Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் தொழில் மையம் அமைத்து தருவதாக கனடா வாக்குறுதி! [Friday 2015-12-18 07:00] யாழ். மாவட்டத்தில் தொழில் மையம் ஒன்ழற அமைத்து தருவதாக ககனேடிய உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை, கனேடிய உயர்ஸ்தானிகர் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். யாழ். மாவட்டத்தில் தொழில் மையம் ஒன்ழற அமைத்து தருவதாக ககனேடிய உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங் உறுதியளித்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை, …

  2. வன்னி கூட்டுப்படைத்தளத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை முற்பகல் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 904 views
  3. சுழிபுரம் மாணவி கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்க நடவடிக்கை… October 19, 2019 சுழிபுரம் மாணவி சிவனேஸ்வரன் றெஜினா படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜினா (வயது – 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் மாலை சடலமாக மீட்கப்பட்டார். பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. …

  4. ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது, சிறீலங்கவின் சார்பில் அதனை எதிர்கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான தாமரா குணநாயகம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் அடுத்த கூட்டத் தொடரைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த அவசர இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும், ஒரு தமிழர் என்ற காரணத்தினால் தாமரா குணநாயகம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸினால் பழிவாங்கப்பட்டிருப்பதாக வேறு சில இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! இராஜதந்திரப் பதவி நிலையைப் பொறுத்தவரையில் தாமரா குணநாயகம் மிகவும் உயர்ந்…

  5. பிரித்தானியாவில் முதன் முறையாக அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கிய பிரித்தானிய "தமிழர் மெய்வல்லுநர் போட்டி - 2008" லண்டன் வடகிழக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற Lee Valley Athletic centrey இல் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 677 views
  6. கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார்-கோட்டாபய இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நான் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இல்லை. ஆனாலும் எனது தோள்களில் சுமந்துள்ள கடமைகளை நிறைவேற்றுவேன்.தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நான் நம்புகின்றேன்.எஸ்.பி. திசாநாயக்கவின் மெய்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு விவகாரத்தில், யார் குற்றம் இழைத்திருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதேவேளை சுற்றுலாத்துறையின் ஊட…

  7. ஜே.வி.பியின் பிளவின் மூலம் அரசியல் தீர்வு தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வரலாம் என்று ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 519 views
  8. 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை நட்டில் 1,700 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அனைத்து பொலிஸ் நிலையப் பதிவுகளிலுமிருந்து தெரியவந்துள்ளது. அதில் 1,300 பேர் தீவிரவாத தடுப்புப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தல்கள் தொடர்பில் சில முறைப்பாடுகளிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தீவிரவாதத் தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் தகவல் சேகரிப்பிற்காகவே இவர்கள் தடுத்து வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, உறவினர்கள் கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் அவர்களைப் பார்வையிடக் கூட அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டோர் இரு பிரிவுகளாக பிரித்த…

    • 0 replies
    • 614 views
  9. வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும்- வடக்கு ஆளுநர் வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ் உரிமையாளர்களுக்கான பற்றுச்சீட்டு இயந்திரம் ஆளுநரினால் வைபவ ரீதியாக வழங்கப்பட்டன. ஆளுநர் இங்கு குறிப்பிடுகையில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பஸ்பயணத்தின்போது விசேட பஸ் கட்டண கழிவுகள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்க…

  10. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவை பிரிட்டன் அரசு கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் பொதுநலவாயநாடுகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றக்கோரியும், சென்னை பிரித்தானிய துணைத் தூதரகத்தின் முன் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வை, மே பதினெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை தாங்கி வழி நடத்தினார். “கைது செய்! கைது செய்! இனப்படுகொலை போர்க்குற்றவாளி ராசபக்ஸவை கைது செய்” என்ற முழக்கங்களை எழுப்பியவாறு, பிரித்தாணியத் துணைத் தூதரகத்தை நோக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாகத் திரண்டு வந்தனர். இதன் பின்னர் பிரித்தானியத் துணைத் தூதரக அலுவலகத்தில் ராசபக்ஸவை இங்கிலாந்திலே…

  11. ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், உத்தியோகபூர்வ வாசஸ்தாலமான அளரிமாளிகையிலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார். அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் இன்றைய தினம் 15 பேர் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை கோத்தாபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து அமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/69354 பதவியை இராஜினாமா செய்தார் ரணில்! ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதோடு,…

    • 0 replies
    • 530 views
  12. 19 Feb, 2025 | 08:24 PM கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைப்பு! | Virakesari.lk

  13. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றினை உலக சமூகம் அங்கீகரிக்கும் வரை உறுதியோடு எமது தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து போராடுவோம் என்று கிளிநொச்சி மே நாள் ஏற்பாட்டுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 671 views
  14. சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி பத்திரம் கிடைக்க பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தாம் கோரிய பாடம் மற்றும் பாட எண்ணில் மாற்றங்கள் இருப்பின் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்வதன் மூலம் அதனை திருத்திக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இந்த பரீட்சைகள் நான்காயிரத்த…

