Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எனக்கு முன்னர் உரையாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். கனடாவில் வீதி ஒன்றினை மறித்து தமிழ் திருவிழா செய்வதற்கு நாம் வளர்ந்துள்ளோம் என்று. உண்மையிலேயே நான் உங்களை வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். நாடு இல்லாத தமிழ் இனம் இந்த உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று ச…

    • 7 replies
    • 768 views
  2. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை By VISHNU 28 AUG, 2022 | 04:06 PM K.B.சதீஸ் யுத்தத்திற்குப் பின்னர் சமூகத்தில் பெண் தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்களை மக்கள் திட்டம் ஒன்றியத்தின் பிரநிதிகளால் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மக்கள் திட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வடக்கில் மக்கள் திட்ட ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் வே…

  3. 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின By T YUWARAJ 28 AUG, 2022 | 04:59 PM 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134565

  4. யாழில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது By T YUWARAJ 28 AUG, 2022 | 06:46 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 80 கிராம் ஹெரோயின், திருடப்பட்ட 7 துவிச்சக்கர வண்டிகள், 4 மின் மோட்டார்கள் , 02 எரிவாயு சிலிண்டர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளான குப்பிளான் , புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் அண்மைய நாட்களில் மின்…

  5. யாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு ! By DIGITAL DESK 5 28 AUG, 2022 | 04:45 PM யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் , முன்னதாக பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்த மேலதிக சிகிச்சைக்காக கடந்த 25 ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் 26ஆம் திகதி சிகிச்சை ப…

  6. கலப்பு பொறிமுறை -இராணுவ அரசியல் தலைமைக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது - மனித உரிi பேரவை பிரநிதிகளிடம் இலங்கை தெரிவிப்பு By RAJEEBAN 28 AUG, 2022 | 01:30 PM - செப்டம்பர் பத்தாம் திகதிக்கு ஓரிரு நாட்களிற்கு முன்னர் மனித உரிமை ஆணையாளரின் நகல் அறிக்கையை ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு முங்கொவன் இணங்கியுள்ளார். - ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51வது அமர்விற்கு முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரொரி முங்கொவன…

  7. எங்கே செல்வார் ரணில்? By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:36 PM ஹரிகரன் “சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அரசாங்க இறுதிச் சடங்கு, வரும் செப் டெம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கத் திட்டமிட்டிருக்கிறார்” “பொருளாதார நெருக்கடிகளை அடுத்து இலங்கையில் 12திட்டங்களை ஜப்பான் இடைநிறுத்தி வைத்திருக்கிற நிலையில் அதனிடம், 3.5பில்லியன் டொலர் கள் உதவிக் கோரிக்கையை இலங்கை விடுத்திருந்த போதும், அது இறுதி செய்யப்படவில்லை” இலங்கையில் அரச தலைவர்களாகப் பதவியேற்றுக் கொள்பவர்கள் முதலில் இந்தியாவுக்கும், அடுத்து சீனாவுக்கும் அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்வது …

  8. இலங்கையில் சீனத் தூதர் கட்டுரைக்கு கடுமையாக பதிலடி தந்த இந்தியா - என்ன நடந்தது? 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,YUVAN WANG 5 இலங்கைக்கான சீனத் தூதர் இலங்கை பத்திரிகை ஒன்றில் அமெரிக்காவையும், பெயர் குறிப்பிடாமல் இந்தியாவையும் விமர்சித்து எழுதிய கட்டுரை ஒன்றுக்கு இந்தியத் தூதரகம் கடும் பதிலடி தந்து ட்வீட் செய்துள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி தைவான் வருகை புரிந்ததையும், சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வுக் கப்பலை இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதித்த செயலையும் ஒப்பிட்டு இலங்கைக்கான சீனத் தூதர் சே ஜெ…

