Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 16 FEB, 2024 | 03:22 PM (நெவில் அன்தனி) ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 1932இல் நடைபெற்று 92 வருடங்கள் கடந்த நிலையில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடர் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1932இலிருந்து இதுவரை 17 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் 14 தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. 4 தொடர்…

  2. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஷக்கிப்பின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டினார் நபி Published By: VISHNU 14 FEB, 2024 | 07:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) அரங்கில் ஐசிசி சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமத் நபி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்ததை அடுத்து சகலதுறை வீரருக்கான தரவரிசையில் நபி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த சகலதுறை வீரருக்கான தரவரிசையில் 2019 மே 7ஆம் திகதியிலிருந்து 2024 பெப்ரவரி 9ஆம் திக…

  3. உலக சாதனை மரதன் வீரர் கிப்டுன் உயிரிழப்பு damithFebruary 13, 2024 ஆடவர் மரதன் ஓட்டப்போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவின் 24 வயது கெல்வின் கிப்டுன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் அவருடன் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டின் கர்வைஸ் ஹகிசமானாவும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தில் 42 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணி மற்றும் 35 விநாடிகளில் பூர்த்தி செய்து கிப்டுன் உலக சாதனை படைத்திருந்தார். இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மரதன் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.thinak…

  4. வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்! இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (10) வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தா…

  5. Published By: VISHNU 09 FEB, 2024 | 06:51 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்ட…

  6. ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம்: கபில் தேவால் முடியாததை சாதித்துக் காட்டிய பும்ரா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா மியாபுரம் பதவி, பிபிசி செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர். இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை …

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் 45 ஆண்டுகளுக்குப்பின் இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொடுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே அஸ்வினுக்குத் தேவைப்படுகிறது. சென்னைச் சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமானார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்க…

  8. ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்! நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 511 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் கடந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 366 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா 26 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரச்சின் ரவீந்திரா தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெ…

  9. பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் : வியாழனன்று அறிமுகமாகிறது 05 FEB, 2024 | 10:26 AM (ஆர்.சேது­ராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் எதிர்­வரும் 8 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இப்­போட்­டி­க­ளுக்­கான மற்­றொரு தொகுதி ரிக்கெற் விற்­ப­னையும் அன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 2024 கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா எதிர்­வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திக­தி ­வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது. 32 வகை­யான விளை­யாட்­டு­களில் 329 போட்டி நிகழ்ச்­சிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இப்­போட்­டி­களில் வழங்­கப்­ப­ட­வுள்ள பதக்­கங்கள் எதிர்­வரும் 8 ஆம் திகத…

  10. ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதி போட்டிகளில் ஜப்பான், ஈரான் 02 FEB, 2024 | 11:20 AM (நெவில் அன்தனி) கத்தாரில் நடைபெற்றுவரும் 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு கடைசி இரண்டு அணிகளாக ஜப்பானும் ஈரானும் தகுதிபெற்றன. கத்தாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7ஆவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பஹ்ரெய்னை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பானும் கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் சிரியாவை 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரானும் வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறின. ஜப்பானுக்கு இலகுவான வெற்றி அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல்…

  11. ஒரு வீரருக்கு இந்திய விசா தாமதமானதால் டெஸ்டையே புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் 55 நிமிடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் புதிய சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தற்போது இந்திய விசாவைப் பெற்றுள்ளார். அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வந்து இங்கிலாந்து அணியுடன் இணைவார். எனினும், அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண…

  12. மதுபோதையில் குழப்பம் விளைவித்த மக்ஸ்வெல் வைத்தியசாலையில் அனுமதி; விளக்கம் கோருகின்றது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 10:33 AM அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் ஹோட்டலொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மதுபோதை காரணமாக இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்தே மக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிலெய்டில் பிரெட்லீ கலந்துகொண்ட இசைநிகழ்ச்சியொன்றை பார்வையிடுவதற்கு மக்ஸ்வெல் சென்றிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வேளையே…

  13. பட மூலாதாரம்,X/REALSHOAIBMALIK AND INSTAGRAM/MIRZASANIAR 20 ஜனவரி 2024, 10:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். அவர் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்துள்ளார். ஷோயிப் மாலிக், சனா ஜாவேத் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். பட மூலாதாரம்,SCREENGRAB இது சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், சானியா மிர்சா - ஷோயிப் மாலிக் உறவு என்ன ஆயிற்று என்பது குறித்து சானியாவின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். 2010-ம் ஆண்டில் சான…

  14. 19இன் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் : ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்கா, அயர்லாந்து வெற்றி : மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜுவெல் அண்ட்றூவின் சதம் வீண் 20 JAN, 2024 | 10:12 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான 16 நாடுகளுக்கு இடையிலான 15ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டிகளில் தென் ஆபிரிக்காவும் அயர்லாந்தும் வெற்றிபெற்றன. இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜுவெல் அண்ட்றூ முதலாவது சதத்தைக் குவித்து அசத்தியபோதிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றதால் அவரது முயற்சி வீண் போனது. தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிற்தியத் தீவுகள் …

