விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
15 APR, 2025 | 02:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலனை செய்துவருகிறது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 60 செக்கன் நிறுத்தக் கடிகாரத்தை செயல்படுத்துவது குறித்து கிரிக்கெட் சபைகள் பரிசீலனை செய்து கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன. துடுப்புக்கும் பந்துக்கும் (bat and ball) இடையில் சமநிலையைப் பேணும் முயற்சியாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலித்து வருகிறது. ஹராரேயில் இந்த வாரம் நடைபெற்ற ஐசிசி கூட்டங்களின்போது 35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்தை மாத்திரம் பயன்படுத்தவேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட்டில் இரவோடிரவாக நடந்த மாற்றங்கள் 2016-03-09 09:35:53 இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் முதல் சுற்று ஆரம்ப மாவதற்கு சுமார் 15 மணித்தியாலங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டில் இரவோடிரவாக மாற்றங்கள் செய்யப்பட்டன. திங்களன்று இரவு அவசரமாகக் கூடிய ஸ்ரீலங்கா கிரிக் கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் அரவிந்த டி சில்வா தலைமையில் ஐவரடங்கிய புதிய தெரிவுக் குழுவை நியமித்தது. அத்துடன் தெரிவுக் குழுவுடன் இணைந்து இலங்கையின் சர்வதேச இருபது 20 அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸை நியமித்…
-
- 0 replies
- 491 views
-
-
தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில் நடுவரின் தீர்ப்பின் ஆதிக்கம் குறைக்கப்படவுள்ளது தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவர் வழங்கும் தீர்ப்பு செலுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவிலுள்ளவருமான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த குழுவின் இறுதிச் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஜயவர்தனவே, தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவரின் தீர்ப்பு செலுத்துகின்ற தாக்கமானது அரைவாசியாக குறைக்கப்…
-
- 0 replies
- 227 views
-
-
2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்க…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
ரியோ ஒலிம்பிக் ; பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நமீபியா வீரர் கைது பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதுடன், அதற்காக பணம் செலுத்துவதற்கும் ஜோனஸ் முற்பட்டுள்ளார் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கான குத்துச்சண்டை போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர…
-
- 0 replies
- 264 views
-
-
பராஒலிம்பிக் 2016: தங்கங்களைக் குவிக்கிறது சீனா இடம்பெற்றுவரும் பராஒலிம்பிக் போட்டிகளில், 5ஆவது நாளான திங்கட்கிழமைமுடிவில், பதக்கப் பட்டியலில், சீனாவே முதலிடத்தில் காணப்படுகிறது. 26 தங்கப் பதக்கங்களுடன் 5ஆவது நாளை ஆரம்பித்த சீனா, 13 தங்கங்களை மேலதிகமாகப் பெற்று, 39 தங்கங்கள், 30 வெள்ளிகள், 23 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. 8 தங்கங்களை வென்ற பெரிய பிரித்தானியா, மொத்தமாக 23 தங்கங்கள், 14 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் 18 தங்கங்கள், 13 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உக்ரைனும் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா (13), பிரேஸில் (6), உஸ்பெகிஸ்தான் (6), அவுஸ்திரேலியா (5)…
-
- 0 replies
- 469 views
-
-
யார் இந்த அண்டர்டேக்கர்? அவர் வெளியேறினால் ரசிகர்கள் ஏன் அழுகிறார்கள்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மல்யுத்தம் என்பது வெறும் விளையாட்டல்ல. தொலைக்காட்சியின் முன் மணிக்கணக்காக அமர்வது, மல்யுத்த அட்டைகளை சேகரிப்பது, மல்யுத்தம் தொடர்பான விளையாட்டுகளை அதிகம் விரும்புவது - அப்போது கிரிக்கெட்டை விட மல்யுத்தத்தில்தான் அதிக ஆர்வம் இருந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஓய்வு பெறுவதாக அறிவித்த அண்டர்டேக்கர் WWF (பின்னர் WWE ஆக மாற்றப்பட்டது) இன் ஒவ்வொரு போட்டியும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. மல்யுத்தத்தில் நடைபெறும் சண்டை உண்மையானத…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 748 views
-
-
இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம் இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரேயோரு டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது. இதனால் இலங்கை அணியின் பந்த…
-
- 0 replies
- 298 views
-
-
ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நேரில் கண்டு இரசிப்பதற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் ரசிகர்கள் நால்வர் பிரேஸிலுக்கு நடந்தே சென்றுள்ளனர். ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நேற்று ஆரம்பமானது. இப்போட்டிகளைக் காண இங்கிலாந்து ரசிகர்களான அடம் பேர்ன்ஸ் (27), டேவிட் பெவிக் (32), பீட் ஜோன்ஸ்டன் (29) மற்றும் பென் ஒல்ஸென் (31) ஆகிய நால்வரே பிரேஸிலுக்கு நடந்து சென்றுள்ளனர். ஆர்ஜென்டீனாவின் மெண்டொசா நகரிலிருந்தே இவர்கள் ஒன்றிணைந்து பிரேஸிலின் போர்ட்டோ அலேகிரி நகருக்கு 1,966 கிலோ மீற்றர் தூரத்தை நடந்துசென்றுள்ளனர். இதன்போது பிரேஸில் வறட்சியில் வாடும் ஏழை மக்களுக்கு கிணறு தோண்டுவதற்காக 20 ஆயிரம் பவுண்கள் (சுமார் 44 இலட்சம் ரூபா) நிதி திரட்ட முய…
-
