Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (நா.தனுஜா) புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள். இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். அதேவேளை இருதரப்ப…

    • 19 replies
    • 1.8k views
  2. உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மீளமைக்கப்பட்டு இன்று.. திறக்கப்பட்டது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை …

  3. இலங்கையில் புதுவகையான கொரோனா வைரஸ் ? April 22, 2021 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த பதிவில் காணப்படுவதாவது, இலங்கையில் இதுவரை காணப்படாத புது வகையான கொரோனா வைரசு இனங்காணப்பட்டு கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளது. இது குறித்த விஞ்ஞான ரீதியானஆய்வு மற்றும் தகவல் மதிப்பீட்டாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம். நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன…

  4. யாழ். பல்கலைக்கழகத்தில்.. மீள அமைக்கப்பட்டுள்ள, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. தமது அழைப்பின் பேரில், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராசா திறந்துவைப்பார் என பல்கலை மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இடித்தழிக்கப்பட்டது. இதையடுத்து, அதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன், மக்களின் எழுச்சி மற்றும் பன்னாட்டு…

  5. பொது ஒழுங்கை பாதுகாக்க முப்படையினருக்கு அழைப்பு -வர்த்தமானி வெளியீடு 24 Views நாடு முழுவதும் இன்று (22) முதல் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக dailymirro செய்தி வெளியிட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு (அத்தியாயம் 40) மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின் படி, கொழும்பு, கம்பஹா, களுத்தறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, ம…

  6. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம் 103 Views தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையி…

    • 21 replies
    • 2.2k views
  7. சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இம்மாதம் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்திது சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் (adaderana.lk)

  8. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசாலையில் அனுமதி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத்தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது. எனினும் அதனைக் கண்டித்து எழ…

    • 2 replies
    • 666 views
  9. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னணியில்இருந்த சூத்திரதாரி யார்? டி . பி . எஸ் . ஜெயராஜ் ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது , இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையையும் உலகத்தையும் உலுக்கியது. அந்த துரதி ஷ்டமான உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை காலையில், தற்கொலை குண்டுதாரிகள் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று இடங்களிலும்மூன்றுக்கும் அதிகமான ஹோட்டல்களையும் மூன்று தேவாலயங்களையும் இலக்கு வைத்தனர்; இஸ்லாமிய ஜிஹாதி சித்தாந்தத்திற்கு ஆட் சேர்த் ததாகக் கூறப்படும் ஒரு குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டவிதத்தில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள…

  10. சிறுபான்மையினரை இலக்குவைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த கூடாது - சர்வதேச மன்னிப்புச்சபை (நா.தனுஜா) உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று இருவருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. …

  11. யாழ்.நகர் மத்தியை கழுவி, மருந்து விசிறும் இராணுவத்தினர் April 22, 2021 யாழ்.நகரின் மத்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வியாபர நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நீரினால் கழுவி சுத்தம் செய்து , கிருமி தொற்று நீக்கி மருந்துகளை விசிறும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். யாழ்.நகர் மத்தி பகுதியில் கடந்த மாதம் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன அதன் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீளதிறக்கப்பட்டு வியாபர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்போது புத்தாண்டை முன்னிட்டு பெருமளவானோர் அப்பகுதியில் கூடி உடுபுடவைகள் வாங்கியிருந்தனர். இந்நிலையில் …

    • 2 replies
    • 728 views
  12. ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகொண்ட சொனிக் சொனிக் என்பவர் யார்? தாக்குதலை மேற்கொண்டவர்கள் பொஸ் என குறிப்பிட்டது யாரை? நாடாளுமன்றத்தில் மனுசநாணயக்கார கேள்வி,? அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தினார் சொனிக் சொனிக் என்பவர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சொனிக் சொனிக் என்பவர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. சொனிக்சொனிக் என்ற பெயரினால் அழைக்கப்படும் நபர் ஒருவர…

    • 0 replies
    • 273 views
  13. கொழும்புக்கான விமான சேவைகளை வாரத்துக்கு 7 தடவைகளாக மே 3 முதல் அதிகரிக்கிறது எமிரேட்ஸ் கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தனது விமான சேவைகளை 6-இலிருந்து 7-ஆக அதிகரிப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. அதிகரிக்கப்படும் 7ஆவது விமான சேவை மே 3ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. சந்தையில் காணப்படும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காகவும் கொழும்புக்கும் கொழும்பிலிருந்தும் டுபாய் ஊடான தொடர்புகளை அதிகரிப்பதற்காகவும் இந்த மேலதிக சேவை உதவும். புதிதாகச் சேர்க்கப்பட்ட விமான சேவையானது ஒவ்வொரு திங்கட்கிழமையும் செயற்படும். EK650 என்ற இந்த எமிரேட்ஸ் விமானம் டுபாயிலிருந்து அந்நாட்டு நேரப்படி அதிகாலை 02:05க்குப் புறப்பட்டு கொழும்பை இலங்கை நேரப்படி காலை 08:00 மணிக்கு வந்தடையும். திரும்பி…

