Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி. சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் ஓட்ட இயந்திரமாக வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித்தலைவரும், ஒருநாள் போட்டி அணியின் உதவித்தலைவருமான விராட் கோஹ்லி நாளுக்குநாள் சாதனைகள் பலவற்றைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மொஹாலியில் நிறைவுக்கு வந்த 3 வது ஒருநாள் போட்டியின் போது ஆட்டம் இழக்காத 154 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் கோஹ்லி தனது 26 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் விராட் கோஹ்லி தற்போது, சங்கக்காரவை பின்தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தன்ன…

  2. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை! புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு …

  3. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வெல்லவில்லை. அது குறித்து நான் எண்ணி பார்ப்பது உண்டு. அணியில் உள்ள சிலர் வென்றிருந்தாலும் இன்னும் நான் அதனை செய்யவில்லை. அணியின் கேப்டனாக நான் எனது பயணத்தை தொடங்கிய போது எனக்கு ஆதரவு …

  4. ஆண்டின் சிறந்த இலங்கையராக குமார் சங்ககார தெரிவு தெரண ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறந்த இலங்கையர்களை கௌரவிக்கும் “Ada Derana Sri Lankan of the Year - 2016” மா பெரும் விருதுவழங்கும் நிகழ்வு நேற்று (23) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பல்வேறு துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இலங்கையர்கள் விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ரசிகர்களின் அதிக விருப்புக்களை வென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககார ஆண்டின் சிறந்த பிரபலமான இலங்கையராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்ட ஆண்டின் சிறந்த இலங்கையர்கள் விபரம் வருமாறு, Sports – Mathew Abeysinghe Global Entertainer - Jacqueline Fern…

  5. சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதல் நாளான 03.08.2013 சனிக்கிழமை அன்று போட்டியாளர்களின் அணிவகுப்பினைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு சுவிஸ் கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களுக்காகவும், இறந்த பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் நடைபெற்றது. அடுத்து விளையாட்டுத்துறை மற்றும் தமிழர் இல்லக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டியாளர்களின் சத்தியப்பிரமாணம் நடைபெற்றது. தமிழர் இல்ல மாணவர்களின் கராத்தே வெளிப்பாடானது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன் அவர்களின் பாராட்டையும் …

  6. ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 39 வயதான மைக்கேல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த விருதை ஏற்கனவே முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ…

  7. அபார வெற்றி பெற்ற யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி புதிய சாதனை அகில இலங்கை பாடசாலை மட்ட வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் கொலன்னாவை மகளிர் வித்தியாலயத்தை வீழ்த்தி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பாடசாலை வலைப்பந்தாட்ட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 360 பாடசாலைகள் பங்கேற்றுள்ள 2017ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று பதுளை, விச்சென்ட் டயஸ் மைதானத்தில் ஆரம்பமாகின. இதன் முதல் சுற்றின் ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும், கொலன்னாவை மகளிர் வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடத்த…

  8.  வெற்றியுடன் நிறைவுசெய்த பயேர்ண் மியூனிச் ஜேர்மனி கால்பந்தாட்டத் தொடரான புண்டெஸ்லீகாவின் இறுதி லீக் போட்டியில் வெற்றிபெற்ற அந்த லீக்கின் சம்பியன்களான பயேர்ண் மியூனிச், அவ்வணியின் பயிற்றுநரான பெப் கார்டியோலாவின் இறுதிப் போட்டியை, வெற்றியுடன் முடித்தது. இப்போட்டிக்கு முன்னதாக சம்பியன்களாகத் தெரிவாகியிருந்த பயேர்ண் மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி ஒரு கோலையும் கோட்ஸே 2 கோல்களையும் பெற்றுக் கொடுக்க, எதிரணியான ஹன்னோவெர் அணி தடுமாறியது. அவ்வணியால், ஒரேயொரு கோலையே பெற இயலுமாக அமைய, 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்றது. இதன்படி, போட்டிக்கான புள்ளி அட்டவணையில், இரண்டாமி…

  9. ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக அடியெடுத்து வைக்கும் தோனி! ஓய்வு வயதை எட்டியிருக்கும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேட் மெக்டர்மார்ட் தொடங்கியிருக்கும் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் மற்றும் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் கிரேக் மெக்டர்மார்ட் தொடங்கியுள்ள 'கிரேக் மெக்டர்மாட் கிரிக்கெட் அகாடமி ' சார்பில், 'ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்' என்ற பெயரில் 4 வருட பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐடியா தோனியை கவர, அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார். விளையாட்டில் ஈடுபாடு கொண்ட குழந்தைகளை,…

