ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலம், அரசியலமைப்பிற்கு முரணானவை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஜி.எஸ்.டி வரி தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முன்னாவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வினை தொடங்கிவைத்து உரையாற்றும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டத…
-
- 0 replies
- 139 views
-
-
பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் விகாரை என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதியை நடத்தப்பட்டு வருவதாக “துக்க ஹந்துனன அபி” என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. குறித்த இடத்தில் விகாரை இயங்கினாலும் ஹொட்டல் என்று அந்த கட்டடம் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் நிலந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே விகாரை அமைந்திருந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். விகாரைக்குள் இந்த ஹொட்டல் இயங்குகிறது. சீன விகாரை என அழைக்கப்படும் இந்த ஹொட்டலில், சீனப் பெண்கள் தங்கியுள்ளனர். பிரதேசவாசிகளுக்கு விகாரையில் நடப்பது என்ன என்பது தெரிய…
-
- 6 replies
- 512 views
-
-
“இறுதிவரைப் போராடியே மடிந்தவர் பிரபாகரன்” “இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.” - இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துத் தொடர்ப…
-
- 1 reply
- 491 views
-
-
யாழில். கூலிக்கு, யாசகம் பெற்றவர்கள் கைது! சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…
-
- 7 replies
- 491 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடாத்திய விசேட செய்தியாளர் சந…
-
- 7 replies
- 546 views
-
-
புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதியதிட்டம் உருவாக்கப்படுகின்றது – முதலீட்டுச்சபை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் இலங்கை முதலீட்டுச்சபை ஈடுபட்டுள்ளது. இலங்கையில் முதலீடுசெய்யும் புலம்பெயர்ந்தவர்களிற்கு விசேட ஊக்குவிப்பு திட்டங்களை உள்ளடக்கியதாக புதிய திட்டம் காணப்படும். இது புதிய யோசனை என தெரிவித்துள்ள இலங்கை முதலீட்டுசபை வட்டாரங்கள் ஜனாதிபதிதனது சுதந்திர தின உரையில் புலம்பெயர் இலங்கையர்களை இலங்கையின் அபிவிருத்தியில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததன்பின்னணியில் இந்த திட்டம்…
-
- 11 replies
- 723 views
-
-
சுதந்திரக்கட்சி, சிங்களக் கட்சி அல்ல கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எனக்கு வழங்கிய மிகப்பெரிய ஆணைக்கு செயல் வடிவில் நன்றி கூறி வருகிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இன்று (21) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ் மக்கள் எமக்களித்த அன்புக்கும் அரவணைப்பிற்கும் தலை வணங்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு வந்துள்ளார். ஸ்ரீலங்கா சுத…
-
- 3 replies
- 494 views
-
-
இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை! இந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். பருத்தித்துறை மீனவர்களிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்ட கடற்படை அவர்களை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். 21 மீனவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போத…
-
- 2 replies
- 286 views
-
-
சீனாவில் இருந்து வந்த குழுவினர் ஒன்று நீர்கொழும்பில் உள்ள பிரபலமான ஹொட்டல் வலையமைப்புக்கு சொந்தமான ஆடம்பர ஹொட்டலை முற்றாக கைப்பற்றியுள்ளனர். இதனடிப்படையில், அங்கு பணிப்புரிந்த சகல ஊழியர்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது தெளிவில்லை என்ற போதிலும் அந்த ஹொட்டலில் தற்போது முழுமையாக சீன பிரஜைகளே தங்கி உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளோ, ஊழியர்களே அந்த ஹொட்டலில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன குழுவினர் எதற்காக நீர்கொழும்பில் உள்ள இந்த ஹொட்டலில் தங்கியுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. https://tamilwin.com/article/chinese-seize-luxury-hotel-in-negombo-1645353575?itm_source=parsely-top இந்த செய்தி தம…
-
- 12 replies
- 754 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கான காலம் முடிவடைந்துவிட்டது – ஹர்ஷ டி சில்வா சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கான காலம் முடிந்துவிட்டதால், அரசாங்கம் இனி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைச் சார்ந்திருக்க முடியாது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடியானது எரிசக்தி நெருக்கடியாக அதிகரித்துள்ளது. அதன் மூலம் நாட்டின் வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியானது உரிய நேரத்தில் தீர்க்கப்படாம…
-
- 0 replies
- 189 views
-
-
மே.18 நினைவு கூர்ந்தவர்களின் விபரங்களை கோரியது ரி.ஐ.டி க. அகரன் வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் கடந்த மே. 18 இல் அவருடைய வீட்டில் யாரை நினைவேந்தல் செய்தீர்கள் என்பது தொடர்பிலான பெயர் விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) என்ற முன்னாள் அரசியல் கைதியிடமே பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் விபரம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் அவருக்கு வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை சம்ம…
-
- 5 replies
- 439 views
-
-
தமிழ் மக்களிடம் நன்றிக் கடன்பட்டுள்ளேன் – அந்த நன்றியை என்றும் மறவேன் February 20, 2022 வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சியாகும். எமது கட்சியில் சிறியவர், பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை. அனைவரையும் சமமாக பார்ப…
-
- 1 reply
- 350 views
-
-
பயங்கரவாத சட்டத்தின் மூலம்... அநீதி நடந்திருக்கின்றது – சுரேன் ராகவன் பயங்கரவாத சட்டத்தின் மூலம் அதிக நேரங்களில் அநீதி நடந்திருக்கின்றது என்பதை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னித் தொகுதி தலைவருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருந்த கஸ்டமான ஒரு நிலையில் பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் பங்கரவாதத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அ…
-
- 10 replies
- 863 views
-
-
கச்சத்தீவு ஆலய திருவிழாவில், இருநாட்டு பக்த்தர்களுக்கும் அனுமதி! February 21, 2022 கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இரு நாட்டு பக்தர்களும் மட்டுப்படுத்தப்பட்டளவில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 11 ,12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை பக்தர்கள் 500 பேருக்கு மாத்திரம் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்க யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட…
