Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியாவின் 'துல்லியத் தாக்குதல்' பட மூலாதாரம்,HOCKEY INDIA/TWITTER 13 ஜனவரி 2023, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 12 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றார்கள். அதை இந்திய வீரர்கள் அற்புதமாகக் கோலாக மாற்றினார்கள். 26-ஆவது நிமிடத்தில் ஸ்பெனின் டி பகுதிக்குள் அற்புதமாக பந்தைக் கடத்தி வந்த இந்திய வீரர்கள் மற…

  2. ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர்: கால்பந்து உலகில் அதிக சம்பளம் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய கால்பந்து உலகின் தலைசிறந்த 4 வீரர்கள் ஒரே போட்டியில் விளையாடியதைக் கண்ட மகிழ்ச்சியில் அரபு உலகம் திக்குமுக்காடிப் போயுள்ளது. அந்த நான்கு பேரின் ஆட்டத்தைப் போலவே, அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த ஒப்பீடும் கால்பந்து ரசிகர்களிடையே சுவாரஸ்யமாகப் பகிரப்படுகிறது. சர்வதேச கால்பந்து அரங்கில் கடந்த 2 தசாப்தங்களாகத் தவிர்க்க இயலாத பெயராக ரொனால்டோ - மெஸ்ஸி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உலகின் மூலை முடுக்கெல்லாம் இருவரின் பெயர்களும் ரசிகர்களால் உச்சரிக்கப்படுகின…

  3. 12 மில்லியன் டொலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி… உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், முதலீட்டு நிறுவனம் ஒன்றில் பல மில்லியன் டொலரை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட குறித்த முதலீட்டு நிறுவனம், கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஓர் அறிக்கை …

  4. ரிஷப் பண்ட் டக் அவுட்டில் என்னோடு இருக்க வேண்டும்… ரிக்கி பாண்டிங் ஆசை! ரிஷப் பண்ட் சமீபத்தில் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இம்மாத தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத…

    • 0 replies
    • 590 views
  5. மெஸி, ரொனால்டோ, எம்பாப்பே கோல் புகுத்தினர்: றியாத் அணியை 5:4 விகிதத்தில் பிஎஸ்ஜி வென்றது By SETHU 20 JAN, 2023 | 12:14 PM சவூதி அரேபியாவில் நடைபெற்ற, பரீஸ் செயின்ற் ஜேர்மைன் அணிக்கும் (பிஎஸ்ஜி), அல் நாசர் - அல் ஹிலால் கழகங்களின் வீரர்கள் இணைந்த றியாத் ஆல் ஸ்டார்ஸ் கூட்டு அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நட்சத்திர வீரர்களான லயனல் மெஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ கிலியன் எம்பாப்பே ஆகியோர் கோல் புகுத்தினர். இப்போட்டியில் பிஎஸ்ஜி அணி 5:4 கோல்களால் வென்றது. ரொனால்டோ, எம்பாப்பே ஆகியோர் தலா 2 கோல்களைப் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. றியாத் நகரிலுள்ள மன்னர் பஹத் அரங்கில் நேற்றிரவு இப்போட்டி நடைபெற்றது. …

  6. டென்னிஸ் ராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்த தாங்க முடியாத துயரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஜனவரி 2023 2023ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் 2வது சுற்றிலேயே நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தோல்வி கண்டு வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட்- நடப்பு சாம்பியனும் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவருமான ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர். இடுப்பு வலியால் அவதிப்பட்ட நடால் இந்த ஆட்டத்தில் மெக்கன்ஸியை எதிர்த்து ஆடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டார். வி…

  7. அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சச்சின் நிகழ்த்தியிருந்த சாதனையை நெருங்கி வரும் விராட் கோலி, அவரது வேறு சில சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்…

  8. இந்திய இருபது - 20 அணிக்கு ஹார்திக் பாண்டியா தலைவர் ; ஒருநாள் அணிக்கு மீண்டும் ரோஹித் ஷர்மா தலைவர் By DIGITAL DESK 5 28 DEC, 2022 | 12:29 PM (என். வீ. ஏ.) இலங்கைக்கு எதிராக புதுவருடத்தில் நடைபெறவுள்ள இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்ககளை முன்னிட்டு இந்தியாவின் இருபது கிரிக்கெட் 20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருபது 20 அணியின் உதவித் தலைவராக சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிரடி துடுப்பாட்ட விக்கெட் காப்பாள…

