ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் தன்னகப்படுத்துவதை ஏற்க முடியாது – வியாழேந்திரன். மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னக படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக …
-
- 0 replies
- 234 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலுக்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்- மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி. சந்திரகாந்தன். கடந்தகாலத்தை போல் விவசாயிகளும் பண்ணையாளர்களும் இன முறுகல் இடம்பெற வாய்ப்பில்லை ஏனென்றால் அபிவிருத்திதிட்ட காலங்களில் எந்த விவசாயிகளும் ஊடுறுவகூடாது என கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பாற்பண்ணையாளர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறும் அடிக்கடி களவிஜயம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டு ள்ளேன். விவசாயிகள் கடந்த கால பிரச்சினைகளை பற்றி கூறியுள்ளனர் அதிகாரிகளிடம் எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லைப் பிரச்சினைக்காக மட்டும் குரல் கொடுக்காது அரசியல்காக மட்டுமன்றி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவ…
-
- 0 replies
- 174 views
-
-
இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீனக் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளமையை கடல்சார் போக்குவரத்து இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. சேதன உரத் தொகுதியை ஏற்றிய குறித்த கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், கப்பல் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அதிகாரசபையின் அதிகாரி, கடல் மாரக்கமாகப் பயணிக்கும் போது இலங்கை எல்லைக்குள் நுழைவது சட்ட விரோதமாகாது என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மாத்திரமே இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பை கண்காணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீ…
-
- 2 replies
- 449 views
- 1 follower
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். அண்மைக் காலமாக இத்தலைப்பு பொதுத் தலங்களில் பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது. இலங்கையில் வாழக்கூடிய சகல பிரஜைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அமைப்பில், பல நூற்றாண்டுகள் அவரவரது மத விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் பேணி, மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க…
-
- 4 replies
- 347 views
-
-
ஆர்.ராம் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து நாளை மறுதினம் இறுதி செய்யவுள்ளன. இந்தக் கடிதத்தினை இறுதி செய்யும் ஒருங்கிணைவுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி அதன் அரசியல் பீடத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக பங்கேற்கப்போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், ஏற்கனவே திட்டமிட்டபடி குறித்த ஒருங்கிணைவுக் கூட்டம் நடைபெறும் என்று ஏனைய அரசியல் கட்சிகளான, ரெலோ, புளொட், தமிழ்…
-
- 2 replies
- 402 views
- 1 follower
-
-
கிளாஸ்கோ நகரை அடைந்தார் ஜனாதிபதி COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், அந்நாட்டு நேரப்படி இன்று (30) பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அம்மையார், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார். காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை (…
-
- 0 replies
- 302 views
-
-
மீண்டும் விக்கி முதல்வராக ஆதரவு இல்லை; சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு October 31, 2021 நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கினால் ஆதரவளிக்கப்போவதில்லை என, சி.வி.விக்னேஸ்வரன் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. டான் தமிழ் ஒளியில் நேற்று இரவு ஒளிபரப்பான நெற்றிக்கண் நிகழ்ச்சியில், கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை திட்டவட்டமாகத் தெரிவித்தார். நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வடக்கு முதலமைச்சராக களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளமை தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப…
-
- 1 reply
- 412 views
-
-
இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு ஆர்.ராம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை ‘இலங்கை பௌத்த குடியரசாக’ பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பாணுபிரகாஷ் மற்று…
-
- 5 replies
- 734 views
- 1 follower
-
-
அமைச்சர் டக்ளஸ் - செந்தில் தொண்டமானிடம் சுமந்திரன் விடுத்துள்ள விசேட கோரிக்கை ஆர்.ராம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குள் தமிழர்களை உள்வாங்கும் செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவும், செந்தில் தொண்டமானும் துணைபோகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களின் அடிப்படைகளையும், நாட்டின் பல்லினத் தன்மையையும் அடியோடு அழிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ள ஞானசாரர் தலைமையிலா…
-
- 2 replies
- 420 views
-
-
கூட்டமைப்புடன் பேசுவதற்கு தயாராகிறார் ஜனாதிபதி கோட்டாபய ஆர்.ராம் ஸ்கொட்லாந்திலிருந்து திரும்பியதும் செயற்பாடுகள் முன்னெடுப்பு இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை அளிப்பு தகவல் கிடைக்கவில்லை என்கிறது கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களிடத்தில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தைக்கான செயற்பாட்டு ர…
-
- 0 replies
- 165 views
-
-
சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்! தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இதன்போது விகிதார முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சீர்திருத்தம் – பொது நிலைப்பாடு 1)பலமான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்க…
-
- 0 replies
- 150 views
-
-
ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக 203 பேருக்கு அரச நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு. October 30, 2021 ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ன கருவிற்கு அமைய நாட்டின் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வருமானம் குறைந்த குடும்பங்களை சார்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அரச தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று(30) பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்…
