Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது நாட்டின் கலாசாரத்திற்கு எதிரானது! கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்துள்ளார். கஞ்சா ஆயுர்வேத சட்டத்தின் கீழ் வருவதால், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நிதி நலன்களின் அடிப்படையில் மாத்திரம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநா…

  2. 18 பில்லியன் டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட் வணிக பூங்கா தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவித்துள்ளார். இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. மேலும் நவம்பர் மாத இறுதியில் ஆய்வுகளை நடத்துவதற்கு டிஸ்னி நிறுவன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் உள்ள பா…

  3. இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் பதவி விலக வேண்டும் ! -தேர்தல்கள் ஆணைக்குழு.- நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர வேறு ஒரு பொறிமுறையின் மூலம் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள் ஆகியுள்ளார். எவ்வாறாயினும், இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தலின் போது வேட்புமனுக்களை ஏற்கும் போது இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்து…

  4. பொதுஜன பெரமுனவுடனான உறவுகள் தொடர்ந்து நீடிக்கும்-சீன தூதரகம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதை தொடர்ந்தே சீன தூதரகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1306657

  5. நாட்டில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுள்ள அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்த ஜனாதிபதி அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேபோல நம் தாய்…

  6. பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும் : மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை முடிக்க சந்தர்ப்பம் - ஜனாதிபதி ரணில் By VISHNU 23 OCT, 2022 | 08:07 PM கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் சனிக்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில், றோயல் கல்லூரியின் சிரேஷ்ட மாணவத் தலைவ…

  7. கோட்டாவே தற்போதும் ஜனாதிபதி என சிலர் கருதுகின்றனர் - ஆளுங்கட்சியினருக்கு செக் வைத்த ரணில் By NANTHINI 22 OCT, 2022 | 01:03 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அதிகாரங்கள் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறான எந்தவொரு அதிகாரங்களும் எனக்கு இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஜனாதிபதி பதவியில் இருக்கின்றதாக கருதியே சில ஆணைக்குழுக்கள் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெற்றிலையை கொடுத்து கும்பிட்டுக் கேட்டாலும், தற்போதைக்கு தேர்தல் ஒன்றுக்கு செல்ல மாட்டேன் என ஆளுங்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். உத்தேச தேர்தல்கள் மற்றும் 22ஆவது திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயும்…

  8. கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை By NANTHINI 23 OCT, 2022 | 01:56 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 200 லீற்றர் கோடா, 60 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் …

  9. கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி, மற்றொருவர் காயம் By VISHNU 23 OCT, 2022 | 06:01 PM ( எம்.எப்.எம்.பஸீர்) கட்டுநாயக்க - ராஜுல வீதியில் தங்கச் சங்கிலி கொள்ளையர்கள் என கூறப்படும் இருவர் மீது பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் நீர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர் கொழும்பிலிருந்து குறித்த கொள்ளையர்களை, நீர் கொழும்பு வலய போக்குவரத்து பிரிவின் இரு கான்ஸ்டபிள்கள் துரத்தி வந்த நிலையில், கொள்ளையர்கள் முன்னெடுத்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பொலிஸாரும் பதில் தாக்குதல் நடாத்தியதாகவும் அதன் போதே ஒருவர் இந்த சம்…

  10. ட்ரோன் கமரா மூலம் விக்டோரியா அணையை படம்பிடித்த 7 பேர் கைது By NANTHINI 23 OCT, 2022 | 04:53 PM (எம்.வை.எம். சியாம்) தெல்தெனிய விக்டோரியா அணையின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கெமரா மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தெனிய பகுதியில் விக்டோரியா அணையின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமரா மூலம் வீடியோ மற்றும் ப…

  11. 21 இலட்சம் ரூபா கொள்ளை ; இருவர் கைது - மொரட்டுவ பகுதியில் சம்பவம் By VISHNU 23 OCT, 2022 | 03:54 PM (எம்.வை.எம்.சியாம்) மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரியும் ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடமிருந்து 21 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த 4 ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரட்டுவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஊழியர் ஒருவர் வர்த்தக நிலையத்திற்கு சொந்தமான சுமார் 21 இலட்சம் ரூபாய் பணத்தினை வங்கியில் வை…

  12. சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை : முகாம்களில் வசிக்கும் மக்களின் கோரிக்கை By Vishnu 23 Oct, 2022 | 01:57 PM மன்னார் நிருபர் யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் 22 ஆம் திகதி சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் இன்னல்களை கேட்டறிந்தனர். இதன் போது அங்கு வசிக்கும் குடும்பத்தினர் கருத்துத் தெரிவிக்கும் போது, …

  13. “நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” – யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் “நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ் .தேசிய மக்கள் சக்தி முன்னெத்திருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் இளங்குமரன், நல்லூர் தொகுதி அமைப்பாளர் கே.சரவணன் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.co…

  14. 100,000 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களைப் பராமரிக்க முடியாமல் சேமிப்பகம் ! உணவுத் திணைக்களத்தின் சேமிப்பக வளாகத்தை நவீனப்படுத்துவதற்கு 29 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் 100,000 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களைப் பராமரிக்க முடியாமல் போனது குறித்து கோபா குழு கவனம் செலுத்தியது. 1,00,000 மெட்ரிக் டன் அரிசி இருப்பு வைத்து பராமரிக்க ஆண்டுக்கு 2200 கோடி ரூபாய் தேவைப்படுவது தெரியவந்தது. உணவுத் துறையின் வேயங்கோட்டை சேமிப்பகத்தின் எண் 1, 7, 8, 9, 10, 13 ஆகிய ஆறு கிடங்குகள் 29 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கபீர் ஹாசிம் தலைமையில் கடந்த 20ஆம் திகதி (20) …

