Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. முக்கிய போட்டியில் இலங்கை தோல்வி – தென்னாபிரிக்கா அபார வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. செஸ்ரர் லே பகுதியிலுள்ள ரிவர்சைட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிதனமாக துடுப்பெடுத்தாடியபோதும், ஒரு கட்டத்தில் விக்…

  2. துபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு! ஆசியக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற தொடர் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆசியக் கோப்பையை தொடர்ந்து நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது. மேலும், ஆசியக் கோப்பைத் தொடரை டி20 மற்றும் ஒருநாள் போட்டி வடிவங்களில் தொடர்ந்து நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள …

  3. 2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2023ம் ஆண்டு இந்தியா தனித்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் சீனிவாசன் தெரிவித்தார். 2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீனிவாசன் கூறியதாவது: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா தனித்து நடத்த உள்ளது. இதேபோல 2016ம் ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் மற்றும், 2021ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவையும் இந்தியாவிலேய…

  4. ஈழத்தமிழன் துளசி தர்மலிங்கம் ரியோ ஒலிம்பிக்கில்..போட்டியில் வென்று பதக்கம் பெற்று வர உலகத்தமிழர்கள் வாழ்த்துகின்றோம். தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தருமலிங்கம் இன்று கட்டார் நாட்டுக்காக விளையாடுகிறார். இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) தர்மலிங்கம் கடந்த ஆண்டுவரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை…

  5. ராசியில்லாத கேப்டன் காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்தார். இதன்மூலம் இவர், கேப்டனாக பங்கேற்ற முதல் 4 டெஸ்டில், 4 சதம் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் கவாஸ்கர், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் இச்சாதனை படைத்தனர். இருப்பினும் கோஹ்லி கேப்டனாக சதமடித்த 3 போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் (115, 141 ரன்) இந்திய அணி தோல்வி அடைந்தது. சிட்னி டெஸ்ட் (147 ரன்) ‘டிரா’வில் முடிந்தது. தற்போது காலே டெஸ்டில் (103) தோல்வி அடைந்தது. தவிர கோஹ்லி கேப்டனாக செயல்பட்ட 4 டெஸ்டில் இந்திய அணி 2 ‘டிரா’ (எதிர்–ஆஸி., மற்றும் வங்கதேசம்), 2 தோல்வியை (…

  6. கால்பந்து உலகின் மிக மோசமான சேம்சைட் கோல் (வீடியோ) அமெரிக்காவில் பிளெயின் நகரில் மினிசோட்டா யுனைடெட் அணியுடன் போர்னேமவுத் அணி மோதியது. இந்த போட்டியில் எதிர்பாராதவிதமாக மினிசோட்டா அணியின் கோல்கீப்பரே சேம்சைடு கோல் அடித்தார். மினிசோட்டா அணியின் கோல்கீப்பர் சமி, கோலி ஏரியாவுக்குள் கிடைத்த பந்தை தனது அணி வீரர்களிடம் எறிவதற்காக முயற்சித்தார். ஆனால் கையில் இருந்து நழுவிய பந்து எதிர்பாராமல் கோல் கம்பத்தை நோக்கி சென்றது. அதனைத் தடுக்க சமியும் முயற்சித்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை. பந்து கோல் லைனை தாண்டிவிட்டது. கால்பந்தாட்ட உலகிலேயே மிக மோசமான சேம்சைடு கோலாக இது கருதப்படுகிறது. http://www.vikatan.com/news/sports/66422-mi…

  7. இலங்கை அணியின் புதிய விடியல் தனஞ்ஜெயா தனஞ்ஜெயா டி சில்வா - PTI இந்திய மண்ணில் அதிலும் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கும் மேலாக எதிர்கொண்டு டெல்லி பெரோஷா கோட்லா டெஸ்ட் போட்டியை கடைசி நாளின் இறுதி மணித்துளிகள் வரை கொண்டு சென்று டிரா செய்து வியக்க வைத்துள்ளது இலங்கை அணி. பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட இலங்கை, இந்திய மண்ணில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை (295) குவித்தும் சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை காற்று மாசுபாட்டின் ஊடாகவே சந்தித்திருந்தது. காற்று மாசால் சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர். ஒட்டுமொத்த அணியும் முகமூட…

