ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு... இன்று, ஜெனிவா பயணம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஜெனீவா செல்லவுள்ளது. இந்தக்குழுவில் அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தினத்தில், இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் உரையாற்றவுள்ளார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்க…
-
- 0 replies
- 170 views
-
-
விமல் வீரவன்ஸ தலைமையில்... புதிய கட்சி, அங்குரார்ப்பணம்! அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகள் ஒன்றிணைந்து ‘மேலவை இலங்கை கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்துள்ளன. இந்த நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தலைமையில் இந்தப் புதியக் கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. தலைவர் – விமல் வீரவன்ஸ செயலாளர் – கலாநிதி ஜி.வீரசிங்க தேசிய அமைப்பாளர் – வாசுதேவ நாண…
-
- 1 reply
- 465 views
-
-
பாண் விலை அதிகரிப்பு; அரசாங்கமொன்று அவசியமில்லை என்பதையே காட்டுகிறது - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு By DIGITAL DESK 5 04 SEP, 2022 | 02:52 PM (எம்.வை.எம்.சியாம்) பாணின் சடுதியான விலையேற்றம் பாணை மக்களினதும் அதனை மூலதாரமாக கொண்டு ஜீவனோபாயத்தை மேற்கொள்கின்ற பல தரப்பினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இருப்பினும் நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டு செல்லும் போது அதை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுமாயின் இந்த நாட்டிற்கு அரசாங்கமொன்று அவசியமில்லை என்பதே அர்த்தம் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் த…
-
- 2 replies
- 233 views
- 1 follower
-
-
வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை By T YUWARAJ 04 SEP, 2022 | 08:45 PM ( எம்.எப்.எம்.பஸீர்) கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்பில் உளவுப் பிரிவு சிறப்பு அறிக்கையொன்றினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. சுமார் 600 அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தி மேலதிக விடயங்களை அறிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன. சுங்கத் திணைக்கள…
-
- 1 reply
- 193 views
- 1 follower
-
-
புற்று நோயாளிகளுக்கு... சிகிச்சையளிக்க, மருந்து இல்லை !! மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலை…
-
- 0 replies
- 172 views
-
-
எதிர் காலத்தில்... என்ன செய்ய வேண்டும் என்பதை, முன்னாள் ஜனாதிபதி தான்..... தீர்மானிக்க வேண்டும்-நாமல். அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் “எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதி…
-
- 0 replies
- 238 views
-
-
அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல்போனமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கின்றார் By RAJEEBAN 04 SEP, 2022 | 10:13 AM ஏபி பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஏழுவாரங்கள் நாடு கடந்த நிலையில் வசித்த பின்னர் இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பாட்டாளர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதிக்கு இலங்கையின் அரசமைப்பு வழங்கியுள்ள விடுபாட்டுரிமை தற்போது அவருக்கு இல்லாததன் காரணமாக அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். த…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
மத்தியவங்கி ஆளுநருக்கு எதிரான... சதி குறித்து, கேள்வியெழுப்பினார் சஜித் ! தற்போதைய மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதி நடவடிக்கை, நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்குமாறு அவுஸ்ரேலியாவில் வசித்து வந்த கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு அழைப்பு விடுத்த இந்த அரசாங்கம், தற்போது அவரை பதவி நீக்கம் சதி செய்வதாக குற்றம் சுமத்தினார். மத்திய வங்கி ஆளுநருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே நந்தலால் வீரசிங்கவை நீக்குவதற்கான முதலாவது நடவடிக்கை மேற்…
-
- 0 replies
- 167 views
-
-
பிரசன்னவின்... அமைச்சில், ஊழல்?? விசாரணைக்கு பணிப்பு ! நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்காய்வு செய்ய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். குறித்த அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை சில வழக்குகள் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…
-
- 0 replies
- 259 views
-
-
காணாமல் போனவர்களின்... குடும்ப உறுப்பினர்களை, சந்திக்கும்... ஜனாதிபதி ஆணைக்குழு. கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பில் உள்ள காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அங்கு சுமார் 100 பேர் சாட்சியமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அண்மையில் கடற்றொழில் …
-
- 0 replies
- 185 views
-
-
பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க முடியாது - ஜனாதிபதி 03 SEP, 2022 | 09:43 PM பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (03) பிற்பகல் பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் உற…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
மின்சாரம்,பெற்றோலியம்,சுகாதாரம் - அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் 03 SEP, 2022 | 07:14 PM (இராஜதுரை ஹஷான்) மின் விநியோகம் மற்றும் அதனுடனான சகல சேவைகள்,பெற்றோலிய உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகள், சுகாதார சேவைகள் மற்றும் அதனுடான சகல சேவைகள் மற்றும் தொழில்களை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதி விசேட வர்த்மானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கமைய அதிகாரத்திற்கமைய மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள்,பெற்றோலிய …
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
