விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
5 விக்கட்டுகளை வீழ்த்தி, 83 ஓட்டங்களை விளாசிய செஹான் ஜயசூரிய : தொடரை கைப்பற்றியது இலங்கை (படங்கள்) இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி பெல் ட்ரம்மொவுட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக செஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 வ…
-
- 0 replies
- 361 views
-
-
மகனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சந்திரபால்! இருவரில் யார் டாப் ஸ்கோரர்? அப்பாவும், மகனும் ஒரே போட்டியில் அரைசதம் அடித்த நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சந்திரபாலை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்து விட முடியாது. நம் பால்ய காலங்களில் சந்திரபால் மாதிரி ஒரு முறையாவது பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்திருப்போம். இடது கை பேட்ஸ்மேனான சந்திரபால் கிளாசிக் பிளேயர். டெஸ்ட் போட்டிகளில் லாராவுக்கு அடுத்தபடியாக பத்தாயிரம் ரன்களை கடந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும், அந்த மண்ணின் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே நடக்கு…
-
- 0 replies
- 450 views
-
-
கால்பந்தாட்டத்தில் மகாஜனா சம்பியன் கௌரி துடிப்பாட்டம் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கம் நடத்தும் யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் மிகவும் துடிப்பாகச் செயற்பட்டார் மகாஜனக் கல்லூரி வீராங்கனை கௌரி. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் கௌரி, எட்டாவது நிமிடத்தில் தார்மிகா, 12 ஆவது மற்றும் 15 ஆவது நிமிடங்களில் மீண்டும் கௌரி என அடுத்தடுத்து கோல்களைப் பதிவுசெய்ய முதல் பாதியின் …
-
- 0 replies
- 400 views
-
-
இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா --> இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் சாதனை நாயகியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் முதல் முறையாக சர்வதேச மட்டப் போட்டி நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்வில் இலங்கையின் தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான அனித்தா, எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் தகதி முதல் 15ஆம் திகதி வரை தாய்லாந்தில் இடம்பெறும் “தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்” போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே தனது முதல் சர்வதேச போட்டியில் களம் காணவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதலாவ…
-
- 0 replies
- 824 views
-
-
இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட்: ரசிகர்களை அச்சுறுத்தும் யானைக் கூட்டம் ஹம்பன்தோடாவில் நடைபெற இருக்கும் இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டிக்கு யானைக்கூட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகள் ஹம்பன்தோடாவில் நடக்கிறது. 3-வது போட்டி 6-ந்தேதியும், 4-வது போட்டி…
-
- 0 replies
- 347 views
-
-
தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன்: ஷிகர் தவான் சொல்கிறார் தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். தம்புல்லா: தோல்விகள் மூலம் நிறைய பாடம் கற்று விட்டேன் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஷிகர் தவான்…
-
- 0 replies
- 307 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்பு இல்லையாம்; மஹேல, ப்ரெண்டன், மஹாநாம ஆகியோர் தெரிவிப்பு திலங்க சுமதிபால தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை மஹேல ஜயவர்தன, ப்ரெண்டன் குருப்பு, ரொஷான் மஹநாம ஆகியோர் நிராகரித்துள்ளனர். இந்த மூவருடன் அரவிந்த டி சில்வா, க்ரேம் லெப்ரோய் ஆகியோரை தெரிவுக் குழுவில் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கடும் பிரயத்தனம் எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டை மீள் எழுச்சி அடையச் செய்யும் முயற்சியாகவே இந்த முயற்சியில் ஹலங்கா கிரிக்கெட் நி…
-
- 0 replies
- 456 views
-
-
விக்கெட் காப்பில் டோனி போர்மில் இல்லை: கிர்மானி வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014 இந்திய அணித்தலைவர் டோனி விக்கெட் காப்பில் போதியளவு திறமையாக செயற்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் சைட் கிர்மானி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் விக்கெட் காப்பாளர் என பெயர்பெற்றவர் சைட் கிர்மானி. 88 டெஸ்ட் போட்டிகளில் 160 பிடிகளையும் 38 ஸ்டம்ப் ஆட்டமிளப்புக்களையும் ஏற்ப்படுத்தியவர் கிர்மானி. தெரிவுக்குழுவின் தலைவராகவும் கிர்மானி இருந்துள்ளார். டோனி விக்கெட் காப்பில் போர்மை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வீரர்கள் ஓய்வு எடுக்கக் வேண்டும்.இதன் மூலமே தங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் தற்போது வீரர்களுக்கு அதற்க்கு நேரமில்லை. டோனிக்கும் அதுவே நடந்துள்…
-
- 0 replies
- 763 views
-
-
‘ஆகாயம் முழுவதும் சிங்கள இரத்தம்’-இலங்கை கிரிக்கட் துவேச பாடலுக்கு கண்டனம். இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் கெத்தாராம பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 5வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி பெரும் வெற்றியீட்டியது. தொடரை 3-1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இழந்த போதும் வெற்றியை அடுத்து இலங்கை அணி ஒரு பாடலை அதன் கிரிக்கட் கீதமாக அறிமுகப்படுத்தியது. இலங்கை அணி வெற்றிபெறும் போதெல்லாம் இந்தப்பாடலைப்பாடவுள்ளதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்பவீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஆரம்பத்தில் உரையாற்றியதை அடுத்து இந்தப்பாடலைப்பாடியிருந்தனர். இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் க…