  9. ”ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக ரஞ்சன் நியமிக்கப்படுவார்” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரஜாவுரிமையோ, அரசியல் செய்யும் உரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஓரளவு விடுதலையே வழங்கப்பட்டுள்ளதாகவும் அது அரசியலமைப்பின் 34 வது உறுப்புரையின் 1ஈ பிரகாரம் வழங்கப்பட்டுள்ள விடுதலை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன்பிரகாரம் அவர் சிறையில் கழிக்க வேண்டிய எஞ்சிய காலம் மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 34 வது உறுப்புரையின் இரண்டாவது பிரிவின் கீழ் அவருக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்றாலும் அது ந…

  10. யாழ். மாநகர சபைக்கு... வழங்கிய நிதியை, மீள கோரும் ஜப்பான். தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம், ஜப்பானிய உள்ளூராட்சி மன்றங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக, யாழ் மாநகர சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது. அதன்படி, நான்கு வாகனங்களை கொள்வனவு செய்தல், இறக்குதல், சுங்க அனுமதி மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து தொடர்பான…

  11. அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை... மீறியுள்ளார், சீனத் தூதுவர் : இந்திய உயர் ஸ்தானிகராலயம் குற்றச்சாட்டு. அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் கூறியிருந்தார். தாய்வான் நீரிணையின் இராணுவ மயமாக்கல் மற்றும் சீனாவின் யுவான் வங் 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை ஆகியவற்றை தொடர்புபடுத்தி அவர் இந்த கருத்தை வெளியிட்டமைக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வடக…

  12. தேசிய பாதுகாப்புச் சட்டம்... இன்னும், ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றது !! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்னும் ஆரம்ப கட்ட பணிகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான சட்டங்களை எவ்வாறு புதுப்பித்தல் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப எப்படி சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டம் அதிகாரிகளினால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து சர்வதேச நாடுகள் உட்பட பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு அமைச்சர் பந்துல குணவர்தனவின் அண்மை…

  13. கோட்டாபய ராஜபக்ஷ போன்று... செயற்படுமாறு, ஜனாதிபதியிடம்... முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் கோரிக்கை. இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்த விடயங்களை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமக்கான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம் அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் பெருமளவில் குறைக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள…

  14. எதிர்வரும் 30ஆம் திகதி... கொழும்பில், மீண்டும் போராட்டம்? எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தை நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார். இந்தநிலையிலேயே அன்றைய தினம் கொழும்பிற்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவு, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. https://athavannews.com/2022/1296322

  15. க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்றே இல்லாத‌ நிலையில் அத‌ன் பெய‌ர் உள்நாட்டு அலுவ‌ல்க‌ள் அமைச்சின் இணைய‌த்த‌ள‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌ட்ட‌மை நியாய‌மான‌தே என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார். அண்மையில் இது ப‌ற்றி க‌ல்முனை தமிழ் ம‌க்க‌ள் த‌ர‌ப்பிலிருந்து எழுப்ப‌ப்ப‌ட்டுள்ள‌ பிர‌சுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தின் கீழ் இய‌ங்க‌க்கூடிய‌ வ‌கையில் உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் 1989ம் ஆண்டு உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இது ஒரு த‌னியான‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் அல்ல‌, மாறாக‌ உப‌ செய‌ல‌க‌மாகும். ஆனால் யுத்த‌ கால‌த்தில் இத‌ற்கான‌ பெய‌ர் க‌ல்முனை த‌மிழ் செய‌ல‌க‌ம் என்றும்…

  16. இலங்கையில்... சராசரி குடும்பத்திற்கு, மாதம் 110,000 ரூபாய் தேவை – ஆய்வு. பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ஆக அதிகரித்துள்ளததாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு 63,000 ஆக இருந்த நிலையில் அது இன்று 47,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது என பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார். 2019 இல் 14,500 ஆக இருந்த வறுமையில் வாடும் குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு, பணவீக்கம் காரணமாக 11,000 ஆயிரத்தால் அதிகரித்து தற்போது 25,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என பேராசிரியர் அத்துகோரள தெரிவித்தார். பண…

