Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீர் வெறுப்பு நோயினால் 2 வயது குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 26 SEP, 2022 | 10:34 AM வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை நீர் வெறுப்பு நோயினால் (Rabies) உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 3 ஆம் திகதி வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குழந்தையை கடித்துள்ளது. இந்நிலையில், அந்த நாய் விசர் நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர் வாரியபொல வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். எவ்வாறாயினும், வாரியபொல வைத்தியசாலையில் விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையை நிக்…

  2. மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகள் நிர்வகிக்கப்படுகின்றமை தவறானது - முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய By VISHNU 25 SEP, 2022 | 09:49 PM (எம்.மனோசித்ரா) மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதோடு , அது பாரிய தவறுமாகும். இன்று அனைத்து மாகாணசபைகளையும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் தனித்து நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , மாகாண ஆளுனர்கள…

  3. மாகாணசபை இயங்காத சூழலில், வடக்கிலுள்ள படையினருக்கு அரசகாணிகள் தாரைவார்ப்பு! *22 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க காணியில்லை *40 ஏக்கர் பாதுகாப்புத் தரப்பிடம் கையளிப்பு வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் முடி­வ­டைந்த பின்­னர் பாது­காப் ­புத் தரப்­பி­ன­ருக்கு 40 ஏக்­கர் அரச காணி­கள் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தி னூடாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, வடக்கு மாகாண காணித் திணைக்­க­ளம் வழங் ­கிய பதிலிருந்தே இந்த விட­யங்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. வடக்கு மாகா­ணத்­தில் 22 ஆயி­ரம் குடும்­பங்­கள…

  4. ”இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக, பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாகும்” உள்நாட்டிலும் வெளியிலும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாகும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் அமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார் அமைச்சரின் முழுமையான உரை வருமாறு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உலகத் தலைவர்களை ஒன்று கூடுகின்ற ஒரு அவையான ஐக்கிய நாடுகள் சபையின் 77வது அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகின்றேன். தற்போதை…

  5. ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை, மேற் பார்வையிட... பதில் அமைச்சர்கள் நியமனம்! ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட…

  6. தேசிய பாதுகாப்பை... உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஜனாதிபதிக்கு உள்ளது-நாமல். தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது எனவேதான் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என நாடடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதேவேளை கலவரத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது எனவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1301171

  7. யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு - பொலிஸார் அதிர்ச்சி By T YUWARAJ 25 SEP, 2022 | 11:37 PM யாழ்.மாவட்டத்தில் உயிர்கொல்லியான ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் அதற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். குறிப்ப…

  8. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மனுக்கள்- ரணில் மீது.. நடவடிக்கை எடுக்காதிருக்க, உச்ச நீதிமன்றம் தீர்மானம். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1301224

  9. மஹிந்த தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் - மஹிந்தானந்த சவால் By VISHNU 25 SEP, 2022 | 10:01 PM (எம்.வை.எம்.சியாம்) பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு டிசம்பர் மாதமளவில் தீர்வுகள் வழங்க முடியும் மேலும் நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்பினர்களை தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்…

  10. சுமந்திரனால், முன்னெடுக்கப்படும் போராட்டம்... ஒரு போலிப்போராட்டம். – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள். சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு போலிப்போராட்டம் என வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்கள். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “எமது தொடர்ச்சியான போராட்டம் இன்று 2044வது நாளை எட்டியுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிங்களவர்கள் ஒருபோதும் அகற்ற மாட்டார்கள். PTA என்ற பெயரை தேசிய பாதுகாப்பு சட்டம் என்று மாற்றுவது பற்றி ஒரு பேச்சு உள்ளது. இது சர…

  11. சேலை அவசியமா? இன்று, வெளியாகின்றது... சுற்றறிக்கை. அரசாங்க ஊழியர்களுக்கு பொருத்தமான உடையில் சேவைக்கு சமூகமளிப்பதற்கு அனுமதி வழங்கும் சுற்று நிருபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. 2019 வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடையை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண் ஊழியர்கள் சேலை, ஒசாரி என அழைக்கப்படும் கண்டியன் புடவை அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்று நிருபம் வெளியான பின்னர் பரிந்துரைக்கப்படும் ஆடைகளுக்கு மேலதிகமாக தங்களுக்கு விருப்பமான பொருத்தமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்ச…

