Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம் - சீன வெளியுறவு அமைச்சர் 8 ஆகஸ்ட் 2022, 03:27 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனா-இலங்கை இன்று (08.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கைக்கு ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதி அளித்ததாக இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த செயலும் மேற்கொள்ளப்படமாட்டாது. அத்துடன் நேர்மையான மற்றும் நம்ப…

  2. By T. SARANYA 08 AUG, 2022 | 10:20 AM தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும…

  3. By T YUWARAJ 08 AUG, 2022 | 08:11 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் நாளை (9) ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்டம் பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இன்று ( 😎 நிராகரித்தார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஏதேனும் வன்முறைகளில் ஈடுபட்டால், பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தே நீதிவான் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார். நாளை 9 ஆம் திகதி , அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் கட்சி, பல்வேறு அமைப்புக்கள் இணைந்து கொழும்பு - விஹார மஹா தேவ…

  4. By VISHNU 08 AUG, 2022 | 09:16 PM (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்தது. கோட்டை நீதிவான் திலின கமகே, ஜோஸப் ஸ்டாலினை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்து இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இவ்வழக்கு தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய பிணைக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன் …

  5. By VISHNU 08 AUG, 2022 | 09:44 PM ( எம்.எப்.எம்.பஸீர்) 'போராட்டம் முடியவில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.' என பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார். பிணை கையெழுத்திட்ட பின்னர் நீதிமன்றுக்கு வெளியே வந்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 'மக்கள் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் ஏனைய நெருக்கடிகளை மையபடுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இன்று போராட்டங்கலில் ஈடுபட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் நாட்டில் ஒரு கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை …

  6. ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் நானே-அமைச்சர் நிமால் சிறிபால ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தனது பெயர் விஜயதாச ராஜபக்ச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரது பெயர் முன்மொழியப்பட்டதாகவும், அதில் மிகவும் ததகுதியானவர் தான் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு நல்லாட்சியை கொண்டு வர ஜனாதிபதி வேட்பாளராக தம்மையே முதன்முதலில் அழைத்ததாகவும், கட்சியை விட்டு விலக விர…

    • 3 replies
    • 382 views
  7. படம் காட்டிய சுமந்திரன், சாணக்கியன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கப்போகின்றோம் என்று சொல்லி கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள். அதற்கு என்ன நடந்ததென தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் கேள்வியெழுப்பினார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இதனை தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்காக போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கும் போது பெருமளவான மக்கள் இளைஞர்கள் வராமல் இருப்பதற்கு காரணம் பயங்கரவாத தடை சட்டமாகும். பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாமல் போனால் எமது சிறுவர்கள் கூட களத்தில் நிற்பார்கள். நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக…

    • 3 replies
    • 602 views
  8. ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில் ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இருப்பினும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், சட்ட அமுலாக்கத்தில் …

    • 0 replies
    • 416 views
  9. கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி ! இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவு ஆகியவை இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 51 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது. இதனால் சுமார் 2000 வேலைகள் இழக்கும் அபாயத்தை இலங்கையர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கடவத்…

    • 0 replies
    • 437 views
  10. ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு! கொவிட் தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று (07) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொவிட் தொற்று நிலைமை காரணமாக, திருகோணமலை-கொழும்பு புகையிரதம் கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனவே திருகோணமலையில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பில் இருந்து வரும் இரவு நேர தபால் ரயிலுக்கு மாற்ற வேண்டியிருந்தது. பயணிகளின் கடும் கோரிக்கையை ஏற்று மீண்டும் புகையிரதத்தை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த புதிய புகையிரதம் 11 பெட்டிகளை கொண்டுள்ளது. அதில் இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகள். 2ம் வகுப்பு மற்றும் 1ம் வகுப்பு பயணிகளின் வசதிக்காக ப…

    • 0 replies
    • 385 views
  11. அரச வங்கியொன்றில் பல கோடி ரூபாய் மோசடி! அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 48 தனிநபர் கடன் ஆவணங்கள் மூலம் ஆறு கோடியே 83 இலட்சத்து 40,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் கடந்த 5ஆம் திகதி, குறித்த சந்தேக நபர் பண மோசடிக்கு உதவிய குற…

    • 0 replies
    • 206 views
  12. பல வருடங்களின் பின்னர் இலாபம் ஈட்டிய லிட்ரோ! கடந்த ஜூலை மாதம் பல வருடங்களின் பின்னர் லிட்ரோ நிறுவனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். குறித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 லட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடும் போது உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (08) பிற்பகல் குறைக்கப்படும் எனவும் லிட்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=164229

    • 0 replies
    • 189 views
  13. யுவான் வாங் 5 கப்பலின், விஜயத்தை ஒத்திவைக்குமாறு... சீனாவிடம், அரசாங்கம் கோரிக்கை ! சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடையும் என கூறப்பட்டதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை வருவதாக இந்தியா தெரிவித்தது. குறித்த கப்பலின் …

