விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
பாகிஸ்தான் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் நியமிக்கப்பட்டார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் (25 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் வரை ஷொயிப் மாலிக் கப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப் தெரிவித்தார். இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது; உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின் கப்டன் பதவியிலிருந்து இன்சமாம் விலகியதையடுத்து அந்த இடத்துக்கு முதலில் அணியின் மூத்த வீரர் முகமது யூசுப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவர் கப்டன் பொறுப்பை ஏற்க மறுத்ததையடுத்து சகல துறை வீரர் ஷோயிப் மாலிக்கை கப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த …
-
- 0 replies
- 999 views
-
-
வருங்காலத்துக்கான வேகப்பந்து வீச்சு திறமைகள் இந்தியாவில் உள்ளன: கிளென் மெக்ரா எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநராக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆஸ்திரேலிய கிரேட் கிளென் மெக்ரா, இந்திய வேகப்பந்துவீச்சு திறமைகள் பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.ஆர்.எஃப். அகாடமியிலிருந்து அடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி கிளென் மெக்ரா கூறும் போது, “வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர். மேலும் பல்தேஜ் சிங் இருக்கிறார், இவரிடம் நல்ல ஆக்ஷன் உள்ளது. சந்தீப் வாரியர் என்பவரும் நம்பிக்கை அளிக்கிறார். அஸ்வின் கிரிஸ்ட் என்பவரும் நெடுந்தூரம் முன்னேறி வந்துள்ளார். இவர் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்கிறார், தான் என்ன …
-
- 0 replies
- 472 views
-
-
கால்பந்து மைதானத்தில் ஸ்வஸ்திகா சின்னம்: மன்னிப்பு கோரியது குரேஷியா குரேஷியாவின் ஸ்பிளிட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரேஷியா-இத்தாலி அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் தகுதிச் சுற்றின்போது மைதானத்தில் ஹிட்லருடைய நாஜிப் படைகளின் சின்னமான ஸ்வஸ்திகா வரையப்பட்டி ருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இனவெறி தொடர்புடைய ஸ்வஸ்திகா சின்னத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின் போது இத்தாலி அணியினரின் தாக்குதல் ஆட்ட பகுதியில் (அட்டாக்கிங் சைடு) அந்த சின்னம் வரையப்பட்டு இருந்தது. ஸ்வஸ்திகா சின்னம் பெயின்ட்டால் வரையப்பட்டிருந்ததா அல்லது மைதானத்தில் இருந்த புற்களை வெட்டி அதுபோன்று வடிவமைத்திருந்தார்களா எ…
-
- 0 replies
- 414 views
-
-
இளம் பேட்ஸ்மென்களிடம் இன்னிங்சை கட்டமைக்கும் பொறுமை இல்லை: ராகுல் திராவிட் ராகுல் திராவிட். | கோப்புப் படம். இளம் பேட்ஸ்மென்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஷாட் ஆடுவதில் வல்லவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு ரன்னாக எடுத்து எதிர்முனை பேட்ஸ்மெனை விளையாடச் செய்து, பந்துவீச்சின் பொறுமையை சோதித்து, ஜோடியாக நின்று பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்கும் பொறுமை இல்லாதவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் கூறியதாவது: ஷாட் ஆடுவதில் இளம் தலைமுறையினர் அபாரமாகத் திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மேலேறி வந்து சிக்சர்கள் அடிக்கும் படைப்பூக்கம் அபாரமானது, ஆனால் இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை பிரச்சினை என்னவெனில் இரு அணு…
-
- 0 replies
- 265 views
-
-
ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், 'வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடைய…
-
- 0 replies
- 502 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக ஆண்களுக்கான கிரிக்கட் போட்டியில் பெண் வீராங்கனை கிரிக்கட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த பெண் கிரிக்கட் வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆண்கள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டியில் விளைடுகிறார். இந்த கிரிகட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப் அணியும், போர்ட் அடிலெய்டு அணியும் மோதுகின்றது. இந்த கிரிக்கெட் போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீராங்கனையான இந்த பெண், அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்களுக்கான கிளப் அணி சார்பாக இந்த தொடரில் விளையாடுகிறார். கிரிக்கெட் வரலாற்றியில் முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் ஒருவர் விளையாடுவது இ…
