ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
நெருக்கடியில் இருந்து... கோட்டா, நாட்டை மீட்டெடுப்பார் – பிறந்தநாள் வாழ்த்தில் மஹிந்த. நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டை மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது வாழ்வின் மற்றொரு வருடத்தில் அடியெடுத்து வைக்கும்போது அனைத்திற்கும் நல்வாழ்த்துக்கள். அவரது இருப்பு எப்போதும் பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும் நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை அவர் மீட்டெடுப்பார் என்பதி…
-
- 6 replies
- 567 views
-
-
டொலருக்கு... எரிபொருள் விநியோகம் – பொதுஜன பெரமுன பரிந்துரை. வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்நடவடிக்கையானது நாட்டில் தற்போது மறைத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களை வெளிக்கொண்டு வருவதோடு அந்நிய செலாவணி நெருக்கடிக்கு நன்மை பயக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருளுக்கு வெளிநாட்டு நாணயத்தின் மூ…
-
- 7 replies
- 562 views
-
-
போரில் புதைத்த மண்ணெண்ணெய் பொங்கியது செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தனியார் காணியொன்றை மே. 31ஆம் திகதியன்று துப்பரவு செய்யும் போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பெரல்கள் சில இனம் காணப்பட்டன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு அமைய இன்று (20) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் பொலிஸ் அதிகாரிகள், படைஅதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நில…
-
- 5 replies
- 835 views
-
-
இன்று முதல், நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க... சஜித் அணி தீர்மானம். நாடாளுமன்ற அமர்வுகளை இன்று முதல் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தாங்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வரும் நாட்கள் மற்றும் வாரங்கள் கடுமையானவையாக இருக்கும் என்ற அரசாங்கத்தின் எச்சரிப்பைக் கேட்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கம் சரியான உத்தரவாதத்தை வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1287904
-
- 1 reply
- 251 views
-
-
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடலட்டை உற்பத்தி கிராமங்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதியில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.குறித்த கருத்திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 5,000 ஏக்கர் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றில் 100 ஏக்கர்களுடன் கூடிய கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செலாவணி ஈட்டுவதை அதிகரித்தல் மற்றும் மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு, வணிக ரீதி…
-
- 0 replies
- 209 views
-
-
நாளொன்றுக்கு வழங்கப்படும்... கடவுச் சீட்டுகளின் எண்ணிக்கை, மூன்று மடங்காக அதிகரிப்பு! நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது மூவாயிரத்திலிருந்து 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், வழமையான முறையின் கீழ் ஒரு நாளைக்கு 600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், தற்…
-
- 0 replies
- 160 views
-
-
வீட்டு வேலைக்காக... வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின், குறைந்தபட்ச வயதை... 21ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி! வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கைப் பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதற்கான தற்போதைய குறைந்தபட்ச வயதாக சவூதி அரேபியாவிற்கு 25 ஆகவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 ஆகவும் ஏனைய நாடுகளுக்கு 21ஆகவும் காண்படுகிறது. இந்த நிலையில், தொழிலாளர் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் வயது வரம்பை திருத்துவது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் அமைச்…
-
- 0 replies
- 137 views
-
-
தம்மிக அதிரடி: சத்தியப்பிரமாணம் செய்யமாட்டேன் என உறுதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக பெரேரா, தனது தீர்மானத்தை உயர்நீதிமன்றத்துக்கு இன்று (20) அறிவித்தார். தனது எம்.பி நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் வரை பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்ய மாட்டேன் என்றும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார். முன்னாள் நிதியமைச்சரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் எம்.பி பதவி வெற்றிடத்துக்கு, வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்த தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி, மாற்றுக் கொள்கைக்கான நிலையம் அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன…
-
- 1 reply
- 246 views
-
-
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை - இராணுவம் துப்பாக்கி சூடு ! Published on 2022-06-18 கே .குமணன் முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இராணுவம் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளதோடு பொதுமக்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் குழப்பமான நிலை தற்போது தோன்றியுள்ளது . எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பகரமான சூழல் ஏற்பட்ட நிலையில் எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…
-
- 2 replies
- 278 views
-
-
யாழ்ப்பாணம், சர்வதேச விமான நிலையம் ஊடாக... ஜூலை 1 ஆம் திகதி முதல், விமான சேவை ஆரம்பம். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் முன்னதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, விமான நிலையத்தை பார்வையிட்டார். இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாகவும் அதனூடாக புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்திற்கு திரும்ப முடியும் என்றும் கூறினார…
-
- 30 replies
- 2.4k views
- 1 follower
-
-
பரீட்சை வினாத் தாள்களை... திருத்தும் பணிகளில் இருந்து விலக, ஆசிரியர்கள் தீர்மானம். எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளை முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினா தாள்களை திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை கூறினார். இதேவேளை நேற்று வடக்கு கிழக்கில் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1287667
-
- 1 reply
- 232 views
-
-
