கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ஆண்மை - எஸ்.பொன்னுத்துரை ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும…
-
- 2 replies
- 1.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் கடன் ``அக்கா, உன் புதுப் புடைவையைப் பத்து நிமிஷம் கடன் கொடுக்கா... புரொஃபைல் போட்டோ எடுத்துட்டு திருப்பிக் கொடுத்துடுறேன்'' என்றாள் தங்கை. - நந்தகுமார் மனசு 'என்னமோ.. தெரியல... ரிசார்ட்ல தங்கினா தேவலாம்ன்னு மனசு அடிச்சிக்குது' என்றார், ஆளுங்கட்சி எம்எல்ஏ. - வி.வெற்றிச்செல்வி தீர்ப்பு நண்பர்களின் சண்டையைச் சுமுகமாக்க ஐடியா கொடுத்தார் அப்பா, “பிரகாஷ் ஃபேஸ்புக் ஐ.டிக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!” - விகடபாரதி புரிதல் கையில் பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்ததும் ``அப்பா, குடிச்சுட்டு வந்திருக்கார்'' என்றது குழந்தை. - வேம்பார் மு.க.இப்ராஹிம் பேய…
-
- 0 replies
- 1.7k views
-
-
கார்குழலி ‘சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் இந்தளவா கீழ்த்தரமாக இறங்கிவிட்டான்?’ கேள்வியை கண்களில் தேக்கியபடி புலவர் தண்டியை பல்லவ இளவரசனான ராஜசிம்மன் நோக்கியது ஒரே ஒரு கணம்தான். அதற்குள் ‘ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய...’ என சபையில் இருந்த அனைவரின் உதடுகளும் ஏக காலத்தில் உச்சரிக்கத் தொடங்கின. இளவரசனை அணைத்தபடி புலவர் தண்டியும் சிவநாமாவளியை உச்சரிக்கத் தொடங்கினார். ராஜசிம்மனின் உள்ளத்தில் பக்தியோ, சிவ ஸ்வரூபமோ இப்போது இல்லை. கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புலவர் தன் கைகளில் பிரசாதமாக அளித்த நாகலிங்க புஷ்பத்தை மெல்லத் திறந்தான். உள்ளே பொன், வெள்ளி, செம்பினால் செய்யப்பட்ட பல்லவ நாணயம் மின்னியது. முன்புறம் ரிஷப உ…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஒரு நிமிடக் கதை- ஏக்கம் உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார். “என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆ…
-
- 0 replies
- 1.3k views
-
-
"நாளைக்கு செந்தளிப்பா இன்னும் அழகா இருக்கோணும் அம்மா சீக்கிரம் படனை" அம்மா சொல்லிவிட்டு கதவை மெதுவாக மூடி சென்றாள். அவள் அப்படித்தான் நடந்தால் நிலமதிராது. இரண்டு அண்ணன்கள் செல்லமாய் வளர்ந்த எனக்கு கொஞ்சம் துடுக்குதான். ஒருமுறை பள்ளி ஆசிரியை அடித்ததை அறிந்து அவருடன் சண்டைக்கு போன அப்பா என் மேல் துரும்பு விழுந்தாலும் துடித்து போகும் பாசம் .எனது சந்தோசமே அவரது சந்தோசமென வாழ்கிற ஜீவன். எல்லோரும் தூங்கிவிட்டார்களா.. அப்படி அமைதியாக இருக்கிறது. அந்த நிசப்தத்திலும் என் இதயத்தின் துடிப்பு எனக்கு கேக்கிறது. ஏன் இந்த படபடப்பு? ஏன் இந்த சலனம்? நாளைக்கு எனக்கு திருமணம் மாப்பிள்ளை இலண்டன். எல்லா இலட்சணங்களும் குணங்களும் கலந்த கலவை போல. ஏன…
-
- 0 replies
- 949 views
-
-
கண்ணாடிப் பந்து - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் “லைஃப்... நம்ம எல்லோருக்கும் மூணு பந்துகளைத் தந்திருக்கு. அதுல ரெண்டு... ரப்பர் பந்துகள். ஒண்ணு... கண்ணாடிப் பந்து. You know what all?” நான் உற்சாகமாகவும் கம்பீரமாகவும் மாதாந்தர பிராஞ்ச் மீட்டிங் நடத்தும் போதெல்லாம், பணியாளர்கள் ரொம்ப ஆர்வமாகப் பங்குபெறுவார்கள் அல்லது பங்குபெறச் செய்துவிடுவேன். நான் புத்தகங்களில் படித்த, அவதானித்த, என் பாஸிடமிருந்து கற்றுக்கொண்ட... என எல்லாவற்றையும் கலந்துகட்டி அவர்களுக்குச் சொல்லி, மோட்டிவேட் செய்வதில் கைதேர்ந்தவன் எனும் பெயர் பெற்றிருந்தேன். `அந்த மூன்று பந்துகள் என்னென்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினேன்... எனக்கு எ திரே அமர்ந்து என்னைப் பார்த்துக்…
