விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஒரே ஓவரில் 34 ரன் விளாசிய ஹர்திக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி 20 உள் ளூர் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா வீரர் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன் விளாசினார். வேகப்பந்து வீச்சாளர் அகேஷ் சுதன் வீசிய 19வது ஓவரில் இந்த ரன்ளை ஹர்திக் பாண்டியா குவித்தார். மேலும் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைத்தது. சிக்ஸர் அடித்த பந்தில் ஒரு நோ பாலும் அடங்கும். இதன்மூலம் அந்த ஓவரில் 39 ரன் சேர்க்கப்பட்டது. இந்த வகையில் உள்ளூர் டி 20 தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப் பட்டதும் தற்போது தான் நடந்துள் ளது. இதற்கு முன்னர் நியூஸிலாந் தின் ஸ்காட் ஸ்டைரிஸ் உள்ளூர் தொடரில் ஓரே ஓவரில் 38 ரன்கள் விளாசியி…
-
- 0 replies
- 536 views
-
-
ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி ஜே.பி.டுமினி சாதனை! ஜே.பி.டுமினி. - கோப்புப் படம். | அகிலேஷ் குமார். தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை புரிந்துள்ளார். நியூலேட்ண்ட்சில் நடைபெற்ற மொமெண்டம் ஒன் டே கப் போட்டியில் டுமினி லெக் ஸ்பின்னர் எடி லீயி என்பவரை ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசினார். நைட்ஸ் அணியின் 240 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடிய கேப் கோப்ராஸ் அணி 36வது ஓவரில் 208/2 என்று சவுகரியமாக இருந்தது. டுமினி களத்தில் இருந்தார். போனஸ் புள்ளி பெற வாய்ப்பிருக்கிறது என்பதால் டுமினி, எடி லீயி என்ற லெக்ஸ்பின்னரை அடித்து நொறுக்குவது என்று திட்டமிட்டார். முதலில் ஒரு…
-
- 3 replies
- 1k views
-
-
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் மு…
-
- 7 replies
- 876 views
-
-
ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …
-
- 0 replies
- 360 views
-
-
ஒரே ஓவர்... ஓஹோனு வாழ்க்கை : ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரர்! வரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார். முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில், கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச, இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் …
-
- 0 replies
- 361 views
-
-
ஒரே கேள்வி என் பதிலை மாற்றாது: ஓய்வு குறித்த கேள்வியால் தோனி எரிச்சல் கொல்கத்தாவில் வங்கதேசம் புறப்படும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி. | படம்: பிடிஐ. தோனி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தாலே அவரிடம் உடனே ஓய்வு பற்றி கேட்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த முறை கேட்டதற்கு தோனி, ஒரே கேள்வி எனது பதிலை மாற்றாது என்று பதிலடி கொடுத்தார். ஆசியக் கோப்பைத் தொடருக்காக வங்கதேசத்துக்கு அணி புறப்படும் முன்னர் நிருபர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது: “நான் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு முன்பு ஏதாவது கூறியிருந்தேன் என்றால் எனது பதில் ஒரு போதும் மாறாது. கேள்வி கேட்பவர் எந்த இடத்திலிருந்து இக்கேள்வியைக் கேட்டாலும் என் பதிலில் மாற்றமிரு…
-
- 0 replies
- 391 views
-
-
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுள்ளார். அத்துடன் இந்த சதம் இவரது கன்னி சதமாகும். சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் குறைந்த வயதில் விரைவாக சதம் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் முதல் இடத்திலும் (20 வயது, 196 நாள்), ரிக்கி பொண்டிங் இரண்டாவது இடத்திலும் (21 வயது, 76 நாள்), அவிஷ்க பெர்னாண்டோ மூன்றாவது இடத்திலும் (21 வயது, 87 நாள்), விராட் கோலி நான்காவது இடத்திலும், (22 வயது, 106 நாள்), சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது இடத்த…
-
- 0 replies
- 560 views
-
-
ஒரே டி20: நியூஸிலாந்தை நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்தை நொறுக்கிய தென் ஆப்பிரிக்க அணி. | படம்| ஏ.எப்.பி. ஆக்லாந்து, ஈடன்பார்க்கில் நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை தென் ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்த தவறைச் செய்தவர் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். தென் ஆப்பிரிக்கா ஹஷிம் ஆம்லா அதிரடி அரைசதத்துடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 14.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, கிறிஸ் மோரிஸ் அற்புதமான தொடக்க ஓவர்களில்…
-
- 0 replies
- 342 views
-
-
