Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தோனி என் மீது வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை: பவன் நேகி ஆதங்கம் பவன் நேகி வலைப்பயிற்சியில். பின்புறம் நிற்பவர் அமித் மிஸ்ரா. | படம்: ஷிவ்குமார் புஷ்பகர். 2016 ஐபிஎல் தொடரில் ரூ.8.5 கோடி தொகைக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் பவன் நேகி தனது திறமைகள் மீது தோனி வைத்த நம்பிக்கையை டெல்லி அணி வைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ஜாகீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது. 14 போட்டிகளில் 8 ஆட்டங்களில் மட்டுமே பவன் நேகி ஆடியுள்ளார். அதில் 9 ஓவர்களை மட்டுமே அவர் வீசியுள்ளார். இதனால் தன்னை சரியாகப் பயன்படுத்தவில்லை என்…

  2. லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன? போட்டியின் மத்திய ஓவர்களில் விக்கெட்டுக்களை சாய்ப்பதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்ததே இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சிகளுக்கு காரணமாகவிருந்தது. எனினும், ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மத்தியவரிசை ஓவர்களில் முக்கிய பல விக்கெட்டுக்களை சாய்த்திருந்த சுழல் வீரரான லக்ஷன் சந்தகன் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்கான தனது பெறுமதியை உணர்த்தியிருந்தார். இந்தப் போட்டி மூலம், ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்த சந்தகன், 10 ஓவர்களை வீசி 51 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இவரின் சிறப்பாட்டம் மூலம் இலங்கை, ஜிம…

  3. விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு! Published By: DIGITAL DESK 2 10 MAY, 2025 | 11:24 AM டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். இந்நிலையில், முடிவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபை விராட் கோலியிடம் தெரிவித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, இருபதுக்கு 20 போட்டியில் ஓய்வுபெற்றுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் அவுஸ…

  4. தோனியின் விடாமுயற்சி இன்னிங்ஸ் வீண்: டெல்லியிடம் வீழ்ந்தது ஜார்கண்ட் 2 கேட்ச்கள் ஒரு ஸ்டம்பிங், 70 நாட் அவுட்: தோனி. | படம்: முரளி குமார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2-வது காலிறுதிப் போட்டியில் தனிமனிதனாக போராடிய தோனியின் ஆட்டம் வீணானது, ஜார்கண்ட் அணியை டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் வருண் ஆரோன் ஜார்கண்ட் அணிக்காக டாஸ் வென்று டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தாலும் தோனியே அணியை வழிநடத்தினார். பந்துகள் எழும்புவதும், தரையோடு தரையாக எழும்பாமலும் செல்லும் பேட்ஸ்மென்கள் திணறும் வகையிலான பிட்சில் டெல்லி அணி கடைசியில் பவன் நெகியின் அதிரடி 16 பந்து 38 ரன்களினால் 50 ஓவர்களில் 225 ரன்களை எட்டியத…

  5. போதும்... போறேன்...! மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் சென்று டி20 போட்டிகளில் பங்கேற்பதுதான் கெயிலின் தற்போதைய முக்கிய வேலை. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் அவருக்கு முதுகு வலி இருந்து வந்தது. அண்மை காலங்களில் வலி அதிகரித்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய கிறிஸ் கெயில் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட்டுக்கு தற்காலிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், ''ஆகஸ்ட் 2ஆம் தேதி சாரிட்டி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறேன். அதற்கு பின், அறுவை சிகிச்சைக்காக என்னை தயார் செய்ய வேண்டியது உள்ளது. அனேகமாக டிசம்பர்…

  6. சந்தேகத்தில் மன்செஸ்டர் சிற்றியின் சம்பியன்ஸ் லீக் வாய்ப்பு இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்ததோடு, லிவர்பூல், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருந்தன. மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக சேர்ஜியோ அக்ரோவும் கெவின் டீ ப்ரூனும் கோல்களைப் பெற்றிருந்ததோடு, ஆர்சனல் சார்பாக ஒலிவர் ஜிரோட்டும் அலெக்ஸிஸ் சந்தேஸும் கோல்களைப் பெற்றிருந்தனர். …

  7. விழிப்புலனற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் அரையிறுதியில் இலங்கை விழிப்புலனற்றோர் தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்­று­வரும் விழிப்­பு­ல­னற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்­டி­களின் அரை யிறுதி ஆட்­டத்தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தகு­தி­பெற்­றுள்­ளது. தென் ஆபி­ரிக்க விழிப்­பு­ல­னற்றோர் அணிக்கு எதி­ரான போட்­டியில் 8 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்­றதை அடுத்து இலங்கை விழிப்­ப­லன்றோர் அணி உலகக் கிண்ண இறுதி ஆட்­டத்தில் விளை­யாட தகு­தி­பெற்­றது. இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் இங்­கி­லாந்து விழிப்­பு­ல­னற்றோர் அணியை 90 ஓட்­டங்­களால் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி வெற்­றி­கொண்­டி­ருந்­தது. அப் போட்­டியில் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி சார்­பாக சந்­த…