-
- 0 replies
- 2.4k views
-
-
அறை எண் 22 சோவென விழும் அருவியின் இரைச்சல் பொங்கியெழும் ஆனந்தத்தையும் தரவல்லதாக இருந்தது. நீண்ட நேரம் அதன் நீரலையில் ஆடியிருக்க வேண்டும். தலைமுடி பிடரியோடு ஒட்டியிருந்தது. ஆடைகள் ஈரமாக உடலைக் கவ்விக் கொண்டிருந்தன. ஈரத்தை உதறி முடிக்கும் முன் நீர்ச்சுழி மலை முகட்டின் எல்லை நோக்கி உந்தத் தொடங்கியது. மாபெரும் உந்தலால் திடீரென கீழே விழ... பள்ளம் பள்ளம்... விழுகையில் ஒரு கணம் மூச்சு நின்றுவிடுவது போல் ஒரு நெஞ்சடைப்பு. திடீரென சுவாசம் முட்டித் திரும்புகையில் ஒரு நீண்ட ஆற்றின் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் சொப்னா. ஆற்றின் இரு மருங்கிலும் புதர்கள், நாணல்கள், கோரைப்புற்கள். நீரின் நடு நடுவே பாறைத்திட்டுக்கள். பாறைகளின் மேல் மோதிக் கொள்ளாம…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அருமையாக இருக்கும் என தோன்றியது. கைத்தொலைபேசியில் தலைபேசி வழி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் டவாலி போல மூன்று முறை கேட்ட பின்னரும் அவள் அசைவதாயில்லை. பல்லாயிரத்தி பல நூற்றி சொச்சம் முறையாக அவள் மீது கோபம் வந்தது. "தேநீர் வருமா வராதா?" "ஆ..." காதிலிருந்ததை அகற்றி கேட்டாள். உள்ளே கோபம் வந்தாலும் அமைதியாய்.. "தேநீர் வருமா வராதா?" " தேநீர் எப்படி தானாய் வரும்?" இது நகைச்சுவையாய் தோன்றவில்லை "எனக்கு இப்போது தேநீர் வேண்டும்" "எனக்கும் இப்போது வைர அட்டிகை..தங்க காப்பு பட்டுசேலை எல்லாம் வேண்டும்..ஆசைப்படுவதெல்லாம் உடனே நடக்குமா என்ன" "சாதரண தேநீருக்கு என்ன எகத்தாளம்" "அப்படியா..சாதரண தேநீரா..நீங்களே தயாரித்து அருந்துங்கள்" …
-
- 10 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: மருமகள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான். ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான் அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டில…
-
- 3 replies
- 1.6k views
-
-
யார் ஏழை ❓❓❓��? ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗ சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் �வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗ இதில் யார் பணக்காரர்...❓ 3'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா, ஹோட்டல் மேலாளரிடம் …
-
- 0 replies
- 614 views
-
-
மஞ்சள் குருவி! - சிறுகதை சிறுகதை - அனுராதா ஆனந்த் - ஓவியம்: ராஜேந்திரன் அந்தக் குறுகிய தார் சாலையில் நடக்கும்போது ஒரு விடுபடலை உணர முடிந்தது அவளால். ஒவ்வோர் அடியிலும் மேலே அப்பியிருந்த ஏதோ ஒன்று நெகிழ்ந்து விழுவது போல லேசாக உணர்ந்தாள். இரு பக்கமும் ஆசீர்வாதமாக ஆரஞ்சு வண்ண இலைகளைச் சொரிந்த மரங்கள், மாலை என்றாலும் கோடையின் உக்கிரத்துடன் அடிக்கும் வெயில், பாட்டொன்றை மெல்லியதான தன் அடிக்குரலில் பாடிக்கொண்டும், இடையிடையே நிறுத்தி பறவைகளின் கூப்பிடு ஓசையை அவளுக்கே உரிய பிரத்யேக நெற்றிச்சுருக்கலுடன் கேட்டுக்கொண்டும் உடன் நடந்து வரும் நிவேதா... இவையெல்லாம் சேர்ந்து அந்தப் பள்ளியின் உள் உள்ள இச்சாலைக்கு ஒரு சிறப்புத் தொனியை ஏற்றின. எப்படியாவது நிவேத…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஏங்க.. “ஏங்க....” அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு...” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?” “உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள். நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு. அப்பாவும், அம்மாவும் மாறி மாறி கத்துவதைப் பார்த்து ஷாலு மிரண்டா…
