விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இங்கிலாந்தை வெல்ல முடியாமல் திணறும் பாகிஸ்தான்: 4-0 முன்னிலை அரைசத ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ, வின்னிங் ஷாட் அடித்த மொயீன் அலி. | படம்: ராய்ட்டர்ஸ். ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை இங்கிலாந்து வீழ்த்தி, தொடரில் 4-0 என்று முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லருக்கு எதிர்பாராத காயம் ஏற்பட்டதால் ஜானி பேர்ஸ்டோ அழைக்கப்பட்டார். இவர் தனது அழைப்பை நிரூபிக்கும் விதமாக 61 ரன்கள் எடுத்ததோடு பென் ஸ்டோக்ஸுடன் 103 ரன்கள் கூட்டணி அமைத்தார். பென் ஸ்டோக்ஸ் …
-
- 0 replies
- 510 views
-
-
பந்து தலையில் தாக்கி மயங்கிய பிரக்யான் ஓஜா : வைத்தியசாலையில் அனுமதிப்பு (காணொளி இணைப்பு) உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர் மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்தார். இதனையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரக்யான் ஓஜா நலமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11097
-
- 0 replies
- 444 views
-
-
ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நைஜீரியா மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஞாயிறன்று நடந்த இறுதி ஆட்டத்தில் புர்கினோ ஃபாஸோவை 1-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வென்றது. நைஜீரிய அணியின் சண்டே ம்பா அற்புதமான கோலை அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் முதல் பாதியில் ம்பா இந்த கோலை அடித்திருந்தார். புர்கினோ பாஸோ அணியின் வில்ஃப்ரட் சனூ ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கோல் எண்ணிக்கையை சமன் செய்ய முயன்றார். ஆனால் நைஜீரிய கோல்கீப்பர் வின்செண்ட் என்யீமா தனது விரல் நுனியால் அந்த கோலைத் தடுத்து நிறுத்தி விட்டார். இதற்கு முந்தைய ஆப்பிரிக்க நாடுகளிடையிலான பந்தயங்களைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் நட…
-
- 2 replies
- 454 views
-
-
அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் அஸ்வின் 400 விக்கெட்டுகள் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய அஸ்வின். | படம்: ராய்ட்டர்ஸ். 38 டெஸ்ட்கள், 101 ஒருநாள் போட்டிகள், 45 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ள அஸ்வின் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். கொல்கத்தாவில் இன்று இந்தியா வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியதோடு, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இதில் 2-வது இன்னிங்சில் நியூஸிலாந்து பொறுப்பு கேப்டன் ராஸ் டெய்லர் விக்கெட்டைக் கைப்பற்றிய போது அஸ்வின் தனது 400-வது சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார். மொத்தம் 185 சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து ஆடியுள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 38…
-
- 0 replies
- 414 views
-
-
ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியுஸிலாந்து பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற நியுஸிலாந்து அணி தொடரை 3 - 0 என கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்று முடிந்த 3 ஆவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 8 விக்கட்டுகள் மற்றும் 52 பந்துகளினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் 59 ஓட்டங்களையும், இம்ருல் கையிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஜீடன் படேல் மற்றும் சென்ட்னர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர். பதிலுக்க…
-
- 1 reply
- 427 views
-
-
பாரீஸில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமத்தை பெறுவதில் பாரீஸ், லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த மாதம் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இந்த நகரங்களில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் சம்மதம் தெரிவித…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கை இந்திய ஒருநாள் போட்டி தொடர் செய்திகள் அஸ்வின், – ஜடேயாவுக்கு ஒருநாள்த் தொடரில் ஓய்வு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் சகலதுறை வீரர்களான அஸ்வின், ஜடேயா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரியவருகிறது. இன்று ஆரம்பமாகும் இறுதி டெஸ்ட் ஆட்டம் முடிந்த பின்னர், எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது. இந்தத் தொடரில் இருந்து ஜடேயா, அஸ்வின் இருவரையும் விடுவிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று தெரியவரு கிறது. இந்திய அணி அடுத்த மூன்று மாதங்களில் 23 ஆட்டங்களை அதன் சொந்த மண்ணில் எதி…
-
- 43 replies
- 3.4k views
-
-
28 வருடங்களின் பின் FIFA உலகக் கிண்ணத்தில் எகிப்து 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு அரபு உலகில் அதிகளவு மக்களைக் கொண்ட நாடாக விளங்குகின்ற எகிப்து தகுதி பெற்றுக்கொண்டது. ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் 3 ஆவது சுற்றில் 20 அணிகள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தங்களது குழுக்களில் உள்ள மற்றைய அணிகளுடன் மோதிக்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பெறும் அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும் நிலையில், E குழுவில் நேற்று கொங்கோ அணியுடன் இடம்பெற்ற போட்டியில் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வருகின்ற எகிப்து அணியின் 25 வயதுடைய இளம் நட்சத்திர…
-
- 2 replies
- 356 views
-
-
