில் சுமூகமான நிலைவரும்............... சுமூகமான நிலைவரும்............. என நம்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் மீண்டும் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாகின. இருவரை படுகொலை செய்துள்ளனர். திருகோணமலை தெகிவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார். திருகோணமலை சிங்களக் குடியேற்றப் பகுதியான தெகிவத்தவில் காலை 8.40 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தெகிவத்த-கிளிவெட்டி வீதியில் தென்னந்தோப்பு வேலியில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபடும் படையினரை இலக்கு வைத்து கிளைமோர் கண்ணிவெடி பொருத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலையடுத்து சிங்களக் காடையர்…
-
- 0 replies
- 945 views
-
-
படையினர் வன்முறைகளைக்கு முடிவுகட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வோம்: கஜேந்திரன் [வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2006, 01:42 ஈழம்] [ம.சேரமான்] யாழ் குடா நாட்டில் சிறிலங்காப்படையின் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டி எம் மண்ணில் இருந்து வெளியேற்றும் வரை இளைஞர் யுவதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கள படைகளினால் எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள், அப்பாவி மக்கள் மீதும், மாணர்கள் மீதும் கடற் தொழிலாளர் மீதும் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகள், சித்திரவதைகள்,கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெறவுள்ளது - படைமுகாம்களிற்கு அருகே இருக்க வேண்டாம் - மக்கள் படை வேண்டுகோள் - பாண்டியன் - வுhரசளனயலஇ 20 யுpசடை 2006 19:54 சிங்கள கூலிப்படைக்கு எதிரான எமது தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள தால், சிங்களப் படைகளுக்கு அருகிலோ அல்லது அவர்களது முகாம்களுக்கு அரு கிலோ இருக்க வேண்டாம் என்பதை தயவாக வேண்டுகின்றோம். இவ்வாறு மட்டு - அம்பாறை மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. (தவறு திருத்தப்பட்டுள்ளது) எடுத்த சபதம் முடிப்போம் என்ற தலைப்பில் மட்டு அம்பாறை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் வெளியிடப்பட்ட அறி;க்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அந்த அறிக்கையில் மேலும் தெரிவி;க்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 969 views
-
-
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை: விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு [ஜெனீவாவில் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தா வரை பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com
-
- 2 replies
- 1.3k views
-
-
தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி அன்னை பூபதியின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் தமிழர் தாயகப் பகுதிகளின் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. தாயகப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் தொடங்கின. தமிழீழ காவல்துறை நடுவகப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு காவல்துறையின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் க.கண்ணாளன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ காவல்துறையின் கிளிநொச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செ.தனஞ்செயன் ஏற்றிவைத்தார். தமிழீழத் த…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேசமே சிறிலங்கா அரசின் படுகொலைப் பயங்கரவாததிற்கு உனது பதில் என்ன? Five civilians shot and killed by SLA soldiers in Puthur East, Jaffna [TamilNet, April 19, 2006 03:11 GMT] Sri Lanka Army (SLA) soldiers shot and killed five Tamil civilians Tuesday night close to an SLA 51-1 Division camp located at Vatharavathai, 13 km north-east of Jaffna. The SLA soldiers took the five civilians, a Municipal Council official, an electrical mechanic, a farmer and two auto-rikshaw drivers, inside the army camp and later brought them out to an open terrain and gunned them down, villagers said. A terror-campaign, let loose on the civilians in the area by the soldie…
-
- 12 replies
- 1.7k views
-
-
தினமும் தமிழனின் பிணம் திண்கிறார்கள் சிங்களக்கழுகுகள் அனால் மக்கள் படை குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள். ஒரு சதாரண தமிழ் மகனின் கொலை தமிழர் நகரங்களில் விழும் போது சிங்கள நகரங்களிலும் சாதாரண சிங்கள குடிமகனின் கொலையும் விழவேண்டும். அப்போ தான் இந்த சாதாரண தமிழ் குடிமகனின் கொலைகளை நிறுத்தலாம். அதை விடுத்து மக்கள் படை இராணுவத்தை தேடித் திரிவது பம்மாத்து. ஏனெனில் சிங்கள இராணுவம், ஆயுதமேந்திய தமிழீழ இராணுவத்தை தாக்கவில்லை.சாதாரண தமிழ்க்குடிமகனைத்தான் கொலை செய்கிறார்கள். இராணுவம் செய்யும் கொடூரம் சிங்கள சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. சாதாரண தமிழ் மகனின் கொலைகள் எவ்வாறேனும் சாதாரண சிங்கள குடிமகனின் இடத்திற்கு நகர்த்தி தெரியப்படுத்த வேண்டும். அது பழிக்குபழியாக கூட …
-
- 1 reply
- 933 views
-
-
