ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்! வரவு செலவுத் திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர், நாளை (சனிக்கிழமை) இலங்கையை வந்தடைவார் என்றும் பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கத் தொடங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான இறுதி வாக்களிப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன…
-
- 0 replies
- 131 views
-
-
ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை By PONMALAR 17 NOV, 2022 | 06:43 PM (பொன்மலர் சுமன்) முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அன…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:39 PM அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து சுமார் …
-
- 9 replies
- 403 views
- 1 follower
-
-
300 கோடி ரூபா நிதிமோசடி தொடர்பில் இருவர் சி.ஐ.டி.யினரால் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 08:55 PM நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர்களாக தம்மை இனங்காட்டிக் கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சுமார் 300 கோடி ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/140395
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் சில முக்கிய நபர்களை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு By VISHNU 17 NOV, 2022 | 09:04 PM மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் முல்லைத்தீவு பொலிசாரால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி உள்ளிட்ட பலர் காரணம் தெரிவிக்காது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு வெள்ளை தாளில் எந்த பொலிஸ் அடையாளப்படுத்தலும் இல்லாதவகையில் அழைத்துள்ளனர். பொலிஸ் கட்டளையோ அல்லது பதவி முத்திரையோ இன்றி சிறிய வெள்ளை தாளில் அழைப்பு கட்டளையை …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் இரத்து செய்யப்பட வேண்டும் - சரத் வீரசேகர By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 04:05 PM (இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்) பிரபாகரனினால் 30 வருடகால போர் ஊடாக அடைய முடியாத இலக்கை ஒரு வாக்கியத்தின் ஊடாக வழங்குவது முழு நாட்டையும் காட்டிக் கொடுப்பதாக கருதப்படும். மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை தனியார் தரப்பினருக்கு விவசாய நடவடிக்கைக்கு வழங்கும் தீர்மானம் இரத்து செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார. பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்…
-
- 1 reply
- 177 views
-
-
கீதா எம்பியை சபாநாயகர் பேய் என அழைத்தாரா? கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் அபேவர்தன தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தரப்பு நிராகரித்துள்ளது . ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குமாரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க, முன் அறிவித்தல் இன்றி, சமுர்த்தி மானியம் தொடர்பில் சில கேள்விகளை தன்னிடம் கேட்டதாகவும் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தான் தயாராக இல்லை என்று கூறிய போது சபாநாயகர் தம்மிடம…
-
- 0 replies
- 186 views
-
-
மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனந்தெரியாதோரால் மீண்டும் அகற்றல் By VISHNU 17 NOV, 2022 | 04:01 PM மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் இரு மருங்கிலும் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத நபர்களினால் இன்று காலை (17) அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் அவை கட்டிய கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை கடந்த 15.11.2022 ஆம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தி…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
‘நான் சாயம் பூசவில்லை.. வயதை மறைக்கவில்லை – கிரியெல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தை கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். இன்று நாட்டில் நிலவும் எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த உரையின் போது, ஆளும் கட்சி உறுப்பினர் ஜெகத் குமார, கிரியெல்லவை தலை நரைத்தவர் என்று குறிப்பிட்டார்., இதற்கு கிரியெல்ல இவ்வாறு பதில் வழங்கினார். ‘நான் சாயம் பூசவில்லை.. வயதை மறைக்கவில்லை.. மஹிந்த என்னை விட மூத்தவர்… சாயம்…
-
- 0 replies
- 512 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் அரசாங்கத்தில் : தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்கின்றார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உள்ள இந்த அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் அவநம்பிக்கையை துறந்து ஒருசில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதேவேளை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தி…
-
- 4 replies
- 282 views
-
-
மட்டக்களப்பில் சுகாதார திணைக்களத்தில் கடமையற்றிவரும் போதை வியாபாரி கைது! மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் போதை பொருள் வியாபரி ஒருவரின் வீட்டை இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிட்ட பொலிசார் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள காரியாலயம் ஒன்றில் கடமையாற்றிவரும் 28 வயதுடையவரை 2050 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் பலனாய்வு பிரிவினர் குறித்த நபரை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனர். இந்த நிலையில் போதை பொருள் வியாபாரியின் வீட்டை மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சுற்றுச் சூழ…
-
- 0 replies
- 143 views
-
-
தமிழர் தொடர்பான ரணிலின் நடவடிக்கையில் மறைந்திருக்கும் இரகசியத் திட்டம்! பகிரங்கப்படுத்தப்பட்ட விடயம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், அரசியல் தீர்வினைப் பெற்று தருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென கூறியிருப்பது சர்வதேசத்தின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இரகசிய நோக்கமாக கூட இருக்கலாம் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரமேஷ் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் வெளியிட்ட கருத்தின் உண்மைத் தன்மை என்ன? 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன் வடக்கின் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், எவரும் எமது நாட்டின…
-
- 2 replies
- 433 views
-
-