  8. மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சுழல் பந்து வீச்சாளர்கள் விருந்தினர் அணிக்கு தலை வலி கொடுத்துள்ளார்கள். மேற்கு இந்திய தீவுகள் : 170/3 இங்கிலாந்து: 143/9 ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவல் http://www.espncricinfo.com/west-indies-v-england-2013-14/engine/match/636536.html

    • 0 replies
    • 464 views
  9. பங்களாதேஷை 201 ஓட்டங்களால் வீழ்த்திய மே. தீவுகளுக்கு இரண்டரை வருடங்களில் சொந்த மண்ணில் முதலாவது வெற்றி 27 NOV, 2024 | 12:56 AM (நெவில் அன்தனி) அன்டிகுவா, நோர்த் சவுண்ட் விவியன் றிச்சட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 201 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் மிக இலகுவாக வெற்றிபெற்றது. கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியில் ஜஸ்டின் கிறீவ்ஸ் குவித்த கன்னிச் சதம், மிக்கைல் லூயிஸ், அலிக் அத்தானேஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், அல்ஸாரி ஜோசப், கெமர் ர…

  10. ஆஸ்திரேலியான்னா 'பயம்'... அது இப்போ இல்லையா? #CricketAustralia "ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது" - வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கேப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது, ஆனால் ஆக்ரோஷமிக்க…

  11. ரவி சாஸ்திரியின் அணுகுமுறையும் உலகக் கோப்பை கனவும்! திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் இந்திய கிரிக்கெட் ‘ரவி சாஸ்திரி காலகட்டம்’ என்ற ஒன்றை விரைவில் காணும் என்று 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் பத்தியில் கிரிக்கெட் எழுத்தாளர் சுரேஷ் மேனன் கூறுகிறார். அவர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: டைகர் பட்டோடிக்குப் பிறகு ஒரு கேப்டனாகவே வளர்த்தெடுக்கப்பட்ட ரவி சாஸ்திரி ஏன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் கேப்டன்சி செய்தார் என்பது எனக்கு தர்க்கபூர்வமாகத் தெரியவில்லை. அந்த ஒரு போட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, அதில் இந்தியா வெற்றி பெற்றது. ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிராக அண்டர்-19 அணியை தலைமையேற்றுச் சென்ற காலக்கட்டத்திலேயே அவரை ஒரு லீடர் என்றே அனைவரும் கருதி…

  12. உலக கால்பந்தாட்ட தரவரிசையில் ஜேர்மன் அணி 20 வருடங்களின் பின் மீண்டும் முதலிடம் 2014-07-18 10:09:03 உலக கிண்ணத்தை வென்ற பிலிப் லாஹ்ம் தலைமையிலான ஜேர்மன் கால்பந்தாட்ட அணி சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டின்பின்னர் உலக கிண்ணத்தை வென்ற ஜேர்மன் அணி கடந்த 20 வருடங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றமை இதுவே முதல் தடவையாகும். முன்னாள் சம்பியனும் இதுவரை முதலிடத்தில் இருந்த அணியுமான ஸ்பெய்ன் தற்போது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா 5 ஆவது இடத்திலிருந்து 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து 3 ஆம் இடத்தையும் கொலம்பியா 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. பெல்ஜியம் 12 ஆவது இடத்திலிருந்த…

  13. ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி Image courtesy - Kholi's twitter உலக ஆசிரியர்கள் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் தமது ஆசான்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியாளர்களுடன் முன்னாள் ஜாம்பவான்கள்தான் ஆசிரியர்கள். அவர்களது ஆட்டத்…

  14. 11வது உலக கோப்பையில் 11 புதுமைகள் அறிமுகம் புதுடில்லி: கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இப்போது பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டது. வரும் 2015 ல் நடக்கவுள்ள 11 வது உலக கோப்பை தொடருக்காக, 11 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதில் கடந்த 2011ல் இருந்ததை விட பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் விவரம்: * பீல்டிங் கட்டுப்பாடு கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் பீல்டிங் கட்டுப்பாடு வந்தது. 3 ஆக இருந்த ‘பவர் பிளே’, 2 ஆக மாற்றப்பட்டது. இதில், முதல் 10 ஓவர்களில் 2 பேர், ‘பேட்டிங் பவர் பிளேயில்’ (40 ஓவருக்குள்…

  15. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே முதன் முதலாக பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை யாழ் பல்கலைக்கழக மாணவிகள் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை ஆணொருவரும் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273303

  16. சம்பியனாகியது மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, தமது கிண்ணத்தை தக்க வைத்து சம்பியனாகியது. வெம்ப்ளி மைதானத்தில், நேற்று முன்தினமிரவு விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில், பெனால்டியில் செல்சியை வென்றே மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்தது. இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்ததுக்கு மேலாக, செல்சியின் முகாமையாளர் மெளரிசியோ சரியால், அவ்வணியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலகாவை பிரதியீடு செய்ய முயன்றமையை அவர் மீறியமையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. மேலதிக நேரத்தின் இறுதி நிமிடங்களி…

