ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
20 ஆவது திருத்தச் சட்டத்தை... நீக்கும் நகர்வுகளை, முன்னெடுத்தது எதிர்க்கட்சி !! 20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அங்கீகாரம் பெறுவதற்கும் எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. சஜித் பிரேமதாச விரைவில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறுவார் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். இதேவேளை நேற்று இடம்ப…
-
- 0 replies
- 104 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தினர்... பதவி விலக வேண்டும் – சஜித்துடனான சந்திப்பில் மைத்திரி ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என சஜித்துடனான சந்திப்பின்போது மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அத்தோடு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய பிரதமரைக் கொண்ட இடைக்கால ஆளும் சபையை நிறுவ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார் இந்தச் சபையின…
-
- 0 replies
- 185 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான... ஆர்ப்பாட்டம், கொழும்பு – காலி முகத்திடலில்... 3ஆவது நாளாகவும் தொடர்கிறது அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கொள்கை அடிப்படையிலான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 144 views
-
-
ஜனாதிபதிக்கும், சுதந்திரக் கட்சிக்கும்.... இடையிலான சந்திப்பு, இணக்கப்பாடின்றி நிறைவு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுசெய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் அமைதியின்மையை தணிக்கவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான…
-
- 0 replies
- 73 views
-
-
இலங்கை விவகாரங்களில்... அண்டை நாடுகள், தலையிடுகின்றன: பேராயர் குற்றச்சாட்டு! இலங்கை விவகாரங்களில் அண்டை நாடுகளைச் சேர்ந்த சில குழுக்கள்கூட தலையிடத் தொடங்கியுள்ளன என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். சில அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தினர் என்றும் எனினும் அவர்கள் வழங்கிய பெரும்பாலான பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறிவிட்டனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ஈஸ்டர் தாக்குதல்களை நிரூபித்த ஜனாதிபதி ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்களை மறைத்து வருகின்றதென்றும் எனவே இலங்கைக்கு சாபக்கேடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார். இலங்கை விவகாரங்களில் தலையிடுவதற்கு அண்டை நாடுகளில…
-
- 0 replies
- 102 views
-
-
நாட்டில்... இன்றும், நாளையும் 4 மணிநேர மின்வெட்டு! நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ABCD வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் 7.15 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் DEF வலயங்களுக்கு இன்று காலை 10.45 முதல் மதியம் 1 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது. மேலும் GH…
-
- 0 replies
- 140 views
-
-
கொழும்பில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் 2 ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் ! கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப…
-
- 7 replies
- 1.6k views
-
-
“எங்களுக்கு... ஜனாதிபதி, கோட்டா வேண்டும்” – தங்காலை மற்றும் கண்டியில் பேரணி எங்களுக்கு ஜனாதிபதி கோட்டா வேண்டும் என தெரிவித்து தங்காலை மற்றும் கண்டியில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி அவருக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவை தெரிவித்து போராடி வருகின்றனர். இதேவேளை கொட்டும் மழையிலும் இன்று இரண்டாவது நாளாக காலிமுகத்திடலில் இளைஞர்கள் போராடிவருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவுகள் மற்றும் குடிநீர், மற்றும் மழைக்கவசம் ஆகியவற்றை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276097
-
- 7 replies
- 970 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையை... எதிர்கொள்ள தயார் – அலி சப்ரி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயார் என ஆளும் தரப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஆளும் தரப்பின் தற்காலிக அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவிவகிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் நாட்டினை மீட்பதற்கான செயற்பாட்டில் பங்கேற்பதற்கு தயாராக இல்லாத நிலையில், இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்று நாடாளுமன்ற பெரும்பான்மையை காண்பிப்பார்களாயின் அவர்களி…
-
- 1 reply
- 272 views
-
-
மேலும் 19 இலங்கைத் தமிழர்கள்... அகதிகளாக, தனுஷ்கோடியில் தஞ்சம்! இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தனுஷ்கோடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிசல்முனைக்கு வந்த 19 பேரிடம் கியூபிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டதையடுத்து, ஏற்கனவே 20 பேர் வந்தநிலையில் மேலும் 19 பேர் இன்று தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276056
-
- 2 replies
- 347 views
-
-
ஆர்ப்பாட்டம் மேற்கொள்வோரின் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமானவை அல்ல - பீரிஸ் (நா.தனுஜா) பொதுமக்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கோ, தனியொரு அரசியல் கட்சிக்கோ, ஆளுங்கட்சிக்கோ எதிரானது அல்ல. நாட்டில் நடைமுறையிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பிற்கும் எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார். தற்போது நாடு பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரமன்றி, அரசியல் நெருக்கடிக்கும் முகங்கொடுத்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்…
-
- 3 replies
- 403 views
-
-
சுகாதார அவசர நிலையை.. நாட்டில், பிரகடனப் படுத்த கோரிக்கை சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து பரிசீலிப்பது மிகவும் முக்கியம் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது . இதேவேளை தொழிநுட்ப குழுவொன்றை நியமித்து தற்போது ஏற்பட்டுள்ள மருந்து முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பரிந்துரைகளை உருவாக்குவது அவசியம் என்பதோடு வெளிநாடுகளில் உள்ள இ…
-
- 0 replies
- 195 views
-
-
