Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் - கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் By RAJEEBAN 13 SEP, 2022 | 03:30 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்க…

  2. இலங்கைக்கு... பலமான, ஆதரவை வழங்குவோம் – ஐ. நா. வில்... சீனா. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கும் என ஐ.நா.விற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என கூறியுள்ளார். https://athavannews.com/2022/1298841

  3. யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது By VISHNU 13 SEP, 2022 | 03:21 PM யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதைப்பொருள் வியாபாரியான 24 வயது இளைஞனை நேற்று திங்கட்கிழமை (12) இரவு 10 மணியவில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் ரி. மேனன் தலையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். …

  4. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்ய தீர்மானம் By T. SARANYA 13 SEP, 2022 | 04:59 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச துறைகளில் அநாவசிய நியமனங்களை வழங்காமலிருப்பதற்கும், பணியாளர் வெற்றிடம் காணப்படும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் ஊழியர் சமநிலைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் இவ்வாரம் அமைச்சரவையில் பிர…

  5. 46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் அறிவிப்பு ! By Shayithan.S September 13, 2022 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும். அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்…

  6. அத்தியாவசிய மருந்து பொருட்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத…

  7. கடனை மறுசீரமைக்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பம் இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசக நிறுவனமான லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உடன்பாட்டை எட்டுவதே அதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தேவையான நிதி நிவாரணங்களை பெறுவதற்கு இந்த நாட்டில் கடன் மறுசீரமைப்பு அவசியம் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=165593

  8. ' ஸ்போர்ட்ஸ் சைன் ' மென்பொருள் மூலம் 800 கோடி ரூபா பண மோசடி : ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை By VISHNU 13 SEP, 2022 | 01:07 PM (எம்.எப்.எம்.பஸீர்) 'ஸ்போர்ட்ஸ் சைன்' எனும் மென் பொருளை உருவாக்கி, அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் சுமார் 800 கோடி ரூபா வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஐவரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மென் பொருளுடன் தொடர்புடைய நிறுவனத்தின் பிரதானிகள் ஐவரின் வெளிநாட்டு பயணங்களையே இவ்வாறு தடை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திளகரத்ன உத்தரவிட்டார். மஹரகமவை சேர்ந்த அமித் விக்ரமசிங்க, குருணாகல் பகுதியைச் சேர்ந…

  9. மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு By VISHNU 13 SEP, 2022 | 12:43 PM மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின்போது, 13 அரசியல் கைதிகள் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது இதுவரையில் எவ்விதமான வழக்குகளும் தொடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நி…

  10. நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு By T. SARANYA 13 SEP, 2022 | 01:17 PM (எம்.வை.எம்.சியாம்) நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை உட்பட பல்…

  11. ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு By Rajeeban 13 Sep, 2022 | 10:31 AM சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார். இன்று தொடங்…

  12. இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை By T. SARANYA 13 SEP, 2022 | 08:51 AM இன்று (13) செவ்வாய்க்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. http://fe.virakesari.lk/article/135529 நேற்று 12/09/22 இல் இருந்து 1 மணி நேர மின்வெட்டு ஆரம்பம். வழமைக்கு திரும்பியது மின்தடை!

  13. மஹிந்த ராஜபக்ச தலைமையில்... புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார். தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக …

  14. சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : வைத்தியரை தேடி சிறப்பு விசாரணைகள் By T YUWARAJ 11 SEP, 2022 | 07:57 PM (எம்.எப்.எம்.பஸீர்) காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ் நிலையம் ஊடாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகிக்கப்படும் வைத்தியர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடி விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. …