-
- 0 replies
- 329 views
-
-
அவுஸ்திரேலிய அணியே உலகின் `நம்பர் வன்' அதில் எவ்வித மாற்றமும் இல்லை;கிளார்க் கூறுகிறார் [13 - February - 2008] [Font Size - A - A - A] அவுஸ்திரேலிய அணியே இன்னமும் உலகின் `நம்பர் வன்' அணியாக விளங்குவதாகவும், இதனை நிரூபிக்க அவுஸ்திரேலிய வீரர்கள் உறுதியோடு இருப்பதாகவும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ருவர்ட் கிளார்க் கூறியுள்ளார், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி சவால் விடும் வகையில் விளையாடியது. மேலும் பெர்த் டெஸ்டில் இந்தியா அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஒருநாள் தொடரிலும் அவுஸ்திரேலிய அணி இந்தியாவிடமிருந்து கடும் சவாலை சந்தித்து வருகிறது. இதனையடுத்து உலகின் `நம்பர் வன்' அணியான அவுஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சவால் விடுவதாக பரபரப்பாக பேசப…
-
- 0 replies
- 685 views
-
-
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து கும்ளே விலகல் ஜனவரி 2013-லிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பொறுப்பு வகித்தார் கும்ளே. | படம்: பிடிஐ. மும்பை இந்தியன்ஸ் ஐபிஅல் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ளே விலகியுள்ளார். கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கி கும்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. "டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் சாதனைக்குரியவரான அனில் கும்ளேவுக்கு மும்பை இந்தியன்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவர் அறிவுரையாளராக பொறுப்பேற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், சாம்பியன…
-
- 0 replies
- 561 views
-
-
கேப்டனாகவும் வீரராகவும் பங்களிப்பு செய்ய தோனியிடம் இன்னமும் திறமை உள்ளது: மைக்கேல் கிளார்க் மைக்கேல் கிளார்க். | கோப்புப் படம். தொடர்ந்து 3-வது ஒருநாள் தொடரை இழந்ததையடுத்து தோனியின் கேப்டன்சி பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவரிடம் இன்னமும் அணியை வழிநடத்தவும் வீரராக பங்களிப்பு செய்யவும் திறமை உள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். சிட்னியில் இது குறித்து கிளார்க் கூறும்போது, “தோனியிடம் இன்னமும் நிறைய கிரிக்கெட் திறன் மீதமுள்ளது. அவர் விரும்பினால் கேப்டனாகத் தொடரலாம் ஏனெனில் அதற்கான உரிமையை அவர் வென்றெடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கேப்டன்சியில் சிறந்து விளங்குவதாகவே நான் கருதுகிறேன். இந்திய அணி நீண்ட காலம் வெற்றிப்…
-
- 0 replies
- 387 views
-
-
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள் 2 பிப்ரவரி 2026 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். 2025-ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாகவும் விளையாட்டு துறையில் அனைத்து பெண்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. பிபிசியால் தேர்ந்தெடுக்கப…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணை அறிவிப்பு 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும். இதில் சூப்பர் 12 சுற்றின் குழு 2 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் துபாயில் ஒக்டோபர் 24 ஆம் திகதி அரங்கேறவுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இறுதியாக இவ்விரு அணிகளும் 2019 இல் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ஒன்றையொன்று எதிர்த்து ஆடியது. ஐ.சி.சி. செவ்வாய்க்கிழமை 2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணையை அறிவித்ததால் போ…
-
- 0 replies
- 437 views
-
-
சச்சின், டிராவிட் அபார சதம்-புதிய உலக சாதனை வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் அபாரமாக ஆடி சதம் போட்டனர். அத்துடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். மிர்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட்டில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது. வங்கதேசத்தை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, இன்றைய 2வது நாள் ஆட்ட நேர இறுதியில், தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 459 ரன்களை குவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் போட்ட அரை சதங்களும், சச்சின், டிராவிட் படைத்த உலக சாதனையுடன் கூடிய அபார சதங்களுமே. கம்பீர் 68 ரன்களும், ஷேவாக் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய சச்சினும், டிரா…