  17. 150 பில்லியன் ரூபாவினை, செலுத்த... அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு. அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய இந்த தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிதி செலுத்தமையினால் 4 ஆயிரம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பாரிய நிறுவனங்கள் என்பன பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியு…

  18. உலகிற்கு முன்னெச்சரிக்கையாகும் இலங்கை சிறுவர்களின் நிலை By PRIYATHARSHAN 27 AUG, 2022 | 09:39 PM இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் சிக்கலுக்குள்ளாகும் நிலையில், வறிய மற்றும் மிகவும் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள் அதன் தாக்கத்தை எதிர்நோக்குகின்றனர். இலங்கை துரித பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் சுற்றுலாத்துறைக்காக பெயர் போன நாடாக விளங்கி வந்தபோதிலும், இலங்கையானது 1948 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் தற்போது மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாடு, பெருந்தோட்டப் பகுதி, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பின்தங்கிய பல பகுதிகளில் வசிக்க…

  19. ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடும், ஊடக சுதந்திரத்தை முடக்கும் அரசிற்கு எவ்வாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும் ? - சஜித் By T. SARANYA 27 AUG, 2022 | 03:41 PM (எம்.மனோசித்ரா) நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஒரு புறம் ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடிக் கொண்டு, மறுபுறம் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறுவது சந்தேகத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவல…

  20. பந்து இலங்கையின் கரங்களில் - சீன தூதரக பேச்சாளர் By RAJEEBAN 27 AUG, 2022 | 11:34 AM கடன்நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றவேண்டும் என இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு பந்து இலங்கையின் கரங்களிலேயே உள்ளது என சீனா பதிலளித்துள்ளது. சீனா தூதரக பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார் சீனா வங்கிகளுடன் கடன் விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு உதவுவதற்கு தயார் என மூன்று மாதங்களிற்கு முன்னரே சீனா இலங்கையின் நிதியமைச்சின் அதிகாரிகளிற்கு தெரிவித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா தனது வங்கிகளை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஊக்குவித்தது,சீன பிரதமருக்கும் இலங்கையின் முன்னாள் பிரதமருக்கும்…

  21. சஜித்தின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாஸ குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறினார் ! By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 01:56 PM எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியான துலாஞ்சலி பிரேமதாஸ தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை எரித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவத்தின்போது அவர் அங்கு இருந்தார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையிலேயே சஜித் பிரே…

  22. மஹிந்தவுக்கு வந்த முக்கிய கடிதம் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்னேவினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, மின் மற்றும் குடிநீர்க் கட்டணங்களைச் செலுத்தத் தவறியுள்ள எம்.பிக்களிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் ஊடாக கட்டணம் செலுத்த தவறிய எம்.பிக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ப…

    • 0 replies
    • 193 views
  23. 5.5 மில்லியன் பெறுமதியான தங்கங்களுடன் ஒருவர் கைது By T. SARANYA 27 AUG, 2022 | 12:22 PM (எம்.வை.எம்.சியாம்) வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் பிரான்ஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதோடு அவர் சுமார் 10 வருடங்கள் பிரான்ஸில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய ஒருவர் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுந்தே…

  24. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஒக்டோபரின் பின் கோரத் தீர்மானம் -தேர்தல்கள் ஆணையாளர் -சி.எல்.சிசில்- உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒரு வருடத்துக்கு ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் விரும்பினால் தற்போதுள்ள உள்ளூராட்சி …

    • 0 replies
    • 137 views
  25. அரிசி விலை இரு மடங்காக உயரும் -அரிசி ஆலை உரிமையாளர்கள் -சி.எல்.சிசில்- நெல் சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு கொள்வனவு செய்தால் அரிசியின் விலை இரட்டிப்பாகும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் அமைச்சரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அரிசி விலையை குறைக்காவிட்டால், அரிசி விலையை பராமரிப்பது கடினம் என்றும், சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு கொள்வனவு செய்தால், அரிசி விலை இரு மடங்காக உயரும் என்றும் பெரும்பான்மையான ஆலை உரிம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.