Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ’’கடுமையாக திட்டுவார் ரணதுங்கா அதனால் நான் அழுவேன்’’ சமிந்த வாஸ் January 04, 2016 இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா தலைமையில் உலகக்கிண்ணம் வென்று வரலாறு படைத்தது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தான் ரணதுங்காவின் துருப்பு சீட்டாக இருந்தார். வாஸ் கூறுகையில், “1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அதிவிரைவில் விக்கெட்டுகளை வீழ்த்துவதும், ஓட்டங்களை கட்டுப்படுத்துவதும் தான் எனது முக்கிய பணியாக கொடுக்கப்பட்டது” என்றார். அவர் மேலும் கூறுகையில், ”நான் ரணதுங்கா…

  2. ஹபீஸுக்கு பந்துவீச தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை­வி­தித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறி ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பாகிஸ்­தானில் ஆரம்­ப­மா­கி­யுள்ள சுப்பர் லீக் போட்­டியில் ஹபீஸின் பந்து வீச்சில் தவ­றுகள் இருப்­பது தொடர்­பாக ஐ.சி.சி. முக்­கிய கவனம் செலுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறித்த குற்­றச்­சாட்டின் ஆரம்ப கட்ட அவ­தா­னிப்­பு­களில் ஹபீஸின் பந்­து­வீச்சில் தவ­றுகள் உள்­ள­தாகத் தெரி­ய­வந்­துள்­ளது. குறித்த தீர்…

  3. உலகக் கிண்ணத்திற்கான பதினொருவர் அணியில் இலங்கையின் ரவிந்து ரசந்த By Mohamed Azarudeen - ©ICC இந்த ஆண்டுக்கான (2020) ஐ.சி.சி. இன் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) தென்னாபிரிக்காவில் நிறைவுக்கு வந்தது. இந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் இளையோர் அணி, இந்திய இளையோர் அணியை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடரின் சிறந்த பதினொருவர் அணி, ஐ.சி.சி. இனால் அறிவிக்கப்பட்டுள்ளது. …

  4. எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு Leftin May 2, 2020 எச்சில்,வியர்வை பயன்படுத்த தடை ;அவுஸ்திரேலியாவின் முடிவு2020-05-02T09:21:45+00:00விளையாட்டு அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளின் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட்டில் கைகுலுக்குவது ஏற்கனவே தடை செய்யப்பட்டது. தவிர பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்கவும், இதற்குப் பதில் வேறு ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்தலாமா எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே ஆஸ்திரேலிய வ…

  5. பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்" பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் முன்னாள் கிரிக்கெட் வீரர் 50 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 2026 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள் பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. குரூப் சுற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி அடுத்ததாக அரையிறுதியைக் குறிவைக்கும். ஆனால், அது சாத்தியமா? மெல்ல சூடுபிடிக்கும் இங்கிலாந்து, எப்போதும் இந்த ஃபார்மட்டில் சிறப்பாக ஆடும் நியூசிலாந்து, எப்போது எப்படி ஆடும் என்று தெரியாத பாகிஸ்தான் என 3 பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அதில் 2 போட்டிகளை வெல்வது கடினமானது தான் என்றாலும், அது முடியாத காரி…

  6. டெஸ்ட் கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் இந்தியாவின் எழுச்சியும்! டெஸ்ட் போட்டி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கவாஸ்கர், டிராவிட், சச்சின், லாரா, பிராட்மேன், காலிஸ், வார்னே, அம்புரோஸ், இங்கிலாந்தின் ஸ்விங் பிட்ச்கள், ஆளுயர பவுன்சர் ஆகும் பெர்த் பிட்சுக்கள், சூழலில் கலங்கடிக்கும் நாக்பூர் வகையறா பிட்ச்கள் இதெல்லாம்தானே..! இதையும் தாண்டி பலருக்கும் டெஸ்ட் போட்டி என்றால் சட்டென தோன்றுவது 'டிரா' என்பதுதான். 'டெஸ்ட் போட்டிகள் என்றால், வீரர்கள் எல்லாரும் டொக்கு வைத்துக்கொண்டே இருப்பார்கள், ரிசல்ட் கிடைக்காது' என ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் அலுத்துக்கொள்வாரக்ள். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து வெவ்வேறான பார்வை இருக்கும…

