ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு! லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம் சிவசாமியும் கலந்து கொண்டார். நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லண்டனில் முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைய 8 அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பிலும், 4பேர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களின் விடுதலை குறித்து இந்த சந்திப…
-
- 4 replies
- 448 views
-
-
அரசியல் கைதிகள் எட்டு பேருக்கு விடுதலை! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக நன்றியும் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத…
-
- 30 replies
- 2.1k views
- 1 follower
-
-
உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியும் – அமெரிக்கத் தூதுவர் உலகிற்கே அரிசி வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற முடியு என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை மட்டக்களப்பில் உள்ள அவரது பங்களாவில் விசேட சந்திப்பின் போது தூதுவர் உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். இந்த விசேட சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுற்றுலா துறை தலைவர், மட்டக்கள…
-
- 11 replies
- 517 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்டுள்ளோம் : ஜனாதிபதி அறிவிப்பு By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 08:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதும் திருத்தங்கள் வரலாம். சீனாவும் இந்தியாவும் என்ன சொல்லப் போகின்றன என்று தெரியாது. மூன்று முக்கிய தரப்புகள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர் ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றிய நிலையில் வரவு ச…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறென தேரர்களால் தொடரப்பட்ட வழக்கு : ரவிகரன், சிவநேசன் ஆகியோர் பிணையில் விடுதலை By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 01:32 PM முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரி…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
யுத்த காலத்தில் தற்போதைய புலனாய்வுப் பிரிவினர் இருந்திருந்தால் பிரபாகரனால் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்போம் - பொன்சேகா By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 03:11 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம் ) நாட்டின் புலனாய்வு பிரிவினர் தொடர்பில் அதிருப்தி நிலை காணப்படுகிறது. இவர்கள் யுத்த காலத்தில் இருந்திருந்தால் பிரபாகரனால் நாங்கள் இன்று தடுத்து வைக்கப்பட்டிருப்போம். ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை நிறைவு பெறும் வரை இலங்கைக்கு எவரும் ஒரு டொலர் கூட அனுப்ப கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்த…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
நந்திக்கடல் ஆற்று நீர் பெருங்கடலில் வெட்டிவிடப்பட்டது 09 NOV, 2022 | 07:12 PM கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வட்டுவாகல் நந்திக் கடல் நீர் நிரம்பி காணப்படுகிறது. நந்திக்கடல் ஆறு இவ்வாறு நீர்நிரம்பிக்காணப்படுவதால், வட்டுவாகல் பாலத்தை நீர் மூடி பாய்ந்து வருவதோடு போக்குவரத்தில் அபாயம் காணப்படுகின்றது. இந்நிலையில் நந்திக்கடல் ஆற்றினுள் மேலதிகமாகத் தேங்கியுள்ள நீரினை கடலில் வெட்டிவிடும் செயற்பாடு (09) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை பாரம்பரியமாக விசேட பூசை வழிபாடுகளுடன் குறித்த நந்திக்கடல் ஆற்றில் மேலதிகமாக தேங்கியுள்ள …
-
- 3 replies
- 327 views
- 1 follower
-
-
அரசாங்கத்தில் இணைய இ.தொ.கா விருப்பம் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு வழங்கப்படும் அமைச்சினை பொறுத்தது என்று அவர் கூறியுள்ளார். மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் உதவ முடியும் என தமது கட்சி கருதுவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான அரசாங்கத்தில் இ.தொ.கா, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமா என வினவியதற்கு, அவ்வாறான சாத்தியக்கூறுகள் சாத்தியமில்லை என ஜீவன் தொண்ட…
-
- 1 reply
- 205 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிப்பு! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் தலைவர், தூதுவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் (Federico Villegas), நியூயோர்க்கில் நடைபெற்ற 77வது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார். சமீப ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை அதன் அதிகரித்து வரும் பணியின் அளவு மற்றும் அதை ஆதரிக்கும் துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களுக்கு இடையே, அதிகரித்து வரும் இடைவெளியின் விளைவாக நிறுவன சவால்களை எதிர்கொள…
-
- 0 replies
- 168 views
-
-
விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி விடுதலைப் புலிகளின் புதையல் இருக்கலாம் என்ற தகவலுக்கு அமைய தேவிபுரம் “அ” பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த அகழ்வு பணியில் பொலிசார் விசேட அதிரடிப் படையினர் கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர் https://athavannews.com/2022/1309720
-
- 0 replies
- 353 views
-
-
ஜப்பானிலிருந்து சொகுசு ஜீப் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி : ஒருவர் கைது! By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:34 AM ஜப்பானிலிருந்து பிராடோ ரக ஜீப் ஒன்றை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (09) உத்தரவிட்டுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவை பெறுநர் வேறொருவருக்கு இந்தப் பணத்தை …
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியமைக்கான காரணத்தை விளக்கினார் சரத் வீரசேகர By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:14 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை முறையாக பின்பற்ற தவறியதாலே கோத்தாபய ராஜபக்ஷ்வினால் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன் ரஷ்யாவிடம் இருந்த இரண்டு வருட கடன் திட்டத்தில் எரிபொருள்கொள்வனவு செய்திருந்தால் போராட்டங்கள் இடம்பெற்றிருக்காது என சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து த…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
