ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
இந்தியா - இலங்கை இருதரப்பு கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. மித்ர சக்தி என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் இந்த இராணுவ பயிற்சியானது 8 ஆவது தடவையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த இரு தரப்பு பயிற்சியானது எதிர்வரும் 15 ஆம் திகதி அம்பாறை இராணுவ பயிற்சி முகாமில் நடைப்பெறுகின்றது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 பேர் குழுவுடன் இலங்கை பாதுகாப்பு படைகள் கூட்டுபயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளனர். இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான நெருங்கிய உறவை மேம்படுத்துவதோடு, கிளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறந்த செயல்பாடுகளைப் பகிர்வதையும் மேம்படுத்துவதையும் இந்தப் பயிற்சியின் நோக்க என பாதுகாப்பு…
-
- 1 reply
- 285 views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து, 20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படை வீரர்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார். மாவட்ட கொவிட்-19 நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது மாவட்டச…
-
- 0 replies
- 405 views
-
-
யாழ் .குருநகர் பகுதியில் இருந்து நேற்றையதினம் இரவு 12 மணியளவில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற நிலையில், இந்திய மீனவர் படகால் மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம், இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கக்கடதீவு கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கக்கடதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர் படகு இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்திய தோடு படகில் இருந்தவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாக குருநகர் மீனவர் தெரிவிக்கின்றனர். இதேவேளை குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்து…
-
- 1 reply
- 369 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பலவீனமான அரசதலைவர் என்று குறிப்பிட்டால் மக்கள் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். அரசாங்கம் நாட்டை பாதுகாக்க வந்துள்ளதா, அழிக்க வந்துள்ளதா என்று எண்ண தோன்றுகிறது. கொவிட் வைரஸ் தாக்கம் இல்லாமலிருந்தால் நாட்டு மக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடுவார்கள். நாட்டை பாதுகாக்க சர்வ மத தலைவர்களையும் ஒன்றினைத்து சம்மேளனத்தை நடத்த தீர்மானித்துள்ளோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின தலைவரும்,அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் க…
-
- 1 reply
- 390 views
-
-
வடக்கில்... காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள், இடம் பெறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். வன சரணாலயப் பகுதிகளில் தனியார் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்கள் இருந்தால் அவை கையகப்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் முல்லைத்தீவில் நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகியன வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்…
-
- 1 reply
- 257 views
-
-
தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில்... இந்தியா, உறுதியாக இருக்க வேண்டும் – கூட்டமைப்பு எடுத்துரைப்பு 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தார். தமிழ் மக்களின் நீண்ட…
-
- 2 replies
- 407 views
-
-
அரசியல் அழுத்தம் காரணமாக... உண்மையை மறைக்கும், நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் குற்றச்சாட்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் உள்ளிட்ட காரணிகளினால் தாக்குதலின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொதுப் பிரச்சினை தொடர்பாகவும் அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்ந்தது என்…
-
- 0 replies
- 211 views
-
-
நாட்டின் வளங்களை விற்க... ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை உள்ளது – சோபித தேரர் நாட்டின் வளங்களை விற்க ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என ஒமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாடு குறித்து பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுவரும் நிலையில் சோபித தேரரும் இதனை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு பாரதூரமான குற்றம் என குறிப்பிட்ட அவர் தேசிய வளங்களை தன்னிச்சையாக விற்பனை செய்வதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தாங்கள் ஆட்சியில் நீடிக்கப்போவதில்லை என்ற எண்ணத்தில் நாட்டை ஆட்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்…
-
- 0 replies
- 217 views
-
-
இந்திய நிறுவனத்துடனான உன்படிக்கையை... புதுப்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கையை நீடிப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தும் சுமார் 20 எண்ணெய் குதங்களை நேரில் சென்று பார்வையிட்டார். ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கை 2024 ஆம் ஆண்டளவில் முடிவிற்கு வரவுள்ளது. எனவே குறித்த ஒப்பந்தத்தை நீடிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் …
-
- 0 replies
- 162 views
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 24 பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை கொழும்பு விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேவாலயங்கள் மற்றும் ஹொட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, வழக்கின் 24 பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்க அண்மையில் உத்தரவிடப்பட்டது. அதற்கமைய, இன்று நீதிமன்றில் பிரதிவாதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 219 views
-
-
இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் கையளிப்பு இலங்கை இந்திய நட்புறவு திட்டதின் கீழ் வவுனியாவில் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் இன்று (திங்கட்கிழமை) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இந்திய நிதி உதவி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது அந்தவகையில் வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் அருனோதயாநகரில் பூர்த்திசெய்யப்பட்ட 24 வீடுகள் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பயனாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்ட வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, இந்திய துணை தூதுவர்; ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வீடுகளை தி…
-
- 0 replies
- 187 views
-
-
கதிர்காமத்தில்... ரிமேற் ரிமோட் கொன்ரோலுடன், மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது! கதிர்காமத்தில் தொலைக்காட்சியின் ரிமேற் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஞானசூரியம் சதுக்கத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் தாம் கொக்கட்டிச்சோலை கோவிலுக்கு மோட்டர் சைக்கிளில் சென்று வருவதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறி கதிர்காமத்துக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கதிர்காமத்து பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று இரவு இராணுவத்தினர் வீதிச் சோதனையில் இவர்களை நிறுத்தி சோதனையிட்டபோது இவர்களின் பையில் றி…
