Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 47 உறுப்பு நாடுகளைக்கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அதேவேளை இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா மற்றும் சூடான் உட்பட14 நாடுகள் வாக்களிப்பில…

  2. தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களித்துள்ளது. மேலும் இந்த பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. இதேவேளை ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை வாக்களிப்பில் இருந்து விலகுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. https://athavannews.com/2021/1204235

  3. ஊடகங்கள் தொடர்பாக கோதாபயவின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு 25 Views பொது ஊடகம் தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ வெளியிட்ட கருத்து, ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் என ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ கடந்த மார்ச் 20 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலகத்தின் யோம்புவெல்தென்ன கிராமத்தில் நடைபெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வில் பங்கேற்று பொது ஊடகம் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது ஊடக ச…

  4. வவுனியாக்குளத்தினை பாதுகாக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர்கள் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாவட்டமானது தனிச்சிறப்பம்சமாக நூற்றுக்கணக்கான குளங்களைத் தன்னகத்தே கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். இங்கு குடிநீர்த்தேவைக்கான நிலத்தடி நீருக்கும் விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. பெயரி…

  5. குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை! முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. குருந்தூர் மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குறித்த எழுத்துமூல அறிவிப்பில் கோராப்பட்டுள்ளது. குறித்த 400 ஏக்கர் காணியில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்கு உரிய தமிழ் மக்களுடையது என்பதுடன், மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குவதாக கூறப்பட…

  6. Madawala News March 23, 2021 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) விடுதலைப் புலிகளின் காலங்களில் கூட காடுகள் அழிக்கப்பட வில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான விடயமாகும்.எனவே விடுதலைப் புலிகளின் காலத்தில் காடுகள் அழிக்கப்படவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.அது பொய்யான கருத்து.காடுகள் அழிக்கப்பட்டு தான் அவர்களது முகாம்கள் அமைக்கப்பட்டன.அதை யுத்த வெற்றியின் பின்னர் நாங்கள் அவதானித்து இருக்கின்றோம் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இலங்கையில் காடழிப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும்…

  7. மண் அகழ்வுக்கு கொடுக்கப் படுகின்ற அனுமதியே மேலதிக காடழிப்பிற்கு காரணம் – எம்.ஏ.சுமந்திரன் 32 Views வவுனியா- ஓமந்தை- கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற மண் அகழ்வு தொடர்பில் கிராம மக்கள் மற்றும் கிராம அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழாம் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். வவுனியா- ஓமந்தை- கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற கிரவல் அகழ்வு தொடர்பாக அபிவிருத்தி குழுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய கூட்டங்களில் பல தடவைகள் பொது அமைப்புகளால் குறித்த விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், குறித்த விடயத்தை ஆராயும் முகம…

  8. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குத் தமது கண்டனத்தை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் இஸடீன் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார். அவர் எமது நாட்டின் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்த…

    • 8 replies
    • 917 views
  9. வடக்கு, கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை 24 Views வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுகின்ற பெருமளவான அதிபர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு அதனால் தீராத நோய்கள் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கின்றன என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கலை வெளியிட்டுள்ளது. சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. 01. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம், ஆசிரிய நியமனம் என்பவற்றில் பல்வேறு குழறுபடிகள் நடைபெறுகின்றன. பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப அதிபர்கள் நியமிக்கப்படுவதுமில்லை. வெற்றிடங்களை நிரப்புவதும் இல்லை. அதிபர் சேவை …

  10. இலங்கைக்குதான் கச்சத்தீவு சொந்தம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை- விமல் கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. ஆகையால் அதனை இந்தியாவுக்கு ஒருபோதும் தாரைவார்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீளப்பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கச்சதீவு இலங்கைக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதென இந்திய மத்திய அரசு ஒப்பந்தமொன்றில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்…

  11. வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பெற்றோரால் குழப்பநிலை 52 Views வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (22) முற்றுகையிடப்பட்டது. அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் பாடசாலை தவணை விடுமுறையையடுத்து அவர்கள் வேறு செயற்திட்டத்திற்காக மீள அழைக்கப்பட்டிருந்தனர். இதனால் தமது பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பாட…

  12. நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் சீனா- இலங்கை கையெழுத்து! சீனா- இலங்கை ஆகிய இருநாடுகளும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய இடமாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி (சி.பி.எஸ்.எல்) மற்றும் பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா (பி.பி.ஓ.சி) ஆகியற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் அதிகளவு சீனப் பொருட்களே இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில், சீன இறக்குமதி, 3.6 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. குற…

