Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலச பூசை தமிழ் மக்களால் நேற்று (12-06-2022) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியில் விவகாரங்களுக்கான அமைச்சு, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சிக்குண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்னெடுத்து வந்தா…

  2. ( எம்.எப்.எம்.பஸீர்) சிங்கள தாய்மருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கான காசோலை தனக்கு கிடைக்கப் பெற்றதனை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வீரகேசரிக்கு உறுதி செய்தார். குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரதம கணக்காளர் கே.சி.எம்.முதனாயக்கவின் கையொப்பத்துடன் 337496 எனும் இலக்கத்தை உடைய காசோலை ஊடாக இந்த சம்பள நிலுவை செலுத்தப்பட்டுள்ளது. 2 மில்லியன் 6 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதம் ( 2675816.48) இவ்வாறு நிலுவை சம்பளம் கொடுப்பனவாக செலுத்தப்பட்டுள்ளது. சுகாத…

    • 4 replies
    • 382 views
  3. யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையில்... போக்குவரத்து சேவை: டக்ளசின் முயற்சிக்கு, அமைச்சரவை பச்சைக் கொடி. யாழ்ப்பாணத்திற்கும். பாண்டிச்சேரிக்கும்... இடையில், பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் இன்று(13) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை…

    • 1 reply
    • 302 views
  4. புலம்பெயர் சமூகத்துடன், கருத்து வேறுபாடுகள்... அமைதியானதாகவும், ஜனநாயக வெளிக்குள் வெளிப் படுத்தப்பட வேண்டும் என... தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் – ஜீ.எல்.பீரிஸ் புலம்பெயர் சமூகத்துடனும், எமது நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஈடுபடுவதற்கு இலங்கை திறந்த நிலையில் உள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஜெனீவாவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்விலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். முழுமையான உரையில் அவர் தெரிவித்ததாவது, எமது முன்னேற்றம் மற்றும் சவால்களை திறந்த பரிமாற்றத்தில் இலங்கை தொடர்ந்தும் இந்த …

  5. இளைஞர்கள் மத்தியில்... அண்மைக் காலமாக, போதைப்பொருள் பாவனை... அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை இளைஞர்கள் மத்தியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர்கள் தற்போது மதுபானங்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை காரணமாக மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த போதையை தூண்டும் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றினை கட்டுப்படுத்த தவறினால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிர…

  6. இலங்கை நெருக்கடி: அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் - அதிகாரிகள் கூறுவது என்ன? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRI LANKA NAVY இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 11) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அம்பாறை பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதானிக்கு மின் திட்டம்: கோட்டா…

  7. யாழில் முகமூடிக் கொள்ளை கும்பலின் தாக்குதலில் மூவர் படுகாயம் – 10 பவுண் நகை கொள்ளை! Posted on June 12, 2022 by தென்னவள் 18 0 யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில் வாள்களுடன் வீடொன்றினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையி…

    • 7 replies
    • 624 views
  8. பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் பசில் ராஜபக்ஷவின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபடுவதை தடுப்பதும், அக்கட்சியின் மூலம் அரசாங்கத்தை வழிநடத்துவதும் பசில் ராஜபக்சவின் திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மிக்க பெரேரா தனது நிறுவனத்தில் இருந்து இராஜினாமா செய்த போதிலும் அவர் தனது உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=162300

    • 0 replies
    • 342 views
  9. பிழையான புரிதல் எனது உயிருக்கு அச்சுறுத்தல் தனது பாராளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல. இந்த …

    • 0 replies
    • 340 views
  10. லிட்ரோ, எரிவாயு.... நிறுவனத்தின் புதிய தலைவராக, முதித பீரிஸ் நியமனம்! லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் நாளை முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத் அண்மையில் இராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவராக முதித பீரிஸை நியமிப்பது சரியான தருணம் என லிட்ரோவின் தொழிற்சங்கங்கள் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286733

  11. இலங்கை, மின்சார சபையின் தலைவர்... இராஜினாமா. இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். இந்நிலையில் அவர் சமர்ப்பித்த இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நலிந்த இளங்கோகோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். எரிசக்தி முதலீட்டுத் திட்டங்களை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இவர் முன்னதாக கூறியிருந்தார். இருப்பினும் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் தலைவர் …

  12. ஐநா மனித உரிமைகள் பேரவையின்... 50வது அமர்வில், உரையாற்றவுள்ளார் பீரிஸ் ! ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார். மனித உரிமைகள் பேரவையுடனான... இலங்கையின், தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு அமைவாக... அமைச்சர் பீரிஸின் உரை அமையும் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சின்ஜியாங், சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளில் விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மி…

  13. அறிக்கைகளின், உண்மைத் தன்மையை... சரிபார்த்து தெளிவுபடுத்துங்கள் – பிரதமரிடம் சாணக்கியன் கோரிக்கை. தனது அறிக்கைகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்து தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கருத்து மோதல் இடம்பெற்றது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்…

  14. எரிவாயு தட்டுப்பாட்டினால்... 80 வீத சிற்றூண்டிச் சாலைகளுக்கு, பூட்டு! நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய …

  15. IMF இடமிருந்து... கடனைப் பெறுவது, எளிதானது அல்ல – ஹர்ஷ டி சில்வா சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனைப் பெறுவதற்கு இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடு இலகுவானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும். கடன் குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அநேகமாக அதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பணம் பெற முடியாத…

    • 2 replies
    • 208 views
  16. இலங்கை... முழுக்க, முழுக்க.. அவசர நிலையை... எதிர்கொள்கிறது, வல்லரசுகளின் ஆதரவு வேண்டும் – பிரதமர். தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கும், பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கு வருவதற்கும் சுமார் 18 மாதங்கள் ஆகும் என அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது பாரிய டொலர் நெருக்கடி மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிலும் சில சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபை கூறியது போல, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை…

  17. "100 மில்லியன் ரூபாய்" நட்டத்தில்... மத்தள விமான நிலையம். மத்தள விமான நிலையம் தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசரமாக தரையிறங்குவதற்கான மேலதிக விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விமான நிலையம் மூடப்பட்டால் விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட வேண்டும் என்பதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். காட்டு யானைகள் வாழுமிடத்திற்குள் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையால் மின்சார வேலியை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் நுழையும் அச்சு…

  18. வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலை? ShanaJune 13, 2022 நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பாக பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஐந்து நாட்கள் பாடசாலை செயல்படும் போது ஒரு ஆசிரியர் மூன்று நாட்களுக்கு மட்டுமே பணிக்கு வருவதற்கான அட்டவணையை வகுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். கொரோனா தொற்றின் போது பின்பற்றப்பட்டதைப் போன்ற ஒரு முறையை ப…

  19. டொலருக்கு நிகரான... இலங்கை ரூபாயின் பெறுமதி, 44.3 வீதத்தினால் வீழ்ச்சி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு யூரோக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 40.7 சதவிகிதமும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 39.8 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் ஜப்பானிய யெனுக்கு எதிராக 35.1 சதவிகிதமும் அவுஸ்ரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி இந்திய ரூபாயிற்கு எதிராக நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 41.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மே மாதம் 13ஆம் திகதி அறிமுகப்படுத்தப்ப…

  20. யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி பதவியேற்றார் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் 28 வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர நேற்று (12) சுபவேளையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றார். அத்துடன் அனைத்து மத வழிபாடுகளுடனும் யாழ்ப்பாண பாதுகாப்புபடை தலைமையக வீரர்களின் இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டதுடன், இராணுவ அணிவகுப்புடன் புதிய கட்டளைத் தளபதி வரவேற்கப்பட்டு சுபவேளையில் தனது பணியை ஆரம்பித்தார். இந்நிகழ்விற்கு படைத் தளபதிகள், முன் பராமரிப்பு பிரதேசம் (வடக்கின்) தளபதி, படைப்பிரிவுத் தளபதிகள் , இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/129394

    • 6 replies
    • 359 views
  21. இலங்கையின்... தற்போதைய நிலைமைகள் குறித்து ,இந்திய நாடாளுமன்றில் விளக்கமளிக்கின்றார் ஜெய்சங்கர் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய நாடாளுமன்ற வெளிவிவகார ஆலோசனைக் குழுவிற்கு விளக்கமளிக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முடிவு செய்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் குழுவில் இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் விரிவான விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது. இந்…

  22. பசில் ராஜபக்ஷவை.. சிறையில், அடைக்க வேண்டும் – அத்துரலியே ரத்தன தேரர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு இழைத்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “பசில் இன்று வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவருக்கு இப்போது எந்தப் பொறுப்பும் இல்லை. குடும்ப அரசியலை வழிநடத்தியவர் தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரால் நாட்டு மக்கள் அப்படியொரு கதியை அனுபவித்தபோது, ஒரு மனிதன் வேறு நாட்டிற்குச் செல்ல முடியுமா? செய்த குற்றத்திற்கா…

  23. இலங்கை தற்போது எதிர்கொள்வது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி - முன்னைய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இதற்கு காரணம் - ரணில் இலங்கை தற்போது எதிர்கொள்வது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கை சந்தித்துள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிது முன்னைய ஆட்சியாளர்களினதும் அரசாங்கத்தினதும் தவறே இதற்கு காரணம் என ரணில் விக்கிரமசிங்க நம்புகின்றார்.இன் முகாமைத்துவ ஆசிரியர் பல்கி சர்மாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என இலங்கை நெருக்கடியை வ…

  24. 21வது திருத்தத்திற்கு... அனுமதி வழங்கப்படுமா? – அமைச்சரவைக் கூட்டம் இன்று! அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 21வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 21வது திருத்தச் சட்டம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன்மீதான விவாதம் இந்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/202…

  25. "500 மில்லியன்... யுவான்", உதவியின் கீழ்... சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது 500 மில்லியன் யுவான் மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது இந்த விடயம் தொடர்பாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian தனது ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்த மனிதாபிமான உதவியின் கீழ் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளின் முதல் தொகுதி அண்மையில் ஹொங்கொங்கில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286671

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.