  9. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் ஜகத் ரோஹன 24 வாக்குகளையும் பெற்றனர். இதன்படி ஜே.ரங்கா அதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவாகியுள்ளார். இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறவில்லை. https://thinakkural.lk/article/233786

    • 0 replies
    • 720 views
  10. புதிய சாதனைகளைப் படைத்த பாபர் அஸாம் By SETHU 27 DEC, 2022 | 11:50 AM நியூ ஸிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் சதம் குவித்ததுடன் பல சாதனைகளையும் முறியடித்தார். கராச்சியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இப்போட்டியில், மைக்கல் பிராஸ்வெல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தனது 9 ஆவது சதத்தை பாபர் அஸாம் பூர்த்தி செய்தார். 280 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டறிகள் உட்பட 161 ஓட்டங்களை அவர் குவித்தார். இதன்மூலம் ஒரு வருடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரானார் பாபர் அஸாம். 2…

  11. இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டுத் துறை எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா ஐசிசி கோப்பையை வென்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, மகேந்திர சிங் தோனியின் இறுதி சிக்ஸர் 2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியின் நிலையான பிம்பமாக மாறிய பிறகு தற்ப…

  12. டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 இறுதி ஆட்டத்திற்கு நான்கு முனை போட்டி 09 JAN, 2023 | 04:50 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்தின் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற நான்கு முனை போட்டி நிலவுகிறது. அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பிற்கான போட்டி நிலவுகிறது. இந்த நான்கு அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி டெஸ்ட் தொடர்கள் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. சதவீத புள்ளிகள் அடிப்படையில் தற்போது முதல் 4 இடங்களில் இருக்கும்…

  13. சௌதி அரேபியாவில் பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் ரொனால்டோ பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ சௌதி அரேபிய கிளப்பில் இணைய இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. சவுதி அரேபிய கிளப்பில் ஆடுவதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோ…

  14. கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜனவரி 2023, 04:27 GMT பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட், தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்து விவாதிக்க அழைத்தால், அழைப்பை எடுக்க மாட்டார் என்று முன்னாள் மிட்ஃபீல்டர் ஜினுடீன் ஜுடான் குறித்துப் பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜினுடீன் ஜிடானுக்கு ஆதரவாக பிரெஞ்சு அணியின் முன்கள ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே குரல் கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தலைமை பயிற்சியாளர் டி…

  15. அங்குரார்ப்பண மகளிர் ஐபிஎல்; அணிகளை வாங்க முன்வருமாறு பிசிசிஐ அழைப்பு By DIGITAL DESK 5 05 JAN, 2023 | 02:55 PM (என்.வீ.ஏ.) அங்குரார்ப்பண மகளிர் இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள அணிகளை வாங்குவதற்கு முன்வருமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வருடம் வரை 3 அணிகளுக்கு இடையில் மகளிர் இருபது 20 செலஞ் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டுவந்தது. மகளிர் இருபது 20 செலஞ் கிரிக்கெட் போட்டியில் சுப்பநோவாஸ், வெலோசிட்டி, ட்ரெய்ல்ப்லேஸர்ஸ் ஆகிய அணிகள் பங்குபற்றின. இந்த வருடம் முதல் தடவையாக மகளிர் இண்டியன் பிறீமியர் லீக் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் …

  16. 100 ஆவது டெஸ்ட்டில் 200 ஓட்டங்களைக் குவித்தார் டேவிட் வோர்ணர் By SETHU 27 DEC, 2022 | 02:59 PM தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்ணர் இரட்டைச் சதம் குவித்தார். இது டேவிட் வோர்ணரின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மெல்பேர்னில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 189 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் மார்கோ ஜேன்சன் (59), கைல் வெரேய்ன் (52) மாத்திரம் அரைச்சதம் குவித்தனர். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் கெமரேன் கிறீன் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி…