  8. முதல் டெஸ்ட்டிற்கு தோனி இல்லை: ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடவில்லை. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயலாற்றுவார். வலது கை மணிக்கட்டு காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக முதல் 3 போட்டிகளில் விளையாடாத தோனி, பிறகு கடைசி 2 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் டிசம்பர் 4-ஆம் தேதி பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸி. தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: தோனி (கேப்டன்), விராட் கோலி, ஷிகர் தவன், முரளி விஜய், கே.எல். ராக…

  9. சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்; உலகக்கோப்பை இங்கிலாந்துக்குத்தான்: ஆலன் டொனால்ட் படம். | கே.பாக்யபிரகாஷ். இங்கிலாந்திடமிருந்து ஒருபோதும் எதிர்பார்த்திராத ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை ஒருநாள் போட்டிகளில் வளர்த்து வரும் கேப்டன் இயன் மோர்கன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடிக்க முடியாத அணியாக திகழச்செய்வார் என்று நம்புகிறார் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட். 14 ஆண்டுகால பிரமாதமான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ் எனும் 360டிகிரி ஓய்வு பெற்றுள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கும் கடினமே என்கிறார் ஆலன் டொனால்ட். இந்நிலையில் ஸ்கை ஸ்…

  10. நாளை ஆரம்பிக்கிறது சப்பல்-ஹட்லி தொடர் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட இறுதி சப்பல்-ஹட்லி தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ஒக்லாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளிலுமே அதிரடி வீரர்கள் இருக்கின்ற நிலையில, பந்து ஸ்விங் ஆகாமல் விட்டால், நியூசிலாந்திலுள்ள சிறிய மைதானங்களில் இரண்டு அணிகளும் 350 ஓட்டங்களை இலகுவாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணி, தனது விளையாடும் பதினொருவரை ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், காயமடைந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஆரோன் பின்ஞ்க்கு ப…

  11. தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான கத்ரின் மயோர்கா (Kathryn Mayorga ) என்ற பெண் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த 2009-ம் ஆண்டு ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் எனினும் இந்த முறைப்பாட்டினை மறுத்த ரொனால்டோ , கத்ரின் மயோர்கா தனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட முயற்சி மேற்கொள்கிறார் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதன் முறையாக பதிலளித்துள்ள ரொனால்டோ, இது வெறும் …

  12. ஹாங்காங் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீகில் மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | படம்: ஏ.எஃப்.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹாங்காங் உள்நாட்டு டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடவிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஹாங்காங் பிளிட்ஸ் அணியில் மைக்கேல் கிளார்க் ஆடவுள்ளார். 2015-ல் ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைய கடுமையான பயிற்சிகளுடன் முயன்று வருகிறார், ஆனால் இவர் கடைசியாக டி20 ஆடியது 2012-ம் ஆண்டு, இதனால் பிக் பாஷ் லீக் அணிகள் கூட மைக்கேல் கிளார்க் மீது ஆர்வம் காட்டவில்லை. மேலும் டி20 கிரிக்கெட்டில் மைக்கேல் கிளார்க் பெயர் இதுவரை பெரிதாக தடம்பதியவில்லை. இந்நிலையில் எங்கிர…

  13. விளையாட்டுச் செய்தித்துளிகள்: இந்திய டி20-ல் பாக். அணி # மெக்ஸிகோ ஓபன் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மராக், பேப்ரைஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வியடைந்தது. # இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு மனுமதி வழங்கியுள்ளது. # மார்ச் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கும் டி 20 உலகக்கோப்பைக்கான 31 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் சவுத்ரி, வினீத் குல்கர்னி, சிகே நந்தன், ஷம்ஸூதின், ரவி சுந்தரம் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நியூஸிலாந்தை சேர்ந்த கேத்லின் …

  14. அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி… தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா மூன்றரை மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்று மூலம் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி சஞ்சனா தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகளான சஞ்சனா பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்று வருகின்றார். இச் சிறுமி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் செ…