    • 0 replies
    • 261 views
  14. “திருமலை மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்“ – துஷாந்தன் April 22, 2021 திருமலையில் இடம்பெறும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை கேட்பதற்கு எந்த தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்களும் முன்வருவதில்லை, அங்கு வாழும் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என நேற்று (21) இரவு திருமலை மாவட்டம் அன்புவழிபுரத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் பேசும் போது அதன் உறுப்பினர் துஷாந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இங்கு இலங்கை அரசின் நில ஆக்கிரமிப்பு, கைது செய்தல், துன்புறுத்தல்கள் என்பன அதிகரித்து வருகின்றது. தினமும் காலையில் இருந்து மாலை வரை பெருமளவான பிரச்சனைகளை சந்தித்து…

  15. வடக்கில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் – ஆ. கேதீஸ்வரன் எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும், மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்து நிலைமை காணப்படுகின்றது. அதிகரித்த கொரோனா தொற்றின் காரணமாக சில பகுதிகளை முடக்க வேண்டி ஏற்பட்டது. அதேவேளை, கடந்த வாரத்தில் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.…

    • 1 reply
    • 371 views
  16. எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை – இராணுவத்தளபதி! எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதை சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது மக்கள் முகமூடி அணிவது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்ப்பது மிகவும் அவசியமானது எனவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1211538

  17. யுரேனியத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலால் பரபரப்பு – திருப்பி அனுப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இருப்பதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்பட வேண்டும் என்றாலும் குறித்த கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் எச்.எல்.அனில் ரஞ்சித் தெரிவித்தார். எனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு உரைமியாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஹம்பாந்தோட்டையில்…

    • 1 reply
    • 296 views
  18. தமிழர்கள் என்பதற்காகவா கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டது? - கஜேந்திரகுமார் April 21, 2021 28 ஆண்டுகள் இயங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்கியமை தமிழர்கள் என்பதற்காகவா நடைபெற்றது. என நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் தொிவித்துள்ளாா். இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். மேலும் அங்கு உரையாற்றிய அவா் உள்நாட்டு விவகார அமைச்சு இம்மாதம் 8ம்திகதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதமூலம் ஒரு அறிவிப்பினைச் செய்துள்ளது. அதாவது கல்முனைவடக்கு பிரதேச செயலாளர் பணியகமத்தினை கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் பணியகத்தின் உப பணியகமாக கருதுமாறு அக்கடித்தில் கேட்கப்பட்டுள்ளது.…

    • 1 reply
    • 364 views
  19. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீனக் கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் எனப்படும் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார். இருப்பினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கு…

    • 7 replies
    • 919 views
  20. ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படக் கூடாது – மன்னார் மறைமாவட்ட ஆயர் ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 2 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை ஒவ்வொரு வருடமும் மறக்காது நினைவுகூர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை இந்த குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களையம் அவர்களுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை என்றும் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்ட…

    • 1 reply
    • 471 views
  21. கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!! கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டங்களைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாளை (வியாழக்கிழமை) கள விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், சீனாவின் தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்வதற்கான சீனா தூதரகத்தின் அதிகாரம்…

    • 4 replies
    • 987 views
  22. யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்! யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவ கூடடத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை புனரமைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அப்போதைய வடக்கு ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோரின் முயற்சியினால், நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கிய ‘நாளைய இளைஞர்கள்’ அமைப்பின் நிதிப் பங்களி…

  23. தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது –கொழும்பு பேராயர் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் வெளிப்படுத்த தவறிவிட்டதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியின் ஆலயத்தில் இன்று காலை ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவாக இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், அரசியல் தலையீடு வெளிப்படையான விசாரணையின் தாமதத்திற்கு வழிவகுத்தது என குறிப்பிட்டார். எனவே ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மை வெளிப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை …

    • 0 replies
    • 329 views
  24. எவ்வாறு த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் 1990ம் ஆண்டு காத்தான்குடி ப‌ள்ளிவாய‌லுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்த‌ நூற்றுக்க‌ன‌க்கான‌ அப்பாவிக‌ளை கொன்ற‌தை ஏற்க‌ முடியாதோ அதே போன்ற‌ ஈன‌த்த‌ன‌மான‌ செய‌லே இதுவாகும். ஆனாலும் காத்தான்குடி தொழுகையாளிக‌ள் மீது ந‌ட‌ந்த‌ கொலைக‌ளுக்காக‌ முஸ்லிம் ச‌மூக‌ம் த‌மிழ் கிராம‌ங்க‌ளை தாக்கி கொள்ளை, கொலைக‌ளில் ஈடுப‌டாம‌ல் பொறுமை காத்த‌து. ஈஸ்ட‌ர் தாக்குத‌லை சேர்ந்தோர் முஸ்லிம் ச‌மூக‌த்தை சேந்த‌வ‌ர்க‌ள் என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ முஸ்லிம் ச‌மூக‌ம் இன்று வ‌ரை பாரிய‌ விலைக‌ளை கொடுத்துக்கொண்டிருக்கிற‌து. ஆனாலும் இந்த‌ இட‌த்தில் ம‌ல்க‌ம் கார்தின‌லை பாராட்ட‌ வேண்டும். அவ‌ர் இன்று வ‌ரை இந்த‌ தாக்குத‌லின் பின்ன‌ணியில் உள்ளோரை கண்ட‌றியும்ப‌டி அர‌சை வ‌ல…

    • 0 replies
    • 244 views
  25. 20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 64 Views நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதித்தின் பொகவான சந்தியிலே 20-04-2021 காலை இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கும் போது, இதுவரை காலமும் 15 கிலோ பச்சைத் தேயிலை பறித்தோம் ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ கொழுந்து நாளொன்று பரிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.