  17. பேலேயின் பெயரில் ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு: பீபா கோரிக்கை By SETHU 04 JAN, 2023 | 09:33 AM உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றுக்கு, பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) தெரிவித்துள்ளது. கால்பந்தாட்டத்தின் மன்னன் என வர்ணிக்கப்படும் பேலே, கடந்த வியாழக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். பேலேயின் இறுதிக்கிரியைகள், அவரின் பிரேஸிலின் சான்டோஸ் நகரில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதகாலை) நடைபெற்றன. இந்நிலையில், பேலேயின் பூதவுடலுக்கு…

  18. கால்பந்து மன்னர் பெலே காலமானார் பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார். 1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும். கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 197…

  19. பிக் பாஷ் போட்டியில் புத்திசாலித்தனமாக நேசர் எடுத்த பிடி விதிக்குட்பட்டது By DIGITAL DESK 2 03 JAN, 2023 | 05:50 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற ப்றிஸ்பேன் ஹீட் அணிக்கும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் மிக முக்கிய தீர்மானம் மிக்க வேளையில் மைக்கல் நேசர் மிகவும் புத்திசாலித்தனமாக எடுத்த அற்புதமான பிடி இன்று கிரிக்கெட் உலகில் பேச்சுப் பொருளாகிவிட்டது. ஆடுகளத்திற்கு உள்ளே பவுண்டறி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மைக்கல் நேசர், வேகமாக ஓடியவாறு பிடியை எடுத்தார். ஆனால், அவரால் சமநிலை பேணமுடியாமல் போனதால் பந்தை மேலே எறிந்துவிட்டு பவு…

  20. வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு ! 29 DEC, 2022 | 09:43 PM இடம்பெற்று முடிந்த லங்கா பிறீமியர் லீக் தொடரில் ஜெப்னா கிங்ஸ் (Jaffna Kings ) அணிக்காக விளையாடிய யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெப்னா கிங்ஸ் அணியில் இளம் வீரரான வியாஸ்காந்த் சுழல்பந்து வீச்சில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை அசத்தினார். அத்துடன் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார். வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPL க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …

  21. மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா? கட்டுரை தகவல் எழுதியவர்,க.சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி... அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார். ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவத…

  22. அர்ஜென்டினா - பிரான்ஸ் போட்டியை மீண்டும் நடத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்துவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன. ஆன்லை…

  23. இந்தியாவுடனான அறிமுகப் போட்டியில் சதம் குவித்தார் ஸாகிர் ஹசன் By SETHU 17 DEC, 2022 | 07:19 PM இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷின் அறிமுக வீரர் ஸாகிர் ஹசன் சதம் குவித்தார். பங்களாதேஷின் சிட்டாகொங் நகரில் நடைபெறும் இப்போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 2 ஆவது இன்னிங்ஸில் 513 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டமுடிவில் அவ்வணி விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப்பெற்றிருந்தது. 4 ஆவது நாளான இன்று ஸாகிர் ஹசன் 100 ஓட்டங்களைப் பெற்றார். தனது முதல் போட்டியிலேயே அவர் கன்னிச் சதத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 224 பந்துவீச்சுகளை எ…

  24. இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றில் அனுப்பி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தளு. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன…

  25. எல்பிஎல் கிண்ணத்தை 3 ஆவது தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது லைக்கா ஜெவ்னா கிங்ஸ் ; வியாஸ்காந்துக்கு முன்னேறிவரும் சிறந்த வீரருக்கான விருது 24 Dec, 2022 | 07:39 AM (நெவில் அன்தனி) கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய லைக்கா ஜெவ்னா கிங்ஸ், 2022 எல் பி எல் சம்பியனானது. இதன் மூலும் இலங்கையில் விளையாடப்பட்ட முதல் 3 எல் பி எல் அத்தியாயங்களிலும் ஜெவ்னா கிங்ஸ் சம்பியனாகி வரலாறு படைத்தது. இந்த வெற்றியுடன் 3 கோடியே 60 இலட்சம் ரூபா பணப்பரிசை ஜெவ்னா கிங்ஸ் தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.