போர்மூலமே தீர்வெனில் தமிழர்கள் தயார்: தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் [செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 16:21 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சமாதானத்தீர்வு ஒன்றை எட்டுவது என்பது போர்மூலம் தான் சாத்தியப்படும் என்றால் அதனை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தயாராகவே உள்ளனர் என்று தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன் தெரிவித்துள்ளார். தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப்பணியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னை பூபதியின் நினைவு நிகழ்வில் அவர் ஆற்றிய உரை: தமிழர்களை அழிக்கவேண்டும் என்ற சிந்தனை அழியாத சிந்தனையாக சிங்கள அரசிடம் தொடர்ந்தும் உள்ளது. சிங்கள அரசு அன்று முதல் இன்று வரையில் சிந்தனையிலோ, செயற்பாட்டிலோ எந…
-
- 0 replies
- 886 views
-
-
ஒட்டுப்படை மீது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி - ஒருவர் கைது - பாண்டியன் - Tuesday, 18 April 2006 12:42 மட்டக்களப்பு மாவட்டம், கிரான் மேற்கு, பெண்டுகள் சேனைப் பகுதிக்குள் ஊடுருவி தாக் குதல் நடத்த முற்பட்ட ஒட்டுப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஒட்டுப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டுப்படையினரிடமிருந்து கிளைமோர் கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் தானியங்கித் துப்பாக்கிகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒட்டுப்படையி னரின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதா…
-
- 4 replies
- 1.4k views
-
-
நோர்வே சிறப்புத் தூதுவர் இன்று இலங்கை வருகை இலங்கை அமைதி முயற்சிகளுக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்கிழமை இலங்கை வரக் கூடும் என்று தெரிகிறது. ஜெனீவா 2 ஆம் சுற்றுப் பேச்சுக்கள் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென் தமிழீழ தளபதிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முக்கிய ஆலோசனை நடத்துவதற்கான பயண ஒழுங்கை யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. ஆகையால் தங்களது தளபதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின்னரே ஜெனீவாப் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர். இந்நிலையில் தென் தமிழீழ…
-
- 1 reply
- 864 views
-
-
போர் சூழலை அரசு உருவாக்கிறது பேச்சு வாhத்;தை மேசையில் தமிழ் மக்களின் உண்மைதன்மைக்கு முன்னால் தாக்குப்பிடிக்காத சிங்களா அரசு இலங்கை தீவிலே மீண்டும் ஒர் போர் சுழலை உருவாக்க முணைக்கிறது என்பதனை அதன் அன்மைய செயல்ப் பாடுக்குள் நிருபித்து காட்டுகின்றன.இதற்கு எப்படியாவது விடுதலைப்புலிகளை அது வலிந்து சண்டைக்குஇழுப்பது தமிழ் முஸ்ஸிம் சமூகங்களுக் கிடையிலான இன மோதல்களை ஏற்படுத்துவது போன்றவற்றை நடை முறைப்படுத்து வதில் அது தீவிரம் காட்டி வருகின்றது இதற்கு எடுத்துக்காட்டாய் விடுதலைப்புலிகளின் தென் தமிழீழ தளபதிகள் வன்னி வருவதற்கான பயணத்தடை மற்றும் போராளிகள் மீதான ஒட்டுப்படைகளின் தாக்குதல்கள் என்பன இதே சமகால த்தில் திருமலையில் தமிழ் மக்கள் மீதனா கொலை வெறியாட்டம் யாழில் அப்பாவி முஸ்லி…
-
- 0 replies
- 748 views
-
-
'நாங்கள் ஊர்திரும்புகிறோம். நீங்கள் புறப்பட தயாராகுங்கள்" - இராணுவம், ஒட்டுப்படைகளை வலியுறுத்தி யாழில் சுவரொட்டிகள் - சங்கிலியன் - யாழ்.குடாநாட்டை விட்டு சிறிலங்கா இராணுவமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் தேசவிரோதிகளும் உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி யாழ்.குடா நாடெங்கும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று(16.04.2006) மாலை குடாநாட்டிலுள்ள பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இச் சுவரொட்டிகளில் இராணுவமும் தேசவிரோதிகளும் குடாநாட்டை விட்டு வெளியேறாவிட்டால் அவர்களுக்கு இங்கேயே புதைகுழி தோண்டப்படும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 'போர்வேண்டாம் போய்விடு.. சாவேண்டுமெனில் தங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
குடாநாட்டில் தினமும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் தமது நகைகளை வங்கிகளில் அடகு வைக்க ஆர்வம் காட்டுவதால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகள் பவுணுக்கு 11 ஆயிரம் ரூபா வழங்கத் தயாராகவுள்ள போதும் மக்கள் மிகச் சிறிய தொகையையே கடனாகக் கேட்பதால் வங்கி அதிகாரிகள் சிக்கலையெதிர் நோக்குகின்றனர். இப்பிரச்சினையைத் தீர்க்குமுகமாக தற்போது பவுணுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக கோர முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வங்கிகளில் நகைகளை அடகு வைத்துப் பணத்தைப் பெறுவோர் அந்தப் பணத்தை சேமிப்புக்கணக்கில் வைப்பிலிட்டு விட்டுச் செல்கின்றனர். குடாநாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைகளால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். http://www.thinakkural.c…
-
- 8 replies
- 1.5k views
-
-
நான்காம் ஈழப் போர் தொடங்கும்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 20:19 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நான்காம் ஈழப் போர் தொடங்கும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (16.04.06) வெளிவந்த கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: விடுதலைப் புலிகள் யுத்தத்திற்குச் சென்றால் அத்தகைய நிலைக்கு முகம் கொடுப்பதற்கு பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் யுத்தத்தினை தொடங்கினால் அது நான்காவது ஈழப்போரின் தொடக்கமாகக் கருதப்படும். இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் கலந்து கொண…
-
- 5 replies
- 1.5k views
-