ரூபாய்க்கு நிகரான... வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் ! ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.32 ரூபாயாகவும் கொள்விலை 355.51 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும் பவுண்ட்ஸ் ஒன்றின் விற்பனை விலை 452.22 ரூபாயாகவும் கொள்விலை 435.13 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்விலை 435.13 ரூபாய் விற்பனை விலை 452.22 ரூபாயாகவும், அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 259.26 ரூபாயாகவும் கொள்விலை 247.82 ஆகவும் பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1287763
-
- 1 reply
- 305 views
- 1 follower
-
-
IMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஆரம்பம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=162546 IMF கலந்துரையாடலுக்கு தாமதமாக சென்ற நிதியமைச்சின் செயலாளர் 10 பேர் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும், நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் குறித்த நேரத்திற்கு கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாமல் போனதா…
-
- 0 replies
- 186 views
-
-
அவுஸ்திரேலியாவிடம் இருந்து 50 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவசரகால உணவு மற்றும் மருந்துப் பாவனைக்கான குறித்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறித்த நிதி உதவியில், 22 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் உலக உணவுத் திட்டத்திற்காகவும் மூன்று மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 2022/23 க்குள் இலங்கையின் அபிவிருத்தி …
-
- 0 replies
- 264 views
-
-
பொருளாதார நெருக்கடி: கோட்டா, மஹிந்த, ரணில், கப்ரால் உள்ளிட்ட... 13 பேர் மீது பொதுநல வழக்கு. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் மற்றும் 3 போரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 2019 இல் வழங்கப்பட்ட சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான வரிச்சலுகைகளால் அரசாங்க வருவாய் குறைப்பு, சட்டவிரோதமான வரிச் சலுகையைத் திரும்பப் பெறத் தவறியமை உள்ளிட்ட விடயங்க…
-
- 0 replies
- 230 views
-
-
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான... விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம்! சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதுடன், இதன்மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடிக்கடி சீனாவுக்குச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அண்மையில் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தபோதே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் மற்றும் வழங்க எதிர்பார்க்கப்படும் பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக தூதுவர் ஜனாதிபதியிடம் இதள்போது வ…
-
- 0 replies
- 160 views
-
-
எரிபொருளை... பெற்றுத்தருமாறுக் கோரி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் இன்று எரிபொருள் வழங்குமாறு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம்வரை பேரணியாக சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார துறை ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய மதிய உணவு நேரத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடியவர்கள், அங்கிருந்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு நகரினை அடைந…
-
- 0 replies
- 219 views
-
-
ஜனாதிபதி செயலகத்தின்... அனைத்து நுழைவாயில்களையும் மறித்த, கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் – படையினர் குவிப்பு! காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக சுமார் ஆயிரம் பேர் வரையில் கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கமவில் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ…
-
- 3 replies
- 272 views
-
-
இந்தியாவால் வழங்கப்படவுள்ள... யூரியா உரம், 6ஆம் திகதி நாட்டுக்கு... கொண்டுவரப்படும் – விவசாய அமைச்சர். இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு மகா பருவத்தில் உர விநியோகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு 50,000 மெற்றிக் தொன் உரமும் சோளச் செய்கைக்கு 10,000 மெற்றிக் தொன் உரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 135 views
-
-
யாழில்.... ஆசிரியர்கள், எரிபொருள் கோரி போராட்டம்! யாழ்ப்பாணத்தில் கா.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை ஒதுக்குமாறும் கோரியே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது ஆசிரியர்கள் பதாதைகளை ஏந்தியும் கோஷமெழுப்பியும் தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர். h…
-
- 0 replies
- 273 views
-
-
போராடிய உறவுகள்... நீதி கிடைக்காமலேயே, மரணத்து விடுகிறார்கள்- நிரோஷ் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்வதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அரசியல் கைதி பார்த்திபனின் தயாரின் இறுதிச் சடங்கு நேற்று திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. அங்கு அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்றும் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் ப…
-
- 0 replies
- 112 views
-
-
அடுத்த 3 நாட்களுக்கு... எரிபொருள் வரிசையில், நிற்க வேண்டாம்! அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 அன்று பெட்ரோல் மற்றும் ஜூன் 24 அன்று டீசல் இறக்குமதிக்காக 90 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கு அதிக தேவையை ஏற்படுத்த வேண்டாம், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி…
-
- 2 replies
- 239 views
-
-
சைக்கிள்களை சோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை : விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ( எம்.எப்.எம்.பஸீர்) அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தி தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நிலவும் எரிபொருள்…
-
- 1 reply
- 193 views
-
-
ஜனாதிபதிக்கு... 73ஆவது பிறந்தநாள் – கோட்டா கோ கம ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன்... 73 நாட்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) தனது 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதேநேரம், அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு- காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 73 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து கூடாரங்கள் அமைத்து, நேற்று …
-
- 0 replies
- 171 views
-
-
சட்டவிரோதமாக... குடியேறிய எவரும், மீள்குடியேற்றப்பட மாட்டார்கள்! -அவுஸ்ரேலிய பிரதமர்.- இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு கடுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தில் வருவதாகவும் அவுஸ்ரேலிய பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், எந்த தளர்வும் செய்யப்படவில்லை என்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவ…
-
- 0 replies
- 226 views
-