-
- 2 replies
- 1.7k views
-
-
நன்மாறன்கோட்டை கதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் ``நல்ல ஊரு சார். இங்க வேலை செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆபரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கனு யாரும் ஸ்கூலுக்குள்ள வர மாட்டாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்து பத்து வருஷமாச்சு. எந்தத் தொந்தரவும் இல்லை. ரிட்டையர்ஆகிறவரைக்கும் நீங்களும் இந்த ஊர்லயே ஓட்டலாம் சார். நன்மாறன்கோட்டைங்கிற பேருக்கு ஏத்த மாதிரி ஊரு ஆளுங்களும் இருப்பாங்க’’ என உடற்கல்வி ஆசிரியர் தனவேல் சொன்னார். ``அப்படியா?’’ என்று ராமன் கேட்டதோடு சரி. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, இன்று காலையில்தான் கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து புதிய பள்ளியில் ராமன் சேர்ந்தி…
-
- 0 replies
- 3.2k views
-
-
மண்டை மாக்கான் சுகுணா பிறந்தது 1998-ல் மார்ச் மாதத்தில் விடிகாலையில் என்று அவளே என்னிடம் சொன்னபோது கணக்கில் தகராறு நிரம்பிய நான் விரல்களில் ஒவ்வொன்றாய்த் தொட்டு மனக்கணக்கு போட்டேன். இப்போது 2017ல் இருக்கிறோம் அல்லவா! எப்படியோ கல்யாணம் கட்டிக் கொள்ளும் வயதில் சுகுணா இருக்கிறாள். இங்கே சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திலோ அல்லது கோபி காவல் நிலையத்திலோ சுகுணாவும் முருகேசனும் மாலையும் கழுத்துமாக தஞ்சமடையும் வயதுதான். முருகேசன் என் பள்ளித் தோழன். கொளப்பளூர் நடுநிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை என் பக்கத்திலேயே வகுப்பறையில் அமர்ந்து படித்தவன். மண்டை மாக்கான் என்றொரு பட்டப் பெயரும் பள்ளியில் அவனுக்கு இருந்ததாக ஞாபகம். மண்டை மாக்கான் என்ற பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அற்புதம் by மஹாத்மன் அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்வோரிடம் விசேஷக் கூட்டத்தைக் குறித்தான கைப்பிரதிகள் கட்டுக்கட்டாக கொடுக்கப்படும். இவர்கள் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் கம்பங்களுக்கும் பக்கத்துப் பட்டணங்கள் வரையிலும் வீடு வீடாகச்சென்று கொடுத்துவிட்டு வரு…
-
- 0 replies
- 810 views
-
-
ஒரு நிமிடக் கதை: மன்னிப்பு “இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன். ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள். ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவற…
-
- 0 replies
- 2k views
-
-
இஞ்சாருங்கோ கெதியா வெளிக்கிடுங்கோ கல்யாணத்துக்கு நேரம் போகிறது நான் என்ன சீலையோ உடுக்கிறதோ இல்ல முகத்துக்கு பெயிண்டா அடிக்கிறது உனக்குத்தான் நேரம் போகும் எனக்கு வேட்டிய சுத்தி கட்டினனா ஒரு சேட்டை போட்டனா வேலை முடிஞ்சுது நீ தான் வெளிக்கிட மூணு மணித்தியாலம் எடுக்கும் இந்த பேச்சுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்ல நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வாரன் புள்ளய பார்த்துக்கங்க சரி நீ கெதியா வா. ம்கும் கெதியா வாரதுகளா என்று ஒரு படத்தை பார்த்து முடிக்கலாம் இவள் வார வரைக்கும் என்று டீவியை தொறந்தால் விஜய் டீவில ஒரு புறோக்கிரம் கோபிநாத் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறார் ஒரு புள்ள கெலிகொப்ட்ர கேட்கிறது இன்னொன்று 50 பவுண் கேட்கிறது இன்னொன்று நல்ல வீடு கேட்கிறது இதுகளை ஏன் பெத்து இருக்கு என்று ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
