Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்ற அமர்வுகள்... நாளை: புதிய சபாநாயகர் தெரிவு – ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளைய தினம் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியை ப…

  2. மேலும்... 16 அமைச்சர்கள், இன்று பதவிப் பிரமாணம்? புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைச்சர்களும் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில் மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்முறை அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பல சுயேச்சை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட…

  3. ரணில் பிரதமராக பதவியேற்ற பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று! அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நான்கு அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2022/1281974

  4. சிங்கள இனவெறி - உண்மை நிலை ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன். அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது. இதுதான் சிங்களம்.

    • 38 replies
    • 2.9k views
  5. டெனீசை சிந்திக்க வைத்த 8வயது மகன்? Tamilan September 14, 2020 http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/09/119539889_1790841451053921_2514811120952575965_n-6-228x300.jpg நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேசுவரனிற்கு எதிரான நீதிமன்ற வழக்கை வாபசு பெற்ற டெனிசுவரன்: 8 வயது மகன் சொன்ன காரணம் டெனீசுவரனிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேசுவரன் மீதான வழக்கை விலக்கிக் கொள்ளப் போவதாக தொலைபேசி வழியாக அவரிடமே கூறிவிட்டேன் என வடக்கு முன்னாள் அமைச்சர் பா.டெனிசுவரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக்குள் எழுந்த ஊழல் குற்றச்சாட்டையடுத்து, அமைச்சர்கள் பதவிநீக்கம் இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக…

    • 0 replies
    • 671 views
  6. ராஜபக்சேக்களுக்கு அடுத்த ஆப்பு தயாராகிறது சண்டே லீடர் எடிட்டர், லசந்தா விக்கிரமதுங்கவின் விசாரணை நெதர்லாந்தின், ஹேஜ் நகரத்தில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் (People’s Tribunal) சத்தமில்லாமல் ஆரம்பமாகி உள்ளது. மே 12ம் திகதி ஆரம்பமான இந்த விசாரணையில், இந்த விசாரணையை நடாத்தி, இலங்கையில் இருந்து தப்பி ஓடிய, போலீஸ் ஆய்வாளர் நிசாந்த சில்வா, தனது விசாரணையின் முடிவாக, (உக்கிரைன் நாட்டு) மிக் விமான ஊழலை வெளியிட்டமையினாலே லசந்தா படுகொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்தார். லசந்தாவின் கொலை, கீத் நெய்யர் என்னும் பத்திரிக்கையாளர் கடத்தி தாக்கப்படமை, கிரிசாந்த கூரே எனும் வர்த்தகர் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டமை அனைத்து தொடர்பில், சம்பவங்களை நடாத்திய நபர்களின் தொலைபேசிகள் ஆய்வ…

  7. ரணிலின் கரங்களை பலப்படுத்த விக்கி இணக்கம்! May 15, 2022 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார். “எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில், நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன்” என்று விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன், ரணில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தக…

  8. அமரகீர்த்தி அத்துகோரல மரணம்: சந்தேக நபர்கள் நால்வர் கைது நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281948

  9. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் பொலிஸ் மா அதிபரும் இராணுவத் தளபதியும் தமது சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது பொலிஸாருக்குரிய விடயம் என்பதை அறிந்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரை கூட்டத்திற்கு அழைத்திருந்தார். எப்படியிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில், தமது சொத்துக்களை பாதுகாக்க தவறிய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பின…

    • 3 replies
    • 473 views
  10. இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இராணுவ தளபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்காது, அமெரிக்க தூதுவரை சந்தித்தது அடிப்படை குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறியமை இரண்டாவது குறற்ச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அனுராதபுரத்தில் உள்ள ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலை பாதுகாக்க தவறியமை தொடர்பாகவும் சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஞானக்காவின் வீடு மற்றும் ஹோட்டலுக்கு பாதுகாப்பு வழங்காமை தொடர்பாக பல இராணுவ அதிகாரிகள…

    • 8 replies
    • 710 views
  11. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்குவோம்.– தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவிப்பு (திருக்கோவில் நிருபர்) கட்சி வேறுபாடுகளையோ அரசியல் கணக்கு வழக்குகளையோ கணக்கில் எடுக்கும் நேரம் இதுவல்ல என்னும் வகையில் அவருக்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டியதன் அவசியம் பொறுப்புள்ள கட்சிகளின் கடமையாக உணரப்படுகின்றது எனவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு என்றும் பூரண ஆதரவு வழங்குவோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார். தற்போதுள்ள அரசியற் களநிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாள…