நாடு திரும்பியுள்ள கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் என வேண்டுகோள்கள் - ஏஎவ்பி By RAJEEBAN 03 SEP, 2022 | 03:55 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வெளியாகியுள்ளன. நாடுகடந்த நிலையில் வாழ்ந்த பின்னர் நாடு திரும்பியுள்ள கோட்டாபய அவரை கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களை எதிர்கொண்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னர் பெருமளவு மக்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சீற்றத்துடன் நுழைந்ததை தொடர்ந்து இராணுவ பாதுகாப்புடன் நாட்டிலிருந்து கோட்டாபய இராஜபக்ச வெளியேறினார். 73வயதான கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தனத…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசு கட்சி தான் ஆம்பித்த காலம் முதல் கொள்கை மாறாது செயல்பட்டு வருகிறது - கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் By T. SARANYA 03 SEP, 2022 | 03:50 PM (எம்.நியூட்டன்) இலங்கை தமிழரசு கட்சிதான் ஆம்பித்த காலம் முதல் கொள்கை மாறாது செயல்பட்டு வருகிறது என இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் எக்ஸ் குலநாயகம் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் நினைவுதினம் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்! ‘அறகலய’ போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட சுமார் எண்பது பேர் பல்வேறு வழிகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற இவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு தரப்பினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி தூதரகங்களில் தவறான தகவல்களை சமர்ப்பித்து ச…
-
- 14 replies
- 735 views
- 1 follower
-
-
20 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம் By T. Saranya 03 Sep, 2022 | 12:30 PM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் 20 இராஜாங்க அமைச்சுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். 20 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நியமனம் நாளை அல்லது எதிர்வரும் வாரமளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சகல அரசியல் கட்சிகளை…
-
- 0 replies
- 228 views
-
-
”இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்”: சீனா! இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன சீன வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சாதகமாக உதவுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.samakal…
-
- 0 replies
- 226 views
-
-
மார்ச்சில் உள்ளூராட்சித் தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய அதன் காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட…
-
- 1 reply
- 210 views
-
-
தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு By T. SARANYA 03 SEP, 2022 | 12:34 PM அனைத்து தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டண திருத்தத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, தொலைபேசி, நிலையான இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 வீதம் அதிகரிக்கப்படும். இந்நிலையில், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணம் 25 வீதம் அதிகரிக்கப்படும். https://www.virakesari.lk/article/134964
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
நிவாரணத்தை பெற்றுக் கொள்வதில்... அரசியல் ஸ்திரமின்மை, பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை ! இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மை, சர்வதேச நாணய நிதியத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களைச் செயற்படுத்தும்போதும் பாதிப்பை ஏற்படுத்தும் என தரமதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுப்பதற்காக அரசாங்கம் சமூகத்துக்கான செலவீனங்களை அதிகரித்த போதிலும், அரசாங்கம் மீதான பொதுமக்களின் ஆதரவு பலவீனமாகவே காணப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் முக்கிய பகுதி என்றும் தரமதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் த…
-
- 0 replies
- 175 views
-
-
€ யூரோ இல்லாததால்... சாரதி அனுமதிப்பத்திரங்களில், ஏற்படவுள்ள மாற்றம். சாரதி அனுமதிப்பத்திரங்களில் உள்ள மெமரி சிப்களை நீக்கி QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதோடு அவர்களின் அடையாளம் மற்றும் ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் சாரதி அனுமதிப் பத்திர சிப்பைப் போன்ற நினைவக சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் இந்த அட்டைகள் ஒஸ்ரியாவில் இருந்து யூரோக்களில் பணம் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அதேவேளை தற்போது பொருளாதார நெருக்கடியால் திறைசேரியில் யூரோ இல்லாததால் இந்த அட்டைகள…
-
- 1 reply
- 248 views
-
-
22வது திருத்தம், எதிர்காலத்தை தீர்மானிக்கும்... ஒரு முக்கிய காரணி ! -முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய.- அரசியலமைப்பின் 22வது திருத்தம் இலங்கையின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முயற்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அதன் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்து செய்து அதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குவதே முதற் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதில் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் தீர்மானத்தின் …
-
- 0 replies
- 184 views
-
-
IMF கடன் வசதியை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும்: Fitch Ratings தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. IMF இலங்கையின் கடன் சுமையை 'தாங்க முடியாதளவு' உள்ளதென மதிப்பிட்டுள்ளது. எனவே கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு கடன் நிவாரணத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் செப்டம்பர் 1 முதல் VAT இன் நிலையான விகிதத்தை 12% இலிர…
-
- 0 replies
- 229 views
-
-
கடந்த யூலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடி பதவியையும் இழந்த கோத்தபாய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சொறீலங்காவுக்கு திரும்பி இருப்பதாக பிபிசி செய்தி பிரசுரித்துள்ளது. Gotabaya Rajapaksa: Sri Lanka's ousted former president returns Sri Lanka's former president Gotabaya Rajapaksa, who fled abroad after mass protests in July, has returned to the country. https://www.bbc.co.uk/news/world-asia-62765262
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
இடைக்கால வரவு - செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 02 SEP, 2022 | 06:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின் செலவுகளுக்காக நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (2) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. கடந்த புதன்கிழமை முதல் இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுதிட்ட உரை மீதான விவாதத்தின் இறுதிநாள் இன்று இடம்பெற்றது. காலை 9.30 மணி முதல் இடம்…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-