-
- 0 replies
- 180 views
-
-
திருகோணமலையில்... உள்ள 100 எண்ணெய் தாங்கிகள், ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை ஒட்டியுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் ஒப்படைக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 1987 மற்றும் 2003 ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் குறித்த எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன இந்நிலையில் அவற்றினை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்…
-
- 0 replies
- 135 views
-
-
இலங்கையில்... சடுதியாகக் குறைந்தது கொரோனா பாதிப்பு இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 21 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 374 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 30 ஆயிரத்து 742 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://…
-
- 0 replies
- 181 views
-
-
பண்டோரா ஆவணம் குறித்து சுயாதீன விசாரணை வேண்டும் – ட்ரான்ஸ்பரன்சி பண்டோரா பேப்பர்ஸில் வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை விரைவாக முன்னெடுக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிதி கொடுக்கல் வாங்கலின்போது இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது குறித்து விரிவான உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. உலகத் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகளின் இரகசிய நிதி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக மீண்டும் உலகிற்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் நீர் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் கட…
-
- 0 replies
- 208 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது. அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம், அரசியல் கொடுக்கல்வாங்கள் உள்ளிட்ட காரணிகளினால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இன்றைய சூழ்நிலையில் பல பொதுப்பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இதனால் நடுத்தர மக்கள்பெரும் சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். பாடசாலைகள் தொடர்ந்து…
-
- 0 replies
- 364 views
-
-
(ஆர்.யசி) 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் அதனூடாக முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், நாட்டில் தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும் அரசாங்கத்திடம் தான் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள், அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இந்திய வலியுறுத்திய அதே நிலைப்பாட்டில் நாமும் உள்ளோம் என்பதையும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், டெல்லியில் விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தவும…
-
- 1 reply
- 339 views
-
-
இந்திய நலன்களுக்கு வடக்கு கிழக்கை பயன்படுத்த இடமளியோம்- இந்தியத் துணைத்தூதுவரிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு October 4, 2021 இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்துகின்ற வகையிலே, வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பினை பயன்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எக்காரணம் கொண்டும் ஒத்துழைக்காது என்பதுடன், அத்தகைய விடயங்களை எதிர்ப்போம் என யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனிடம் தான் தெரிவித்துள்ளதாக, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்…
-
- 9 replies
- 878 views
-
-
தமிழ் மக்களாட்சிச் செயற்குழுவின் கடந்த எட்டு நாட் செயற்பாட்டு அடைவுகள், மற்றும் பொதுத்தொடர்புச் சட்டத்தரணிகள் குழு நியமனம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தொருமித்து ஈழத்தமிழர் கூட்டுரிமைகளை உலக அரங்குக்கு முன்னெடுக்கத் தகுந்த அணுகுமுறையொன்றை, ஆராய்ந்து வகுக்கும் பணிக்கு, பரந்துபட்ட வரவேற்பும் பங்கேற்பும், செயற்பாட்டு முயற்சி அறிவிக்கப்பட்ட எட்டு நாட்களுக்குள் கிடைத்திருப்பது, வடக்கு-கிழக்கில் உள்ள வரலாற்றுத் தேவையை மட்டுமல்ல, மக்களின் ஆதங்கத்தையும் வேணவாவையும் வெளிப்படுத்துகின்றது. முதலாவதாக, இந்த முயற்சியின் பிரதான இலக்கு, ஈழத்தமிழர்களின் தேசிய அரசியற் கூட்டுரிமைகளையும் கூட்டுக்கோரிக்கைகளையும் மக்கள் தமது நாடாளுமன…
-
- 4 replies
- 351 views
-
-
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது! பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டார். அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர். அதனால் அப்பகுதிய…
-
- 0 replies
- 250 views
-
-
இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ் இலங்கை- இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லாவின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கையில் தங்கியிருக்கும் குறித்த காலகட்டத்தில், மிகப்பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் கிராமங்களை பலப்படுத்தும் வேலைதிட்டங்…
-
- 1 reply
- 287 views
-
-
ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே... ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது ! 019 ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை இரண்டுபேர் மீதுமட்டும் சுமத்தி சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் இருவரால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதன் பின்னணியில் பெரிய குழு இருப்பதாகவும் தலதா அத்துகோரள குறிப்பிட்…
-
- 3 replies
- 449 views
- 1 follower
-
-
கறுப்பு பணத்தை... பதுக்கி வைத்தவர்கள் பட்டியலில், நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் அம்பலம்! உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில் 90 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் இரகசிய உடைமைகள் குறித்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2010 முதல் 2015 வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் பிரதி அமைச்சராக பணியாற்றியா நிரு…
-
- 0 replies
- 320 views
-
-
தொடர்ச்சியாக... 5 நாட்கள் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு கட்சித்தலைவர் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக அரசாங்கத்தினால் இறுதி நேரத்தில் பதில் வழங்க முடியாமல் போன கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. அதேநேரம், நாளை, நிதி மற்றும் வரி தொடர்பான கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன. கனிய எண்ணெய் வள சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இதேவேளை, அட…
-
- 0 replies
- 178 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை... சந்திக்கும் கூட்டமைப்பு! இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் தீர்வு, இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2021/1242733 ############### ################ ############## இது 100, 000 மாவது சந்திப்பு என, அரசியல் அவதானிக…
-
- 0 replies
- 170 views
-