-
- 2 replies
- 250 views
-
-
தமிழக மீனவர்கள் 21 பேருக்கு... 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறை! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 21 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை அடுத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய நிலையில் இன்றுவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 144 views
-
-
கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள். மீண்டும்... பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை! பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் இன்று (திங்கட்கிழமை) மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மனித கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கை வந்ததை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் குறித்த கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்பப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள CITC முனையத்தில் இருந்து குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்ய்யப்படும் என சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://athavannews.com/…
-
- 0 replies
- 157 views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; இணை அனுசரணை நாடுகள் இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயல்பாடுகளில் நம்பிக்கையில்லை என ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45அமர்வில் ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் இதனை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் எடுத்துள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. கனடா ஜேர்மனி பிரித்தானியா வடக்கு மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமை விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த ம…
-
- 0 replies
- 143 views
-
-
இனஅழிப்பு விவகாரம்- ஐ.நாவுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதம் கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதற்கு ஏதுவாக உரிய படிமுறைகளையும் தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வமைப்பு ஐநா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில்,வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் எமது உறவுகளை தேடும் தொடர் போராட்டத்தை கடந்த 20.02.2017 அன்று கிளிந…
-
- 0 replies
- 329 views
-
-
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்! வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்றி வருவதாகவும் தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வருகை தந்து தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 262 views
-
-
கொழும்பு நட்சத்திர ஹொட்டலில் மனைவியிடம் வசமாக சிக்கிய இளம் அமைச்சர் Posted on February 20, 2022 by தென்னவள் 14 0 அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹொட்டலுக்கு சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு கீழ் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீண்டகாலத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட இளம் அமைச்சர், தனக்கு நெருக்கமான ஒருவர் ஊடாக கொழும்பில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டலில் அறை ஒன்றை முன் பதிவு செய்துள்ளார். இளம் அமைச்சரின் முன்னாள் காதலி ஒருவரும் அமைச்சருக்கு நெருக்கமான மற்றுமொரு பெண்ணும் …
-
- 8 replies
- 714 views
-
-
சுதந்திரக் கட்சியுடன், இணைந்து... செயற்பட தயாராகின்றார், க.சுமந்திரன்? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். இந்நிலையில், வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பிரத்தியேக இடமொன்றில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிய வருகின்றது. விரைவில், அவர் ஸ்ரீலங்கா சுதந்தி…
-
- 16 replies
- 882 views
- 1 follower
-
-
ஸ்டாலினுக்குத் தமிழ்க் கூட்டமைப்பு வாழ்த்து தமிழ் நாட்டின் முதலமைச்சராகி இன்னும் ஒருவருடம் கூட கழியாத நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகத்துக்கிடமின்றி தமது ஆளுமையைத் தமிழகத்திலும், உலகத் தமிழர் மத்தியிலும் வெளிக்காட்டியுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் பணியானாலும், சாதி மற்றும் பாலியல் பாகுபாடுகளைத் தகர்த்து மக்களின் வாழ்க்கைத் தரத்தினைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கத்தினைக் கொண்ட சமூக நீதி வேலைத்…
-
- 3 replies
- 455 views
-
-
கூட்டுத்தாபனத்துக்கு ரூ.74,000 கோடி கடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, இலங்கையின் இரண்டு அரச வங்கிகளிலும் 37 பில்லியன் டொலர் ( 74, 000 கோடி ரூபாய்) கடனில் உள்ளதால், மேலும் கடன் வழங்க வேண்டாம் என இரண்டு அரச வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீண்டகாலமாக கடனுக்கு எரிபொருள் விற்பனை செய்வதே இந்த நிலைமைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபை 8,000 கோடி ரூபாயையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 6,300 கோடி ரூபாவையும் கடனாகப் பெற்றுள்ளதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணத்தை செலுத்தாத கா…
-
- 3 replies
- 420 views
-
-
உண்மையான தேசபக்தர்கள் ஒருபோதும் தேசிய வளங்களை விற்க மாட்டார்கள்: விஜித ஹேரத் தேசபக்தர்கள் என தங்களை பிரகடனப்படுத்துபவர்கள் நாட்டின் வளங்களை ஒருபோதும் விற்க மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹேரத், நாட்டின் பல வளங்கள் விற்கப்பட்டாலும் அல்லது இரு தரப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டாலும் அத்தகைய ஒப்பந்தங்களை ஒரேயடியாக இரத்து செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதென்றும் அதன்பின்னர் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் முழு உரிமையும் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப…
-
- 1 reply
- 442 views
-
-
விமல் வீட்டுப் பேச்சில் மாயமான “கை” ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள், இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் ஒன்றுகூடினர். இந்த சந்திப்பின் போது ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதியில் 25 சதவீதம் மேலதிக வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் விரிவாக கலந்துரையப்பட்டது. அதுமட்டுமன்றி அரசாங்கத்துக்கு எதிரான பங்காளி கட்சிகளால் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவிருக்கும் யோசனைகள் தொடர்பிலும் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அதில், நாட்டின் பொருளாதார பிரச்சினையில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்த யோசனைகள…
-
- 0 replies
- 303 views
-