ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது! அடிப்படைவாதத்தைப் போதித்ததாக இருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாதச் செயற்பாடு தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணையின் ஒரு கட்டமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த. …
-
- 0 replies
- 529 views
-
-
தமிழ் அரசியல் கைதியின் தாயொருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்! தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாரான கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் தேவராசா தேவராணி, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறார். இவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கைதிகளுக்க…
-
- 0 replies
- 276 views
-
-
யாழ். மாநகர சபை காவல் படையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு யாழ்ப்பாணம் மாநகர சபையால் காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக…
-
- 8 replies
- 773 views
-
-
சமஷ்டி அரசமைப்பின் மூலமாகவே நாட்டைப் பாதுகாக்க முடியும் – நிபுணர் குழுவிடம் விக்கி 58 Views சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமையிலான அரசமைப்பு உருவாக்கப்பட்டதால்தான் இந்த நாடு பேரழிவிலிருந்து மீண்டெழுந்து அமைதி, சமாதானம், அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகிய உயர் வழிகளில் மேலுயர முடியும் என புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழு முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தெரிவித்திருக்கின்றது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள அரசியலமைப்பு நிபுணர் குழுவின் கலந்துரையாடல் மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் மக்கள் தே…
-
- 0 replies
- 318 views
-
-
ஒற்றையாட்சி பெருந்தோல்வி ; கூட்டாட்சி அல்லது சமஷ்டியே உகந்த தீர்வு புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்மக்கள் தேசிய கூட்டணி யின் யோசனை தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு கூட்டு சம்மேளன முறைமையிலான ஏற்பாட்டை உள்ளீர்த்துக்கொள்ளுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி யோசனை தெரிவித்திருப்பதுடன் இந்த சமஷ்டி முறைமையில் இலங்கை நான்கு மாநிலங்களாக இருக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நிபுணர் குழுவை நேற்றுப் புதன்கிழமை சந்தித்தபோது இந்த யோசனையை முன்வைத்திருக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்டஎம்.பி.யான சி. வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இந்த யோசனையி…
-
- 0 replies
- 256 views
-
-
வெளியே வா’ பொன்சேகாவுக்கு சமல் சவால் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பதற்றமான நிலைமையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்கு…
-
- 0 replies
- 516 views
-
-
சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சாணக்கியன்! சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´இலங்கையர்கள் குறித்து வெளிநாட்டவர் மத்தியில் நல்லதொரு எண்ணப்பாடு உள்ளது. இலங்கையர்கள் இரக்கம் கொண்டவர்கள், நல்லவர்கள் என்ற நல்லதொரு விம்பம் உள்ளது. இலங்கையர்கள் வெளிநாட்டவர்களிடம் அன்பாக இருந்தாலும் கூட சக இலங்கையர்களிடம் அவ்வாறு இருப்பதில்லை. 1949 ஆம் ஆண்டில் …
-
- 0 replies
- 562 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் 48 Views உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக இருவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயித்த ஞாயிறு தாக்குதலாளிகளின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறியுமாறு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது சிறையிலுள்ள மௌலவி. மொஹமட் இப்ராஹிம் முகமது நௌபர் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே பிரதான சூத்திரதாரிகளா…
-
- 2 replies
- 505 views
-
-
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை அலட்சியமாகயிருக்க முடியாது -ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் நாடு ஐக்கியப்பட்டுஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் …
-
- 4 replies
- 474 views
-
-
புலிகளால் கூட ஒரே நேரத்தில்... 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ் விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும் சர்வதேச ரீதியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 97 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 36 விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவோ குற்றங்களை மூடி மறை…
-
- 1 reply
- 503 views
-
-
ஒரு இனத்தை மையப்படுத்தி அதனை அடக்க முற்படவேண்டாம் - ரிஷாத் பதியுதீன் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஒரு இனத்தை மாத்திரம் இலக்குவைத்து அடக்க முற்படக்கூடாது. இஸ்லாத்துக்கு எதிராக ஒருசில மதகுருமார்கள் செயற்படுகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அதுவே நாட்டில் இடம்பெறும் பேரழிவுகளுக்கு காரணமாக அமையலாம் என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டிலே ஒரு இனத்தை மையப்படு…
-
- 0 replies
- 486 views
-
-
“கூட்டு சமஷ்டி முறைமையே தீர்வாக அமையும்”: புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல் இலங்கையின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவினரை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஒற்றை ஆட்சியின் கீழ் பெரும்பான்…
-
- 1 reply
- 250 views
-
-
புதிய சட்டமூலம் நிறைவேறியதும் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானம் SayanolipavanApril 8, 2021 மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர் மானித்துள்ளதாகவும் அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாகத் தேர்தலை நடத்தும் நிலைப் பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதெனவும் அமைச்சரவை பேச்சாளர் கெெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கமைய விருப்பு வாக்கு முறைமையை நீக்கி, 70வீதம் தொகுதிவாரி முறைமையின் அடிப்படையிலும் 30வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரி…
-
- 0 replies
- 227 views
-
-
