ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
யாழ்.தேவி தடம்புரண்டது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக வடக்கு பாதையில் இன்று மாலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த தடம் புரள்வு காரணமாக அதிகளவான உறங்கலிருக்கை பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/219918
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
இளவாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது! By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 02:06 PM யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸாரினால் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டனர். அதன் போது அப்பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவரை சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். அதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞனை சோதனையிட்ட போதும் அ…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
மேலும் 4 அமைச்சுக்களை பொறுப்பேற்க ஜனாதிபதி தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன ஜனாதிபதியின் பொறுப்பில் வைக்கப்பட உள்ளன. இந்த 04 அமைச்சுகளுக்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்…
-
- 3 replies
- 284 views
-
-
மாவீரர் துயிலுமில்லங்களில் அத்துமீறிய அரசியல் கட்சி - ஏற்பாட்டுக்குழுவினர் கண்டனம் By VISHNU 07 NOV, 2022 | 02:05 PM யுத்த காலத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்மாதம் 25-27வரை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் திட்டமிட்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி அரசியலை வலிந்து துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை மேற்கொள்வதாக ஆலங்குள துயிலும் இல்லத்துக்கான மாவீரர் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பராசா குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து செயற்பாட்டை மாவீரர்களின் பெற்றோர்களும், முன்னாள் போராளிகளும், விரும்பவில்ல…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
காங்கேசன்துறை - கொழும்பு ரயிலில் மதுபோதையில் இருந்த ரயில்வே ஊழியர் கைது By NANTHINI 07 NOV, 2022 | 01:41 PM காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) இரவு பயணித்த இரவு தபால் ரயிலின் உறங்கும் பெட்டிகளுக்கு பொறுப்பாகவிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில் அநுராதபுரம் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த ரயில்வே ஊழியர் மது அருந்தியிருந்தமை தொடர்பில் ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளரினால் அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த …
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
அரசதுறை அதிகாரிகளின் இலஞ்சம், ஊழல் தொடர்பில் தெரிவிக்க தொலைபேசி எண்! 07 NOV, 2022 | 01:40 PM அரசதுறை அதிகாரிகன் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139351
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை - டக்ளஸ் By Vishnu 06 Nov, 2022 | 01:02 PM பலாலியில் விமானத்தை இறக்க இந்தியா விரும்பவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டு , மூன்று வருடங்கள் கடந்தும் அது இயங்கு நிலையில் இல்லாதமை குறித்து கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையம் இயங்குவதற்கு தயாரான நிலையிலையே உள்…
-
- 8 replies
- 608 views
-
-
வடமாகாணக் கல்வித்துறை மோசடிகள் தொடர்பில் ஜோசப் ஸ்ராலின் எச்சரிக்கை! By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 09:54 AM வடமாகாணத்தின் நான்கு பெரிய பாடசாலைகள் உட்பட 11 பாடசாலைகள் சம்பந்தமாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்திருந்தோம். எனினும், இதுசம்பந்தமாக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். நேற்று (06) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலும், வடமாகாணத்திலும் கல்வி சம்பந்தமாக இடம்பெறும் பல்வேறு ஊழல் மோசடிகள் சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முற…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிகின்றது. – கப்ரால் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்க்கொள்வார்கள் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். அவர்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தி…
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கையில் மீண்டும் பிரதமராக முயற்சிக்கும் மஹிந்த ராஜபக்ஷ - சாத்தியமா? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. பல அரசியல்வாதிகள் வீடுகள் தீக்கிரையாயின. முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் மர்மமாக நீடித்தது. அதன் பிறகு நீடித்த போராட்டத்தில் ஒரு கட்டத…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல- சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தற்போது சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர் என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும் குடிவரவுத் திணைக்களத்தில் இரட்டைக் குடியுரிமைக்காக ஜனாதிபதியும் கையொப்பமிடுவதால், அரச தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி அலுவலகமும் தேவையான ஆவணங்களைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரட்டைக்…
-
- 0 replies
- 158 views
-
-
உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை – அனுர அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்திருந்தாலும், உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மேலும் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார ந…
-
- 0 replies
- 411 views
-
-
ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கிம்புலஎல குணாவின் சகா கைது By NANTHINI 06 NOV, 2022 | 04:43 PM ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளரும், அவருடன் தொடர்புடைய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. வத்தளை, ஹுணுப்பிட்டிய வெவெல்துவ வீதி பகுதியில் மேற்கொண்ட இந்த கைது நடவடிக்கையின்போது சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், முதலாவது சந்தேக நபர், இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலஅல குணாவின் நெருங்கிய சகா என…