கல்வி, சுகாதாரத்துறைகளை தனியார் மயமாக்குவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 09:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) அமைச்சுப்பதவிகளை காட்டி எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை பழி எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. எந்த முயற்சி எடுத்தாலும் எமது கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் முட்டாள்தனமான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை. அத்துடன் இலவச சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளித்துள்ளீர்களா? என கேட்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜி…
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரிப்பு By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:49 AM இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 1,114 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வாரத்தில் 943 பேர் மட்டுமே பதிவாகியிருந்தனர். இதற்கமைவாக, நாட்டில் இவ்வருடம் 63,549 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெ…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
கடன் வழங்கியவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள்- இலங்கைக்கு உலக வங்கி அறிவுரை By RAJEEBAN 10 NOV, 2022 | 10:52 AM கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குநர்கள் இணக்கப்பாட்டிற்கு வருவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பெஸ் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியும் உலகவங்கி தலைவரும் இலங்கையின் பொருளாதார …
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
அல்ஹைதாவுடன் தொடர்பு - இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்தது அமெரிக்கா By RAJEEBAN 10 NOV, 2022 | 10:31 AM அல்ஹைதாவுடன் தொடர்புவைத்திருந்த இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசார் என்ற முஸ்லீம் வர்த்தகருக்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அல்ஹைதாவின் நிதி உதவியாளர் மற்றும் மற்றும் வெளிநாட்டு சதிதிட்டங்களில் ஈடுபட்டுள்ளவருடன் தொடர்புகளை பேணியமைக்காக அமெரிக்கா இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. அஹமட் லுக்மான் தலிப் என்பவருடன் நிசார் தொடர்பிலிருந்தார் என அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக்க…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
நாடு வங்குரோத்தடைந்துள்ளமைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு - பிரசன்ன ரணதுங்க By DIGITAL DESK 5 09 NOV, 2022 | 10:02 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முறைமை மாற்றத்திற்காக பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை துரிதப்பட…
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்நாட்டில் நாம் 1…
-
- 5 replies
- 328 views
-
-
இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்! இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது. இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர்…
-
- 5 replies
- 853 views
- 1 follower
-
-
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரண்! கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்ற 50 கைதிகளில் 35 பேர் சரணடைந்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில், அவர்களில் 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை க…
-
- 3 replies
- 313 views
- 1 follower
-
-
நீர் குழிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 09 NOV, 2022 | 04:52 PM (எம்.வை.எம்.சியாம்) அம்பாறை, உஹன பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழி ஒன்றில் விழுந்து ஒரு வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உஹன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மககண்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழியொன்றுக்குள் வீழ்ந்து குழந்தையொன்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வயதும் 2 மாதங்களுமான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழியில் வீழ்ந்த குழந்தை …
-
- 0 replies
- 459 views
- 1 follower
-
-
ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டம்? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் என்பது மாகாண சபை…
-
- 1 reply
- 188 views
-
-
அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை - கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைப்பு By T. Saranya 09 Nov, 2022 | 09:49 AM (நா.தனுஜா) நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த…
-
- 10 replies
- 345 views
-
-
ரணில் எப்படி ஜனாதிபதியானார்? ராஜபக்சவின் ராஜயோகம் முடிந்ததா? ஜனவரிக்கு பிறகு நாட்டுக்கு என்ன நடக்கும்? அடுத்த ஜனாதிபதி யார் ? அலசுகிறார் மஹிந்தவின் முன்னாள் சோதிடர் ரணில் எப்படி ஜனாதிபதியானார்? ராஜபக்சவின் ராஜயோகம் முடிந்ததா? ஜனவரிக்கு பிறகு நாட்டுக்கு என்ன நடக்கும்? அடுத்த ஜனாதிபதி யார் ? சஜித்தா? அனுரவா ? நாமலா? ரணிலுக்கு மிக சக்திவாய்ந்த ஜாதகம் உள்ளதா? நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த அரச ஜோதிடர் வெளியே வந்து பலமான கணிப்புகளைச் சொல்கிறார்… ஜோதிடம் என்பது காலங்காலமாக நம் நாட்டு மக்களால் மதிக்கப்படும் ஒரு விடயம். எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்கும் முன் நமது முன்னோர்கள் ஜோதிடத்தை பார்க்க மறக்கவில்லை. இன்றும் நம் நாட்டில் உண்ம…
-
- 0 replies
- 204 views
-
-
இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லையா? கடந்த அரசாங்கத்தின் இறுதி காலத்தில் நான்தான் இந்த விடயம் தொடர்பான அமைச்சர். ஆகவே எனக்கு, இந்த காணாமல் போனோர் காரியாலயம் பற்றி நன்கு தெரியும். இங்கே இதுபற்றி எம்பி சுமந்திரன் கூறியதை நான் ஏற்கிறேன். காணாமல் போனோர் தொடர்பான அலுவலக தவிசாளருக்கு பைத்தியமோ தெரியவில்லை. இந்நாட்டில் யாரும் காணாமல் போகவில்லை என்று கூறுகிறார். அப்படி பேச வேண்டாம் என்று அவருக்கு கூறுங்கள். முதலில் அவரை அந்த தவிசாளர் பதவியில் இருந்து விலக்குங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று இவ்விடயம் தொடர்பில் வாதப்பிரதிவாதம் நடைபெற்ற போது இதுபற்றி குறுக்கிட்டு பேசிய மனோ எம்பி மேலும் கூ…
-
- 0 replies
- 202 views
-