ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
13ஐ நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் - அரசாங்கம் அறிவிப்பு 21 JAN, 2023 | 06:51 PM ஆர்.ராம் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, எதிர்காலத்தில் காணி அபகரிப்புக்களை நிறுத்துவதற்குமுரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,…
-
- 2 replies
- 706 views
- 1 follower
-
-
நிலாவெளியில் பப்பாளிச் செய்கையில் பாரிய வீழ்ச்சி : வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை By Nanthini 22 Jan, 2023 | 01:19 PM நிலாவெளி, கும்றுப்பிட்டி முதலான பிரதேசங்களில் பப்பாளி செய்கையாளர்கள் இம்முறை பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் பப்பாளி பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் பப்பாளிப்பழ விற்பனை சரிவடைந்துள்ளது. முன்பு போல சுற்றுலா…
-
- 0 replies
- 592 views
-
-
https://tamilwin.com/article/separated-tamil-parties-1674130611 இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனையும் ஒன்றாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நான்கு நாள் பயணத்தை நேற்று முன்தினம் (17.01.2023) ஆரம்பித்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இன்று (19.01.2023) கொழும்புக்கு வந்தடைந்தார். விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவ…
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை இந்தியா அர்த்தபூர்மானதாக்க வேண்டும் - பேராசிரியர் சர்வேஸ்வரன் கோரிக்கை 21 JAN, 2023 | 06:46 PM ஆர்.ராம் 13ஆவது திருத்தசட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே உடனடியான சாத்தியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவான அறிவிப்பை விடுத்துள்ள நிலையில்ரூபவ் இந்தியா மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை அர்த்தபூர்வமானதாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை விவகாரங்களுடன் நீண்டகாலம…
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
தமிழர் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய நேரடிப் பேச்சுவார்த்தை அவசியம் - 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும், 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தல் By NANTHINI 21 JAN, 2023 | 06:36 PM (நா.தனுஜா) தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 'பிளஸ்', மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 த…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
14 இலங்கைப் பிரஜைகளுக்கு பிரான்ஸில் சிறைத்தண்டனை! ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான கண்டம் தழுவிய முயற்சியின் ஒரு பகுதியாகும் என விபரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பரிஸுக்கு வடக்கே 80 கிமீ தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் இருந்து இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்…
-
- 1 reply
- 752 views
-
-
மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதில் நெருக்கடி By DIGITAL DESK 5 21 JAN, 2023 | 11:58 AM (எம்.மனோசித்ரா) மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான 55 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலையீட்டுடன் இதுவரையில் 20 பில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு , எஞ்சிய 35 பில்லியனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் இந்த பணத்தொகையை திரட்டி நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் ப…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார்! உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அவர் தலைமையிலான சுயேச்சை குழுவினர் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதற்கமைய தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில சுயேச்சை குழுவில் களம் இறங்குகிறார். மேலும் யாழ்.மாநகர சபையில் மாத்திரம் போட்டியிடுவதற்காகவும் வாமதேவ தியாகேந்திரன் தலைமையிலான சுயேச்சை குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2…
-
- 6 replies
- 874 views
-
-
இலங்கைக்கு IMF உதவியைப் பெற அவசியமான நிதி உத்தரவாதம்? இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக நம்புவதாகவும் அதனால் ஏனைய தரப்புகளைப் பற்றி பாராமல் சரியானவை என தான் நினைக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடனான சந்திப்பை தொடர்ந்து…
-
- 0 replies
- 324 views
-
-
நுவரெலியா கோர விபத்து - உயிரிழந்தோர் முழு விபரம்! நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 3 சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் ஒன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் …
-
- 0 replies
- 456 views
-
-
நானுஓயா விபத்தில் இறந்தவர்களின் விபரம் வெளியானது: காயமடைந்த மாணவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு By Nanthini 21 Jan, 2023 | 11:52 AM நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், முச்ச…
-
- 6 replies
- 365 views
-
-
இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி! இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் என இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் K.V.தவிராசா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்பிற்குள் நுழைந்ததாகவும், திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி, சம்பந்தனைக் கொண்டே அதனை நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பு இல்லாமல், அதன் தலைவர் என்ற பதவ…
