ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
போராட்டக்காரர்களை... கலைக்க, படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது – ஐ.நா! போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றியுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில், “போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ம…
-
- 2 replies
- 371 views
-
-
வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் குறித்து ரணில் கவலை வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஜனாதிபதி தனது கரிசனைகளை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவநடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி இராஜதந்திரிகள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். உங்கள் நாடுகளில் ஜனாதிபதி அலுவலகங்களை ஆர்ப்பா…
-
- 1 reply
- 326 views
-
-
கோட்டாபயவை விட ரணிலுக்கே சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி (எம்.மனோசித்ரா) மக்களின் எதிரி யார் என்பது தற்போது தெளிவாகிறது. எனவே பாராளுமன்றத்தைக் கலைக்குமாறும் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை விட ரணிலுக்கு சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றது முதலே ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அதற்கமையவே காலி முகத்திடல் ஆர்ப்பாட்…
-
- 2 replies
- 275 views
-
-
யாழ். பல்கலையில், கறுப்பு ஜீலை... நினைவேந்தல். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு ,மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 1983 கறுப்பு ஜீலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. https://athavannews.com/2022/1292144
-
- 0 replies
- 197 views
-
-
நிமால் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு நியமனம் (எம்.மனோசித்ரா) ஜப்பான் நிறுவனமொன்றிடமிருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். அதற்கமைய இது தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையில்…
-
- 0 replies
- 192 views
-
-
ஜீ.எஸ்.பி பிளஸ்... வரிச் சலுகையை இழந்துவிட வேண்டாம் என, நினைவூட்டியது ஐரோப்பிய ஒன்றியம். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது. நேற்று காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் பொருளாதார மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக தம்மை தொடர்ந்தும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளது. அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் பேச்சு சுதந்திரத்திற்குமான பொதுமக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய …
-
- 1 reply
- 211 views
-
-
“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து... இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு. கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை அகற்றுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜூலை 21 ஆம் திகதி முதல் அங்குகிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர் . இதேவேளை பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்று கூடுவதைத் தடை செய்து நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1292130
-
- 1 reply
- 268 views
-
-
பாதுகாப்புப் படையினர், மேற்கொண்ட தாக்குதல்... முற்றிலும் தேவையற்றது – ஹர்ஷ டி சில்வா காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கண்டனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெற்றுள்ள அதிகாரமானது மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். நியாயமான மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு தான் தொடர்ந்து ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் போராட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக மாற்றுவது மற்றும் நாட்டை மேலும் சீர்குலைக்கும் வன்முறையா…
-
- 4 replies
- 254 views
-
-
ரணிலை சந்தித்தார் ஜூலி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார். ஒரே இரவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை சந்தித்ததாக ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது. குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் இதுவல்ல. மாறாக, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அ…
-
- 2 replies
- 237 views
-
-
பணவீக்கம்... மேலும், அதிகரிக்கும் சாத்தியம் – மத்திய வங்கி. இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்தி மற்றும் அதன் மூலப் பொருட்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் நிதியுதவியினால் இலங்கையின் பணவீக்கத்தினை சீர்செய்ய முடியாது என்றும் அது தற்காலிக தீர்வு மட்டும…
-
- 0 replies
- 220 views
-
-
காலிமுகத்திடல் தாக்குதல்: கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டம்! காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து கோட்டை ரயில் நிலையம் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்கு பெருமளவிலானோர் ஒன்றுகூடி வருகின்றனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு சென்ற பெருமளவிலான படையினர் அங்கிருந்தவர்களை விரட்டியடித்துள்ளனர். …
-
- 8 replies
- 414 views
-
-
விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி ராம் விடுதலை! Posted on July 21, 2022 by தென்னவள் 29 0 விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி…
-
- 3 replies
- 971 views
-
-
ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை! நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார். அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி…
-
- 28 replies
- 1.4k views
-
-
சம்பந்தனுக்கு பகிரங்க அழைப்பை விடுத்த ஜனாதிபதி ஜூலை 22, 2022 புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். தன்னுடன் இணைந்து செயற்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்…
-
- 3 replies
- 509 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா? ஜூலை 22, 2022 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக…
-
- 9 replies
- 571 views
- 1 follower
-
-
நூருல் ஹுதா உமர் புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்த நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்ட கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் தேசியப்பட்ட…
-
- 8 replies
- 620 views
-
-
உகண்டாவில்... எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி. உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , 13 வருடங்களாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை சொல்லாத இந்த அரசினை நாங்கள்நம்பமாட்டோம். இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் ச…
-
- 0 replies
- 363 views
-
-
சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு! ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய "ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்" இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும். புதிய ஜனாதிபதி பதிவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக…
-
- 1 reply
- 432 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் 14 நாள் தங்குவதற்கு அனுமதி பட மூலாதாரம்,GETTY IMAGES கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, போராட்டக்காரர்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்ஷ, தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும் அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பயணம் தொடர்பான…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
சிலரின் தன்னிச்சையான செயற்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது July 21, 2022 எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலையுடன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்ற போது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறத…
-
- 6 replies
- 413 views
-
-
பிரதமராக பதவியேற்றார்... தினேஸ் குணவர்த்தன ! இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன, இன்று சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 1883 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட தினேஸ் குணவர்த்தன, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1291999
-
- 8 replies
- 370 views
-
-
ஜனாதிபதி தலைமையில்... இன்று பதவியேற்கின்றது, புதிய அமைச்சரவை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படவுள்ளது. அலரிமாளிகையில் இன்று காலை குறித்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில்சார் நிபுணர்களுக்கும் அமைச்சரவையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயரை ஸ்ரீல…
-
- 2 replies
- 338 views
-
-
பொதுத் தேர்தலொன்றுக்கு... செல்லும் வரை, போராட்டங்கள் தொடரும்- ஜே.வி.பி. ராஜபக்ஷக்களின் வேலைத்திட்டத்தைக் கையில் எடுத்தே போராட்டக்காரர்களை, இராணுவ பலம் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்க முற்படுகிறார் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். மேலும், மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும்வரை மக்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற நேரத்திலிருந்தே போராட்டக்காரர்களை க…
-
- 0 replies
- 332 views
-
-
பணவீக்கம் பாரிய அதிகரிப்பு நாட்டின் மொத்த பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 45.3 இலிருந்து 58.9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் குறிகாட்டி தெரிவித்துள்ளது. பணவீக்கத்தில் இந்த அதிகரிப்பு உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் மாதாந்த அதிகரிப்புகளால் ஏற்பட்டுள்ளது. அதன்படி உணவுப் பணவீக்கம் ஜூன் 2022 இல் 58 வீதத்தில் இருந்து 75.8 ஆக அதிகரித்துள்ளது அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 2022 ஜூன் மாதத்தில் 43.6 ஆக அதிகரித்துள்ளது. (a https://www.tamilmirror.lk/செய்திகள்/பணவீக்கம்-பாரிய-அதிகரிப்பு/175-300897
-
- 0 replies
- 174 views
-
-
கோட்டா கோ கம மீது தாக்குதல் – இலங்கையின் “கறுப்பு தினம்”! July 22, 2022 காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. படையினர் நேற்று இரவு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை ஆக்கிரமத்தமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின்…
-
- 0 replies
- 82 views
-