  15. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  16. [size=3] [size=4]வடக்கில் இராணுவத்தின் பொறுப்பிலிருந்த 50 வீதமான வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் விரைவில் கையளிக்கவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.[/size] [size=4]வடக்கிலுள்ள பொது மக்களில் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்க வேண்டிய எந்த ஒரு தேவைகளும் இராணுவத்திற்கு இல்லை என்று தெரிவித்த அவர், அவ்வாறு கூறப்படும் செய்திகள் தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.[/size] [size=4]வடக்கில் முகாம்களை அமைப்பதற்கு தேவையான காணிகளை மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, உரிய இடத்தில் பொருத்தமான காணிகள் கிடைத்தவுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் உரிம…

  17. [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடக் கூடாது என்று அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட காரைதீவு பிரதேசசபை தலைவர் செல்லையா இராசையாவுக்கும் இத்தகைய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவர் இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன், இவரையும் இவரது ஆதரவாளர்களையும் …

  18. [size=3][/size] [size=3][size=4]அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா மயக்க நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்தவரென கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் இலுப்பக்கடவையினை சேர்ந்த முத்துராசா தில்ருக்ஸன் (வயது 28) என அவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இன்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்திருந்த தில்ருக்ஸனின் பெற்றோர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]2006ம் ஆண்டில் வெளிநாடு செல்லுவதற்கென கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்றிருந்தவேளை இவர் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் காணாமல் போன தமது பிள்ளையினை பெற்றோர் பல இடங்களிலும் தேடி திரிந்த நிலையில் பின்னர் நம்…

  19. கட்சி தலைவர் பதவி இன்றி பிரதமர் வேட்பாளராக மாட்டேன் : சஜித் ஐக்கிய தேசிய கட்சித் தலைமை பதவி இன்றி எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மாட்டேன் என சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் கோட்டை பகுதியில் நேற்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னோக்கி பயணிக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டால் அதற்கு செவிசாய்த்து அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன். எவ்வாறாயினும் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவமென்றால் கட்சி தலைமை பதவி இன்றி நான் அதில் இறங்க மாட்டேன். அதேபோல் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுமாறு மக்கள் கூறினால் அதனையும் ஏற்றுக்கொள்…

  20. மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ள நாடுகளில் இலங்கையயும் அடங்குவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 611 views
  21. சிறுநீரக வியாபார சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க இந்திய குழு வருகிறது 13-02-2016 01:05 PM சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்களுக்கு தொடர்புள்ளதாக என்பது பற்றி விசாரிப்பதற்காக இந்திய பொலிஸ் அதிகாரிகள், இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐதராபாத் பொலிஸார் இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் இலங்கை வைத்தியர்கள் இருவருக்கு தொடர்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/165980#sthash.J4jsGpBr.dpuf

  22. மட்டு. போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களுக்குள் 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள்- சுரேந்திரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் உயிழப்புக்கள் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்கள் தொடர்பாக உடனடிக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் இந்த அவசரக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் உரிய ஒரேயொரு போதனா வைத்தியசாலையாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உள்ளது. இங்கு வைத்திய வசதிகள் உய…

  23. 11 Apr, 2025 | 03:40 AM 2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய “பலகாரங்கள் அடங்கிய மேசையைத்” தயார் செய்வதற்கான செலவினம் 7% ஆல் அதிகரித்துள்ளதோடு இது 2019ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இது, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் முதன்மையான பொருளாதார தகவல் தளமான PublicFinance.lk ஆல் மேற்கொள்ளப்படும் வருடாந்த ‘புத்தாண்டு பலகார மேசையைத்’ தயார் செய்வதற்கான பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. 2024 மார்ச் மாதம் முதல் 2025 மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மூலப்பொருட்களின் விலைகளில் 7% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இப் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. இதற்கு முதன்மையாக, தேங்காய் விலை மற்றும் தேங்காய் எண…

  24. இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அரியலூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். கடல் இலங்கையைப் பிரித்தாலும் தொப்புள்கொடி உறவு தமிழகத்துடன் தொடர்கிறது எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கை அரசின் இனப்படுகொலைகளை சர்வதேச நாடுகள் புரிந்துக்கொண்டுள்ளன. தனது மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரியக்கூடாது…

    • 0 replies
    • 879 views
  25. ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும்: நா.தமிழன்பன் [ஞாயிற்றுக்கிழமை, 08 யூன் 2008, 03:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் கடந்த வாரம் நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கில் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த மண்ணில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாத…

    • 0 replies
    • 826 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.