ஒரே நாளில் 271 ரன்கள், பிறகு முச்சதம்; பிரஷாந்த் சோப்ரா சாதனை: இமாச்சல் அணி 729 ரன்கள் குவிப்பு ரஞ்சி சாதனை நாயகன் பிரஷாந்த் சோப்ரா. தரம்சலாவில் நடைபெற்று வரும் பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இமாச்சல் அணி தொடக்க வீரர் பிரஷாந்த் சோப்ரா 338 ரன்களை விளாசினார், இமாச்சல் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 729 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வலது கை வீரரான 25 வயது பிரஷாந்த் சோப்ரா 338 ரன்கள் எடுக்கும் முன்பாக நேற்று ஒரேநாளில் 271 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் அதிக ரன்கள் எடுத்த வகையில் பாவ்சாஹேப் நிம்பால்கர் 277 ரன்களை ஒரே ந…
-
- 0 replies
- 375 views
-
-
ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இலங்கை அணியின் சங்கக்கார, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி அவர்களின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளது. சங்கக்கார நாளை கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்குப்பின் ஓய்வு பெறுகிறார். உலக்கிண்ணப் போட்டிக்குப்பின் ஓய்வு பெற இருந்த அவரை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான்இ இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தலா இரண்டு போட்டிகளில் வி…
-
- 0 replies
- 384 views
-
-
ஒரே பந்தில் 16 ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்: எப்படி சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் தொடரில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் ஒரே பந்தில் 16 ரன்களை விளாசியுள்ளார். இது நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் நடந்திருக்கிறது. ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் இந்த அரிதான சாதனை படைக்கப்பட்டுள்ளது. பும்ரா, ஷமியை விஞ்சி இந்தியாவின் பிரமாஸ்திரமாகிறாரா முகமது சிராஜ்?16 ஜனவரி 2023 அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி10 ஜனவரி …
-
- 0 replies
- 589 views
- 1 follower
-
-
ஒரே பந்துக்கு இரண்டு ரிவியூக்கள்: வங்கதேச கடைசி விக்கெட் எழுப்பும் சந்தேகங்கள் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி முடிந்த விதம் வெற்றிக் கொண்டாட்டங்களினால் நம் கவன ஈர்ப்பை பெறாமல் போயிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று நிபுணர்களால் கருதப்படுகிறது. ஆனாலும் இந்தத் தீர்ப்பு முடிவை மாற்றக்கூடியதல்ல ஏனெனில் ஆட்டம் முடிய இன்னும் 2 மணி நேரங்கள் இருந்தது, கடைசி விக்கெட்தான் வங்கதேசம் கையில் உள்ளது, எனவே இந்தத் தீர்ப்பினால் முடிவு மாறிவிட்டது என்றுகூற முடியாவிட்டாலும், இது எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான சூழ்நிலைகளில் கடும் சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய (தவ…
-
- 0 replies
- 339 views
-
-
ஒரே போட்டியில் 1045 ரன்கள் குவித்து மும்பை பள்ளி மாணவர் சாதனை மும்பையில் 14-வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தனிஷ்க் கவாத் என்ற மாணவன் 1045 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளான். மும்பை: மும்பையில் 14-வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களிடையே நவி மும்பை கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் யஷ்வந்த்ராவ் சவான் லெவன் அணி சார்பாக விளையாடிய தனிஷ்க் கவாத் என்ற சிறுவன் 515 பந்துகளில் 1045 ரன்கள் குவித்து சாதனைப்படைத்துள்ளான். இதில் 149 பவுண்டரியும், 67 சிக்சரும் அடங்கும். இரண்டு நாட்கள் களத்தில் நின்ற…
-
- 0 replies
- 369 views
-
-
ஒரே போட்டியில் 5 ‘சேம் சைடு’ கோல் நவம்பர் 03, 2014. உள்ளூர் கால்பந்து போட்டியில் ஐந்து ‘சேம் சைடு’ கோல்கள் அடித்தது வியப்பாக உள்ளது. பொதுவாக கால்பந்து போட்டிகளில் ‘சேம் சைடு’ கோல் அடிப்பவர்களை, சொந்த ரசிகர்கள் கொடூரமான எதிரியாக பார்ப்பர். 1994 உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இப்படிச் செய்த, கொலம்பிய வீரர் எஸ்கோபர், ரசிகர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில் இந்தோனேசியாவில் நடந்த பிரிமியர் டிவிசன் கால்பந்து லீக் போட்டியில் அதிகமாக ‘சேம் சைடு’ கோல்கள் அடிக்கப்பட்டன. செமராங், சிலிமேன் அணிகள் மோதிய இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் போர்னியோ அணியை சந்திக்க வேண்டும். இந்த அணிக்கு ‘தாதாக்கள்’ ஆதரவு இருப்பத…
-
- 0 replies
- 510 views
-
-
ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தல் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் தல டோனி இரண்டு உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். #WorldCup2018 இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் …
-
- 1 reply
- 442 views
-
-
ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையுடன் இணைந்தார் ஸ்டார்க் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி வருகிறார். மிட்செல் ஸ்டார்க், வார்னர், ஸ்மித் போன்றோர் இடம் பிடித்துள்ள ந…
-
- 1 reply
- 578 views
-
-
ஒரே போட்டியில் இரு பக்கமும் நின்ற நடுவர் ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போட்டிக்கு மேலத…