    • 3 replies
    • 329 views
  14. மாதாந்தம், ஏழு பில்லியன் டொலர்... நட்டத்தை எதிர்கொள்ளும், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்! எரிபொருளுக்கான செலவுக்கு மேலதிகமாக மாதாந்தம் ஏழு பில்லியன் டொலர் நட்டத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விமானத்திற்கான எரிபொருளை வழங்காததாலும், அந்த எரிபொருளை இந்தியாவிடமிருந்து பெற வேண்டியமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா செல்லும் விமானக் குழுவினருக்கு தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்தல், விமானம் தரையிறக்கல் மற்றும் புறப்பாட்டுக்காகவும் செலவு ஏற்படுகின்றது. ஒரு மாதத்திற்கு 25 முதல் 30 விமானங்கள் இந்தியாவிற்கு செல்வதாகவும் ஒரு நாளைக்கு ஐந்தரை லட்சம் லீட்டர் எரிபொருள் தேவை …

    • 7 replies
    • 678 views
  15. கூட்டமைப்பை... உடைக்கின்ற, முதலாவது தேங்காயை... உடைத்து இருக்கின்றார், ஜனாதிபதி ரணில் – சீ.வீ.கே.சிவஞானம். ஜனாதிபதி அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக் கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக…

    • 1 reply
    • 276 views
  16. அவசரகால சட்டத்தின்... பல சரத்துக்களில், திருத்தம் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி. ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (a) மற்றும் 365 (b) நீக்கப்பட்டு, பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனை தொடர்பான பிரிவின் கீழ் உள்ள, குற்றவியல் சட்டத்தின் 365, 365 (ஏ) மற்றும் 365 (பி) ஆகியன நீக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்த…

  17. இலங்கை தொடர்பில்... கடுமையான, புதிய தீர்மானத்தை முன்வைக்க... இணை அனுசரணை வழங்கிய நாடுகள் தீர்மானம். இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையில் இந்த குழு இலங்கை வரவுள்ளது. குறித்த விஜயத்தின் போது அவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை மனித உரிமை ஆணைக் குழுவின் 51வது அமர்வில் புதிய ஆணையாளர் அல்லது இடைக்க…

  18. போராட்டகார்களுக்கு... புதிய இடம். -ஜனாதிபதி. புறக்கோட்டை – மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1293866

  19. சர்வகட்சி அரசாங்கத்தை, அமைக்கவே... கோட்டா, பதவி விலகினார் – நாமல். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவி அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதியை இராஜினாமா செய்ய வைக்கும் ஆரம்ப இலக்கு நிறைவேறியதன் பின்னர் காலி முகத்திடலில் போராட்டக்காரர்களிடம் எவ்வித திட்டமும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் தன்னை நிரூபித்து நாட்டை வழிநடத்த புதிய ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 507 views
  20. இராணுவ அதிகாரிகளை... கைது செய்ய, நடவடிக்கை எடுக்குமாறு... மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல். குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட் வலியுறுத்தியுள்ளார். அதற்காக சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறும் 47 நாடுகளின் தலைவர்களிடம் மிச்சேல் பச்சிலெட் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 58 இராணுவத்தினரையும் கைது செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே அவர்களை கைது செய்ய சர்வதேச நீதி அமைப்பை அமல்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா …

    • 2 replies
    • 318 views
  21. இளைஞர்களுடன்... வெளிப்படைத் தன்மையுடன், பணியாற்றத் தயார் – ஜனாதிபதி. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் இளைஞர்களுடனும் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறிய ஜனாதிபதி, அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இளைஞர்களை ஈடுபடுத்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தரப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (5) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போது ஜனநாயகமற்ற அரசியலுக்கும் வன்முறைக்கும் தான் எதிரானவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போராட்டங்கள் ம…

    • 4 replies
    • 383 views
  22. இலங்கை அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக கொண்ட அட்வொகொட்டா நிறுவகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ரிவோர்ம் நவ் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அணுசக்தியை இலங்கை பயன்படுத்துவது குறித்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வது குறித்து நாங்கள் தீவிரமாக சிந்திக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதிக வலுசக்தியிருந்தால் அதிகளவு வலுசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்யலாம் அதேவேளை அதிகளவு மீள்புதுப்பிக்க தக்க சக்தியை இலங்கையி;ல் வைத்திருக்கலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அணுசக்தியை பயன்படுத்துவது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் - ரணி…

  23. அதாவுல்லா, விக்கி, பிள்ளையானுக்கு... அமைச்சு பதவி : வெளியான முக்கிய தகவல். சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிற…

  24. இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக சீன கப்பலின் இலங்கை விஜயத்தை இந்தியா வன்மையாக எதிர்த்து வருவதுடன், அதனை நிறுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்…

  25. தராதரம் பாராமல்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என பொலிஸார் எச்சரிக்கை – போராட்டக் களத்தினை விட்டு வெளியேற, சிலர் மறுப்பு! காலி முகத்திடல், அதனை அண்மித்த பிரதேசத்தில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கைகளை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது. குறித்த கால அவகாசம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போராட்டக் களத்திற்கு நேற்றைய தினம் மீண்டும் வந்த கோட்டை பொலிஸார் காலிமுகத்திடலை விட்டு வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர். நாட்டில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைவாகவும், பொதுமக்களை வன்முறை ஏற்படுத்தாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் தங்கள் அறிவ…

    • 1 reply
    • 277 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.