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் திடீர் மரணம் By T. SARANYA 17 NOV, 2022 | 09:47 AM வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு (16) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இறந்துள்ளார். தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் படுத்திருந்துள்ளார். உணவு வாங்கிக் கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரண…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி மன்னாரில் காணப்படும் காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார். மேலும் மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்தும் இந்தபோது விசேடமாக கலந்துர…
-
- 0 replies
- 134 views
-
-
துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – கஜேந்திரன் எம்.பி. வலியுறுத்து துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார். யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வவுனியா மற்றும் மட்டக்களப்பில் உள்ள பல துயிலும் இல்லங்களை இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துயிலும் இல்லங்களி…
-
- 0 replies
- 111 views
-
-
கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் – நீதி அமைச்சர் கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தம்மோடு இணைந்து பணியாற்ற சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைப்பும் விடுத்துள்ளார். குறித்த 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று கனேடியத் தமிழர் பேரவையினால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்…
-
- 0 replies
- 133 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை திசைத்திருப்ப நீதியமைச்சர் சபையில் தெரிவித்த விடயம் பொய்யானது - செல்வராஜா கஜேந்திரன் By VISHNU 16 NOV, 2022 | 10:36 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து நாங்கள் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் பொய்யானது. இவரது கருத்தை முற்றாக கண்டித்து, நிராகரிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தோல்வியடைந்த ஒற்றையாட்சி மு…
-
- 0 replies
- 140 views
-
-
அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் 16 NOV, 2022 | 10:37 PM கடவுச் சீட்டு கட்டணங்கள் நாளை வியாழக்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடவுச் சீட்டுக்கான சாதாரண சேவைக் கட்டணம் 5,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை கடவுச் சீட்டுக்கான கட்டணம் 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் | Virakesari.lk
-
- 0 replies
- 157 views
-
-
பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு காணிகளை சுவீகரிக்க முயற்சி Posted on November 16, 2022 by தென்னவள் 7 0 தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுனர் அலுவலகம் முன் நேற்று இடம்பெற்ற முற்றுகைப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களினுடைய விருப்பங்களை மீறி தமிழ் மக்களினுடைய காணிகளை சுவீ…
-
- 0 replies
- 123 views
-
-
யாழில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அடகு வைக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு! By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 04:52 PM யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சுன்னாகம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எனினும் இன்று வரை நான்குக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் நான்கு நாட்களுக்கென வாடகைக்கு எடுத்துச் செல…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
அரச நிறுவனங்களில் அச்சிடும் செலவைக் குறைக்க விசேட திட்டம் By T. SARANYA 16 NOV, 2022 | 10:51 AM அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை (லீவு) விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உள்நாட்டு அமைச்சில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆரம்ப செயற்றிட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கு இது தொடர்பான முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் …
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு! By VISHNU 16 NOV, 2022 | 12:40 PM முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோத்தபாய கடற்படை கப்பல்' கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று (16) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த …
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
வசந்த முதலிகே விடுதலை - பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் - சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டுகோள் By RAJEEBAN 16 NOV, 2022 | 12:33 PM பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் வசந்த முதலிகே கல்வேல ஸ்ரீதம்ம தேரர் விடுதலை ஆகிய விடயங்களில் இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இது தொடர்பான கடிதங்களை தூதரகங்களிடம் கையளித்துள்ளனர். அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறைகளை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என தூதரகங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். …
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
பல்லைக்கழக மாணவர்கள் எப்போதும் நிபந்தனையின்றி மக்களுக்காகப் பாடுபடும் ஒரு குழுவினர் - பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் By T. SARANYA 16 NOV, 2022 | 11:59 AM (வத்துகாமம் நிருபர்) பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதும் நிபந்தனையின்றி மக்களுக்காகப் பாடுபடும் ஒரு குழுவினராகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அனுராதா வித்தாகே தெரிவித்தார். பேராதனைப் பல்கலைக்கழக வளவில் நேற்று (15) இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்க அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்ய வேண…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
இனப்படுகொலை இடம்பெறவில்லை - சரணடைந்தவர்கள் காணாமல்போகவில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் By RAJEEBAN 26 OCT, 2022 | 05:56 PM முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த இராணுவத்தினர் 60,000 பொதுமக்களை மீட்டனர் என குறிப்பிட்டுள்ளார். 2009 இல் இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படுவதை இலங்கையின் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த மறுத்துள்ளார். ரொய்ட்டருக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப…
-
- 7 replies
- 507 views
- 1 follower
-