- 0 replies
- 513 views
-
-
ஆடம் வாக்கர் என்ற நீச்சல் வீரர் 7 ஜலசந்திகளை நீந்திக் கடந்த முதல் பிரிட்டிஷ் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலீஷ் கால்வாயைக் கடபப்தன் மூலம் தனது சவாலை தொடங்கிய அவர், பின்னர் ஜிப்ரால்டர், ஹவாய், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கால்வாய்களை வெற்றிக்காரமாக கடந்தார். இந்த சாதனையின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியாக 21 மைல் நீளம் கொண்ட ஐரிஷ் கால்வாயை நேற்று அவர் நீந்திக் கடந்தார். வடக்கு அயர்லாந்திலிருந்து ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரை வரை நீண்டுள்ள இந்தக் கால்வாயை கடந்ததன் மூலம் தனது சாதனையை நிறைவு செய்ததாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த முயற்சியின் போது தன்னை ஜெல்லி மீன்கள் இடைவிடாது தாக்கியதையும், சுறாக்களை எதிர்கொள்ள நே…
-
- 0 replies
- 413 views
-
-
வங்கதேசத்தை வென்றது மே.இ.தீவுகள் கிரனாடாவின் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள். முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் அனாமுல் 138 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 218 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கெயில் (3 ரன்கள்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு வந்த ராம்தின்-ப…
-
- 0 replies
- 492 views
-
-
மதி மயங்கியது ஏனோ ஸ்டீவ் ஸ்மித் ? ஸ்டீவ் ஸ்மித் - Getty Images மீண்டும் ஒரு முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு மதி மயங்கியுள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் சரியாக திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது செயலால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளார் ஸ்மித். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என தாமாகவே முன்வந்து, ரிவர்ஸ் ஸ்விங் வீசு…
-
- 0 replies
- 401 views
-
-
தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் இன்னும் கிடைக்கவில்லை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் இயக்குநருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் இதுவரை யாருக்குமே கிடைக்காத பாராட்டுகள் தோனிக்கு கிடைத்துள்ளது. அதற்கு அவர் முழு தகுதியானவர்தான். அவரது தலைமையில்தான் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்போதும் கூட தோனியின் தகுதிக்குரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும் என்றார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ட…
-
- 0 replies
- 401 views
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 09:06 AM யாழ்ப்பாணம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட யாழ் பாடி சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்றது. சதுரங்க விளையாட்டில் ஆர்வமுடைய யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நடாத்தப்படுகின்ற குறித்த சுற்றுப்போட்டி இரண்டு தினங்கள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் 6,8,10,12,14,16,16 வயதுப் …
-
- 0 replies
- 556 views
- 1 follower
-
-
சிம்பாப்வேயின் துடுப்பாட்ட பயிற்சியாளராக வட்மோர் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை சிம்பாப்வே அணி இழந்ததால் பயிற்சியாளராக பதயேற்ற 5 ஆவது மாத்திலேயே ஸ்டீபன் மான்கோனோ நீக்கப்பட்டார். உலகக்கிண்ண போட்டி இடம்பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பயிற்சியாளரை நீக்கியதால், அந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் விதமாக அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோரை புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமித்துள்ளது. பந்து வீச்சுப் பயிற்சியாளரான டக்ளஸ் ஹோண்டா உலகக்கிண்ண போட்டி வரை வட்மோருக்கு துணையாக இருப்பதற்காக அவரது பதவ…
-
- 0 replies
- 331 views
-
-
கூடைப்பந்தாட்டம் : இளைப்பாறினார் சாய்க்கில் ஓ நெய்ல் Shaquille O'Neal Shaq Retires From Basketball After 19 Years பத்தொன்பது வருடங்களின் பின்னர் அண்மைகால கூடைப்பந்தாட்ட புகழ் பெற்ற வீராரான சாக் ஓ நெய்ல், இன்று தான் இளைப்பாறுவதாக அறிவித்தார் Shaquille O'Neal is one of the finest basketball players in NBA history. It is now his time to pass the torch though, because on Wednesday June 1 Shaq has announced his retirement from basketball. O’Neal announced on twitter this morning that he will be hanging up his jersey and will no longer play basketball after a long season with the Boston Celtics. The basketball star explains: “We did it. Nineteen years baby. I wa…
-
- 0 replies
- 938 views
-
-
இந்திய பவுலர்களின் மோசமான வீச்சுக்கு கேப்டன்களே காரணம்: இயன் சாப்பல் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னேற்றத்தைத் தடுப்பது கேப்டன்களின் தவறான அணுகுமுறையே என்கிறார் இயன் சாப்பல். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பது வருமாறு: "உத்தி ரீதியாக, வலுவான இளம் பேட்ஸ்மென்களை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொண்டு வருவதில் இந்தியா மற்ற கிரிக்கெட் நாடுகளை விட பல மைல் தூரம் முன்னால் உள்ளது. இது ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளுக்கே பொறாமை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், கேப்டன்சி, பவுலிங், அருகில் கேட்ச் பிடித்தல் ஆகிய பிரிவுகளில் இந்தியா இன்னும் சில தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்திய பந்துவீச்சி…