ஜானி பேர்ஸ்டோ - பேங்க்ராப்ட் ‘தலைமுட்டு’ சர்ச்சை: இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் காட்டம் இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ். - படம். | ஏ.எஃப்.பி. பெர்த்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேங்கிராப்டை ‘பார்’ ஒன்றில் சந்தித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அவரைத்தலையால் முட்டியதாக எழுந்த சர்ச்சை தற்போது பெரிதாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, களத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் காட்டமாக கடிந்து கொண்டுள்ளார். அதுவும் பிரிஸ்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலா…
-
- 0 replies
- 250 views
-
-
சுவிஸில் இன்று தொடங்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிஸின் St.Moritz நகரில் உள்ள பனிமலைப் பகுதியில், உலகின் முதல் ஐஸ் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது. மொத்தமாக இரண்டு போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் முன்னாள் ஜாம்பவான்கள், இன்னாள் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களில், சோயப் அக்தர், லசித் மலிங்கா, மைக்கேல் ஹஸ்ஸி, வீரேந்தர் சேவாக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். Traveloyster.com-யின் உரிமையாளர் மற்றும் இயக்குநருமான அபாய் ஜெய்புரியா, வீரர்களின் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாட்டின் பங்குதாரராக உள்ளார். http://news.lankasri.com/cri…
-
- 3 replies
- 421 views
-
-
தோல்விக்குக் காரணம் சாஹலின் நோ-பால்: சுனில் கவாஸ்கர் விமர்சனம் யஜுவேந்திர சாஹல். - படம். | ஏ.பி. வாண்டரர்சில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதற்கு டேவிட் மில்லர் பவுல்டு ஆன சாஹலின் நோ-பால்தான் காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சாஹல் நோ-பாலில் மில்லர் பவுல்டு ஆன போது அவரது தனிப்பட்ட ஸ்கோர் 7 ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. “இதுதான் அந்த ஆட்டத்தின் திருப்பு முனை என்று நான் கருதுகிறேன். ஏ.பி.டிவில்லியர்சும் ஆட்டமிழந்து விட்டார், மில்லர் அப்போது சாஹல் பந்துகளைக் கணிப்பதில் திணறிக் கொண்டிருந்தார். இந்திய அண…
-
- 0 replies
- 352 views
-
-
விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் யுக்திகளை காப்பி அடித்தேன் - ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சின் யுக்திகளை காப்பி அடித்தேன் என ஸ்மித் கூறியுள்ளார். #Smith #SAvAUS ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 61 போட்டிகளில் 111 இன்னிங்சில் பேட்டிங் செய்து 6057 ரன்கள் குவித்துள்ளார். தலா 23 சதம், அரைசதங்களை பதிவு செய்துள்ள இவர், 63.75 சராசரி வைத்துள்ளார். இப்போதைய காலக்கட்டத்தில் அவரது சராசரியை யாரும் தொட முடியவில்லை. …
-
- 0 replies
- 211 views
-
-
பாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்: தினேஷ் கார்த்திக், ராகுல் நட்புக் கலாய்ப்பு கே.எல்.ராகுல், பாண்டியா - நன்றி. | பிசிசிஐ ட்விட்டர் பக்கம் எப்போதும் தன் மீதே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளைச் செய்பவர் ஹர்திக் பாண்டியா என்ற பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் அவருக்கு உண்டு. அவர் தன் சுய முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துபவர், கவன ஈர்ப்பு ஆசாமி என்றேல்லாம் பாண்டியாவை ஓய்வறையில் வீரர்கள் சிலர் நட்புக் கலாய்ப்புச் செய்வதும் உண்டு. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்க…
-
- 0 replies
- 289 views
-
-
விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார் இந்திய அணி கேப்டனான விராட் கோலியை ஜூன் மாதம் முழுவதும் விளையாட சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. #ViratKohli #Surrey இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் இவர், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சரியாக சோபிக்கவில்லை. கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. அப்போது 5 டெஸ்டில் 1…
-
- 2 replies
- 548 views
-
-
மெஸி, ரொனால்டோ, எம்பாப்பே கோல் புகுத்தினர்: றியாத் அணியை 5:4 விகிதத்தில் பிஎஸ்ஜி வென்றது By SETHU 20 JAN, 2023 | 12:14 PM சவூதி அரேபியாவில் நடைபெற்ற, பரீஸ் செயின்ற் ஜேர்மைன் அணிக்கும் (பிஎஸ்ஜி), அல் நாசர் - அல் ஹிலால் கழகங்களின் வீரர்கள் இணைந்த றியாத் ஆல் ஸ்டார்ஸ் கூட்டு அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நட்சத்திர வீரர்களான லயனல் மெஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ கிலியன் எம்பாப்பே ஆகியோர் கோல் புகுத்தினர். இப்போட்டியில் பிஎஸ்ஜி அணி 5:4 கோல்களால் வென்றது. ரொனால்டோ, எம்பாப்பே ஆகியோர் தலா 2 கோல்களைப் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. றியாத் நகரிலுள்ள மன்னர் பஹத் அரங்கில் நேற்றிரவு இப்போட்டி நடைபெற்றது. …
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
டி20 போட்டியில் புதிய சாதனை: 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்த பாக். வீரர் அபாரம் பிரிட்ஜ்டவுனில் நடந்த கரிபியன் ப்ரிமியர்லீக் போட்டியில் பர்படாஸ் அணிக்காக பந்துவீசிய முகமது இர்பான் - படம்: ஏஎப்பி டி20 போட்டிகளில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் எனும் பெருமையை பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பெற்றார். 4 ஓவர்கள் வீசிய முகமது இர்பான் (4-3-1-2) 23 டாட் பந்துகள், 3 மெய்டன் ஓவர், ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ப்ரிமீயர் …
-
- 0 replies
- 660 views
-
-
முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே! சென்னை: தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று தொடக்க போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்த தமிழகத்தின் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய தேர்வாளர்கள் மறுத்துள்ளனர். விராத் கோஹ்லி போல முரளி விஜய்யும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். சதம், அரை சதம் என்று இவரும் தன் பங்குக்கு ரன் குவித்தார். அதை விட முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லா…
-
- 10 replies
- 844 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும் பயிற்சியாளருமான ஜாவிட் மியான்டாட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தன்னை அழைத்தால் தான் அதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு தருணங்களில் மூன்று முறை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார் மியான்டாட். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின் பயிற்சியாளர் தேவை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியது. மே 15 ஆம் திகதியுடன் அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு மியான்டாட் விண்ணப்பிக்கவில்லை. 124 டெஸ்ட் போட்டிகளில் 8832 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தானி…
-
- 0 replies
- 827 views
-
-
ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372617
-
- 8 replies
- 867 views
- 1 follower
-
-
தோனியை ‘மிஸ்’ பண்ணுகிறேன் * கோஹ்லி உருக்கம் தாகா: ‘‘வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’ தோனி இல்லாதது புதுமையான உணர்வை தந்தது. இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகளை முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் பாராட்டினர். கோஹ்லியை பொறுத்தவரை தோனி மீதான தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாதவராக உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியது: வங்கதேசத்துக்கு எத…
-
- 0 replies
- 295 views
-
-
எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எனது சாதனைகள் குறித்து நான் திருப்தியடையவில்லை என அஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உங்களது சாதனைகள் குறித்து நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு மத்தியுஸ் நேர்மையாக பதில் அளிப்பது என்றால் நான் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். நான் என்னால் முடிந்ததை விட குறைவாகவே சாதித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். 2013 முதல் 2016 வரை நான் அதிகளவு போட்டிகளில் விளையாடினேன் அது எனது உடலிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என குறிப்பிட்டுள்ள மத்தியுஸ் நான் காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டேன் 2016 முதல் 2018 வரை அணியில் முழுமை…
-
- 0 replies
- 337 views
-
-
ஏலத்தில் என்ன நடந்தது?- ஐ.பி.எல் 'லக்கிமேன்' முருகன் அஸ்வின் பேட்டி வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முருகன் அஸ்வின் புனே அணிக்காக ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம்தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ஐ.பி.எல். என்ட்ரி குறித்து அவர் அளித்த பேட்டி இங்கே... ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடந்தது? பிப்ரவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கே டி.வி. முன்னாள் உட்கார்ந்துட்டேன். லஞ்சுக்கு மட்டும்தான் எழுந்துருச்சேன். மாலை 4 மணிக்குதான் எனது பெயர் ஸ்கிரீன்ல தெரிஞ்சது. ரொம்ப நெர்வசா இருந்தது. எனக்கு ஐ.பி.எல்.ல விளையாடனும்னுதான் ஆசை…
-
- 0 replies
- 647 views
-
-
'முடி கொட்டியதால் சரியாக விளையாட முடியவில்லை!' அச்சச்சோ மோஹித் சர்மா ஆடுகளம் சரியாக அமையவில்லை, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது, வெளிச்சம் குறைவு என்று பல காரணங்களை கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடாததற்கு கூறியுள்ளார்கள். இந்த வரிசையில் இப்போது புது விதமான காரணத்துடன் மோஹித் சர்மா இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோஹித். எட்டு போட்டிகளில் பதிமூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சச்சினின் கடைசி ரஞ்சி போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்தியவர் மோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த வருடம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் அணியில் இருந்து கூட ஒரு போட்டியில் …
-
- 0 replies
- 486 views
-
-
21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20 பேங்காக்கில் ஆசிய மகளிர் டி20 கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, ஒரு போட்டியைக் கூடத் தோற்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹர்மன் பீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொண்டுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, மன்ஸி ஜோஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆசிய கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மொத வேண்டும். இம்முறையில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடு…
-
- 0 replies
- 404 views
-
-
சனத் ஜயசூரிய இராஜினாமா? இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவில் தலைவர் பதவியில் இருந்து, சனத் ஜயசூரிய, இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் கொடுத்துள்ளதாகவும், தென்னாபிரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்புவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் கேட்டபோது, இவ்வாறான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/191279/சனத-ஜயச-ர-ய-இர-ஜ-ன-ம-#sthash.tvokm652.dpuf
-
- 0 replies
- 789 views
-