  15. முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் - மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப்பின் கனவுப்பயணம் ஆரம்பம் Published By: RAJEEBAN 18 JAN, 2024 | 02:32 PM சிலருக்கு முதல்போட்டி என்பது கனவு போல அமைவதுண்டு. மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சம்மெர் ஜோசப்பின் முதல் போட்டியும் ஒரு கனவே! முதலில் அவரின் ஆரம்பம் - கயானாவின் 350 பேரை கொண்ட பராகரா என்ற ஊரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் இவர். அதன் பின்னர் அவர் தனது முதல் டெஸ்டில் மேற்கிந்திய அணியின் அதிக ஓட்டங்களை பெற்ற 11 வீரர் என்ற சாதனையை முறியடித்தார், 36 ஓட்டங்களை அவர்பெற்றார் அதில் ஜோஸ் ஹசெல்வூட்டின் பந்தில் பெ…

  16. முத‌ல் இனிங்சில் இந்தியா 212 ர‌ன் அடித்தார்க‌ள்.........213ர‌ன் அடிச்சால் வெற்றி இல‌க்கு ...... அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளும் சிற‌ப்பாக‌ விளையாடி 212 ர‌ன் எடுக்க‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்த‌து.........முத‌லாவ‌து சூப்ப‌ர் ஓவ‌ரில் அப்கானிஸ்தான் அணி 16ர‌ன் அடிச்சது 17 ர‌ன் அடிச்சால் வெற்றி.......இந்திய‌ அதே சூப்ப‌ர் ஓவ‌ரில் ச‌ரியாக‌ 16ர‌ன் அடிக்க‌ மீண்டும் இன்னொரு சூப்ப‌ர் ஓவ‌ருக்கு போன‌து விளையாட்டு😁😁😁😁😁😁 இந்தியா அடுத்த‌ சூப்ப‌ர் ஓவ‌ரில் ச‌ரியாக‌ 11 ர‌ன் அடித்தார்க‌ள் 12ர‌ன் அடிச்சால் வெற்றி என்ற‌ இல‌க்குட‌ன் இற‌ங்கிய‌ அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் இந்தியா சார்பாக‌ இள‌ம் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ர‌வி விஷ்னு ப‌ந்து போட‌ வ‌ந்தார் முத‌லாவ‌து ப‌ந்தில் அப்கானிஸ்த…

  17. பந்துவீச்சில் ஹசரங்க சாதனை, துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி; தொடர் இலங்கை வசம் 12 JAN, 2024 | 06:44 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது. வனிந்து ஹசரங்கவின் தனிப்பட்ட சாதனை மிகு பந்தவீச்சுப் பெறுதியும் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி அரைச் சதமும் இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. ஆறு மாதங்களின் பின்னரே சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்ட…

  18. ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். முதலில் 1974 இல் ஒரு விளையாட்டு வீரராகவும், பின்னர் 1990 இல் தலைமை பயிற்சியாளராகவும் மேற்கு ஜெர்மனியின் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். https://www.cnn.com/2024/01/08/sport/franz-beckenbauer-death-spt-intl/index.html

  19. 07 JAN, 2024 | 07:48 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படவுள்ள ஐசிசி கிரிக்கெட் விருதுகள் 2023க்கான பிரதான விருதுகளுக்கு அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள குறும்பட்டியலில் அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் வீரர்கள் மாத்திரமே இடம்பெறுகின்றனர். வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ விருதுக்கு அவுஸ்திரேலியா உட்பட 3 நாடுகளின் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்குரிய வருடத்த…

  20. T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது! மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியைய…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆக்ரோஷமான இடதுகை பேட்டிங் , சிறந்த தொடக்க ஆட்டக்காரர் மட்டுமின்றி, களத்தில் நங்கூரமிட்டால், ஸ்விட்ச் ஹிட் பேட்டிங்கை சிறப்பாக கையாளக் கூடியவர். ஆப்சைடில் அதிகமாக விளையாடக் கூடியவர், டெஸ்ட் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட்டை ஒருபோதும் 52க்கு குறைவில்லாமல் வைத்துள்ளவர் டேவிட் வார்னர். டி20 நிபுணராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினாலும் சட்டென தன்னை ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள சிறந்த பீல்டர்களில் வார்னரும் குறிப்பிடத்தகுந…

  22. 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு 29 DEC, 2023 | 12:35 AM (நெவில் அன்தனி) இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந…

  23. Published By: VISHNU 24 DEC, 2023 | 02:05 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பூஜா வஸ்த்ராக்கர், ஸ்நேஹ் ரானா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் …

  24. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டி20 தொடரில் 120 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு இடையேயான போட்டியில் 97 சிக்சர்கள் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்ற…

  25. மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்ப்பாண இளைஞன்! (மாதவன்) மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 (Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றிய புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த புசாந்தன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்ப்பாண இளைஞன்! (newuthayan.com)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.