ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
மதமாற்ற கொள்கை உடைய அரச அதிபர் வேண்டாம் – யாழில் போராட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்ல இருக்கின்றார். இந்நிலையில் யாழ். மாவட்டத்திற்கு புதிதாக அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக, மதமாற்ற கொள்கை உடையவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிவித்து, அவரை யாழ். மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் முன்றலில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சிவத் துரோகிகள் தமிழ் இனத் துரோகிகள்” உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப…
-
- 3 replies
- 676 views
-
-
வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்! நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்களாகும். இது உள்ளூர் நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாயாகும். இந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 05 இலட்சம் டொலர்கள். ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்…
-
- 0 replies
- 233 views
-
-
சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம் By VISHNU 28 DEC, 2022 | 07:06 PM யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர். குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை. இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். …
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறை – குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு! வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வருகை அட்டைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் புறப்பாடு அட்டைகள் புதிய முறையின் மூலம் சரிபார்க்கப்படும். எனவே, இரண்டு விமானப் பயணிகளும் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் அட்டைகளை ஒன்லைனில் நிரப்ப முடியும். திணைக்களம் பயணிகளை www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk என்ற திணைக்கள…
-
- 0 replies
- 532 views
-
-
ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி நின்று ஆட எவரையும் அனுமதியேன் – அமைச்சர் டக்ளஸ் சூளுரை என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாநகரசபையின் பாதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை எனவும் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஹையா ஹையா என ஆடவும் விட முடியாது என்றார். நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாவீரர் தினம் மற்றும் திலீ…
-
- 6 replies
- 784 views
- 1 follower
-
-
இலங்கையில் 50 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை : 40 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் ! By VISHNU 29 DEC, 2022 | 05:17 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் சுமார் 50 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்துவதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
மாலைதீவு ஜனாதிபதி இலங்கையில் By RAJEEBAN 29 DEC, 2022 | 05:35 PM மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமட் சொலி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். மாலைதீவு பொருளாதாரம் வெற்றிகரமாக கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்த மறுதினம் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த வருடம் மாலைதீவின் பொருளாதார வளர்ச்சி 12.3 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இது 7.6 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/144477
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை – விக்னேஸ்வரன் பதிலடி! தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது. இந்த வகையில், அண்மையில் தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் பின்னர், மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது. முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தகுந்த …
-
- 17 replies
- 686 views
-
-
மட்டக்களப்பில் 2 வயதும் 8 மாதமுமான பெண் குழந்தைக்கு ஆபாசப்படங்களைக் காட்டி துஷ்பிரயோக முயற்சி: உறவினரான இளைஞர் கைது! By T. SARANYA 29 DEC, 2022 | 05:00 PM மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தங்கை முறை உறவுக்கார குழந்தைக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று புதன்கிழமை (டிச 28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார். குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாத பெண் குழந்தையை தனது மடியில் வ…
-
- 0 replies
- 632 views
- 1 follower
-
-
எமக்கானவற்றை நாமே உற்பத்தி செய்வோம் - வவுனியாவில் ஓர் விவசாயப் புரட்சி By VISHNU 29 DEC, 2022 | 08:09 PM இன்று நம் நாடு பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் கிராமபுறங்களில் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வை இழந்துவருகின்றனர். மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கு அரசாலும் அரசசார்பற்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும் பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை உரியவாறு மக்களை சென்றடைவதில்லை என்பதுடன் அத் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இருப்பினும் ஒரு சில நிறுவனங்களின் செயற்பாடு இன்றளவும் மக்கள் மத்தியில் வெற்றிக…
-
- 0 replies
- 576 views
- 1 follower
-
-
பணவீக்கம், பொருளாதார ஸ்திரமின்மையால் இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன - கேப்ரியல் கிரா By DIGITAL DESK 2 29 DEC, 2022 | 05:31 PM “சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau தெர…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
