ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
நாட்டை மீட்டெடுப்பதற்காக... அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, வெற்றி பெறுவதற்கான... ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை – செந்தில் தொண்டமான் நாட்டை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் மீண்டும் எடுத்துள்ள முயற்சி வெற்றிப்பெறுவதற்கான ஒரு துளி அறிகுறிகூட தென்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலையக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, இந்த அரசாங்கத்துடன் பயணிக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு மக்கள் ஆணை வழங்கினர். இந்நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்தே, இலங்கைத் தொழிலாளர் …
-
- 0 replies
- 121 views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த மூவர்... அகதிகளாக, தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று (புதன்கிழமை) அதிகாலை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2022/1277559
-
- 1 reply
- 166 views
-
-
ரம்புக்கனை சம்பவம் : ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு... ஆளான, பிரதமர் ! ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com…
-
- 7 replies
- 460 views
-
-
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு... உண்மையைக் கண்டறியவும்: நாமல் ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும். முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின. இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் குற…
-
- 1 reply
- 218 views
-
-
பொலிஸார்... சட்டத்திற்கு முரணாக, எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து... பொது பாதுகாப்பு அமைச்சர் ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணையை செய்ய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் சட்டத்திற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் அரசியல் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே செயற்பட்டதாகவும் ப…
-
- 1 reply
- 162 views
-
-
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு: நீதிமன்றில் திரண்ட சட்டத்தரணிகள் ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கேகாலை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் திரண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக நீதிமன்றில் முன்னிலையாவோம் என சாலிய பீரீஸ் நேற்று அறிவித்திருந்தார் https://athavannews.com/2022/1277634
-
- 2 replies
- 181 views
-
-
தவறை உணர்கிறேன் – பணத்தை திருடவில்லை – நாடாளுமன்றத்தை, அரசியல் அமைப்பை மதிப்பேன்! April 18, 2022 இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய …
-
- 11 replies
- 694 views
-
-
கொட்டகலையில்... வீதி மறியல், போராட்டம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொட்டகலை நகரில் இன்று (புதன்கிழமை) மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் படுத்தும், ஒப்பாரி வைத்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக…
-
- 0 replies
- 188 views
-
-
பிள்ளையான், வியாழேந்திரன் என... மேலும் நான்கு பேருக்கு, இராஜாங்க அமைச்சு பதவி! சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சுரேன் ராகவன் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் ச.வியாழேந்திரன் இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சுரேன் ராகவன் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து மாற்றப்பட்டு உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் மொஹமட் முஷாரப் புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்…
-
- 0 replies
- 232 views
-
-
கொள்கலன்... போக்குவரத்து கட்டணம், 65% இனால் அதிகரிப்பு! கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 65% இனால் அதிகரிக்கப்படுவதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் மற்றும் பிற தொடர்புடைய உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டு கொள்கலன்கள் மூலம் போக்குவரத்து செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277639
-
- 0 replies
- 140 views
-
-
உணவு நஞ்சானமை... காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு! காலி – கொக்கலை ஆடைத்தொழிற்சாலையில் உணவு நஞ்சானமை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 325 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு நஞ்சானமை காரணமாக 100இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! கொக்கலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு நஞ்சானமை காரணமாக கராப்பிட்டியவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி, கடுமையான தலைவலி, வயிற்றுப்போக்கு என தெரிவித்த ஊழியர்கள் இன்று காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று உணவு உண்ட பின்னரே ஊழிய…
-
- 0 replies
- 111 views
-
-
ரம்புக்கனை சம்பவம் தொடர்பான, விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு – பொலிஸ் ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை நடத்த 20 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அவிசாவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றும் அடங்குகின்றது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மூவர் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://at…
-
- 0 replies
- 100 views
-
-
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து. விலகுவதற்கு... 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்! அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இதற்கு உரிய தீர்வுகாணுமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை என்றும் பைசல…
-
- 0 replies
- 103 views
-
-
அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு... எதிராக, ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நபடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர். நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 2 replies
- 192 views
-
-
சஜித் பிரேமதாச கூறியது... அப்பட்டமான பொய்- சபாநாயகர் கடும் சாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அப்பட்டமான பொய் கூறியுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்ததாக சஜித் பிரேமதாச கூறியிருந்தார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி பதவி விலகத் தயாராக இருப்பதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்கூறியிருந்தார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்நிலையில் தான் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியது அப்பட்டமான பொய் என தெரிவித்துள்ள சபாநாயகர். அவரின் கருத்து முற்றாக நிராகரித்துள்ளார். இ…
-
- 0 replies
- 81 views
-
-
ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட... உயிரிழப்பு, ஒரு கொலையே – எதிர்க்கட்சி ரம்புக்கனை மோதல் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகளை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான கே.டி.லக்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அவர், ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனை மோதலில் உயிரிழந்த நபர் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கேகாலையில் இன்று ஒரு சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 180 views
-
-
எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான... பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம்! எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும் எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக அவர்…
-
- 0 replies
- 96 views
-
-
பெருந் தோட்டங்களின்... பல்வேறு பகுதிகளிலும், போராட்டங்கள் முன்னெடுப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று (புதன்கிழமை) பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர். தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேலும் சில இடங்களில் 12 மணிக்க…
-
- 0 replies
- 134 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு... எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய பதுளை – பசறை பிரதான வீதியின் யூரி தோட்டப் பகுதியில் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் பலப்பிட்டிய நகர் பகுதியிலும் பொரலந்தை, வெலிமடை, ரெந்தபோல மற்றும் பூனாகலை தோட்டப் பகுதிகளிலும் இன்று காலை தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் உடபுஸ்ஸலாவை – எம்.எஸ் தோட்டம் – கோல்டன் பகுதியில் தோட்ட மக்களால் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 106 views
-
-
இலங்கைக்கு... அவசர உதவிகளை, வழங்கத் தயார் – உலக வங்கி இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாக அவர் கூறினார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவி…
-
- 2 replies
- 410 views
-
-
ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு... உண்மையைக் கண்டறியவும்: நாமல் ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள முடியும். முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது, மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்களைக் காட்டும் காணொளிகள் வெளியாகின. இந்நிலையில் விசாரணைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவும் க…
-
- 0 replies
- 110 views
-
-
பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடு கலவரங்களை... சந்திக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை ரம்புக்கனை அமைதியின்மையை அரசியலாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு கலவரங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக தற்போது இடம்பெறும் நாடாளுமன்ற அமரிவிலேயே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ஆபத்தான சூழ்நிலை ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். h…
-
- 0 replies
- 123 views
-
-
புதிய பொதுமக்கள், பாதுகாப்பு அமைச்சர்... பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில்…
-
- 1 reply
- 236 views
-
-
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு- சபையில் அமைதியின்மை: நாடாளுமன்ற அமர்வுகள்... ஆரம்பமாகிய, 5 நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகிய 5 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுகுறித்து கேள்வியெழுப்பினார். இந்நிலையில், சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்ப…
-
- 0 replies
- 144 views
-
-
நாட்டின் தற்போதைய நிலைமை, மிகவும் ஆபத்தானது – ரணில் நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இன்று நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இது மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று நான் கேள்விப்பட்டேன். அதைப் பற்றி நாம் பேச வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கும் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார். https://athavannews.co…
-
- 0 replies
- 217 views
-