  15. ஐ.நாவின் ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையில் முன்னேற்றம் - தமிழர் உரிமைக்குழு வரவேற்பு By Nanthini 23 Oct, 2022 | 12:32 PM (ஆர்.ராம்) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் விரிவான அறிக்கை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் (OHCHR), இலங்கைக்கான பொறுப்புக்கூறல் திட்டக்குழு, இலங்கையில் நடந்த சர்வதேச குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் அடைந்துவரும் முன்னேற்றத்தையும் தமிழர் உரிமைக்குழு வரவேற்பதாக அறிவித்துள்ளது. குறித்த குழுவின் தலைவர், நவரத்தினம் சிறீ நாராயணதாஸினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா. மனித உ…

  16. 22 ஆவது திருத்தமும் – புதிய மாற்றங்களும் – வாக்களிக்காதோரும்! October 23, 2022 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று முன்தினம் (21.10.22) நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தற்போது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகக் கருதப்படுகிறது. அதனால் 22 ஆம் திருத்தமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் 21 ஆம் அரசியலமைப்பு திருத்தமாகவே அரசியலமைப்பில் உள்வாங்கப்படுகிறது. இந்த திருத்தத்திற்கு, இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், மூன்றாவது வாசிப்பின் பின்னரான வாக்கெடுப்பின் போது 17…

  17. பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய சர்வதேசப் பொறிமுறை அவசியம் என சிவில் சமூகம் வலியுறுத்து பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் தண்டனைகளில் இருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக் கொண்டுவரவும் சர்வதேசப் பொறிமுறை அவசியம் என சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூவிடம் அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கலை முடிவிற்குக் கொண்டுவர அமெரிக்க அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் வலி…

  18. 22 ஆவது திருத்தம் கள்ளக் கூட்டத்தின் நாடகம் என்கின்றார் கஜேந்திரகுமார் புலம்பெயர் தமிழர்களை பாதிக்கும் 22 வது திருத்தச் சட்டம் என்பது ஆட்சியில் உள்ளவர்கள் தம்மை ஜனநாயகவாதிகள் எனக் காட்ட எடுத்த ஒரு நாடகம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கின்ற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழர்களும் அதன் ஒரு அங்கம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் நாட்டில் முக்கியமான பதவிகளுக்கு வருதை தடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திருத்தத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார். வவுன…

  19. ஈஸ்டர் தாக்குதல் : ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை. அதற்கு பதிலாக பொலிஸ் அதிகாரிகளுக்கு சுதந்திரம் வழங்குங்கள் – ரஞ்சித் ஆண்டகை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பொலிஸாருக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கந்தவல தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளின் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்…

    • 4 replies
    • 244 views
  20. இலங்கை அகதிகளை மூன்றாவது நாட்டிற்கு நாடு கடத்த பிரித்தானியா தீர்மானம் ! சாகோஸ் தீவுகளில் இருந்து புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகள், அவர்கள் தானாக முன்வந்து இலங்கைக்குத் திரும்பாவிட்டால், அவர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்ப பிரித்தானியா தீர்மானித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாத பட்சத்தில், வேறு ஒரு அறியப்படாத நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. மொரிஷியஸ் மற்றும் பிரித்தானியாவில் உரிமை கோரப்படும் சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் குறைந்தது 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்ப…

  21. அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் மூலம் சிறைக்கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றது – அம்பிகா சற்குணநாதன் சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் உருவாக்கியுள்ள புதிய விதிமுறைகள் தொடர்பில் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தெரிவிக்கையில் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்ப்பதற்கான அனுமதியை வாரத்தில் ஆறுநாட்கள் என்பதிலிருந்து ஒரு நாளிற்கு குறைப்பது என்ற விதிமுறை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை சிறைக்கூண்டிற்குள் இருக்கவேண்டிய நேரத்தை நாளொன்றி…

  22. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் நாளை மூடப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிடீமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏனைய மதுபானசாலைகளும் நாளை மூடப்படும். அந்தந்த பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார். https://athavannews.com/2022/1306602

  23. ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு : ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார் என்கிறார் வீரசிங்க வீரசுமன By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:28 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தி, ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்க வீரசுமன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாற…

  24. மக்கள் நீதிமன்றம் செல்லலாம் - பைசர் முஸ்தபா By DIGITAL DESK 5 22 OCT, 2022 | 01:29 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) மாகாண சபைத் தேர்தல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குறித்த காலத்திற்குள் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்கழு நடத்தாது போனால் நீதிமன்றத்தை நாடும் உரிமை பொது மக்களுக்கு உண்டு என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக நான் இருந்த காலத்தில் என்னால் தான் மாகாண சபை தேர்தல்கள் நடத்த முடியாது போனதாக என் மீது குற்றம் சுமத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட…

  25. சிறுமியின் சங்கிலியை அபகரித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு - யாழில் சம்பவம் By VISHNU 22 OCT, 2022 | 07:30 PM (எம்.நியூட்டன்) பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (22) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. 15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.