ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
மக்களால் வெறுக்கப்படும்... ராஜபக்ஷ அரசாங்கத்தை, பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது – மைத்திரி மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது எனவும் அவர் கூறியுனார். கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் இண…
-
- 0 replies
- 120 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையில்... தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்தது கையொப்பமிட்டனர். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி பதவி நீக்கப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையெழுத்திட்டிருந்தார். இதேநேரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் தீர்மானம் குறித்தும் முடிவு ச…
-
- 3 replies
- 242 views
-
-
போராட்டக் காரர்களை... கைக்குழந்தைகள், என கூறியவர் பேச்சுக்கு அழைப்பது... நகைச்சுவையானது – ஹரிணி போராட்டக்காரர்களை கைக்குழந்தைகளாகக் கருதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பின்னர் அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை நகைச்சுவையானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இணக்கமற்ற இருவருக்கு இடையில் திருமணம் நடைபெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை போலவே இந்த அழைப்பு காணப்படுவதாகவும் எனவே முழு அரசாங்கமும் பதவி விலகுவதற்கான நேரம் இது என்றும் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 258 views
-
-
பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில் மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். 02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது. 03. அத்தியாவசிய சேவைகள்நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல். 04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்க…
-
- 8 replies
- 635 views
-
-
புத்தாண்டை கொண்டாடுங்கள்: இலங்கைக்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அனுப்பிய இந்தியா.! sri lanka crisis : தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது புத்தாண்டு கொண்டாட்டம் இலங்கையில் சிங்களப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது, தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்புத்தாண்டு(சித்திரை-1) ஏப்ரல் 14ம் தேதி பிறக்கிறது. இலங்கையி…
-
- 5 replies
- 380 views
-
-
இலங்கையில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் - ரணில் எச்சரிக்கை 13 ஏப்ரல் 2022, 02:42 GMT புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க இன்றைய (13.04.2022) இலங்கை, இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம். உலக உணவுத் தட்டுப்பாட்டுடன் இலங்கையிலும் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அந்நாட்டு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரித்திருப்பதாக 'வீரகேசரி' இணைய தளத்தில் செய்தி வெளிகியுள்ளது. …
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
இளைஞர்களின்... சமூகப் புரட்சியை, குறைத்து மதிப்பிட வேண்டாம் – முன்னாள் சபாநாயகர் கோரிக்கை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருந்தாலும் இளைஞர்களின் பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை குறைத்து மதிப்பிட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டங்களின் போது அவர்கள் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பாராட்டுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 117 views
-
-
இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து... வர்த்தமானி அறிவித்தல்! 367 அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்வகையில் நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த வர்த்தமானியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் பல உணவுகளும், குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்களும் இதில் அடங்குகின்றன. https://athavannews.com/2022/1276448
-
- 0 replies
- 131 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையில்... கையொப்பமிட்டார், சஜித். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி பதவி நீக்கப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் தீர்மானம் அடுத்தடுத்து முன்னெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1276450
-
- 0 replies
- 177 views
-
-
தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.- தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்தவிடம் நேரில் முன்வைத்ததாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான …
-
- 27 replies
- 1.1k views
-
-
“புதிய பிரதமரின் தலைமையிலேயே... இடைக்கால அரசாங்கம், இல்லையேல் உறுதியான தீர்மானத்தை எடுப்போம்”. -வாசுதேவ நாணயக்கார.- புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம் என வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார். பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்ல…
-
- 0 replies
- 152 views
-
-
போராட்டம் தொடங்கி... 5 ஆவது நாளுக்கு பின்னர், இளைஞர்களை சந்திக்க தயார் என... அறிவித்தார் பிரதமர் மஹிந்த. கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லவிடாமல் பாதுகாக்க வேண்டும் என அனைத்து இளைஞர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு வி…
-
- 0 replies
- 129 views
-
-
5 ஆவது நாளாகவும்... மக்கள் எழுச்சிப் போராட்டம்: புதுவருட நிகழ்வுகளும் ஏற்பாடு. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கொட்டும் மழையிலும் இன்று 5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் …
-
- 4 replies
- 248 views
-
-