-
- 0 replies
- 336 views
-
-
ஒரே போட்டியில் முதலிடத்தை பெற்ற இலங்கை! சாதனை முறியடிப்பு! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண ரி20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி தொடரில் இருந்து வௌியேறுகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் இலங்கை அணி 184 என்ற வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் கடந்திருந்தது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை இடம்பெற்ற ரி20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஐக்கிய …
-
- 2 replies
- 333 views
-
-
ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள்: சாதனைப் படைப்பாரா விராட் கோலி ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 151 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டத்தில் மேலும் 49 ரன்கள் எடுத்தால் விராட் கோலி இரட்டை சதம் அடிப்பார். அப்படி இரட்…
-
- 2 replies
- 599 views
-
-
ஒரே வருடத்தில் இரண்டு ஐபிஎல்- பிசிசிஐ புதிய திட்டம்? மினி ஐபிஎல் தொடர் நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் ஐபிஎல் தொடர், உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதில், முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பரில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடுவது வழக்கம். ஆனால், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டுக்கு முன்னர் இந்தத் தொடர் கைவிடப்பட்டது. இதனால், தற்போது செப்டம்பர் மாதத்தில் 15 நாள்கள் இடைவெளி கிடைத்துள்ளதால், அதில் மினி ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற…
-
- 0 replies
- 716 views
-
-
ஒரே வீரருக்கு மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பை வழங்கிய தர்மசேன இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், கள நடுவராக செயற்பட்ட குமார் தர்மசேன ஒரே வீரருக்கு மூன்று முறை தவறான ஆட்டமிழப்பை வழங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஒரே பந்துவீச்சாளர் வீசிய பந்துகளில் ஒரே வீரருக்கு மேற்படி மூன்றுமுறை தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் 26 ஆவது ஓவரை வீசிய சகிப் அல் ஹசனின் பந்துவீச்சை இங்கிலாந்தின் மொயின் அலி எதிர்கொண்டார். இதன்போது விக்கெட்டை மறைத்…
-
- 0 replies
- 420 views
-
-
`ஒரேயொரு தொடரில் வெற்றிபெற்றதை வைத்து இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு நிகரெனக் கூறமுடியாது' [12 - March - 2008] ஒரேயொரு தொடரில் வெற்றி பெற்றதை வைத்து உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு நிகரான அணியென இந்தியாவை சொல்ல முடியாதென்று முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்னன் கூறியுள்ளார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் வெற்றிபெற்று இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்கனன், அவுஸ்திரேலிய அணிக்கு நிகராக இந்தியாவை கூற முடியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஒற்றை கையால் கேட்ச் செய்து வியக்க வைத்த கிறிஸ் கெயில் கனடாவில் நடந்த டி 20 தொடரில் கிறிஸ் கெயில் ஒரு கையில் அட்டகாசமாக கேட்ச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டின் யூனிவர்ஸல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெயில் கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி 20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் வான்கூவர் நைட்ஸ் - மேற்கிந்தியத் தீவுகள் பி அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெயில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக களமிறங்கினார். முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.4 ஓவர்களில் 145 ரன்களுக்…
-
- 1 reply
- 490 views
-
-
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது. இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43) பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள…
-
- 2 replies
- 670 views
-
-
ஒற்றைக் காலுடன் உசேன் போல்டுக்கே சவால் கொடுத்த சாம்பியன்! உசேன் போல்ட் – மின்னல் மனிதன். மொத்த உலகையும் 10 விநாடிகள் தன்னை மட்டுமே பார்க்க வைத்த ஒரு தடகள் சகாப்தம். தொடர்ந்து 3 ஒலிம்பிக் தொடர்களில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஓடிய அதே களத்தில் இன்னுமொரு உசேன் போல்டை உலகம் கண்டுகளித்துள்ளது. ஆனால் போல்டைப் போல இரண்டு கால்களால் பறந்தவரல்ல இவர். உடலளவில் குறைகள் கொண்டிருந்தாலும் சோதனைகள் வென்று சாதனை படைத்த நாயகர்கள் பங்கேற்ற பாராலிம்பிக் தொடரில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சார்ந்த ஜானி பீகாக். பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்கான உச்சபட்சத் தொடர். வாழ்க்கையில் எத்தனையோ இழந்தாலும் …
-
- 0 replies
- 551 views
-