ய்ய்யீஈஈஈ! - சிறுகதை ரேவதி முகில் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி சிரித்துக்கொண்டிருந்த பாண்டியின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்ட அம்மா, கையிலிருந்த கடிதத்தை மீண்டும் வாசித்தாள். வத்தலக்குண்டில் புதிதாகத் தொடங்கியிருந்த ஜவுளிக்கடையிலிருந்து வந்திருந்த கடிதம் அது. பாண்டிக்குப் பொங்கலுக்கு டவுசர் சட்டை வாங்கிய போது ஒரு பரிசு கூப்பன் கொடுத்தார் கள். குலுக்கலில் தங்களது கூப்பனுக்கு கலர் டி.வி பரிசு விழுந்திருப்பதாகவும், வருகிற சனிக்கிழமை மாலை வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதில் எழுதியிருந்தது. அதற்குள் தெருவில் சேதி பரவியிருந்ததால், வந்து விசாரித்துப் போனார்கள். பரிசு விழுந்த கதையை வாய் ஓயாமல் எல்லோருக்கும் சொல்லிக் கொண் டிருந்தாள் மயிலத்தை. பாண்டி பிறந்தபோ…
-
- 0 replies
- 3k views
-
-
தரிசனம் -இளங்கோ கிருஷ்ணன் இன்று காலை நான் கடவுளைப் பார்த்தேன். சரி, சிரிக்க வேண்டாம். நிஜமாகவே பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால், நான் கதாசிரியன். கதாசிரியன் சொல்வதை நம்பத் தொடங்குவதுதான் கதை கேட்பதன் முதல் தகுதி. சரி, கடவுளைப் பார்த்தேன் என்றேன் அல்லவா? எங்கு பார்த்தேன் என்று சொல்லவில்லையே, கோயம்பேடு மார்க்கெட்டில்தான் தரிசனம். அதுவும் ஒருமுறை அல்ல; இரு முறை. அதை தரிசனம் என்று சொல்லலாமா தெரியவில்லை. என் கண் எதிரே தட்டுப்பட்டார். அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில். எத்தனையோ கோடி பக்தர்கள் எத்தனை எத்தனையோ வழிகளில் தேடித் திரிகிறார்கள். நாள்தோறும் ஆறுகால பூஜை செய்து, விரதம் இருந்து, சஷ்டி படித்து, சபரிமலைக்கு மாலை போட்…
-
- 0 replies
- 1k views
-
-
வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை லைலா எக்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம் 1 அந்த அமைதியான மாலைப் பொழுதில் கழிவறைக்குள் தென்னை விளக்குமாற்றால் சரசரவெனக் கூட்டிக் கழுவும் சத்தம், பள்ளியின் வராந்தா முழுவதும் ஒலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கேட்ட சத்தம், முழுவதுமாக நின்றுபோன சற்றுநேரத்தில் வெறும் பக்கெட்டை ஒரு கையிலும், பொருள்கள் நிறைந்திருந்த பக்கெட்டை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் வித்யா. அந்த பக்கெட்களிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட, அவள் நடந்துவந்த வராந்தாவில் சிந்தவில்லை. இத்தனைக்கும் அவள் கைகளிலிருந்த அழுத்தமான பிளாஸ்ட்டிக் பக்கெட்டின் விளிம்பு பிளந்துகொண்டிருந்தது. அதில் சிறிய விரிசல் ஒன்றும் இருந்தது. அதன் …
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: அதுதான் காரணம் ‘‘இதப் பாரு விஜி. என்ன சொல்லுவியோ தெரியாது. உங்க அம்மாவை ஊருக்கு கிளம்பச் சொல்லு’’ - கத்தினான் ரமேஷ். ‘‘எங்க அம்மான்னா உங்களுக்கு இளக்காரமா போச்சோ?’’ - பதிலுக்கு கேட்டாள் விஜயா. வெளியே சென்று தண்ணீர்ப் பானையை தூக்கி வந்த விஜயாவின் அம்மா கங்கா, இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்து போனாள். விஜயாவுக்கு தலைப் பிரசவம் முடிந்து பச்சை உடம்புக்காரி என்பதால் அவளுக்கு சில நாட்கள் துணையாக இருக்கலாம் என்று கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தாள். தான் இங்கே இருப்பது மருமகனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்த…