-
- 1 reply
- 208 views
- 1 follower
-
-
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கிடையில் குரங்கம்மை நோய் அதிகமாக பரவும் அபாயம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கிடையில் குரங்கம்மை நோய் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதன் ஊடாக குரங்கம்மை பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களில் 95 சதவீதமானோர்…
-
- 6 replies
- 592 views
-
-
பொலிஸாரிடம் சிக்கினர் சுள்ளான் திருட்டுக் கும்பல் தலைவர் உள்ளிட்ட 6 பேர் By DIGITAL DESK 2 06 NOV, 2022 | 02:22 PM மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் பல வீடுகளை உடைத்து நீண்ட கலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த சுள்ளான் தீருட்டுக்கும்பல் தலைவர் உட்பட 6 பேரை இன்று ஞாயிறுறுக்கிழமை (நவ, 06) கைது செய்ததுடன் திருடப்பட்ட ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2, தங்க ஆபரணங்கள் என்பற்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ள சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவந்த கல்குடா பொலி…
-
- 1 reply
- 240 views
- 1 follower
-
-
‘பால்’ மாற்றிய தாய் கைது ‘பால்’ மாற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அந்தத் தாய், பதவியவைச் சேர்ந்த 32 வயதானவர் ஆவார். கைது செய்யப்பட்ட தாயும், கலன் பிந்துனுவைச் சேர்ந்த 42 வயதான தாயும் ஒரேநாளில் சிசுக்களைப் பிரசவித்துள்ளனர். பிரசவத்துக்குப் பின்னர் இரண்டு சிசுகளும் சூடான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனக்குப் ப…
-
- 5 replies
- 726 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி பலரும் வாதிடுவதைப் போன்று சிம்பாப்வேயைப் போல இருக்காது. ஆனால் நிலைமை பலமுறை திவாலாகிவிட்டதாக அறிவித்த ஆர்ஜென்டினாவைப் போல் இருக்கும் என்று சிங்கள கல்வியியலாளரான கலாநிதி ரொஹான் பெத்தியகொட தெரிவித்துள்ளார். ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 48வது பட்டமளிப்பு நிகழ்வின்போது அவர் இதனை குறிப்பிட்டார். 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜென்டினா உலகின் 15வது பணக்கார நாடாக இருந்தது. . பணக்கார நாடுகள் சராசரியாக, ஆர்ஜென்டினியர்கள் இத்தாலியர்கள், பிரான்ஸ் மற்றும் ஐரிஷ் மக்களை விட பணக்காரர்களாக இருந்தனர். இன்று அது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியல் சித்தாந்தத்தில் பொது அறிவு இல்லாமையே என்று ரொஹான் பெத்தியகொ…
-
- 0 replies
- 270 views
-
-
அன்டோனியோ குட்டரெஸை சந்தித்த ஜனாதிபதி எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார். இதன் போது 1978 இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று (06) காலை எகிப்து பயணமானார். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர…
-
- 0 replies
- 260 views
-
-
சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் இதோ! By NANTHINI 06 NOV, 2022 | 01:20 PM லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4,360 ரூபா ஆகும். 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 1,750 ரூபா ஆகும். 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 815 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. …
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
பொலிஸார் உடல் ரீதியில் இடையூறு: ஹிருணிகா உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு By DIGITAL DESK 5 05 NOV, 2022 | 06:18 PM (எம்.எப்.எம்.பஸீர்) ஆர்ப்பாட்டத்தின் இடையே பொலிஸார் தமக்கு தேவையற்ற விதத்தில் உடல் ரீதியிலான இடையூறுகளை விளைவித்ததாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமசந்ர உள்ளிட்ட 3 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அவர்கள் இவ்வாறு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி மருதானை எல்பிஸ்டன் திரையரங்கு அருகே இருந்து அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட…
-
- 4 replies
- 654 views
- 1 follower
-
-
யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு November 5, 2022 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரே இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். மாணவர்களின் உரிமைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் வரைமுறையுடன் செயற்பட்ட தன் மீது பழிவாங்கப் போவதாக துணைவேந்தர் பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மா…
-
- 1 reply
- 242 views
-
-
15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1309081
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி மக்களவையில் விவாதிப்பதற்கு பிரித்தானியப் பாராளுமன்ற பின்வரிசை அலுவல்கள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்ற பின்வரிசை அலுவல்கள் தொடர்பான குழுவானது தமது விருப்பத்தின் அடிப்படையில் விவாதத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பை பாராளுமன்ற பின்வர…
-
- 0 replies
- 215 views
-
-
சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் By DIGITAL DESK 5 05 NOV, 2022 | 10:26 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சீனாவின் - ஷங்காய் நகரில் வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமான ஐந்தாவது சீன சர்வதேச ஏற்றுமதி - இறக்குமதி கண்காட்சியின் தொடக்க விழாவில் மெய்ந்நிகர் தொழிநுட்பத்தின் மூலம் காணொளியூடாக உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை குறித்த தீர்மானம் – ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு வருகைத்தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிடட அரசாங்கத்தின் உயர் மட்டத்துடன் ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர். முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையினை தற்கா…
-
- 3 replies
- 376 views
- 1 follower
-