-
- 0 replies
- 677 views
-
-
லா லிகா: டெபோர்டிவோ அணியை 7-1 என துவம்சம் செய்தது ரியல் மாட்ரிட் ரொனால்டோ, கரேத் பேலேயின் சிறப்பான ஆட்டத்தால் டெபோர்டிவோ அணியை 7-1 என வீழ்த்தியது ரியல் மாட்ரிட். #Laliga #garethBele #Ronaldo #realMadrid லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் புகழ்வாய்ந்த ரியல் மாட்ரிட், டெபோர்டிவோ அணியை எதிர்த்து விளையாடியது. இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சொந்த மைதானத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் சாம்பியன் பட்டத்தை இழக்கும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண…
-
- 0 replies
- 270 views
-
-
கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து! இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா விதித்த தடை நீக்கப்பட்டதால் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம், கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. புதிய நிர்வாகிகள் நியமனம் வரை இந்த 3 பேர் குழுவே கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 316 views
-
-
இங்கிலாந்து ‘த்ரில்’ வெற்றி: ஜோஸ் பட்லரின் அற்புத சதத்தால் ‘வொயிட்வாஷ்’ ஆனது ஆஸி சதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் - படம்உதவி: ஐசிசி ட்விட்டர் ஜோஸ் பட்லரின் பொறுப்பான சதத்தால் மான்செஸ்டரில் நேற்று நடந்த 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 5-0 என்று ‘வொயிட்வாஷ்’ செய்தது இங்கிலாந்து அணி. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியிடம் முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியில் தோல்வி அடைந்து (க்ளீன்ஸ்வீப்) தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இந…
-
- 0 replies
- 360 views
-
-
வீரர்களின் காயத்தால் சிக்கலில் தவிக்கும் அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அண்மித்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள முன்னணி வீரர்களின் காயம் காரணமாக பல அணிகளும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. அதிலும் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலிய அணி பல சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகிறது. 9 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சைமன்ட்ஸுக்கு கொமன்வெல்த் முக்கோணத்தொடரின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தசைநார் கிழிந்து விட்டதால் அவருக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உலகக் கிண்ண தொடக்க போட…
-
- 0 replies
- 1k views
-
-
இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND டெஸ்ட் கிரிக்கெட்டையும், ஐ.பி.எல் தொடரையும் ஒரே தராசில் வைத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. இது மிக மிகப் பெரிய தவறு. கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளும், கேப்டன் கோலியின் அணித்தேர்வும் கேள்விக்குள்ளாகியுள்ளன. "வீரர்களைத் தேர்வு செய்ததில் கொஞ்சம் தவறுகள் நிகழ்ந்துவிட்டன" என்று லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு தன் தவறை ஓப்புக்கொண்டார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. அடுத்த போட்டிக்கு முன் அவர் மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், மாற வேண்டியது அவரது அணுகுமுற…
-
- 0 replies
- 287 views
-
-
உசைன் போல்ட்டின் வேகம் குறைகிறது? உசைன் போல்ட் 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த பிறகு. | படம்: ராய்ட்டர்ஸ். 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தன் வாழ்நாளின் மோசமான ஓட்டமே என்று கூறுகிறார் உசைன் போல்ட் 100 மீ, 200 மீ உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஜமைக்க அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ராண்டல் தீவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் 200 மீ உலக சாதனை 19.19 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடிடாஸ் கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டுள்ளார்.…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி March 20, 2019 இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்ப…
-
- 0 replies
- 464 views
-
-