-
- 0 replies
- 137 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி பறிகொடுத்த தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியே போராட்டங்களை மேற்கொள்கின்றபோதும் அந்த இடத்தில் புலனாய்வாளர்கள் குவிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் ஏன் அவர்கள் தம்மை …
-
- 0 replies
- 190 views
-
-
இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அதன் முயற்சிகளில் இலங்கைக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகமான ECHO வழங்கும் இந்த மானியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையில் உள்ள World Vision மூலம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வளங்கள் Covid-19 மற்றும் இலங்கையில் அதன் சமூகப் பொருளாதார விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை நிறைவு செய்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய உதவித்தொகையானது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவ…
-
- 0 replies
- 171 views
-
-
இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது – நீதியரசர் விக்னேஸ்வரன் இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் Global Rights Compliance LLP (GRC) என்ற சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தி…
-
- 1 reply
- 214 views
-
-
யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு! யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கி கோரியுள்ளது . அது தொடர்பில் இரத்த வங்கி குறிப்பிட்டு உள்ளதாவது, ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கிக்குச் சென்று இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், போட்ட தினத்திலிருந்து ஒரு கிழமையின் பி…
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்வு இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளன.இதனையடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதேவேளை பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதேவேளை ஆயிரத்து 600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.இதேவேளை, முன்னர் போன்று வழமையான நேரங்களுக்கு அமைய ந…
-
- 0 replies
- 138 views
-
-
தமிழ் MPக்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் என அறிவிப்பு! October 30, 2021 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்று அவற்றினை முன்னிறுத்தி தமது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்களாட்சி செயற்குழு அறிவித்துள்ளது. அவ்வேலைத்திட்டத்திறகான கேள்விக் கொத்துக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.மிக விரைவில் அவற்றை மக்கள் மத்தியில் சமர்ப்பித்து அவர்களிடம் அபிப்பிராயங்கள் பெறப்படுமென செயற்குழு சார்பில் சட்டத்தரணி எப்.எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்கும் வேலைத்திட்டத்தை ஆரமப்பித்துள்ள தமிழ் மக்களாட்சி செயற்குழுவின் ச…
-
- 0 replies
- 121 views
-
-
காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் பரிகாரம் - டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் காணாமல் போனோர் விவகாரதத்திற்கு பரிகாரம் காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (29.10.2021) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதியினால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் காணாமல் போனோரின் உறவினர்களை சந்…
-
- 1 reply
- 390 views
-
-
யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத் தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவி உயர்வைப் பேரவை அங்கீகர…
-
- 1 reply
- 522 views
-
-
பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்ய வரமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரத்தடி என்னும் தமிழர் பகுதிக்குள் தொல்பொருள் செயலணியினால் எல்லைக்கற்கல் நடுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எத…
-
- 0 replies
- 303 views
-
-
வவுனியா வடக்கில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம் செய்ய தீர்மானம்! வவுனியா வடக்கில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தினை கண்டித்து தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா வடக்கில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தினை கண்டிக்கும் வகையில் போராட்டத்தினை நடத்துவதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் கூடிய தமிழ் தேசியக்கட்சிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரி…
-
- 0 replies
- 334 views
-
-
இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் October 30, 2021 இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற அனுமதித்து பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடற்படையிரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன் தினம் மீனவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதிமன்ற நீதிபதி, மீனவர்கள் அனைவரையும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கடற்படைத்…
-
- 1 reply
- 397 views
-
-
நியூசிலாந்தில் சிறுபான்மையினருக்கான உரிமை சமமாக வழங்குவதை போன்று இங்கும் வழங்கப்பட வேண்டும் – சாணக்கியன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும், இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டனுக்கும் இடையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். “நியூசிலாந்து நாடானது எமது நாட்டைப் போன்றே அங்கும் சிறுபான்மை மற்றும் ஆதி குடியிருப்புக்களை கொண்ட நாடாகும் ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய சம உரிமை அந்நாட்டு பிரதமரினால் வழங்கப்படுகின்றது. அந் நாட்டு பிரதமர் எம்மைப் போன்ற நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்க…
-
- 0 replies
- 356 views
-
-
எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.திட்டமிட்ட வகையில் அனைத்து கோணங்களிலும் தமிழர்களை நசுக்கி, தமிழர்கள் தொடர்ந்தும் இந்த தீவில் வாழ முடியாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழர் பகுதியில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ப…
-
- 1 reply
- 296 views
-