இன்று முதல்... மூன்று நாட்களுக்கு, மின்தடை அமுலாகாது! நாடுமுழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு மின்தடை அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன. இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும். காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/127643…
-
- 0 replies
- 157 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: ''மலையக மக்களுக்கு இந்த பிரச்னை பழகி போச்சு, கொழும்பில் உள்ளவர்களுக்கு இது புதுசு" ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 12 ஏப்ரல் 2022, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியும் மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை கடந்த மாதம் 31ம் தேதி சுற்றி வளைத்த ஆ…
-
- 2 replies
- 331 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 'போலியான போராட்டங்களை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண்டாம்' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்ட கோஷத்துடன் பௌத்த பிக்குகளால் நேற்றைய தினம் கொழும்பில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பில் அமைந்துள்ள தாமரைத்தடாக முன்றலில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணியில் மகாசங்கத்தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்களும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். 'போலியான போராட்டங்க்ளை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண…
-
- 5 replies
- 445 views
-
-
இலங்கையின் நிலைவரம் குறித்து... பைடனுடன், மோடி... கலந்துரையாடல்! இலங்கையின் நிலைவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு, நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த கலந்துரையாடலில் உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276413
-
- 0 replies
- 272 views
-
-
பொருளாதார யுத்தத்தை... ஆயுதங்களால், வெல்லக் கூடாது என்கின்றார்... சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானமும் ஜனநாயகத்தை நிலைநாட்ட கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் போராட்டத்தை அரசாங்கம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த அரசாங்கம் இராணுவத்தினரை பாதுக்கப்பதாக கூறினாலும் யுத்தத்தில் வெற்றிபெற்ற பொன்சேகா உள்ளிட்டவர்களை பழிவாங்கியது யார் என்பது அனைவரும் அறிந்ததே என்றும் அவர் கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப் பிரேரணை, 19ஆவது திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரம் கொ…
-
- 1 reply
- 221 views
-
-
இடைக்கால அரசாங்கம்... சாத்தியமற்றதாலேயே, அமைச்சுப் பதவியை ஏற்றேன் – சாந்த பண்டார 11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தமை, கட்சி கொள்கையை காட்டிக் கொடுக்கும் செயலென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276423
-
- 0 replies
- 214 views
-
-
ஜனாதிபதியுடனான... இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், பங்கேற்பதில்லை.- அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 கட்சிகள் அறிவிப்பு.- இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 கட்சிகள் அறிவித்துள்ளன. தற்போதைய அரசாங்கம் முழுமையாக இராஜினாமா செய்து இடைக்கால அரசாங்கத்தில் உண்மையான அக்கறை காட்ட வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி நேற்று புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்துள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்ததாகவும் 11 கட்சிகளும் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழம…
-
- 0 replies
- 269 views
-
-
ஆர்ப்பாட்டம் காரணமாக... சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றம்! ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையகத்திற்கு வந்ததையடுத்து, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். https://athavannews.com/2022/1276408
-
- 0 replies
- 199 views
-
-
மருந்து கொள்வனவு – 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை... வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவசரகால மருந்துகள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் உலக வங்கி மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் அமைச்சர் கூறியள்ளார். https://athavanne…
-
- 6 replies
- 495 views
-
-
237 மருந்துகளுக்கு... தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாட்டினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதய நோயாளிகள், இருமல் மற்றும் சளிக்கு கூட வழங்குவதற்கு தேவையான மருந்துகள் இல்லை என கூறினார். டொலர் நெருக்கடியானது முழு நாட்டையும் பாதித்துள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு அரச, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் …
-
- 0 replies
- 118 views
-
-
கான்கள் மற்றும் பீப்பாய்களில்... எரிபொருளை பெற்றுக்கொண்டு, அதிக விலைக்கு விற்பனை; இதுவரை 68 பேர் சிக்கினர் !! அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதுவரை மொத்தம் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல், 726 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதிகப்படியான எரிபொருளை கொள்வனவு செய்து வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் பலர் சட்டவிரோத வியாபாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கான்கள…
-
- 0 replies
- 145 views
-
-
வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த தீர்மானம் நிலுவையில் உள்ள வெளிநாட்டு சாதாரண கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276400 கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரும் இலங்கை சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோர…
-
- 7 replies
- 498 views
-