-
- 3 replies
- 735 views
-
-
பள்ளத்தாக்கு - அகரமுதல்வன் தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது. சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது. தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள். முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது. தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க. இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை. முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது. வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன. அமைதி! யாவும் முழுமையடையும் அமைதி. அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். சூடு என்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொஞ்சம் அதிகம் இனிப்பு சிறுகதை :எஸ்.ராமகிருஷ்ணன்ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான். கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில் ஸ்டீபனைப் பார்த்தபோது, அருள்செல்வத்தைப் பற்றி அவன்தான் சொன்னான். பூந்தண்டலத்தில் மூன்றரை வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த நிலம். எப்படியாவது ஒரு பார்ட்டியைப் பிடித்து விற்றுக்கொடுத்தால், கமிஷன் மட்டும் இரண்டரை லட்சம் தருவதாக ஷெட்டி சொல்லியிருக்கிறான். அருள்செல்வத்தை எப்படியாவது பேசி மடக்கிவிட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டி…
-
- 0 replies
- 1.9k views
-
-
வினை விதித்தவன்... பட்டுக்கோட்டை ராஜா இவர்களின் தெருவில் திறக்கப்பட்டு வெற்றிகரமாய் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கிற கோரிக்கையுடன் இளநகை, வாசு இருவருமாய் அதிகாலை நேரத்திலேயே ஆத்மநாதனைப் பார்க்க வந்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் பிறகு அவரைச் சந்திப்பது கடினம் என்று வாசு எச்சரிக்கை செய்திருந்தான். ஆத்மநாதன் சமூக ஆர்வலர். அதனாலேயே திருமணத்தை மறுத்தவர். ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பவர். இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளின் வயிறு கலங்கும். சார்பதிவு அதிகாரியாய்ப் பதவி உயர்வு பெற்று நல்ல வருமானத்தில் இருந்தவர், தன் அலுவலகத்தில் இருக்கும் ஊழல்பெருச்சாளிகளின் கொட்டம் காணத் தாங்காமல் வேல…
-
- 2 replies
- 1.2k views
-
-
யானை வீட்டுக்காரி - சிறுகதை எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: செந்தில் சாவித்திரி, அலுவலகத்தில் இருந்து வெளியேறி மெயின்ரோட்டுக்கு வந்தபோது இருட்டிவிட்டது. அவளது அலுவலகத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு அரைமணி நேரம் நடந்து, இரண்டு பெரிய சந்துகளைக் கடந்து கடைவீதிக்கு வர வேண்டும். நடைபாதை ஓரத்தில் விற்கும் காய்கறிகளையும் துணிகளையும் வேடிக்கை பார்த்தபடி வேலை முடிந்துவரும் ஜனங்களுடன் ஜனங்களாக வரிசையாக நடந்து, சந்நதித் தெருவுக்குள் நுழைய வேண்டும். இரவில் சந்நதித் தெரு நெரிசலாக இருக்கும். இரவு ஏழு மணிக்குப் பிறகு அவளது வீட்டுக்குப் போக பேருந்து வசதி குறைவு. இரண்டு ஷேர்ஆட்டோக்கள் மாறிப்போக வேண்டும். ஷேர்ஆட்டோவில் போவதற்குப் பதிலாக நடந்தே வீட்டுக்குச் …
-
- 0 replies
- 2.7k views
-