  15. இரசாயன பசளையை தடை செய்து சேதனப் பசளையை மட்டும் பயன்படுத்த எடுத்த தீர்மானம் : விவசாயிகளுக்கு நட்டஈடு பெற்றுத்தரக் கோரும் மனு அடுத்த வருடம் பரிசீலனைக்கு By T. SARANYA 13 SEP, 2022 | 09:38 AM (எம்.எப்.எம்.பஸீர்) இரசாயன பசளையை பூரணமாக தடை செய்து, சேதனப் பசளையை பயன்படுத்த தன்னிச்சையாக தீர்மானம் எடுத்து, விவசாயிகள் மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கையை ஸ்தம்பிதமடையச் செய்தமை ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ளது. ஜனாதிபதியின் இந் நடவடிக்கையால் விவசாயிகளுக…

  16. தேசிய கைதிகள் தினத்தை... முன்னிட்டு, 417 கைதிகள் விடுதலை ! தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு மொத்தம் 417 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று திங்கட்கிழமை 413 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் கழித்த காலத்தின் அடிப்படையில் 165 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது அபராதம் செலுத்த தவறியமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 252 கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1298836

  17. மேலும்... பல அமைச்சரவை, அமைச்சர்கள்... நியமிக்கப் படுவார்கள் – பிரசன்ன. மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரிடம், மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதன் உண்மை தன்மை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர், “மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். அப்போது 30ஆக அதிகரிக்கப்படும். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இதை விட கூடு…

  18. வீட்டுக்கே நேரடியாக சென்று கோத்தபய ராஜபக்சேவை அதிபர் ரணில் சந்தித்ததால் சர்ச்சை இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். மேலும் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர். இலங்கை நெருக்கடியை தீர்க்க புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார். அவர் தற்போது கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளார். பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பங்களாவை சுற்றி பாதுகாப்புக்கா…

    • 5 replies
    • 649 views
  19. திருக்கோணேஸ்வர ஆக்கிரமிப்பை... தடுத்து நிறுத்துவது தொடர்பாக, யாழில் விசேட சந்திப்பு! வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். – நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலககத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர். இச்சந்திப்பில் திருக்கோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபையின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தா…

  20. 13வது திருத்தச் சட்டத்தை... முழுமையாக, அமுல் படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி, பொருளாதார மீட்சிக்கு இந்த அதிகாரப் பகிர்வும் இலங்கை இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என வலியுறுத்தினார். இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது. https://…

    • 13 replies
    • 890 views
  21. மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதன்படி, பதவியேற்றுள்ள மொத்த இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆகும். http://tamil.adaderana.lk/news.php?nid=165552

    • 5 replies
    • 727 views
  22. இதுவரை... 500 இலங்கை வைத்தியர்கள், வெளிநாடு சென்றுள்ளனர் – சுகாதாரத் துறையில் கடுமையான பாதிப்பு. கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க இவ்வாறு தெரிவித்தார். இந்நிலைமை பாரதூரமான விடயம் எனவும் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதன் காரணமாக இராஜினாமா அறிவித்தல் விடுத்துள்ள வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக உள்ளதாக வைத்தியர் சமில் விஜேச…

  23. வடமாகாண கல்வியமைச்சின் செயற்பாடுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 12 SEP, 2022 | 12:24 PM வடமாகாணத்தில் போதிய ஆசிரிய ஆளணியிருந்தும், வடமாகாண கல்வித் திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கோ, நிதிப்பிரமாண நடவடிக்கைகளுக்கோ உட்படுத்த முடியாத, எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்த முடியாத, தனியார் நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் வினாத்தாள்களை தவணைப் பொதுப் பரீட்சைகளாக நடத்துவதற்கு, வடமாகாண கல்வித் திணைக்களம் அனுசரணை வழங்குவது சட்டவிரோதமான செயற்பாடாகும். குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை முறையற்ற விதத்தில் ஊக்குவித்து, ஆசிரியர்களையும், பாடசாலைகளையும் தவறான விதத்தில் …

  24. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்.. 51ஆவது அமர்வு, இன்று ஆரம்பம் – இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணித்தல், அறிக்க…

  25. இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama) தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama) உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தபோதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு துறைகள் குறித்து இதன்போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.