ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
சீன வேவுக்கப்பல்களின் இலங்கை விஜயம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இந்தியா உள்நாட்டு விவகாரங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மூலோபாய உட்கட்டமைப்பு திட்டங்களிற்கு இலங்கை முன்னுரிமை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடல்சார் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் சீனா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இலங்கை எதிர்க்கவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவின் ஏஐஐஎம்எஸ் சேர்வர்கள் மீதான சமீபத்தைய தாக்குதலிற்கு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு யுவான் வாங் 5ம் பின்னர் நவம்பர் ஆறாம் திகதி யுவான் வாங் விஜயம் மேற்கொண்டமையும் காரணமாகயிருக்கலாம் …
-
- 1 reply
- 620 views
-
-
கனடாவிற்கு செல்ல முற்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் நல்லடக்கம் கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர். இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் க…
-
- 1 reply
- 569 views
- 1 follower
-
-
சந்தியா எக்னெலிகொட 2022 ஆம் ஆண்டுக்கான பிபிசி 100 பெண்கள் தொடரில் டிசம்பர் 6 ஆம் திகதி இலங்கையிலிருந்து செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்க இன்று ஊடகங்களுக்கு உரையாற்றினார். கறுத்த உடையும், வழித்த தலையுமாக ஊடகவியலாளர் முன் தோன்றினார் அவர். 12 வருடகால துன்பங்கள் மற்றும் வேதனைகளுக்குப் பின்னரும் தனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சக்கள் தனது சாபத்தில் இருந்து விடுபட மாட்டார்கள் என காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். “எனது அன்புக் கணவர் மறைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த ஜனவரி 25, 2022 அன்று, அவரை காணாமல் ஆக்கிய ராஜபக்சேக்களுக்கு ‘சுவாமிபக்தி ஆதுர மஹா சபயா’ என்ற சக்தி வாய்ந்த சாபத்தை உண்டாக்குவதற்க…
-
- 2 replies
- 410 views
-
-
ஊழல் ஒழிப்பு புதிய சட்டமூலம் தொடர்பில் அரச சார்ப்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் By DIGITAL DESK 2 19 DEC, 2022 | 05:16 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஊழல் ஒழிப்பு புதிய சட்டமூலம் தொடர்பில் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக பெரு முயற்சியுடன் செயற்படும் அரச சார்ப்பற்ற நிறுவன பிரதிநிதிகளை அறிவுறுத்தும் நடவடிக்கை நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் திங்கட்கிழமை (டிச.19) நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலம் தொடர்பாக நீதி அமைச்சரினால் அந்த நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன் ஊழல் மோசடி இடம்பெறுவதை தடுப்பதற்காக அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளினால் ஆலோசனை மற்றும…
-
- 1 reply
- 412 views
- 1 follower
-
-
காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி மாதம் ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதோடு இரண்டு நிறுவனங்கள் இதனை ஆரம்பிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறிய கப்பல்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் அதேவேளை அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை எனவும் குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 327 views
- 1 follower
-
-
அரசியல் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 2022 இல் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை அதிகரித்து வரும் உணவு நெருக்கடியை துரிதமாக எதிர்கொள்கின்றது நாளில் ஒருவர் உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என ஐநா அமைப்பு தெரிவி;த்துள்ளது. ஜூன் 2022 முதல் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தனது மனிதாபிமான நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குடும்பங்களை சேர்ந்த 244 330 பேருக்கு உதவி வழங்கியுள்ளது. இலங்கை முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது அரசியல் சமூக குழப்பநிலை காரணமாக இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 40 வீதமானவர்கள் …
-
- 0 replies
- 428 views
-
-
தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள் கனகராசா சரவணன் “வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பிப் சென்று தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனரா?” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தால் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்ததாவது, “அண்மையில் சர்வகட்…
-
- 0 replies
- 461 views
-
-
தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் – மாவை தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் கிடைத்த போதும் ஆட்சி அதிகார விடயத்தில் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில்பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை சாதகமாக கையாள வேண்டு…
-
- 0 replies
- 196 views
-
-
அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் வெளிநாட்டு சேவை ! இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உயர் பதவியில் உள்ள வீட்டு பராமரிப்பு உதவியாளர்களை பணிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இலங்கைப் பெண்களுக்கு வெளிநாட்டில் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றுவதற்கு உயர்தரப் பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்…
-
- 0 replies
- 649 views
-
-
சரியான பாதையை அமைக்காமல் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது அரசாங்கம் – ஹர்ஷ குற்றச்சாட்டு எந்த திசையில் செல்லப்போகின்றோம் என்ற அறியாமையுடன் இலங்கை அரசாங்கம் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டிற்கான வரைபடத்தை வகுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி டிசம்பரில் வரும், ஜனவரியில் வரும் அல்லது மே, ஜூன் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் சரியான கணிப்பை வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் 3 பில்லியன் டொலர் உதவியை நாடு தவறிவிட்டால், எப்படி உயிர்வாழ்வது மற்றும் மக…
