Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பசில் ராஜபக்ச சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் – மக்கள் அவரை நாட்டிலிருந்து துரத்தவேண்டும் SayanolipavanMarch 11, 2022 பசில் ராஜபக்ச சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச இந்த நாட்டு மக்கள் ஓன்றுதிரண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை பசில் ராஜபக்ச தனது பாரம்பரியமாக மாற்றிவிட்டார்,ஜனாதிபதியாலோ அல்லது பிரதமராலோ எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவிற்கு தெரியாமலே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன என கருதலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.battinews.com/2022/03/blog-post_268.ht…

  2. கூட்டமைப்பை சந்திக்கிறார் கோட்டாபய – உறுதிப்படுத்தினார் சம்பந்தன் March 11, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (Ra.Sampanthan) தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பானது எதிர்வரும் 15ஆம் திகதி அரச தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ளதாக இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கூட்டமைக்கும் இடையிலான சந்திப்புக்குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புக்கள் வெளியாகியிருந்த நிலையில், அவை நடைபெறவில்லை. இந்நிலையில், எதிர்வரும் 15ம் திகதி தலைவர் கோட…

  3. கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று ஆரம்பம் March 11, 2022 கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (11) ஆரம்பமாகின்றது. இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஊடாக இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சத்தீவு இந்தியாவின் இராமநாதபுரத்தில் இருந்து 12 .4 கடல் மைல் தொலைவிலும் நெடுந்தீவில் இருந்து 10.5 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. கச்சத்தீவ…

  4. தென்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு! March 10, 2022 வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டிடத்தின் வரலாற்று பின்னணி மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமாகும். போர்…

  5. இலங்கைக்கு... 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க, இந்திய மத்திய வங்கி அனுமதி! எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய இந்தியாவிலுள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75% பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யவேண்டும் எனவும் மீதமுள்ள 25% இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளிடமிருந்து கொள்வனவுகளை மேற்கொள்ளப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2022/1271441

  6. ஆசிய அபிவிருத்தி வங்கி, 2 பில்லியன் டொலர் கடன் உதவி! ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு இலங்கையின் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் சத்சுகு அசகவா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இந்த விடயத்தினைத் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த வருடம் இலங்கைக்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியது. நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் பின்னடைவைச் சந்தித்த நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும்…

  7. டீசலின் விலை 75 ரூபாயினாலும், பெற்றோலின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிப்பு எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது, இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக Petrol 92-Octane 254 ரூபாவிற்கும், டீசல் 214 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. https://athavannews.com/2022/1271378

  8. விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிப்பு! இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணய மாற்று விகித அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1271393

  9. Published by T Yuwaraj on 2022-03-10 16:30:55 யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் யாழ்.நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கடந்த 1ஆம் திகதி காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருட்டு கும்பல் ஒன்று நான்கு பெண் பக்தர்களின் சங்கிலிகளை அறுத்து களவாடியுள்ளது. சங்கிலிகளை பறிகொடுத்த பெண் பக்தர்கள் அது தொடர்பில் ஆலய இளைஞர்களிடம் தெரிவித்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட இளைஞர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்கு இ…

  10. Published by T Yuwaraj on 2022-03-10 16:47:32 தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர். …

  11. யாழ். போதனா வைத்தியசாலைக்கு... புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால், 5 மில்லியன் ரூபா அன்பளிப்பு! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கனடா நாட்டு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் 50 இலட்சம் ரூபா பணம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில் குறித்த உதவி வைத்தியசாலை நலன்புரி சேவைக்கு வழங்கப்பட்டு அதன் ஊடாக இருதய சிகிச்சை பிரிவிற்கு தேவையான இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்போது யாழ்ப்பாண போதனா …

  12. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் விரைவில் நியமனம் – சாணக்கியனிடம் இரகசியமாக தெரிவித்த சமல்? கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று(புதன்கிழமை) ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவந்திருந்தார். இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு சட்ட ரீதியிலான சிக்கல் உள்ளதாக தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பி…

  13. அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு! அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சினால் இதுகுறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில் வள…

    • 2 replies
    • 300 views
  14. டொலருக்கு வழங்கப்படும்... மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம் – மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபாய் வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார். அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் இதனை அறிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்காக, மத்திய வங்கியினால் டொருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி நெகிழ்வுத் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம் 225 ரூபாய் 20 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 229 ரூபா ய்99 சதமாகவும் பத…

  15. இலங்கையை வந்தடைந்தார்... ஆசிய அபிவிருத்தி வங்கியின், தலைவர்! ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா (Masatsugu Asakawa) இன்றைய தினம்(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2022/1271224 ################# ############# ############ ஸ்ரீலங்கா "மைண்ட் வாய்ஸ்":::: காசு மேலே... காசு வந்து கொட்டும் நேரம் இது. 💪 💪 💪 😂

  16. அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு – பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல்! அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காகித பற்றாக்குறை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் காகிதங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்பட்டது. பின்னர் துறைமுகத்தில் சிக்கியிருந்த காகிதம் தாங்கிய 8 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. எவ்வா…

  17. சமையல்... எரிவாயு, தட்டுப்பாடு... மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும்! நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நாட்டை வந்தடைந்த 2 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பலில் இருந்து, சமையல் எரிவாயுவினை தரையிறக்கும் நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாளாந்தம் 900 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவினை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சமையல் எரி…

  18. இலங்கை மின்சார சபையின்... GT-7 இன், ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டது! களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் GT-7 இன் ஒற்றை மின் உற்பத்தி அலகு மூடப்பட்டுள்ளது. டீசல் இல்லாத காரணத்தினால் இன்று(வியாழக்கிழமை) காலை திடீரென மூடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார். GT-7 ஆலையின் செயல்பாடுகள் காலை 7:21 மணிக்கு திடீரென நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். அனல்மின் நிலையம் நிறுத்தப்பட்டதால், தேசிய மின்வாரியத்திற்கு 115 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1271268

  19. இலங்கையில்... மீண்டும், பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றது பால் மாவின் விலை? இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் …

  20. யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, காணிக்கான ஆவணங்களை காட்டி முக்கியஸ்தர்கள் பேசிய போது பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு - அப்பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு பௌத்த விகாரை கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தீகவாபி ரஜமகா விகாரையின் …

    • 4 replies
    • 451 views
  21. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு... 13 பில்லியனுக்கும், அதிகமான... தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்! ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளன. நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியனவும் பணம் செலுத்த தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக மின்சார சபை 73 பில்லியன் ரூபாயினையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 56 பில்லியன்…

  22. இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையமும் இராணுவமயம்! March 9, 2022 இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவராக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நிறுவனத்தின் தலைவரான நாலக்க பெரேரா, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2022/173930

    • 1 reply
    • 310 views
  23. விமல்... இன்று நாடாளுமன்றத்தில், விசேட அறிவிப்பு ஒன்றினை... வெளியிடவுள்ளதாக தகவல்! நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்றைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைத்தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1271157

    • 5 replies
    • 412 views
  24. நாடாளுமன்றத்திலும்... மட்டுப் படுத்தப்பட்டது, மின்பாவனை! நாடாளுமன்றத்திலும் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வினை இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1271119

  25. எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகத்திலும் வீழ்ச்சி! நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி வர்த்தகம் 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன சாரதிகள் தோட்டங்களுக்கு சென்று காய்கறிகளை கொள்வனவு செய்யவோ அல்லது சந்தைக்கு கொண்டு வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் தொழில் முனைவோர் எண்ணிக்கை குறைவடைந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.