  7. இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு பகுதிகளைக் கொண்ட உள்ளக கிரிக்கெட் பயிற்சி மையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற நேற்றைய தினம், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவுள்ள இலங்கை வீரர்களுக்கான 06 நாள் பயிற்சி முகாமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் மெதிவ்ஸ் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த உள்ளக பயிற்சி நிலையமானது, இலங்கை கிரிக்கெட் சபையின் கனவுத்திட்டங்களுள் ஒன்றான நாடு தழுவிய ரீதியில் வீரர்களின் த…

  8. டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும்: எம்.எஸ்.கே. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும் என்று தேர்வாளர் கூறியுள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அடுத்து விளையாடக்கூடிய பெரிய தொடர் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான். இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போதில் இருந்தே உருவாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் தொடர்வார்களா? இல்லையா? என்பதுதான் மில…

  9. வீடியோ... ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்கிய பேட்ஸ்மேன் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை, பேட்ஸ்மேன் தனது பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்குவது தொடர்பான வீடியோவை பார்த்து மகிழுங்கள். வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. ஆறு அணிகள் இடம்பிடித்த இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் - கயானா அமேசான் வாரியஸ் அணிகள் மோதின. கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் சாட்விக் வால்டன் பே…

  10. 10 விக்கெட்களால் இலங்கையை இலகுவாக வென்றது அவுஸ்திரேலியா (நெவில் அன்தனி) இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸை 22.5 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர்கள் தமது அணிக்கு மிக இலகுவான 10 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். காலி சர்வதேச விளையாட்டரங்கில் இரண்டரை தினங்களுக்குள் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பகுதிநேர சுழல்பந்துவீச்சாளரைக்கூட இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் பொனது. பொதுவாக உப கண்ட ஆடுகளங்களில் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலியா சிரமப்படும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எதிர்மாறாக அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சில் இலங்கை திணறிப்போனது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர…

  11. ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம் இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு, வந்த உடனே அற்புதங்களை செய்ய அவர் மயாஜால வித்தைக்கார் அல்ல. எனவே அணியை நெறிப்படுத்த அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா தெரிவித்தார் கடந்த 2, 3 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணி, சர்வதேச அரங்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் இலங்கை அணி பங்குபற்றிய 29 ஒரு நாள் போட்டிகளில் 23 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரலாற்றில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இவையனைத்துக்கும் விமோசனம…

  12. மேலும் 2 மாதங்களுக்கு சானியா ஓய்வு சானியா மிர்சா - AFP டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் காயம் குணம் அடையாததால் அவரை மேலும் 2 மாதங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் சானியா மிர்ஸா காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஓய் வில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது காயம் குணம் அடையாததால் அவர் மேலும் 2 மாதங்கள் ஓய்வு எடுக்கவுள்ளார். இதுகுறித்து கிரேட்டர் நொய்டாவில் நேற்று சானியா கூறும்போது, “மேலும் 2 மாதங்கள் நான் ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வலது மூட்டில் ஏற்பட்டு…

  13. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் டிசம்பர் 21, 2014. மாரக்கேஷ்: ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், சான் லாரன்சோ அணியை தோற்கடித்தது. மொராக்கோவில், ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான 11வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில், ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி, அர்ஜென்டினாவின் சான் லாரன்சோ அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ரியல் மாட்ரிட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் அணி சார்பில் ரமோஸ் (37வது நிமிடம்), பாலே (51வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி, ‘கிளப்’ அணிகளுக்கு இடையிலான உலக கோப்பையில் முதன்ம…

  14. காற்பந்தாட்டப்போட்டியில் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் adminJuly 31, 2023 யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ( JSSA) இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் ( UK ) அனுசரணையில் மாகாணரீதியில் நடாத்திய 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப்போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி அணியை 02:01என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது. இப் போட்டித் தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி இலுப்பக்கடவை மகா வி…

  15. ஓய்வின் பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை ஓய்வின் பின்னர் கிரிக்கெட்டுடன் எந்தவித தொடர்பையும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்று நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டார். 35 வயதாகும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 674 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 455 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அவர் ஓய்வின் பின்னர் கிரிக்கெட் தொடர்பான எந்தவித பொறுப்பையும் ஏற்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த விசேட பேட்டி ஒன்றின்போது கூறியதாவது: நான் தொடர்ந்து கிரிக்கெட்டில் நீடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் நான் 6 அல்லது 7 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடிவருகிறேன். எனவே, நான் எப்ப…