-
- 0 replies
- 886 views
-
-
தோனி பந்து வீசுவதை பார்த்திருக்கீறீர்களா? முதல் முறையாக வரும் நவம்பர் மாதம் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெருமையை நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் பெறுகின்றன. போட்டியை அடிலெய்ட் மைதானம் நடத்துகிறது. இந்த போட்டிக்காக பிரத்தியேகமான 'பிங்க்' வர்ண பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கோகும்பரா நிறுவனம் இந்த 'பிங்க்' வர்ண பந்துகளை தயாரித்துள்ளது. பலவிதமான சோதனைகளுக்கு பிறகு 'பிங்க்' வர்ண பந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபபயணம் செய்தது. அப்போது மெல்பர்ன் மைதானத்தில் சேனல் 9 'பிங்க்' வர்ண பந்தை வீசி பரிசாத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து பார்த்…
-
- 0 replies
- 265 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) 19 வயதுக்குபட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 5 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை ஈட்டியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 32.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. https://www.virakesari.lk/article/64786
-
- 0 replies
- 419 views
-
-
வென்றால் பீபாவைப் பிளவுபடுத்துவேன் இவ்வருடம் பெப்ரவரியில் இடம்பெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத் (பீபா) தேர்தலில் வெற்றிபெற்றால், அச்சம்மேளனத்தை இரண்டாகப் பிளவுபடுத்தவுள்ளதாக, ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல்-காலிபா தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகள் காரணமாக, பலத்த எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் பீபா, தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை, பெப்ரவரியில் நடாத்தவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டவராக, ஷேக் சல்மானே கருதப்படுகிறார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்காக, பீபாவை இரண்டாகப் பிளவுபடுத்துவதே தனது நோக்கம் எனத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 512 views
-
-
ஏ.பி. டி. இனி ஃபுல் டைம் கேப்டன்! தென்ஆப்ரிக்க அணி டெஸ்ட் அணியின் கேப்டனாக டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வந்த ஹாசிம் ஆம்லா, அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோல்வி, இங்கிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது, ஆம்லாவை பதவியில் இருந்து விலக வைத்தது. ஹாசிம் ஆம்லாவின் ராஜினாமாவுக்கு பின், டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக டி வில்லியர்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணிக்கு, டி வில்லியர்ஸ் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணிக்கும் ஏ.பி.டி ஏற்கனவே கேப்டனாக உள்ளார். http://ww…
-
- 0 replies
- 367 views
-
-
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆதர் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக 48 வயதான தென்னாபிரிக்காவின் மிக்கி ஆதர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மிக்கி ஆதர் 2005-2010 வரை தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் 2011 முதல் 2013 வரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டீன் ஜோன்ஸ், பீட்டர் மூர்ஸ், என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தாலும் பின்னர் ஸ்டுவார்ட் லோ அந்த பதவியில் அமர்த்தப்படப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதியில் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியின் தலைமை பயி…
-
- 0 replies
- 370 views
-
-
இந்தியாவின் பாரிய உள்நாட்டு பருவகாலம்: 13 டெஸ்ட்கள்; 6 புதிய மைதானங்கள் நியூசிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷுக்கெதிரான தொடர்கள் உள்ளடங்குகின்ற இந்தியாவின் 2016-17 உள்நாட்டு பருவகாலத்தில், ராஜ்கோட், விசாகப்பட்டினம், பூனே, தரம்சாலா, ராஞ்சி, இந்தூர் ஆகியன டெஸ்ட் மைதானங்களான அறிமுகமாகும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இப்பருவகாலத்தில் ஒரு டெஸ்ட் போட்டிக்காக இந்தியாவுக்கு பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ள நிலையில், பங்களாதேஷுக்கு 2000ஆம் ஆண்டு முழுமையான அங்கத்துவம் கிடைத்த பின்னர், அவ்வணி இந்தியாவில் விளையாடும் முதலாவது டெஸ்ட் இதுவாகும். பங்களாதேஷுக்கு முழுமையான…
-
- 0 replies
- 638 views
-
-
இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு! இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை துடுப்பாட்ட சபையால் யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சங்கத்திலிருந்து ஒருவர் தரநிலை 3 இற்கு உள்வாங்கப்பட்டுள்ளார். வடமராட்சி பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மூத்த வீரரும், சிறந்த தடகள வீரருமான ரி. கிருபாகரன் யாழ் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சபையின் முன்னிலை மத்தியஸ்தரே இவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளார் வடக்கு கிழக்கு மாகணத்திருந்து முதன் முறையாக இலங்கை துடுப்பாட்ட மத்தியஸ்தர் சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது கிரிக்கெற் மத…
-
- 0 replies
- 628 views
-