Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி கலன்கள் - காஞ்சன By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 09:20 PM (இராஜதுரை ஹஷான்) இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அனைத்து மத தலங்களுக்கும் மூன்று மாத காலத்திற்குள் 05 கிலோவாட் சூரிய சக்தி கலன்கள் இலவசமாக வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (டிச. 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்கட்டண அதிகரிப்பால் பௌத்த விகாரைகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள…

  2. பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜனாதிபதியின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே. எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் ராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்த…

  3. தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுபடுவதிலும் வெடித்தது பூகம்பம் – இறுதி முடிவில் குழப்பம்! தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்று அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூம் செயலி ஊடாக நேற்று மாலை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இதன் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75 ஆம் ஆண்டு விழா சர்ச்சை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவில் இ…

    • 9 replies
    • 905 views
  4. 26/12/2022 வரைக்கும் இந்த ஆண்டில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 701, 331 ஆகும். இதில், ரஸ்யர் 15,681, இந்தியர் 13,892, ஐக்கிய இராச்சியத்தினர் 6000, அவுஸ்ரேலியர் 5000, ஜேர்மனி, அமெரிக்காவில் வில் இருந்து தலா 3000 பேரும் அடங்குவர். போன வருடம் வெறும் 194, 495 பயணிகள் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.newswire.lk/wp-content/uploads/2022/12/Tourist-arrivals-as-at-26-12-22.pdf https://www.newswire.lk/2022/12/27/tourist-numbers-increasing-which-countries-visiting-sl/

  5. போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது - லிட்ரோ நிறுவனம் By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 08:33 PM (எம்.வை.எம்.சியாம்) எதிர்வரும் நாட்களில் நுகர்வுக்கு தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது.கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக எரிவாயுக்கு அதிகளவிலான கேள்வி நிலவுகிறது. நாட்டிற்கு மாதா…

  6. ஒரு மின் அலகிற்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க உத்தேசம் By VISHNU 27 DEC, 2022 | 09:18 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 60 முதல் 65 சதவீதம் வரை திருத்தம் செய்யவும், ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை மின்சார சபையின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அ…

  7. அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 09:21 PM (எம்.மனோசித்ரா) வட்ஸ்அப் செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளது. அத்தோடு, வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீசா சேவைகளை வழங்குவதாகக் குறிப்பிட்டு ஒரு …

  8. 2023 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறைகள் இதோ ! By DIGITAL DESK 5 27 DEC, 2022 | 03:29 PM 2023 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுமுறைகள் தொடர்பான விபரங்கள், https://www.virakesari.lk/article/144250

  9. யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் ,யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை இடமாற்றம் குறித்து பிரதேச செயலர்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக யாழ். மாவட்ட செயலர்…

  10. சாரதிகள் செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமை! வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகளை வழங்குதல் மற்றும் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளா…

    • 3 replies
    • 787 views
  11. வவுனியாவில் ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக வீடுகள் கையளிப்பு! வவுனியா ஈச்சங்குளத்தில் ஐக்கிய இராட்சிய ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக அமைக்கப்பட்ட 4 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) “சற்குரு சரவண பாவா மனசாந்தி குடியிருப்பு” எனும் பெயரில் அமைக்கப்பட்ட வீடுகள் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த வீடுகள் விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் சற்குரு சரவண பாபா குரு, பாராளுமன்ற உறுப்பினர் மு. இராதாகிருஷ்ணன் வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன், ஜனாதிபதியின் இணைப்பாளர் இளங்கோவன், லைக்கா குழுவின் பணிப்பாளர் க. ப…

  12. பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்! கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமாக 898 பேர் 2019ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், 2018ஆம் ஆண்டு 678 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டில் 249 வெளிநாட்டவர்களும், 2021ஆம் ஆண்டில் 130 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்க…

  13. யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழப்பு, மகள் வைத்தியசாலையில் அனுமதி By DIGITAL DESK 2 27 DEC, 2022 | 10:54 AM நத்தார் வழிபாட்டுக்காக தேவாலயத்திற்கு சென்று திரும்பியவேளை, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் உயிரிழந்துள்ள நிலையில், மகள் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த சோதிலிங்கம் நாகேஸ்வரி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (டிச. 25) நத்தார் வழிபாட்டிற்காக இருபாலை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று, மகளுடன் மோட்டார் சைக்கிள் பின் இருக…

  14. உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களை தொடங்கியது தேர்தல்கள் ஆணைக்குழு ! உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான தளவாட தேவைகளை வகுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தலுகான தேவைகளை மதிப்பிடுவதற்காக வாகனங்கள் மற்றும் பொது ஊழியர்களைக் கணக்கிடுவதற்காக மாவட்ட வாரியாக உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெ…

  15. கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர் - உதய கம்மன்பில By VISHNU 26 DEC, 2022 | 05:18 PM (இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்பதனால் கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்து. கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்…

  16. இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.. இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் …

    • 8 replies
    • 599 views
  17. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது - சோபித தேரர் By DIGITAL DESK 2 26 DEC, 2022 | 05:16 PM (எம்.மனோசித்ரா) அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களிடமிருந்து இதுவரையில் 39 பில்லியன் ரூபா மின் கட்டணம் அறவிடப்படாமலுள்ளது. அந்த கட்டணத்தை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டார். மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதற்கெதிராக சட்ட ரீதியாக குரல் கொடுப்பதற்கு மக்கள் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகளுக்க…

  18. யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்! யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும். இதனையடுத்து மீண்டும் எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும். இதற்கமைய, சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதேவேளை 2019 ஒக்டோபர் மாதம் பலாலி விமான நிலையம் நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1315030

  19. 190நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்! உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப் பட்டுள்ளதோடு முதல் இடத்தை மியன்மார் பெற்றுள்ளதுடன், அந்தநாட்டில் நடப்பாண்டில் மாத்திரம் 32 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும், ஈரான்3ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை இந்த பட்டியலில் 4ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தவருடத்தில் இதுவரை 25 அரச விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப…

  20. சுனாமியில் இறந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை By VISHNU 25 DEC, 2022 | 06:22 PM (எம்.வை.எம்.சியாம்) சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் 26 ஆம் திகதி காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை 'தேசிய பாதுகாப்பு தினம்' நாளை (26) கொண்டாடப்படவிருக்கிறது. காலி பறலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் ஏனைய அரசியல் பிர…

  21. தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு ! இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தீர்வு விடயத்தில் பெரும்பான்மையின கட்சிகள் எதிர்ப்பினை வெளியிடவில்லை என கூறினார். ஐ.நா. உட்பட உலக நாடுகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எவ்வாறாயினும் தமிழர்களுக்கான தீர்வு குறித்த விடயத்தில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதால் நியமன தீர்வு கிடைக்கலாம் என்றும் குறிப்பி…

  22. யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப் பேரலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைசுடரேற்றப்ட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1317364

  23. அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர் – கொழும்பு பேராயர் நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர் என குற்றம் சாட்டிய அவர், இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோய் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற ஆராதனைல் உரையாற்றும் போதே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்ற…

  24. தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று சந்திப்பு ! தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று சனிக்கிழமை இரவு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெற்றால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடியாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் அரசாங்கம் தேர்தலை பிற்போடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் …

  25. கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் (21-12-2022) இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. பளை முள்ளியடிபகுதியில் ஏ - …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.