  16. பெண்களுக்கான 20 -20 உலக கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை 8 விக்கெட்டுக்களினால் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 10 அணிகள் பங்குபற்றிய 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு- 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் கடந்த 09 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலியா அணி மேற்கிந்தியத்‍ தீவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து. இதனையடுத்து நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக…

  17. விஸ்டன்- 2015 பதிப்பின் சிறந்த வீரராக மத்தியூஸ் தெரிவு விஸ்டன் - 2015 பதிப்பின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும், மூன் அலி, கெரி பலன்ஸ், அடம் லீத், ஜீதன் பட்டேல் ஆகியோர் விஸ்டனின் இவ்வருட பதிப்பின் முன்னட்டையில் இடம்பெற்றிருந்த நான்கு சிறந்த வீரர்களாவர். - See more at: http://www.tamilmirror.lk/143697#sthash.yI4dTGIX.dpuf

  18. இங்கிலாந்து கிரிக்கெட் பணிப்பாளர் பதவி அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படலாம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவி முன்னாள் அணித் தலைவர் அண்ட்றூ ஸ்ட்ரோஸுக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த போல் டௌன்டன், ஏப்ரல் மாதத்துடன் விலகிக்கொண்டதை அடுத்து அப் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுப்பாட்டுச் சபை ஆலோசித்து வருகின்றது. இப் பதவியை வகிப்பதற்கு தாங்கள் விரும்புவதாக முன்னாள் அணித் தலைவர்களான மைக்கல் வொன், அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும் தெரிவித்திருந்தனர். ஆனால் மைக்கல் வோன் இறுதி நேரத்தில் விலகிக் கொள்ளத் தீர்மானித்ததால் பெரும்பாலும் …

  19. பிபா' காலை வாரிவிட்ட கால்பந்தாட்ட ஊழல்! பரபரப்பு தகவல்கள்!! லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிளாட்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிபா அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக தெரிகிறத…

  20. By லவனிஸ் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய வடக்கின் நாயகன் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டதொடரில் இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது. தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் ஆனைக்கோகோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

  21. ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது. வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிக…

  22. இந்தியா வெற்றி பெற 240 ரன் இலக்கு . Sunday, 02 March, 2008 10:47 AM . சிட்னி, மார்ச்.2: சிட்னியில் நடைபெறும் முத்தரப்பு போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. . ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. 3 ஆட்டங்களை கொண்ட இறுதிப் போட்டியில் முதல் ஆட்டம் இன்று சிட்னியில் நடைபெறுகிறது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தொடங்கியது. அந்த அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. துவக்க வீரர் கில்கிறிஸ்ட் 7 ரன்களில் பிரவீன்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து கேப்டன் ரிக்கி …

    • 0 replies
    • 838 views
  23.  டெஸ்ட் போட்டிகளில் மேலும் புதிய மாற்றங்கள்? அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்ததையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து பல தரப்பாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மேலும் போட்டித் தன்மை வாய்ந்ததாக மாற்றவும், இரசிகர்களை கவரவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது. அவற்றிலே முக்கியமாக, போட்டிக்கு முன்னதான நாணயச் சுழற்சியை நிறுத்துவதற்கான ஆலோசனை பற்றி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஒரு நாட…

  24. (நெவில் அன்தனி) பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 4 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வட மாகாணம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இந்த வெற்றியில் முன்னாள் தேசிய வீரரும் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துவருபவருமான அணித் தலைவர் ஜெபமாலைநாயகம் ஞானரூபன் போட்ட ஹெட்-ட்ரிக் கோல்கள் பெரும் பங்காற்றின. வட மாகாண அணி போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் 25 நிமிடங்களின் பின்னர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய வடக்கு மாகாண அணி சார்பாக போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் ஞானர…

    • 0 replies
    • 329 views
  25. ஜிம்பாப்வேயிடம் சுருண்டது ஆப்கானிஸ்தான் January 04, 2016 ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடக்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் பீட்டர் மூர் (0), சமு சிபாபா (0) மோசமான தொடக்கம் தந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்பவே, 49 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த ஹாமில்டன், கிரீமர் ஜோடி ஓரளவு அணியின் ஓட்டங்களை உயர்த்தவே, 117 ஓட்டங்களை எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.