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது – இரா.சாணக்கியன் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.இவ்வாறான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது. அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை.ஏனெனில், இவர்கள்தான் கடந்த காலங்களில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியவர்கள். அவரைப் போன்ற ஒருவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன…
-
- 0 replies
- 388 views
-
-
புலிகளின் தலைவரின் படத்தை அலைபேசியில் வைத்திருந்தவர் விளக்கமறியலில்! April 8, 2021 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். வழக்கை வி…
-
- 0 replies
- 388 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தாவிடின் வீதிக்கிறங்கி போராடுவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். கத்தோலிக்க மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. குற்றவாளிகளை சட்டத்தில் முன்னிலைப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொ…
-
- 1 reply
- 436 views
-
-
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது 65 என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் . அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மகனைத்தேடிய தந்தை மரணம் ! தொடரும் துயரம் ! | Virakesari.lk
-
- 0 replies
- 473 views
-
-
(எம்.மனோசித்ரா) அமைச்சரொருவர் முன்வைக்கும் எந்தவொரு யோசனையும் உடனடியாக சட்டமாக்கப்பட மாட்டாது. அமைச்சரவையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளில் காலத்திற்கு உகந்தவை தொடர்பில் மாத்திரமே துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்டப்பட்ட கேள்விக்குக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கேள்வி : புர்கா தடை மற்றும் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் , நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்காகவா? அந்த யோச…
-
- 0 replies
- 303 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுங்கள் – பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல் 25 Views இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் கடற்றொழில் அமைச்சர் கூறியிருந்தார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உரிமை இதன் மூலம் மீறப்படும் . கடற்றொழில் அமைச்சர் அவரின் கூற்றை மீளப்…
-
- 0 replies
- 188 views
-
-
’ஏப்ரல் 10இல் கிடைக்கும்’ அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளிலிருந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமெனத் தெரிவித்த பெருந்தோட்டத் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, இதுவொரு பாரிய வெற்றியெனவும் தெரிவித்தார். ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காத கம்பனிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கான எந்தவிதமான யோசனைகளும் இல்லை எனவும் அனைத்துப் பெருந்தோட்ட நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குமெனத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். சபாநாயகர் தலைமையில் நேற்று (06) கூடிய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, வாய்மூல…
-
- 0 replies
- 263 views
-
-
கடந்த அரசாங்கத்தின் போது பாரிய நிதி முறைகேடு - CID யில் முறைப்பாடு! கடந்த அரசாங்கத்தின் போது, வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அரசாங்கம் வழங்குவதில் பாரிய நிதி முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மதுர விதானகே, “குறிப்பாக ஜனவரி 2015 முதல் 2019 இறுதி வரை, வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் வாங்குவதில் இலங்கை பொது சுகாதாரத் துறை பாரிய முறைகேடுகளை செய்திருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தோம். பல நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டது. அதன்படி, 2015-2019 காலகட்டத்தில், அரசு வைத்த…
-
- 0 replies
- 317 views
-
-
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும் வலிகளையும், வேதனைகளையும் சுமந்திருந்தால், இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து சென்றிருந்தால் எங்களுடைய வலிகளும், ஆதங்கங்களும் சுமந்திரனுக்கு புரிந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்க்ப்பட்டவர்களின் சங்க தலைவி கனகரஞ்சினி கரு்தது தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சாட்சியங்கள் போதாது என சுமந்திரன் தெரிவித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது அவர்…
-
- 1 reply
- 328 views
-
-
பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சபை அமர்வில் பங்கேற்காவிட்டால் அவரின் எம்.பி. பதவி பறிபோய்விடும்.எனினும், 3 மாதங்களுக்கு ஒரு தடவை விடுமுறை பெறலாம். அவ்வாறானதொரு அனுமதியை ரஞ்சனுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்துவிட்டார் .ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றத்தால் நான்கரை வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பாக இன…
-
- 0 replies
- 379 views
-
-
தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு இந்தியாவில் கொரோனா நோய்த்தொறின் பாதிப்பு அதிகரித்தால் தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என சீரம் நிறுவனம் எச்சரித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, நாட்டில் புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் குறைந்துவிட்டால், ஜூன் மாதத்திற்குள் அஸ்ட்ராசெனகா அளவுகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க முடியும் என கூறியுள்ளார். இருப்பினும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரிப்பதால் அதிக தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார். ஏனெனில் இந்திய சீரம் நிறுவனம் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இலங்கைக…
-
- 0 replies
- 219 views
-
-
நமது அரசியல் நிருபர் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக இணைந்து பயணிப்பதற்கான சாத்தியம் அதிகரித்திருக்கின்றது. முக்கியமாக இரண்டு தரப்பினரும் இணைந்து பயணிப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் விருப்பத்துடன் இருப்பதாகவும் அதற்கான பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளதாகவும் எனினும் எந்த முறையில் இணைந்து கொள்வது என்பது தொடர்பான ஒரு பொறிமுறையை உருவாக்க முடியாமையே தாமதத்துக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உ…
-
- 3 replies
- 696 views
-