-
- 0 replies
- 571 views
-
-
பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் : மஹிந்த அமரவீர ! December 17, 2022 இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும் என்றார். அடுத்த அறுவடைக் காலத்தில், …
-
- 12 replies
- 911 views
-
-
16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார். 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு…
-
- 7 replies
- 825 views
-
-
தமிழினம் அழிவிலிருந்து தப்ப வேண்டுமெனில் தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் - பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் By VISHNU 18 DEC, 2022 | 04:40 PM தமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இன்று (18-12-2022) கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலம் காலமாக தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் ஆக்கிரமிப்புக…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு எவரையும் அனுப்பமாட்டோம் - மனுஷ நாணயக்கார By DIGITAL DESK 2 18 DEC, 2022 | 04:53 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அடுத்த வருடம் மார்ச் மாத்தத்துக்கு பின்னர் வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு இலங்கையில் இருந்து யாரையும் அனுப்பவித்தில்லை. சிறந்த பயிற்சி பெற்றவர்களையே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பி…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
தான் கடத்தப்பட்டுள்ளதாக கூறி தனது கணவன், பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெற முயன்ற பெண் கைது By DIGITAL DESK 5 18 DEC, 2022 | 06:00 PM தான் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி தனது கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாவை பெறுவதற்காக வேறொரு வீட்டில் பதுங்கியிருந்த பெண் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனமடுவ நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி எனவும் அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து தற்போது ஒப்பந்தங்களில் நஷ்டமடைந்து வீட்டில் தங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெ…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
காற்றழுத்தத்தால் கன மழையோடு காற்றும் வீசலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் By NANTHINI 18 DEC, 2022 | 07:32 PM தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தால் அப்பகுதியில் தொடர்ந்தும் பலத்த காற்று காணப்படுகின்றது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலை அடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அத்தோடு நாட்டை சூழவுள்ள பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்ப்பகுதி காரணமாக கிழக்கு…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
சர்வகட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம் சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் நாட்டில் பெரு…
-
- 4 replies
- 644 views
-
-
By VISHNU வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் மகனைத்தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறி…
-
- 12 replies
- 760 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழா By Vishnu 18 Dec, 2022 | 11:34 AM இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (18-12-2022) பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பாகி நடைபெற்றன. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான …
-
- 0 replies
- 323 views
-
-
இராணுவத்தாலும் தனி நபராலும் அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம் ; காணியை விடுவிக்க தனிநபர் இணக்கம் By Vishnu 18 Dec, 2022 | 12:04 PM தமிழ் மக்களால் வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம் ( டடிமுகாம்), அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் இறுதி யுத…
-
- 0 replies
- 214 views
-
-
இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் - விக்டர் ஐவன் By Nanthini 18 Dec, 2022 | 11:45 AM இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது என்று அரசியல் ஆய்வாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'இலங்கையின் மறுசீரமைப்புக்கான அம்ச கோரிக்கைகள்' அடங்கிய ஆவணத்தை அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு கையளித்து விளக்கமளிக்கும் செயற்பாடுகள் கடந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,…
-
- 0 replies
- 196 views
-
-
சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணை போக வேண்டாம் - உறவினர்களிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரிக்கை By Vishnu 18 Dec, 2022 | 12:21 PM அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலைவாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குள் எமது உறவுகள் அகப்பட வேண்டாம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ…
-
- 0 replies
- 157 views
-
-
ஜனாதிபதியினுடனான பேச்சுவார்த்தைக்கு நிச்சயமாக செல்வோம்; சுமந்திரன் வி.ரி. சகாதேவராஜா ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். காரைதீவில் நேற்று (17) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே இதை தெரிவித்தார் . தொடர்ந்து பேசுகையில், இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது. அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. அங்கு நமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு…
-
- 0 replies
- 249 views
-
-
அரிசி இறக்குமதிக்கு தடை : நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் விவசாயிகள் ஆகும் கைதிகள் ! புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை முன்னெடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை …
-
- 0 replies
- 148 views
-
-
IMF உடன்படிக்கைக்கு முன்னதாக 16,000 இராணுவ வீரர்களை குறைக்கும் அரசாங்கம் ! சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்திருந்தார். அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட…
-
- 0 replies
- 192 views
-