  15. கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு வாங்கும் அடேங்கப்பா சம்பளம்! உலகளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. 1) வீராட் கோலி (இந்தியா)- ரூ.5811.21 2) மகேந்திர சிங்டோனி (இந்தியா) - ரூ. 3638.30 3) கிறிஸ் கெய்ல்(மேற்கிந்திய தீவு) - ரூ.950.34 4) ஷாகித் அப்ரிடி(பாகிஸ்தான்) - ரூ. 798.19 5) வீரேந்திர ஷேவாக் (இந்தியா) - ரூ. 734.71 6) ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - ரூ. 696.71 7) டிவில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா) - ரூ. 696.71 8) கவுதம் கம்பீர் (இந்தியா)- ரூ. 633.15 9) யுவராஜ் சிங் (இந்தியா) - ரூ. 481.19 10) மைக்கேல் கிளார்க்(ஆஸ்திரேலியா) - ரூ. 367.57 http://www.…

  16. பிரேசில் கால்பந்தாட்ட அணி கப்டனாக 22 வயதான நட்சத்திர வீரர் நெய்மர் நியமனம் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட அணி வரலாற்றிலேயே குறைந்த வயதுள்ள கேப்டனாக நட்சத்திர வீரர் நெய்மர் பொறுப்பேற்றுள்ளார். நெய்மர் தலைமையில் அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் என்று அந்த அணி பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பையில் அடைந்த படுதோல்வியை மறந்து நெய்மர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் பிரேசிலுக்கு டி.சில்வா கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். பயிற்சியாளராக லூயிஸ் பெலிப் ஸ்கோலரி பதவி வகித்தார். அரையிறுதியில் அடைந்த படுதோல்வியை தொடர்ந்து பயிற்சியாளர் மாற்றப்பட்டு துங்கா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில…

  17. டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த சிவராஜன், கிருஷாந்தினி (நெவில் அன்தனி) பங்களாதேஷில் ஜனவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக மலையகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர் பங்குபற்றவுள்ளனர். கதிர்காமத்தில் 2021இல் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற முத்துசாமி சிவராஜன் (2:29:29), திஸ்ஸ ஹேரத் (2:31:52) ஆகியோரும் பெண்கள் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற வேலு கிருஷாந்தினி (2:55:39), ஜீ.டபிள்யூ.எம். ஹேரத் (2:57:15) ஆகியோரும் டாக்கா மரதனில் பங்குபற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்தின் (இலங்கை மெய்வல்லுநர்) உதவித் தலைவர் ஜீ.எல்.எஸ…

    • 5 replies
    • 435 views
  18. ஐபிஎல் சூதாட்டம்: 14-ல் தண்டனை அறிவிப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு, இந்த தண்டனை விவரத்தை அறிவிக்கிறது. குருநாத், குந்த்ராவுக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தண்டனை விவரமும் 14-ம் தேதி வெளியாகிறது. இது பிசிசிஐ மற்றும் ஐபிஎல்லில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட புகார் கிரிக்கெட் உலகையே உலுக்கியது. ஸ்ர…

  19. பார்சிலோனா குழந்தைகள் பயிற்சி அகாடமியில் மெஸ்ஸியின் மகன் தியாகோ படம்: ஏ.எஃப்.பி. ஃபுட்பால் கிளப் பார்சிலோனாவின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு தொடர்பான பயிற்சி ஆரம்பப்பள்ளியில் அர்ஜெண்டின நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தனது மகன் தியாகோவை சேர்க்க முடிவெடுத்துள்ளார். எஃப்சிபிஇஸ்கோலா என்ற 6 வயது முதல் 18 வயது வரையிலான ஆடவருக்கும் பெண்களுக்கும் ஏற்கெனவே ஒட்டுமொத்த பயிற்சி அளித்து வருகிறது. இதன் பைலட் திட்டம்தான் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி. பார்சிலோனா முதல் அணியின் வீரர்களின் குழந்தைகளுக்கென்றே இந்தப் பயிற்சிப் பள்ளி பிரதானமாக திறக்கப்படுகிறது, இதில் முதல் பெயராக லயோனல் மெஸ்ஸி மகன் பெயர் தியாக…

