Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போராட்டக்காரர்களுக்கு... உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில், துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்படவில்லை – இராணுவம் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளிகள் தொடர்பான உண்மைகளை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தடுப்பு உத்தியாக வானத்தை நோக்கியும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரிலும் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் போராட்டக்காரர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சனிக்…

  2. விசேட, கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று – புதிய ஜனாதிபதி தெரிவு குறித்து, ஆராய்வு! நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று (திங்கட்கிழமை) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபாய ராஜபக்ஷ விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி உடன்பாடுகள் எட்டப்…

  3. பதில் ஜனாதிபதி, இடைக்கால ஜனாதிபதி தெரிவு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் பதவி விலகல், பதில் ஜனாதிபதி மற்றும் இடைக்கால ஜனாதிபதி தெரிவினை தாமதப்படுத்தாது துரிதமாக செயற்படுத்தும் பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு உண்டு. கட்சி தலைவர் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த சகல கட்சி தலைவர்களும் பொது இணக்கப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே பொருளாதாரம்,அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். ஜனாதிபத…

  4. நாட்டு மக்களிடம் முப்படையினர் விடுத்துள்ள வேண்டுகோள் ! நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பின் பிரகாரம் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/131182

  5. இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 ஜூலை 2022, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலையில் இருந்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள…

  6. ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரத்தியேக கட்டிடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது எனவும் இந்த பதுங்கு குழிக்குள் வெவ்வேறு அலுமாரி கதவுகள் ஊடாகவே உற்பிரவேசிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த பதுங்கு குழிக்குள் பிரமாண்ட பாரம் தூக்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் இரகசிய அறை ஒன்று அமைக்கப…

    • 12 replies
    • 1k views
  7. இராணுவத்தினரால் இரகசியமாக பாதுகாக்கப்படும் ஜனாதிபதி! வெளியான தகவல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து இராணுவத்தினரால் இரகசியமாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோட்டாபய ராஜபக்ச எங்கிருக்கின்றார் என்பது தெரியவராத நிலையில், அவர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும்,இராணுவப் பிரிவினால் பாதுகாக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊ…

  8. யாழ். நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமான…

  9. ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து மீட்கப்பட்ட பணம் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டதாக தகவல் July 10, 2022 கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நேற்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மாளிகைக்குள் இருந்த பெருந்தொகை பணத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பணம் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த பின்னர் நில நிலைமையை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். https://www.ilakku.org/the-money-recovered-fr…

  10. இலங்கை நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் - சர்வதேச நாணயநிதியம் இலங்கையில் நடைபெறும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்றோம்அது சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடனான திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கும் என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் இலங்கையின் நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் காணப்படும் பொருளாதார நெருக்கடி பொதுமக்களின் மீது ஏற்படும் தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் குறிப்ப…

  11. போராட்டத்தின் வெற்றி : பதவி விலகிய முக்கிய அமைச்சர்கள் ! பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர். அதன்படி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் வழங்கிய உரத்தை இன்று (10) பெற்றுக்கொண்டதன் பின்னர், இராஜினாமா செய்வேன் என மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். இதேநேரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாக அறிவித்த பந்துல கு…

  12. ஐஓசி எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பித்தது! Samakalam July 10 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலைமை காரணமாக வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை லங்கா ஐஓசி நிறுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் விநியோகத்தை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. -(3) http://www.samakalam.com/ஐஓசி-எரிபொருள்-விநியோகத்/

  13. கோட்டாபய பதவி விலகுவதாக அறிவிப்பு- தீர்வை பெற விரைவாக செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்து July 10, 2022 ஜனாதிபதி தனது இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, நீண்ட கால தீர்வைப் பெறுவதற்கு விரைவாகச் செயற்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. எந்தவொரு புதிய அரசாங்கமும் “நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய மற்றும் இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யும் தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்கு விரைவாக செயல்பட வேண்டும்” என அமெரிக்கா மேலும் கூறியுள்ளது. https://www.ilakku.org/us-urges-sl-leaders-to-work-quickly-to-address-discontent/

  14. கொழும்பு ஆர்ப்பாட்டம்: வைத்தியசாலையில் 55 பேர் அனுமதி, ஒருவர் கவலைக்கிடம். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் ஒருவர் பொலிஸ் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 4 ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1290543

  15. இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் பிரித்தானியா இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், அமைதியான ஆர்ப்பாட்டமும், கருத்து சுதந்திரமும் இலங்கையின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அமைதியான போராட்டங்கள்…

  16. நாமலின் மனைவி லிமினி பிரான்ஸ் பயணமானார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் துணைவியார் லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/1…

    • 28 replies
    • 1.4k views
  17. இலங்கை: சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMILA UDAGEDRA இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தீவிரம் ஆகியிருக்கிறது. கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததுடன், அந்த பகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னதாக, அவர்களை அந்த இடத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாரும்…

  18. 13ஆம் திகதி.. பதவி விலகுவதாக, அறிவித்தார்... கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290529

  19. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் - பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முக்கிய அதிகாரிகள் பதவி இடைநிறுத்தம் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டள்ளனர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/97978/police.jpg பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று அதிகாரிகளுமே இவ்வாறு உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொலிஸ் மா அதிபர் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/131172

  20. எந்தவொரு தீர்மானத்துக்கும்... ஒத்துழைப்பு, வழங்க தயார்: ஜனாதிபதி கோட்டா கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1290462

  21. ஜனாதிபதி தனது இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்- ஏஎவ்பி Published by Rajeeban on 2022-07-09 ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து தப்பியோடியுள்ளார் என பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி தெரிவித்துள்ளது . https://www.virakesari.lk/article/131138 ஜனாதிபதி மாளிகை மக்கள் வசம் ? நாட்டை விட்டு வெளியேறினாரா ஜனாதிபதி ? கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளாராக என்ற சந்தேகம் தற்போது போராட்டக்காரர்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவா…

  22. ஜனாதிபதி, உடன் பதவி விலக வேண்டும் – வலியுறுத்தினார்... ஜீவன் தொண்டமான். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1290497

  23. தற்காலிக ஜனாதிபதியாக மஹிந்த? ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அந்த வகையில், அரசியலமைப்பின் படி தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக டுவிட்டர் பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சபாநாயகர் இல்லத்தில் அவசர கட்சித் தலைவர் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது. அதில், பிரதமர், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல தலைவர்கள் ஜூம் மூலம் கலந்துகொண்டனர் எனவும் அவர் ட்வீட் செய்துள்ளார். எவ்வாறாயினும், பெரும் கோரிக்கைக்கு அமைய பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுத சபாநாயகர் தீர்மானித்துள்ளார். (…

  24. பிரதமர் ரணில்... ராஜினாமா செய்ய தீர்மானம் – பிரதமர் அலுவலகம் நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடக பிரிவால் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக் கொள…

  25. இலங்கையை வந்தடைந்த கப்பல் - நாளை முதல் விநியோகம்! 40,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொண்டுவரப்பட்ட உரம் இன்று (09) இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நாளை முதல் நாடளாவிய ரீதியில் இந்த உர விநியோகம் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163233

    • 0 replies
    • 370 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.