“போராட்டங்களுக்கு மத்தியில்... மக்கள் நாட்டின் பிரச்சினைகளை, மறந்து விட்டனர்” அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் நாட்டின் பிரச்சினைகளை மறந்து வருகின்றனர் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு பின்னரும் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார். ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கக்கோரி மக்கள் முன்னெடுத்த போராட்டம் விலைவாசி அதிகரிப்புடன் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு போன்ற உண்மையான பிரச்சினைகளை துடைத்தெறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சதொச விற்பனை நிலையங்களில் ஏற்கனவே பொருட்கள் தீர்ந்துவிட்டது என்று…
-
- 0 replies
- 214 views
-
-
சுயாதீனமாக... செயற்பட தீர்மானித்த, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... ஜனாதிபதி அழைப்பு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள…
-
- 0 replies
- 283 views
-
-
எரிவாயுவை தாங்கிய... மற்றொரு கப்பல், நாட்டுக்கு வருகை 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று ( சனிக்கிழமை ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார் . மேலும் எரிவாயு நிரப்பும் செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறதோடு, நாள் ஒன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் . https://athavannews.com/2022/1276033
-
- 0 replies
- 156 views
-
-
சஜித்துடன் பேச்சு நடத்தும் பத்துக்கட்சிகளைச் சேர்ந்த அணியினர் (ஆர்.ராம்) தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீழ்த்துவதே பிரதான இலக்காக உள்ள நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவது வீணானது என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பத்துக்கட்சிகளைக் கொண்ட அணியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இந்த விடயம் சம்பந்தமாக பத்துக்கட்சிகள் அணியில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரியின் தலைவர் வாசுதேவநாணயக்கார எம்.பி கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவவதால் பயனில்…
-
- 2 replies
- 497 views
-
-
100 மில்லி மீற்றருக்கும்... அதிகமான, பலத்த மழை – மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு! நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், நீர் மின் உற்பத்திக்கு நல்லதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL…
-
- 0 replies
- 176 views
-
-
நாட்டில் இன்று... ஒரு மணிநேரம், மின்சாரம் துண்டிப்பு! நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு மணிநேரம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினம் A முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1276048
-
- 0 replies
- 175 views
-
-
அபிவிருத்திகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் - நிதியமைச்சின் செயலாளர் (இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை 3மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும்.சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நட்பு நாடுகள்,சர்வதேச நிதி நிறுவனங்களின் நம்பிக்கையுடனான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளோம். வீதி செப்பனிடும் நிலைமையில் நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரான தன்மையில் இல்லை.அவசரமற்ற அபிவிருத்திகளை தற்காலிகமாக இடைநிறுத்தி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசிமானதாகும் என நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன தெரிவி…
-
- 0 replies
- 115 views
-
-
கூட்டணிக்கு புதிய நிர்வாகம் தெரிவு! April 9, 2022 தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் காணப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி புதிய நிர்வாகம் இன்றைய தினம் சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே நிர்வாக தெரிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அக்கட்சியின் தலைவராக சட்டத்தரணி பரமசிவம் ஸ்ரீதரனும் கட்சியின் செயலாளர் நாயகமாக அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட வீ.ஆனந்தசங்கரியும் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் அக்கட்சியின் மகளிர் பேரவைத் தலைவியாக சூரியமூர்த்தி சூரியபிரதீபா வாசவன் தெரிவுசெய்யப்பட்டார். …
-
- 2 replies
- 196 views
-
-
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா கண்டனம்- இலங்கை மக்களுடன் ஆக்கபூர்வமான வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும என வேண்டுகோள் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிற்கு ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடுவதற்கான வெளிப்படுத்துவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவேண்டும் எனவும் ஐநா நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். MaryLawlor சமீபத்தில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டது சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை …
-
- 4 replies
- 475 views
-
-
‘கோட்டா கோ ஹோம்’: காலி முகத்திடலில் கூடும் மக்கள்! ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் பெருந்திரளான மக்கள் கூடி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந்திரளவர்ககள் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு மில்லியன் பேரை இன்றைய தினம் அங்கு அழைக்க முயற்சித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு நீர்த்தாரை வாகனங்கள், கலகம் அடக்கும் பொலிஸார் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. …
-
- 24 replies
- 2.5k views
- 1 follower
-
-
நிறைவேற்று, அதிகார ஜனாதிபதி முறைமையை... விரைவில் அகற்றப்படும் – சஜித் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ” வங்…
-
- 16 replies
- 940 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் - எம்.பி. கஜேந்திரன் அழைப்பு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு. அந்த இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற நோக்கத்திற்காகவும் மே-18 நினைவேந்தல் நிகழ்வானது உணர்வுபூர்வமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு …
-
- 0 replies
- 225 views
-
-
சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வையே தமிழர்கள் விரும்புகிறோம்: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!
-
- 0 replies
- 531 views
-