ஆவேசமடைந்தார் இசாந்த், அதனால் வெற்றி பெற்றுக் கொடுத்தார்: அஸ்வின் இசாந்த் சர்மா எல்லை மீறியிருக்கலாம் ஆனால் பாடம் கற்றுக் கொள்வார்... என்று அஸ்வின் தெரிவித்தார். | படம்: ராய்ட்டர்ஸ். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது ஆவேசப்போக்கினால் ஒரு போட்டி தடை செய்யப்பட்ட இசாந்த் சர்மா, நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் கூறியதாவது: "ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் இருப்பதே நல்லது. கிரிக்கெட் ஆடும் அனைவருமே ஆக்ரோஷமாக ஆடவே விரும்புவர். சிலர் உள்ளார்ந்து ஆவேசமாக இருப்பர், சிலர் வெளிப்படையாக ஆவேசம் காட்டுவர். ஆனால் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், பாடம் கற்றுக் கொள்வது அவசியம். இசாந்த் ஆக்ரோஷமடைந்தார், அதனால் நமக்கு போட்டியை …
-
- 0 replies
- 725 views
-
-
இறுதி வரை போராடிய முஷ்பிகுர் ! அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 48 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது. 382 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் களமிறங்கி துடு…
-
- 0 replies
- 877 views
-
-
இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்லாமையினால் விரக்தியடைந்துள்ளாராம் அந்த அணியின் பயிற்சியாளர் சிம் மன்ஸ். இந்த இருவரையும் அணியில் சேர்க்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி யின் தலைவர் ஜேசன் ஹோல்டரும் ஆதரவாக இருக்கிறா ராம். விரைவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யஇருக்கிறது. இந்த தொடரில் இடம்பெறும் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்இ வெய்ன் பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகியோரை சேர்த்தால் மேற்கிந்தியத்தீவுகள் அணி வலுவானதாக இருக்கும் என்று சிம்மன்ஸ் கூறி…
-
- 0 replies
- 309 views
-
-
லோட்ஸ் தரப்படுத்தலில் மத்தியூஸ் இடம்பிடித்தார் December 15, 2015 லோட்ஸ் மைதான நிர்வாகம் இந்த வருடத்துக்கான சிறந்த 20 வீரர்களின் தரப்படுத்தலில் மத்தியூஸிற்கும் இடம்கொடுத்துள்ளது. லோட்ஸ் மைதானம் வருடாவருடம் சிறந்த இருபது வீரர்களைத் தெரிவுசெய்து அவர்களை பட்டியல் படுத்தும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான பட்டியலில் மத்தியூஸிற்கு 9ஆவது இடத்தை வழங்கியுள்ளது. ஒருநாள் ஆட்டங்களில் 3ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 100 இலக்குகள் என்ற மைல் கல்லை மத்தியூஸ் எட்டியிருந்தார். இந்த பெறுபேற்றை எட்டும் 4ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். இதுவே அவருக்கு 9ஆவது இடத்தை வழங்க பிரதான காரணம் என்று லோட்ஸின் தெரிவிக்குழு அறிவித்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 336 views
-
-
விளையாட்டு செய்தித்துளிகள்: விராட் கோலி உழைப்பு # ஒரு கிரிக்கெட் வீரராக எனது முன்னேற்றத்திற்காக நான் கடினமாக உழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். ஆடுகளத்தில் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். 7 ஆயிரம் ரன்னை அதிகவேகமாக கடக்க வேண்டும் என திட்டமிடவில்லை. என்னுடைய திட்டம் எல்லாம் அதிக அளவு ரன்கள் குவிக்க வேண்டும், அதன்மூலம் அணிக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்பதுதான். நான் சாதனையை எண்ணவில்லை. ஆனால், கடவுள் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்று விராட் கோலி தெரிவித்தார். # மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி பினாங்கு நகரில் இன்று தொடங்குகிறது. பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சிறிது ஓய்வுக்கு ப…
-
- 0 replies
- 323 views
-
-
சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கம் இந்தியாவுக்கு வெள்ளி [25 - May - 2008] மலேசியாவில் 8 நாடுகள் பங்குபற்றிய சர்வதேச ஹொக்கிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு தங்கப் பதக்கமும் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது. முன்னாள் இந்திய ஹொக்கி நிர்வாகத்தில் திகழ்ந்த நிர்வாக சீர்கேடு காரணமாக அந்த நிர்வாகம் திடீரெனக் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இப்புதிய நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டு முதன்முதலில் நடைபெற்ற சர்வதேச ஹொக்கிப் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இப்போட்டி பற்றி புதிய இந்திய ஹொக்கி நிர்வாக உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; "சிறந்த இளம் ஹொக்கி வீரர்கள் இருந்தும் முன்னைய நி…
-
- 0 replies
- 811 views
-