  12. அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை எவ்வாறு முறியடிப்பது – ஜனாதிபதி தீவிர பேச்சுவார்த்தை அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றுவதற்கான எதிர்கட்சிகளின் முயற்சிகளை தோற்கடிப்பது எவ்வாறு என ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தோற்கடிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான ஆதரவை நாடாளுமன்றத்தில் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். முழுமையான அமைச்சரவை இன்னமும் பதவியேற்காத போதிலும்- பிரதமர் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் நிதியமைச்சை அவரிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி …

  13. ''நோ ஃ.பையர் ஸோன்" ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் - கெலம் மக்ரே (நா.தனுஜா) பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய 'நோ ஃபையர் ஸோன்' என்ற ஆவணப்படத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை அனைவரையும் பார்க்கச்செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அப்படத்தின் இயக்குநர் கெலம் மக்ரே, உண்மையே நீதிக்கான முதற்படி என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றக்காணொளிகளுடன் கூடியதாக கெலம் மக்ரேவினால் தயாரிக்கப்பட்ட 'நோ ஃபையர் ஸோன்' என்…

  14. மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு (எம்.எப்.எம்.பஸீர்) கோட்டா கோ கம, மைனா கோ கம அமைதி போராட்டத்தில் அத்து மீறிதாக்குதல் நடத்தப் பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகளில் ஆளும்கட்சியை சேர்ந்த, அக்கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என 56 பேரின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பலரின் வீடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனைவிட, சுமார் 20 இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீடுகளும் அலுவலகங்களும் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில், வன்முறைகளால் வீடுகளை இழந்து, தற்போது இருப்பிடம…

    • 2 replies
    • 216 views
  15. நவாலியில்... முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், நான்காவது நாள் அனுஷ்டிப்பு இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது . இந்தநிலையில் இன்று ( ஞாயிற்கிழமை ) நான்காவது நாளாக நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில் பூசையைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆடி மாதம் 9ம் திகதி அரச விமான தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281934

    • 1 reply
    • 388 views
  16. இலங்கையில்... மீண்டும் விடுதலைப் புலிகள், என்ற செய்திகளில்... உண்மையில்லை – பாதுகாப்பு அமைச்சு. விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தக்ப்போவதாக வெளியான செய்திகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நேற்று மறுத்துள்ளது. தி ஹிந்து வெளியிட்ட செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என்றும்... அத்தகைய அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்திய உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியான இந்த செய்திகள் இலங்கை ஊடகங்களால் பரவலாக பகிரப்பட்டது. இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட்டுவரும் நிலையில் திஹிந்து வெளியிட்ட செய்தி, மிகவும் கவலையளிக்கிறது என மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். …

    • 11 replies
    • 533 views
  17. வடக்கு , கிழக்கில் இருந்து... முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும். அத்தோடு வடக்கு மாகாணத்தில் இருந்து நாளை திங்கட்கிழமையும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை சென்றடைந்து நினைவேந்தலில் பங்கேற்கவுள்ளது. யாழ் ஊடக மையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்ப…

  18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில்... பொலிஸாரின் இடையூறுகளை, தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு சீ.வி.கே. கடிதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் நிகழ்வுகளில் முல்லைத்தீவு பொலிஸார் தலையிடாது இருப்பதற்கான பணிப்புகளை வழங்குமாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஏற்கனவே பொலிஸார், தடை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதானது கவலைக்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆண்டும் மே மாதம் 18 ஆம் நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவுகூரப்படுவது வழக்கமான ஒன்றே என்றும் சீ.வி.…

  19. உண்டியல் முறையின் ஊடாக... 47,000 அமெரிக்க டொலர்களை, மாற்ற முயற்சி – இருவர் கைது உண்டியல் முறையின் ஊடாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் பொரலஸ்கமுவவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1281925

  20. பிரதான கொறடாவாக... பிரசன்ன, சபை முதல்வராக... தினேஷ்! ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கான தெரிவும் இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெர…

  21. பேருந்து சேவைகள்... மட்டுப்படுத்தப்படும், அபாயம் டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலக நேரிடும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு சில நாட்களுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார் . https://athavannews.com/2022/1281898

  22. இலங்கையில்... "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்திய புலனாய்வு பிரிவு தகவல்! தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக... இந்திய புலனாய்வு பிரிவுகள், எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செ…

  23. பணத்தை அச்சிடுவது... எனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில்... பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் – ரணில்! பணத்தை அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இல்லையேல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே புதிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281875

    • 6 replies
    • 385 views
  24. பிரதி சபாநாயகர் பதவிக்கு... பரிந்துரை செய்யப்படுகின்றார், ரோஹிணி கவிரத்ன! பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1281877

    • 1 reply
    • 269 views
  25. வர்த்தகர்களுக்கு எதிராக... கடுமையான, சட்ட நடவடிக்கை – விடுக்கப்பட்டது எச்சரிக்கை சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய தனி உரிமையாளராக இருந்தால் ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.