Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாய்மாருக்கு எதிராக... கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக, குரல்கொடுக்க அணி திரளுங்கள் – கனகரஞ்சினி யாழ்ப்பாணத்தில் பிரதமரின் வருகையின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தாய்மாருக்கு எதிராக பொலிஸாரால் கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணி திரளுங்கள் என வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ. கனகரஞ்சினி தெரிவித்தார். எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பேரணி தொடர்பில் வவுனியா மாவட்ட பொது அமைப்புகளுக்கு விளக்கமளித்தும் ஆதரவு கோரியும் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித…

  2. இலங்கை தொடர்பில்... சர்வதேச நாணய நிதியம் (IMF), வௌியிட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில்! இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம்(IMF) வௌியிட்டுள்ள அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சமுர்த்தி, சுயதொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை மதிப்பீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1273608 சர்வதேச நாணய நிதியம், இலங்கை தொடர்பிலான தமது அறிக்கையை கடந்த 26ஆம் திகதி வௌியிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் 5 யோசனைகளையும் நிதியம் முன்வைத்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணத்தை த…

  3. புத்தாண்டுக்கு பின்னர்... எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு? புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன், 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் இன்று(திங்கட்கிழமை) நாட்டினை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் சில பகுதிகளில் எரிபொருளினை பெற்றுகொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையினை அவதானிக்க முடிந்தது. கொழும்பிற்கு வெளியே உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, இன்று சந்தைக்கு 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க ஆரம்பி…

  4. மின்சார பிரச்சினைக்கு... உடனடியான, தீர்வினை வழங்குமாறு பிரதமர், அதிகாரிகளுக்கு ஆலோசனை! மின்சார பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1273623

  5. வெளிநாடுகளின் மத்தியஸ்தத்துடனேயே... அரசாங்கத்துடன், கூட்டமைப் பேச வேண்டும் – சிவாஜி அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச சொன்னால் அவர்களை மத்தியஸ்தம் வகிக்க சொல்லி கூறுங்கள். அதைவிடுத்து எந்தவித சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமல் அரசாங்கத்துடன் பேச செல்வதென்பது தற்கொலைக்கு ஒப்பானதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு சுற்று பேச்சுவார்த்தை முடிவிலும் கூட்டறி…

  6. முஸ்லிம்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள வழிவகையின்றி நெருக்குவாரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் - ஹாபிஸ் நசீர் அஹமட் மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது. ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நளீம், நகர, பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாசர், ஏறாவூர் நகரசபை முன…

  7. தமிழ்,சிங்கள புத்தாண்டின் போது சமூக வலைத்தளங்களில் தமது பயணங்கள் தொடர்பான தகவல்களை தவிர்க்குமாறு கோரிக்கை எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டின் போது சமூக வலைத்தளங்களில் தமது பயணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த தகவல்களை குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் சேர்ப்பதால் குற்றச்செயல்களில் பலியாக நேரிடும் என்றும் அவர் கூறினார்.எனவே, இவ்விடயத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் புத்தாண்டுக…

  8. இந்திய வெளிவிவகார அமைச்சரினை... சந்திக்கின்றது, கூட்டமைப்பு! இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(திங்கட்கிழமை) இலங்கை வருகை தரவுள்ளார். நாளை இலங்கை வருகை தரவுள்ள அவர், நாளைமறுதினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாளை பிற்பகல் அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தினை உறுதிப்ப…

  9. யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.திட்டமிட்டபடி நடக்கவிருந்த இரத்ததான முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதனால் எதிர்பார்க்காத வகையில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரத்த வங்கியில் அல்லது இரத்ததான முகாம்களில் ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர்களும் புதிதாக இரத்ததானம் செய்யக்கூடியவர்களும் இந்த ஆபத்தான நிலையை தவிர்ப்பதற்கு ஒத்துழ…

  10. காணி அபகரிப்புக்கள் தொடர்பில் இராணுவத்தளபதி - சுமந்திரன் பேச்சு (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கில் படையினரால் காணிகள் அபகரிக்கப்படுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார். இதன்போது, ஜனாதிபதியிடத்தில் படையினர் காணிகளை அபகரிப்பதாக கூறியிருக்கின்றீர்கள். படையினர் காணிகளை அபகரிக்கவில்லை என்ற தொனிப்பட இராணுவத்தளதி சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். எனினும், சுமந்திரன் எம்.பி., வடக்கிலு…

  11. பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்! நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெவடகஹ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ரியாஸ் சாலி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியலில் பேரீச்சம்பழமும் உள்ளடங்குவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நாட்டில் தற்போது பேரீச்சம்பழத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மரபுகளுக்கு அமைய நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் மூன்று பேரீச்சம் பழங்களை உணவுடன் இணைத…

    • 2 replies
    • 367 views
  12. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மத வழிபாட்டு தலங்கள் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர் மேலும் தெரிவிக்கையில், வழிபாட்டு தலங்களின் செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால் எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும். மாற்றத்தையும் காண முடியும். மேலும் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் "நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. முக்கிய பிரச்சனை கருவூலம் காலியாக உள்ளது. கருவூலம் காலியாகி உள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவை நாடு முழுவதும் காண முடியுமாக உள்ளது . 2007 ஆம் ஆண்டு தாய்லாந…