  12. மத ஸ்தலங்களில்... மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்து, கலந்துரையாடல். மத ஸ்தலங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது தொடர்பாக மின்சார சபைக்கும் புத்தசாசன அமைச்சுக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் அதிகளவிலான மின்சார கட்டணம் அதிகரிப்பதாக புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில சமய ஸ்தலங்கள் நிரம்பி வழியும் சந்தர்ப்பங்களிலும் அதிகளவான பிக்குகள் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் மின்சார பாவனை ஒப்பீட்டளவில் அதிகரிப்பது உள்…

  13. சுற்றுலா பயணிகள் வருகை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ! இலங்கை;- நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருட இறுதி வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட மாட்டாது. “சுற்றுலாவில் முக்கிய விஷயம் நாட்டில் அமைதியான சூழலை உருவாக்குவது. மீண்டும் போராட்டங்களை நடத்தி உலகுக்குக் காட்டினால் நாட்டில் அமைதி இல்லை. நாட்டில் பரபரப்பு அலை வ…

  14. வெளிநாட்டு, வேலைக்கு செல்பவர்களுக்கும்... ஓய்வூதியம். – அமைச்சர் அறிவிப்பு. வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 18 தொடக்கம் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ‘மனுசம்’ எனும் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். மனுசவி ஓய்வூதியத் திட்டத்தில் பிரவேசிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுவது கட்டாயம் என்றும் அமைச்சர் கூறினார். https://athavannews.com/2022/1301147

    • 3 replies
    • 308 views
  15. இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

  16. காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்று உயிருடன் மீட்பு By T YUWARAJ 25 SEP, 2022 | 08:54 PM பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை கட்ட சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து அம்பியுலன்ஸ் மூலம் குழந்தை நிகவெரட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.vir…

  17. இலங்கைக்கு, கடன் வழங்குவதில்... இந்தியா முதலிடம். – 4 மாதங்களில், 968மில்லியன் டொலர்கள்! 2022ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொலர்கள் கடனை இந்தியா இலங்கைக்கு வழங்கியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா உருவெடுத்துள்ளது. இலங்கைக்கு கடன்வழங்கும் செயற்பாட்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தினைப் பிடித்துள்ளது. 2017-2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், சீனா 947 மில்லியன் டொலர்கள் கடனை இலங்கைக்கு வழங்கியதால் இலங்கைக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக சீனா முதலிடத்தில் இருந்தது. சீனா வழங்கிய கடனில் 809 மில்லியன் டொலர்கள் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து சந்தைக் கடனாகப் பெற…

  18. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி பணிப்புரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு…

  19. இன்று இலங்கை வரும் ஐ.நா பிரதிநிதி! ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இன்று (25) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார். மேலும், அமெரிக்க நிதியத்தால் இயக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் தரப்பினருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=165979

  20. நிலக்கரி பிரச்சினைக்கான காரணம் யார்? அமைச்சர்களுக்கு இணக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை பயன்படுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நொரோச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். ஊவா பரணகம, பலகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிவாயு நெருக்கடியா…

  21. நாட்டின் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் -பேராசிரியர் வசந்த அத்துக்கோரள -சி.எல்.சிசில்- நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். தற்போது ஒரு குடும்பத்தின் சராசரி வரிச்சுமை 28,000 ரூபாவாக உள்ளது என தாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரி முறை மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் இன்னும் அதிக பணவீக்கம் உள்ளது. இந்தப் பணவீக்கத…

  22. சோலார் சக்தியில் இயங்கும் பயணிகள் படகுச் சேவை; பத்தரமுல்லை முதல் வெள்ளவத்தை வரை 30 நிமிட பயணம் -சி.எல்.சிசில்- பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனட்டி கும்புர ஆகிய பகுதிகளிலிருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக இந்தச் சேவை அமையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தப் படகுச் சேவை கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில், நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்…

  23. தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மட்டக்களப்பில் ஆரம்பம் -சி.எல்.சிசில்- 2022ஆம் ஆண்டுக்கான Tamil Para Sports தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கி, அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்பது இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டின் நோக்கமாகும். அதேவேளை இந்த விளையாட்டில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தேசி…

  24. யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே. நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர். ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்…

  25. விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்வனவு செய்ய... அரசு, ஐந்து சதம் கூட... வழங்கவில்லை. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக தயாரிக்க வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்திலும் இவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இரண்டு அரச வங்கிகளிலும் தேவையான நிதி வழங்கப்படாததால் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாகவும், இது விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நெல் கொள்வனவுக்காக இருநூறு கோடி ரூபாயை நெல் சந்தைப்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.