ரொய்ட்டரின் இந்த வருடத்திற்கான சிறந்த ஆர்ப்பாட்ட படங்களில் மூன்று அரகலய படங்கள் By RAJEEBAN 29 DEC, 2022 | 04:24 PM ரொய்ட்டர் செய்திச்சேவையின் இந்த வருடத்திற்கான புகைப்படங்களில் கொழும்பில் அரகலய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட மூன்று படங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மே 19 ஜூலை 9 மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட மூன்று படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது. 2022 உலகின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 48 புகைப்படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது. …
-
- 1 reply
- 653 views
- 1 follower
-
-
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்! கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழும் நிலையில் அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடு…
-
- 5 replies
- 878 views
- 1 follower
-
-
அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று! 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதித்துவம் கோரி சுமார் 112 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக அல்லாத, பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயர் பெற்ற, சிறந்த மற்றும் நேர்மையான …
-
- 1 reply
- 200 views
-
-
தேர்தலுக்கு பணம் கொடுத்தால் மீண்டு வந்த பொருளாதாரம் மீண்டும் மண்கௌவும் – நிதி அமைச்சு அரச ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கக்கூடியதாக இருப்பதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுபேறுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தலுக்கு பணம் ஒதுக்க முடியாது, பணம் ஒதுக்க வேண்டுமானால் கடந்த…
-
- 0 replies
- 180 views
-
-
அம்பாந்தொட்ட, மத்தளவில் உள்ள மகிந்த இராஜபக்ஸ விமான நிலையத்துக்கு, வாரம் இரு முறை, ரஸ்யாவில் இருந்து நேரடி பட்டய பயணிகள் விமான சேவையை (charted flights) ரஸ்ய அரச விமான சேவையான ரெட் விங்க்ஸ் நடத்த தீர்மானித்துள்ளது. 28/12/2022 முதல் இச்சேவை ஆரம்பமாகிறது. ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் மூன்றாவது நேரடி விமான சேவை இதுவாகும். https://www.newswire.lk/2022/12/26/russias-red-wings-to-commence-charter-flights-to-mattala-airport/
-
- 25 replies
- 1.3k views
-
-
அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி 75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். அன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ர…
-
- 9 replies
- 532 views
-
-
75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப…
-
- 14 replies
- 1.3k views
-
-
மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல் 28 DEC, 2022 | 06:58 PM ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டி – இன்னும் தீர்மானம் இல்லை என்கின்றார் சம்பந்தன் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவது பற்றி பங்காளி கட்சிகள் தங்களின் கருத்துகளைக் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்…
-
- 10 replies
- 888 views
-
-
யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு- 09 பேர் உயிரிழப்பு! மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக …
-
- 1 reply
- 267 views
-
-
சிறிய குற்றங்களுக்கு சிறை தண்டனைக்குப் பதிலாக வீட்டுக் காவல் திட்டம்! சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள் சிறையில் பல்வேறு நபர்களுடன் பழகுவதுடன் கடுமையான குற்றவாளிகளாக சமூகமயமாகி விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தொடர்புடைய சட்டங்களைக் கொண்டு வந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அத்தகைய சந்தேக நபர்களை, மூன்று அல்லது நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்க நீதிபதிகளுக்…
-
- 0 replies
- 296 views
-
-
இனப்பிரச்சனைக்கான விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்-சுரேந்திரன் குருசுவாமி இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய அரசியல் சூழ்நிலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன?…
-
- 0 replies
- 192 views
-
-
பனை அபிவிருத்தி சபையில் மோசடி : இரு சிரேஷ்ட அதிகாரிகள் பணி நீக்கம் அரச சொத்துக்கள் மற்றும் பணத்தை துஷ்பிரயோகம் செய்த பனை அபிவிருத்தி சபையின் பிரதி பொது முகாமையாளர் உட்பட இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பனங்கட்டி தயாரிக்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் 2கோடி ரூபாயிற்கு மேல் மோசடி செய்த கணக்காய்வாளர் மற்றும் உற்பத்தி முகாமையாளர் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் பனை அபிவிருத்திச் சபையில் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இரு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தும் சம்பளம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மூடி மறைத்த கணக்காய்வாளர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்ப…
-
- 0 replies
- 230 views
-
-
வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்க மாட்டாது - ஹரீஸ் எம்.பி By T. SARANYA 28 DEC, 2022 | 10:20 AM முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அமைந்துள்ளது. 13ஐ முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று பேசும் விடயம், கிழக்கையும் வடக்கையும் இணைக்க வேண்டும் என்ற விடயம் பேசுபொருளாக மாறியிருக்கும் தருவாயில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகள், சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தமாக முஸ்லிம் தலைமைகள் உரத்துப்பேச தயங்குவதேன் என்ற கேள்வி பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்…
-
- 2 replies
- 760 views
- 1 follower
-