  20. மெத்யூ 7 தங்கங்களை வென்று சாதனை (குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து எஸ். ஜே. பிரசாத்) தெற்­கா­சிய விளை­யாட்டு விழா அத்­தி­யா­ய­மொன்றில் 7 தங்கப் பதக்­கங்­களை வென்ற நீச்சல் வீரர் மெத்யு அபே­சிங்க இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்டினார். இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தின் குவா­ஹாட்டி மற்றும் மேகா­லயா மாநி­லத்தின் ஷில்­லொங்கில் நடை­பெற்று வரும் 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் ஆறாம் நாளான நேற்று துப்­பாக்­கி­சுடுதல், ஸ்கொஷ், மேசைப்­பந்­தாட்டம், டென்னிஸ், பூப்­பந்­தாட்டம் (பட்­மின்டன்) ஆகிய போட்­டிகளும் நடை­பெற்­றன. நீச்சல் போட்டி சரு­சாஜாய், டாக்டர் ஸக்கிர் ஹுசெய்ன் ந…

  21. இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்: ஆன்டி ராபர்ட்ஸ் பாராட்டு இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து விச்சாளர் உமேஷ் யாதவ்தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து விச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1975-76-ல் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆன்டி ராபர்ட்ஸ். | கோப்புப் படம். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட்ஸ் கூறும்போது, "உமேஷ் யாதவ் என்னை மிகவும் கவர்கிறார். இந்தியாவின் முதல் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான். இவருக்கு முன்பாக இந்தியாவில் உண்மையான வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருதவில்லை. மொகமது ஷமியும் நன்றாக வீ…

  22. அபாரமான பீல்டிங்கால் நியூசிலாந்தை 223 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து நியூசிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகி…

  23. Published By: SETHU 04 MAY, 2023 | 12:00 PM பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸி 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். கழகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவுக்கு மெஸி சுற்றுலா சென்றமையே இதற்கான காரணம் என கழக வட்டாரங்கள் தெரஸ்ரீழிவித்துள்ளன. கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியின் தலைவரான லயனல் மெஸி, பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காகவும் 2021 ஆகஸ்ட்டிலிருந்து விளையாடி வருகிறார். 7 தடவைகள் பெலோன் டி' ஓர் விருதை வென்ற மெஸி பிஎஸ்ஜி கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். …

  24. எம்.எஸ். தோனி - வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஆயிரம் வழிகள் சென்னை அணியின் தலைமையில் இருந்து தோனி விலகுகிறார் என்பதைக் கேட்க பலருக்கும் நம்ப முடியாமல் இருக்கிறது, ஆனால் இதை பலரும் எதிர்பார்த்திருந்தனர் தான், இருந்தாலும் அதை ‘நம்ப முடியவில்லை’. அடுத்தொரு ஆண்டு, அதற்குப் பிறகு மற்றொரு ஆண்டும், தோனி தலைமை தாங்கி இருந்தாலும் அவரால் மற்றொரு கோப்பையை சென்னைக்கு வாங்கிக் கொடுத்திருக்க முடியும் என அவர்கள் அறிவார்கள். ஆனால் அவருக்கு வயதாகிக் கொண்டே போகிறது, ஆனாலும் வயதின் எதிர்பார்ப்புகளை மீறி தம்மை ஆச்சரியப்படுத்தும் திறன் படைத்தவரும் அல்லவா தோனி! கடைசியில், ஜடேஜா இனி தலைவராக இருந்தால் என்ன கீப்பராக இருந்து அவரை வழிநடத்துபவராக தோனி …

  25. தடைக்காலம் முடிந்தது: ஸ்மித், வார்னர் உள்ளூர், சர்வதேசப் போட்டிகளில் இனி விளையாடலாம்: ஆஸி. வீரர்கள் எதிர்ப்பு Published : 29 Mar 2019 11:46 IST Updated : 29 Mar 2019 11:46 IST பி.டி.ஐ டேவிட்வார்னர், ஸ்டீவ் ஸ்மித் : கோப்புப்படம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்திருந்த ஒரு ஆண்டு தடை நேற்றுடன் காலாவதியானது. இனிமேல் இருவரும் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் எந்தவிதமான தடையுமின்றி விளையாடலாம். உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இருவரும் இடம் பெறுவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வார்னர், ஸ்மித், கேமரூன் ஆகிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.