    • 25 replies
    • 1.5k views
  13. அரசாங்கத்திற்கு எதிரான பலமிக்க மாற்று சக்தியை வெகுவிரைவில் உருவாக்குவோம் - விமல் வீரவன்ச (இராஜதுரை ஹஷான்) குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகாசங்கத்தினர்கள உள்ளார்கள். குடும்ப ஆட்சி தலைத்தோங்குவதற்கு இனியொருபோதும் இடமளிக்க முடியாது. மக்களாணைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது.அரசாங்கத்திற்கு எதிரான பலமிக்க மாற்று சக்தியை வெகுவிரைவில் உருவாக்குவோம் என முன்னாள் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் ராஜகிரியவில் உள்ள அமரபுர பீடத்தின் பதில் மாநாயக்க தொடம்பனே சந்ரபான தேரரை சந்தித்து 'முழு நாடும…

  14. வற்றிவரும் நீர்தேக்கங்கள்: மின் உற்பத்திக்கு பெரும் பாதிப்பு! மலையகத்தில் தற்போது நிலவிவரும் வறட்சியான காலநிலையினால், பிரதான நீர்த்தேக்கங்கள் வற்றி வருகின்றன. இதனால் நீர்த்தேக்கங்களில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன மீண்டும் வெளியே தெரிய அரம்பித்துள்ளன. இந்த வறட்சி மின் உற்பத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தில் 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் வறட்…

  15. மட்டக்களப்பில் பல்வேறு உதவி செயற்பாடுகளில் விக்னேஸ்வரன், மணிவண்ணன் கூட்டாக பங்கேற்பு “கல்விக்கு கரம் கொடுப்போம், பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் மட்டக்களப்பின் பல்வேறு கிராமங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு நேற்று சனிக்கிழமை முதல் கட்டமாக 35 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேசத்தில் உள்ள சீனிப்போடியார் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. புலம்பெயர் தமிழ் உறவு ஒருவரின் உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட பிராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர முத…

  16. சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில்... நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை! சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த அறிக்கை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தனது திட்டத்தை முன்வைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்க…

  17. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானம்! நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும் கொரோனா நிலைமையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய தேவைக்காக, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள எண்ணெய் கையிருப்பு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்துவம் செய்யப்படு…

  18. பேச்சு, என்ற பெயரில்... நாம் ஏமாறத் தயாரில்லை – இரா.சம்பந்தன் பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் உறுத…

  19. பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் போதிய பெற்றோல் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் நேற்று இரவும் சில பகுதிகளில் பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் வினவியபோது, மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான அளவு பெற்றோல் கொள்வனவுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய மூன்று கப்பல்கள் இலங்…

  20. இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது- சிலோன் டுடே இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை ஒரு கைப்பொம்மை போல செயற்பட்டு இலங்கைக்கு பாதகமான நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது என்பது சம்பந்தப்பட்ட அமைச்சரவை குறிப்புகள் மற்றும் இணைப்பு ஆவணங்கள் மூலம் புலனாகியுள்ளது என சிலோன்டுடே தெரிவித்துள்ளது. முக்கால்வ…

    • 6 replies
    • 549 views
  21. (நா.தனுஜா) இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட், நாட்டின் சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டதுடன் இதன்போது கொழும்புத்துறைமுகத்தின்மீது அமெரிக்கா கொண்டிருக்கக்கூடிய நாட்டத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தலைமையில் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான துணைச்செயலர் அமன்டா ஜே டொரி மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டொனால்ட் லூ உள்ளிட்ட மூவரடங்கிய உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு கடந்த செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்தது. …

    • 4 replies
    • 543 views
  22. புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயமல்ல: கஜேந்திரகுமார் புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை என்பது, இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் கூட இனப்பிரச்சினைக…

    • 0 replies
    • 229 views
  23. பொது வருமான மீட்டும் வழிமுறைகளை மேம்படுத்தவும்: IMF ஆய்வுக் குழு தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம் IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமது ஆய்வில் பின்வருவனவற்றை தாம் இனங்கண்டிருந்ததாக அந்தக் குழு தெரிவித்துள்ளது, அதியுயர் தரம் வாய்ந்த வருமானமீட்டக் கூடிய வகையில் தூர நோக்குடைய நிதிக் கொள்கை ஒன்றைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை பணிப்பாளர்கள் வலியுறுத்தினர். தற்போது இலங்கையில் நிலவும் குறைந்த வரிக்கான மொத்த தேசிய உற்பத்தியுடனான விகிதத்தை கவனத்தில் கொண்டு, வருமான வரி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) ஆகியவற்றை அதிகரிப்பது மற்றும் விலக்களிப்புகளைக் …

    • 0 replies
    • 217 views
  24. இன்று மற்றும் நாளை மின் வெட்டு குறித்த அறிவிப்பு A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு இன்று (26) 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அந்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்படி, அந்த வலயங்களுக்கு 4 மணி நேரம…

    • 0 replies
    • 484 views
  25. பசிலினால் பகிரங்கப்படுத்த முடியாததை அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்! சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் மறைக்கப்பட்ட விடயம் தற்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ஷவிடம் காண்பிக்குமாறு கூறிய அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிலைமை தொடர்பில் வெளியிட்ட தனது அறிக்கையை இன்று பகிரப்படுத்தியுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வரி குறைப்பு, பணம் அச்சிடுதல், சுற்றுலா வருவாய் இழப்பு மற்றும் நாட்டை மூடி வ…

    • 0 replies
    • 296 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.