-
- 2 replies
- 552 views
-
-
இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்! தவறினால் கறுப்புக்கொடி போராட்டம்-சிவாஜிலிங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என முன்னாள் வடக்குமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வேலன் சுவாமியை கைதுசெய்தமையை கண்டிப்பதோடு இவ்வாறெல்லாம் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது ஜனாதிபதி இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து தமிழ் அரசிய…
-
- 0 replies
- 207 views
-
-
வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரியுடன் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதைக் குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். ''ஏனையோர் செய்வார்கள் எனக் காத்திருப்பதைத் தவிர்த்து, நாங்கள் சரியானது என நம்புவதை செய்தோம்," என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை, இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்குக் காலதாமதமின்றி அனுப்பியுள்ளதாகவும் ஏனைய கடனாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார…
-
- 3 replies
- 431 views
- 1 follower
-
-
13 ஐ முழுமையாக அமுல்படுத்த இடமளியோம் - சரத் வீரசேகர By T. Saranya 18 Jan, 2023 | 09:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கவே 69 இலட்ச மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இடமளிக்க முடியாது. வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுக…
-
- 10 replies
- 1k views
-
-
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் தொகையில் தமிழர்களும் முஸ்லிம்களுமே உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. சீனத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஹ வெய் தலைமையிலான உயர்மட்டக் குழு ஜனவரி மாதம் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. அங்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் குடிநீர் ஆலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை ச…
-
- 6 replies
- 1.1k views
-
-
'பயங்கரவாதி போல பார்க்கிறார்கள்' - ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 31 கோடி ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு, தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நீதிமன…
-
- 2 replies
- 443 views
- 1 follower
-
-
வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு ! By DIGITAL DESK 5 12 JAN, 2023 | 12:11 PM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உ…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
ரணிலின் சாதனையை முறியடித்தார் ஜீவன் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், இலங்கையில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இளம் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த சாதனையை ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டு தனது 29 வயதில் இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றதே சாதனையாக இருந்தது. இந்தநிலையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று நியமிக்கப்பட்டார். ஜீவன் தொண்டமான் தனது 28வது வயதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து, இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக வர…
-
- 0 replies
- 270 views
-
-
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்குளுக்கு வழங்கப்பட்டுவரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் . இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள் வழங்கப்பட்…
-
- 3 replies
- 746 views
-
-
சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதில் - இலங்கை நம்பிக்கை By RAJEEBAN 20 JAN, 2023 | 02:41 PM இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரட்ணாயக்க இதனை தெரிவித்துள்ளார். நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் நிதி உத்தரவாதத்தினை பெற முடியும் என கருதுகின்றது இதன் மூலம் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 மில்லியன்; டொலர் கடனுதவியை பெறுவது சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
மனோவுக்கு ரணில் வழங்கிய உறுதிமொழி! இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந…
-
- 1 reply
- 712 views
-
-
சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் – விமல் ரத்நாயக்க! சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் யுவதிகள் தற்போதும் சிறையில் வாடுகின்றார்கள். அவ்வ…
-
- 1 reply
- 327 views
-
-
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சன்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். எஸ். ஜெய்சங்கருடன் வெளிநாட்டலுவல்கள் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் நான்கு பேரும் வருகைதந்துள்ளனர். இந்த குழுவினர் மாலைதீவில் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 4 replies
- 852 views
-
-
யாழ்.இராணுவ தளபதியுடனான சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் மாவட்ட செயலர் பேச்சு! By Digital Desk 5 20 Jan, 2023 | 12:54 PM யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால…
-
- 0 replies
- 661 views
-