  13. முஸ்லிம்களுடனான உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புர்காவை தடைசெய்வதற்கு அவசரப்படவில்லை, அத்துடன் திறந்தவெளி கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்றார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “நீண்ட வரலாற்றை கொண்ட உறவு இருந்தாலும் கலாசார மாற்றம் ஏற்பட்டது. இங்குமட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் அந்த கலாசார மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்திருந்தது. இங்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்வாறான கலந்துரையாடல்கள் …

  14. சிறிலங்கா மீதான தீர்மானத்தின் பின்னணியில் புலம்பெயர் சமூகம் – அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு 7 Views “புலம்பெயர் சமூகத்தின் வசமுள்ள அதிகபட்ச பலமும், ஒருங்கிணைப்பு மற்றும் பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தியே இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டின் மக்கள், அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் இது பாதிக்காது” இவ்வாறு கூறியிருக்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தவை வருமாறு: “வெளிவிவ…

  15. எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எனக்கு புற்றுநோய் இருந்தது. அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளதாவது, நான் அரசியலில் மாத்திரம் பிரவேசித்து இருக்காவிட்டால் பணக்கார பெண்மணியாக இருந்திருப்பேன். இதேவேளை நானொரு உண்மையயை கூற விரும்புகின்றேன். எனக்கு சில வருடங்களுக்க…

    • 5 replies
    • 521 views
  16. ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச அதிரடியான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு தீர்மானத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னணியின் அரசியல் சபைக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக நியமிக்கவேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து ராஜபக்ஷர்களுக்கு இடையிலும் அரசாங்கத்துக்குள்ளும் பொதுஜன பெரமுனவுக்குள்ளும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tam…

    • 2 replies
    • 470 views
  17. பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் அனுமதி இல்லாமல் போதைப்பொருட்கள் எந்த வழிகளிலும் போக முடியாது எனவும் முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து அவ்வாறு போதைபொருளை பாவிப்பவர்களை பகிரங்கமாக கொண்டு வந்து பத்து பிரம்படியாவது கொடுப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தால் மிக நன்றாக இருக்கும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்க…

    • 3 replies
    • 415 views
  18. சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ் சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த புதிய விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பிலும் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தங்கள் இராணுவத்தை பாதுகாக்க மற்ற நாடுகள் சட்டங்களை வகுத்துள்ளன என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். அதன்படி கொண்டுவரப்படும் புதிய சட்டதிட்டங்களின் படி இராணுவத்தினர் மீது வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது அவர்…

  19. யாழ்ப்பாணம் - நல்லூரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினருக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் பொலிஸாரின் பாதுகாப்போடு அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களாலும் கடத்தப்பட்டு,கொல்லப்பட்டோருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் சிவில் சமுக அமைப்பு எனும் குழுவினரால் குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இடத்தில் அனுமதி பெறப்ப…

  20. அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரச தவறிவிட்டால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தேவ ஆராதணை ஒன்றை அடுத்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயம் கிடைக்கும் வரையில் மக்களுடன் இருப்பதாகவும் நியாயம் நிலை நாட்டப்படுவதை பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை (adaderana.lk)

  21. புலன்விசாரணைகளை ஆரம்பிக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அடிப்படை சட்டத்தேவைப்பாடுகள் இல்லாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்க கூடாது என நாம் எமது வாதத்தை முன் வைத்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நீதிமன்ற உத்தரவை மீறி முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டார்கள் என பருத்தித்துறை , நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க கூடாது என கோரி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பிலான விசாரணையில் இன்றைய தினம் திங்கட்கிழ…

  22. மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது! மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை கட்சியை விட்டு நீக்குவதற்கும், அவர் வகிக்கும் பதவிகளை பறிப்பதற்கும் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபை ஆகியன ஒப்புதல் வழங்கிய பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு, ” தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம்…

  23. ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பின திஸ்ஸ அத்தநாயக்க, அமர்வின் முடிவில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இராணுவமயமாக்கல் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்ட அவர் இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த…

    • 0 replies
    • 360 views
  24. மாகாணசபை தேர்தல் குறித்து புதிய சட்டம் விரைவில் – தேர்தல் ஆணையாளர் நாயகம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து புதிய சட்டத்திற்குத் தேவையான பரிந்துரைகளை அடுத்த சில நாட்களில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக அமைந்தாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்ட சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்ற பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய் யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk

    • 0 replies
    • 302 views
  25. எம்.சி.சி உடன்படிக்கை குறித்து முக்கிய அறிவித்தல் எம்.சி.சி உடன்படிக்கை குறித்து முக்கிய அறிவித்தலைச் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அதன்படி அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடப் போவதில்லையென என இன்றைய தினம் சட்ட மா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். Thinakkural.lk

    • 0 replies
    • 337 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.