ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கை ஜனாதிபதியை எதிர்பார்த்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் காத்திருப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் காத்திருக்கும் ஊடகவிய லாளர்கள். https://thinakkural.lk/article/192127
-
- 9 replies
- 553 views
- 1 follower
-
-
மஹிந்த மற்றும் பசில் வழங்கியுள்ள வாக்குறுதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர் ஆர்டிகல ஆகியோர் நாளை வரை வெளிநாடு செல்லமாட்டார்கள் என அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவின் போது, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த உறுதிமொழியை வழங்கினர். http://tamil.adaderana.lk/news.php?nid=163423
-
- 2 replies
- 328 views
-
-
அரசியல் கட்சித் தலைவர்கள் எடுத்துள்ள தீர்மானம் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைத் தணிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என நேற்று (13) பாராளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நேற்று சபாநாயகர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=163416
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கை மக்களிடம் UNHRC விடுத்துள்ள கோரிக்கை வன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அனைத்து வன்முறைகளையும் கண்டிப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, அனைத்துத் தரப்பினரும் அமைதியான முறையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப…
-
- 0 replies
- 145 views
-
-
இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பொதுச் சொத்துக்கள் மற்றும் உயிர்கள் சேதங்களை தடுக்க இராணுவ வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதற்காக வன்முறையை அதிகரிக்கும் அனைவரும் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், தற்போதுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படையினரின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.ada…
-
- 3 replies
- 569 views
-
-
பாராளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற வளாகத்திலும் , சபாநாயகரின் உத்தியோகபூர் இல்ல வளாகத்திலும் வன்முறையான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்கு கட்டடங்களை கைப்பற்றுவதல்ல என்பதால் , அரசியலமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அநுருத்த பண்டார அவரது முகநூலில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் ம…
-
- 4 replies
- 539 views
- 1 follower
-
-
தாம் கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறுவதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவிப்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கடந்த 98 நாட்களாக அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டக்காரர்கள் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து தாம் உடனடியாக வெளியேறுவதாக இன்றையதினம் காலிமுகத்திடல் ஆர்…
-
- 9 replies
- 669 views
-
-
மாலைதீவில் இருந்து பறந்தார் கோட்டா ! Published by T. Saranya on 2022-07-14 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி அதிகாலை வேளையில் விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோவ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை தீவுக்கு தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ அங்கு தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று (14) காலை மாலைதீவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான எஸ்.வி.788 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சிங்கப்பூர்நோக்கி தற்போது பயணிக்கும் இலங்கை ஜனா…
-
- 2 replies
- 383 views
-
-
மீண்டும் ஊரடங்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றது. இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, வர்த்தமானி வெளியாகியுள்ளது https://www.tamilmirror.lk/செய்திகள்/மணடம-ஊரடஙக/175-300415
-
- 0 replies
- 444 views
-
-
அனைத்து தரப்பினரும்... இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து! அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் சமாதானமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டக்காரர்களின் மெய்யான கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கான மூல காரணங்களுக்கான தீர்வ…
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுவிஸ் கோரிக்கை இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் மோசமடை கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.(15) …
-
- 0 replies
- 232 views
-
-
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி மக்களுக்கு ஏற்ற முடிவினை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மைக்கு தீர்வினை பெற உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி மக்களுக்கு ஏற்ற முடிவினை எடுக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் தற்போது பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தில் சொத்துக்களை சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜனநாயக கட்டமைப்பிற்குள் இணக்கமான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு…
-
- 0 replies
- 107 views
-
-
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு சுதந்திரக் கட்சி நடவடிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது ஆதரவை வழங்கும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.இந்த பிரேரணையை சபாநாய…
-
- 0 replies
- 206 views
-
-
நாட்டில், சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு.. அமெரிக்கா வலியுறுத்து! நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அனைத்து தரப்பினரும் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக நிர்வாகம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் மூலம…
-
- 3 replies
- 298 views
- 1 follower
-
-
கோட்டாவினை... கைது செய்ய, நடவடிக்கை? .-பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை.- கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய(புதன்கிழமை) பாராளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1291109
-
- 0 replies
- 225 views
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதத்தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை ( எம்.நியூட்டன்) நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளை முன்வைபப்தற்கு அனைத்து தமிழ் பாராளுமன்றப் உறுப்பினர்களும் கட்சி தலைவர்களும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்க வாருங்கள் என மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளார்கள் நல்லை ஆதீனத்தில் இன்று 13 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர். குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் கட்சி தலைமைகளும் விரைவாக ஒன்று கூடி இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார சூழலில் எ…
-
- 4 replies
- 401 views
-
-
50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு ! கடந்த நாட்களில் அரங்கேறிய நாடகங்கள் ! (எம்.எப்.எம்.பஸீர்) மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தும் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இரகசியமாக வெளியேறினார். விமானப்படையின் அன்டனோ 32 ( ஏ.என். 32) ரக விமானத்தில் மாலைத் தீவின் தலைனகரான மாலேவுக்கு அவர் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் விங் கொமாண்டர் துஷான் விஜேசிங்க அறிக்கை ஊடாக உறுதி செய்தார். அதன்படி கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் சுமார் 50 மணி நேரம் தனது சொந்த நாட்டின் மக்கள் முன் தோன்ற முடியாது தலைமறைவாக, முப்பட…
-
- 0 replies
- 351 views
-
-
ரணில் தொலைக்காட்சி உரை: 'ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்' 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார். மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித…
-
- 2 replies
- 457 views
- 1 follower
-
-
ஜனாதிபதியின் இராஜினாமா... அமுலுக்கு வருவதற்கு முன்னர், ரணில் பதவி விலக வேண்டும் என.. ஏகமனதாக தீர்மானம்! ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1291091
-
- 0 replies
- 225 views
-
-
கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர்... வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், உயிரிழப்பு! கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1291083
-
- 1 reply
- 265 views
-
-
நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1291079
-
- 33 replies
- 1.5k views
- 2 followers
-
-
பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!
-
- 12 replies
- 557 views
-
-
ரணில், என்ற தனி மனிதரின் பதவிப் பேராசைக்காக... நாட்டையும், மக்களையும்... பலிகொடுக்க வேண்டாம் – அநுர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாடு தீர்மானமிக்க இடத்துக்கு வந்துள்ளதால் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் நாட்டில் மோசமான நிலையொன்று ஏற்ப…
-
- 0 replies
- 293 views
-
-
பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்காவிற்கு ? பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்கா சென்றதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க அல்லது மத்தள விமான நிலையத்தின் ஊடாக செல்லவில்லை என எமது விசாரணையின் போது குடிவரவு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ஏ.எஸ் கனுகல தெரிவித்தார். இதனிடையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=163389
-
- 3 replies
- 368 views
-
-
நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார். மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.
-
- 68 replies
- 4k views
- 2 followers
-