  10. இவானோவிக் அதிர்ச்சி தோல்வி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் உலகின் 5ஆம் நிலை வீராங்கனையான அனா இவானோவிக் (செர்பியா) ஆரம்ப சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். செக் குடியரசுவைச் சேர்ந்த லூசி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இவானோவிக்கை வீழ்த்தினார். 3ஆம் நிலை வீராங்கனையான ஹிமோனா ஹெலப் (ருமேனியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை கர்னை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேவேளை இந்திய வீரர் யூசிபாம்ப்ரி முதல் சுற்றிலேயே வெளியேறினார். 6ஆம் நிலை வீரர் ஹெண்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் பாம்பரியை வீழ்த்தினார். http:/…

  11. 13ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த யாழ் பல்கலைக்கழகம் University of Jaffna - Champions Inter University Football Championship 2017 (Photo Courtesy – MoraSpirit) பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல…

  12. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தர வரிசையில் இடம்பெறும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி புதிதாகப் பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகள் முன்பே வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி - சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசியின் தர வரிசையில் 12ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதினோராவது இடத்தில் அயர்லாந்து அணியும், அதற்கு முன்னால் டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும் தகுதி கொண்ட பத்து நாடுகளும் இந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றிதான் டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறுகின்ற முதல் ஒரு நாள் வெற்றி ஆகும். ஒன்றாம் தேதியன்று ஃபதுல்லா நகரில் நடந்த ஆட்ட…

  13. ஓய்வு பெறுகிறார் உசைன் போல்ட் இந்த ஆண்டு தடகள விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற நான் எடுத்த முடிவால் எனக்கு ஒரு கவலையும் இல்லை . காரணம் சாதிக்க வேண்டியதை எல்லாம் சாதித்து விட்டேன் என்கிறார் உசைன் போல்ட் . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலண்டனில் இடம்பெறவுள்ள தடகள சம்பியன் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் , தான் ஓய்வு பெறப்போகிறேன் என்பதைத் தீர்மானமாக அறிவித்துள்ளார் 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுக்கு சொந்தக்காரான இந்த அற்புத வீரர். மொனாக்கோவில் உலக விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இவர் கலந்து கொண்டபோதே பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் . முன்னாள் சிறந்த தடகள வீரரான மிச்சேல் ஜோன்சனை இதே கேள்வியை நான் முன்பு கேட்டிருந்தேன் . …

  14. போட்டியில் தோல்வியடைந்ததும் அநாகரிகமாக நடந்துக்கொண்ட வீரர் : குவியும் விமர்சனங்கள்! (காணொளி இணைப்பு) பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவாக்கிய வீரர் மார்ட்டின் க்லிஷன், தரப்படுத்தலில் 285வது இடத்தில் உள்ள பிரன்ச் வீரர் லவுரன்ட் லொக்கோலியுடன் மோதினர். 3 மணித்தியாலம் 39 நிமிடங்களாக மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற இந்த போட்டியில் க்லிஷன் 5-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். முதல் இரண்டு சுற்றுகளை 7-6 மற்றும் 6-4 என கைப்பற்றிய க்லிஷன், அடுத்த இரண்டு சுற்றுகளை 4-6 மற்றும் 0-6 என தோல்வியடைந்தார். எனினும் இறுதிச் சுற்றில் ச…

  15. அதிவேக 100 விக்கெட்: ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் உலக சாதனை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ராஷித் கான் - படம் : கெட்டி இமேஜஸ் மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ராஷீத் கான் இன்று படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 52போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ராஷித் கான் 44 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் ந…

  16. ‘‘யார் என்ன கூறினாலும் டென்னிஸை தொடர்வேன்’’ சானியா மிர்சா ‘‘யார் என்ன கூறு­கின்­றார்கள் என்­பதைப் பற்றி எனக்கு அக்­கறை இல்லை. டென்னிஸ் விளை­யாட்டை நான் தொடர்வேன்’’ என இவ் வருடம் ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க மக ளிர் இரட்­டையர் சம்­பியன் பட்­டத்தை வென்­றெ­டுத்த இந்­தி­யாவின் சானியா மிர்ஸா கூறி­யுள்ளார். இந்த வெற்­றி­யுடன் மகளிர் இரட்­டை­ய­ருக்­கான உலக டென்னிஸ் தரப்­ப­டுத்தல் நிலை யில் முதலாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ள சானியா மிர்ஸா, அரங்­குக்கு வெளியே அநா­வ­சிய சர்ச்­சை­களை எதிர்­கொண்டார். ஐக்­கிய அமெ­ரிக்க மகளிர் இரட்­டையர் பட்­டத்தை வெல்­வ­தற்கு சில வாரங்­க­ளுக்கு முன்னர், சானியா மிர்­ஸா­வுக்கு இந்­தி­யா வின் அதி உயர் விரு­தான கேல் ரத்னா விருது வழங்­கப்­ப­டு­வ…