  17. ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ? இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் வெற்றயீட்டு கைப்பற்றியுள்ளதுடன், இதில் ஒரு போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது. இதில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையிலும், மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுக்களினாலும், நான்காவது போட்டியிலும் 18 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையில் முறையில் வெற்றி பதிவு செய்தது. இந் நிலையில் மூன்று போ…

  18. வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா, இந்தூர் மைதானத்தில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது இந்தியா. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும். லைவ் ஸ்கோரெக்கார்ட முதல் டெஸ்ட், ஹோல்கார் க்ரிக்கெட் ஸ்டேடியம், இண்டோர், Nov 14, 2019 இந்தியா 493/6d (114.0) …

    • 0 replies
    • 463 views
  19. அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். ஏற்கனவே இருபதுக்கு 20 போட்டியின் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படலாம் எனவும் தெரிய வருகின்றது. http://www.virakesari.lk/article/sports.php?vid=368

    • 3 replies
    • 463 views
  20. நடந்து முடிந்த 1000 ஐ.சி.சி. 20:20 போட்டிகளில் மறக்க முடியாத 20 முக்கிய பதிவுகள் Published by J Anojan on 2019-11-04 16:10:55 ( ஜெ.அனோஜன் ) சர்வதேச ஆண்களுக்கான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியானது கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் 1000 ஆவது ஆண்களுக்கான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. இந் நிலையில் இதுவரை காலமும் இடம்பெற்ற 1000 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு : 20 போட்டிகளில் மறக்க முட…

    • 0 replies
    • 463 views
  21. விமானநிலையத்தில் கப்புகெதரவுக்கு நடந்த அதிர்ச்சி ( காணொளி இணைப்பு ) இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான சாமர கப்புகெதரவுக்கு நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி நேற்று இரவு நாடு திரும்பியிருந்தது. இந்நிலையி்ல் நேற்று இரவு நாடுதிரும்பிய இலங்கை அணியினருடன் விமான நிலையத்தில் கப்புகெதர தனது 30 ஆவது பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். http://www.virakesari.lk/article/17007

  22. அமெரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கையர் நியமனம்..! இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தசநாயக்க, அமெரிக்க கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்றுவிப்பாளராக செயற்பட எனக்கு வாய்ப்பளித்தமையானது பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்க இதுவொரு அற்புதமான தருணமாகும். இங்கு திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். கடின உழைப்பின் மூலம் இந்நாட்டில் கிரிக்கெட்டை உயர் தரத்திற்கு கொண்டுச் செல்ல முடியும். அடுத்த மாதம் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் தி…

  23. 10 நாட்களில் என்னை மறந்து விடுவார்கள்: ஐபிஎல் ‘சக்சஸ்’ குறித்து ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் கிரிக்கெட் 8-வது தொடரில் சிறப்பாக வீசி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளுடன் 4-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமா…

  24. அலன் போடர் பதக்கத்தை வென்றார் டேவிட் வோணர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான, ஆண்டின் சிறந்த வீரருக்கான அலன் போடர் பதக்கத்தை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் வென்றார். தலைவரான ஸ்டீவன் ஸ்மித்தை முந்தியே, இக்கௌரவத்தை அவர் பெற்றுக் கொண்டார். ஆண்டின் டெஸ்ட் வீரருக்கான விருதையும், டேவிட் வோணரே வெற்றிகொண்டார். சிறந்த வீராங்கனைக்கான மெலின்டா கிளார்க் விருதை, எலைஸ் பெரி வெற்றிகொண்டார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை, கிளென் மக்ஸ்வெல், சிறந்த உள்ளூர் பெறுபேறுகளுக்கான விருதை அடம் வோஜஸ், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை, அலெக்ஸ் றொஸ்-உம் வென்றனர். - See more at: http://www.tamilmirror.lk/164832/%E0%AE%85%E0%AE%B2…

  25. 'கே ' நடுவருக்கு லைசென்ஸ் ரத்து : துருக்கு கால்பந்து சங்கத்துக்கு அபராதம் தன்னை ஹோமோசெக்சுவல் என்று அறிவித்த, கால்பந்து நடுவரின் லைசென்சை ரத்து செய்த துருக்கி கால்பந்து சங்கத்துக்கு 5.32 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துருக்கி கால்பந்து நடுவரான ஹலிப் இப்ராஹிம் கடந்த 2009ஆம் ஆண்டு தன்னை' ஹோமோசெக்சுவல்' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி கால்பந்து சங்கம் அவரது நடுவர் லைசென்சை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஹலில் இப்ராஹிம் இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு இழப்பீடாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் துருக்கி லிரா தர வேண்டுமெனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.நீதிமன்ற விவாதத்தின் போது, துருக்கியில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.