  17. இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஹாட்ஸ்பர் அணியை 2-1 என வீழ்த்தியது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஹாட்ஸ்பர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சியா அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நேற்று லண்டனில் உள்ள வெம்ப்ளே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செல்சியா, ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடங்கிய 24-வது நிமிடத்தில் செல்சியா அணிய…

  18. ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியுஸிலாந்து பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற நியுஸிலாந்து அணி தொடரை 3 - 0 என கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்று முடிந்த 3 ஆவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 8 விக்கட்டுகள் மற்றும் 52 பந்துகளினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் 59 ஓட்டங்களையும், இம்ருல் கையிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஜீடன் படேல் மற்றும் சென்ட்னர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர். பதிலுக்க…

  19. கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வேதனை உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:– நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை. அர்ஜென்டினா மக்களுக்க…

  20. சரே அணியுடனான சங்கக்காரவின் ஒப்பந்தம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பு இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார மேலும் ஒருவருடத்திற்கு சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சரே கிரிக்கெட் அணியின் முகாமைத்துவம் நேற்று (23) அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் சரே அணிக்காக விளையாடிவரும் சங்கக்கார 2017 ஆம் ஆண்டுக்கும் சரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ஓட்டங்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இவரின் டெஸ்ட் ஓட்டங்களின் சராசரி 57.40 என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், உள…

  21. [size=4]இந்தியா, இலங்கை இடையே இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. சங்கரகரா 73 ரன்களும், ஜெயவர்த்தனே 65 ரன்களும், மாத்யூஸ் 71 ரன்களும் சேர்த்தனர். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எட்டிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கவுதம்காம்பீர் 102 ரன்களும், சுரேஷ் ரெய்னா 65 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. TO VIEW THE FULL SCORE BOARD AND IMAGES CLICK HERE[/size]

    • 0 replies
    • 427 views
  22. ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 145 கி.மீ. வேகத்தில் பந்து வீசுவது கடினம்- டு பிளிசிஸ் ஸ்டெயின் காயத்தில் இருந்து மீண்டு வந்து டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்தால், 150 கி.மீ. தூரத்தில் பந்து வீசுவது கடினம் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சர்வதேச அளவில் அதிவேக பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த ஸ்டெயின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற தொட…

  23. பாடசாலை கால்பந்தின் காலிறுதி மோதல்களில் உள்ள அணிகள் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்றுக்கான கால்பந்து தொடரின் குழு மட்டப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், 24 ஆம் திகதி (புதன்கிழமை) காலிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இம்முறை போட்டித் தொடரில் மொத்தமாக 14 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியிட்டன. இதில் கடந்த முறை பிரிவு இரண்டுக்கான போட்டிகளில் முறையே முதல் இரண்டு இடங்களையும் பெற்ற திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் இம்முறை பிரிவு ஒன்றுக்கான போட்டிகளுக்கு தரமுயர்த்தப்பட்டன. குழு நிலையாக இ…

  24. இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி எதுவித பந்துகளும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு பிரிஸ்டலில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக போட்டி நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளது. இந் நிலையில் பாகிஸ்தான் மற்றும இலங்க‍ை அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-பாகிஸ்தான்-போட்ட/

  25. அமெ. பயிற்சியாளர் நீக்கப்பட்டார் அமெ­ரிக்க கால்­பந்து அணி யின் பயிற்­சி­யா­ள­ரான ஜெர்­ம­னி யை சேர்ந்த முன் னாள் கால்பந்து வீர­ரான கிளின்ஸ்மென் பயிற்­சி­யாளர் பத­வியில் இருந்து அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டுள்ளார். 2018ஆ-ம் ஆண்­டுக்­கான உலகக் கிண்ணக் கால்­பந்து தகுதி சுற்றில் அமெ­ரிக்க அணி இரு ஆட்டங்களில் தோற்­றது. 15 ஆண்­டு­க­ளு­க்குப் பிறகு சொந்த மண்ணில் அமெ­ரிக்கா தகு­திச்­சுற்றில் தோல்­வியைத் தழு­வி­யதால் அணி நிர்­வாகம் கடும் அதி­ருப்தி அடைந்­தது. இந்த தோல்வி குறித்து விசா­ரணை நடத்­திய அமெ­ரிக்க கால்­பந்து சம்­மே­ளனம், களின்ஸ்­மெனை பயிற்­சி­யாளர் பத­வியில் இருந்து நீக்கியுள்ளது. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/m…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.