-
- 0 replies
- 575 views
-
-
-
X IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே? இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில்; ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து விட்டனர். இந்த Retain லிஸ்டில் (தக்க வைத்த கொண்ட வீரர்கள் பட்டியலில்) ரசிகர்களுக்கு மிகப்பெரிய நியூஸ் – சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார…
-
- 0 replies
- 570 views
-
-
சுமை அதிகமாவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. முதல் தர போட்டிகளில் ஆண்டுக்கு ஆயிரம் ஓவர் பந்து வீச வேண்டும் என்கிறார் ஷ்ரீநாத். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ரீநாத். ஓய்வுக்குப் பின் ஐ.சி.சி. போட்டி நடுவராகப் பணியாற்றி வருகிறார். விளம்பர நிகழ்ச்சிக்காக டில்லி வந்த இவர் அதிகளவில் பந்து வீசுவதால் காயமடைய நேரிடும் என்ற கருத்தை மறுத்தார். இது பற்றி ஷ்ரீநாத் கூறுகையில்; அதிகளவில் பந்து வீசும் போது தசைகள் வலுவடையும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைய வாய்ப்பில்லை. உதாரணமாக பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறைவான போட்டிகளில் பந்து வீசுவதால் தான் 60 சதவீதம் பேர் காயமடைகின்றனர். …
-
- 0 replies
- 868 views
-
-
சர்ச்சைக்குரிய 'அவுட்'; அதிருப்தியுடன் வெளியேறிய விராட் கோலி இந்து தமிழ் திசைபெர்த் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் சர்ச்சைக்குரிய அவுட்டால் ஆட்டமிழந்து அதிருப்தியுடன் வெளியேறிய விராட்கோலி : படம் உதவி ட்விட்டர் பெர்த்தில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டதால், அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறினார். பெர்த்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தத…
-
- 0 replies
- 437 views
-
-
சம்பியனாகியது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனானது. தமது கல்லூரி வலைப்பந்தாட்டத் தொடரில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை 34-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியிருந்தது. http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனாகியது-தெல்லிப்பழை-யூனியன்-கல்லூரி/88-234413 சம்பியனானது விநாயகபுரம் விநாயகர் வி. க சரவனை கந்தையா வெற்…
-
- 0 replies
- 393 views
-
-
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றார் யூனிஸ் கான் இங்கிலாந்துக்கு எதிராக புதன் அன்று நடைபெறும் ஒருநாள் போட்டியே கடைசி போட்டி. யூனிஸ் கான் ஓய்வு. | படம்: ஏ.பி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இன்று (புதன்) அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியே தனது கடைசி ஒருநாள் போட்டி என்று பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ் கான் அறிவித்துள்ளார். இந்த பகலிரவுப் போட்டியில் விளையாடுவதோடு தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். “டி20 மற்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை விளையாடும்போதே எ…
-
- 0 replies
- 236 views
-
-
மீண்டும் ஆட வாருங்கள் ஜோன்சனுக்கு அழைப்பு November 25, 2015 அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வேகப்புயல் மிட்சல் ஜோன்சனை, அணியின் முதன்மைப் பயிற்சியாளரான டரன் லேமன் மீண்டும் விளையாட அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் வேகப் புயல் மிட்சல் ஜோன்சன், எதிரணித் துடுப்பாட்டக்காரர்களைத் தனத் தனித்துவமான பந்து வீச்சால் அச்சுறுத்தி வந்தவர். இதனிடையே தமக்கு விளையாட்டின் மீது இருந்த ஈடுபாடு குறைந்து விட்டது என்ற காரணம் கூறி திடீரென அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மிட்சல் ஜோன்சன். ஆனால் ஸ்டார்க், ஹசல் வுட் போன்ற அனுபவமில்லாத வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி தீவிர ஆலோசனையில் உள்ளது. இதனையடுத்து, மிட்சல் ஜோன்சனைத்…
-
- 0 replies
- 473 views
-
-
லார்ட்சில் கரீபியனுக்கு லாடம் கட்டியவர்: உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன்! ஒரு விஷயம் காலம் காலமாக கோலோச்சி நிற்கத் தேவையானது - ஒரு வெற்றி. அப்படி இன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மூளை முடுக்கிலும், ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கிரிக்கெட்டை விதைத்ததும் ஒரு வெற்றி தான். உலகம் வியந்த அவ்வெற்றியை இந்தியாவிற்குப் பெற்றுத்தந்த ‘ஹரியானா ஹரிகேன்’ கபில் தேவின் பிறந்த தினம் இன்று. உலகின் அனைத்து அணிகளையும் பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி யாரும் எதிர்பாராத வகையில் இந்தியா வென்ற அந்த உலகக்கோப்பை தான், இந்திய அணியின் வெற்றிநடைக்கு இன்று அச்சாரம். அசத்தல் ஆல்ரவுண்டர் 1959ல் சண்டிகரில் பிறந்த கபில்தேவ் ரஞ…
-
- 0 replies
- 507 views
-
-
கால்பந்து ராஜாவுக்கு இன்று பிறந்த நாள் : ரொனால்டோ மதுவுக்கு 'நோ 'சொல்லிவிடுவது ஏன்? மூன்று முறை உலகின் தலைசிறந்த வீரருக்கான ‘பல்லான் டி ஓர்’ விருது ரொனால்டோவுக்கு இன்று பிறந்த தினம். களத்தில் இவரை சுற்றி சர்ச்சைகள் இருந்தாலும் ரொனால்டோ ஒரு கல்லுக்குள் ஈரம். ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வரும் 31 வயதான ரொனால்டோ, போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா நகரில் பிறந்தவர்.நவீன கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்கள் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான். இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் முட்டி மோதிக்கொள்ள, இருவரும் களத்தில் சாகசங்கள் நிகழ்த்துபவர்கள். இருவருக்குமென தனிச்சிறப்புகள் உண்டு. மெஸ்ஸியை விட ரொனால்டோவிற்கும்,ரொனால்டோவைவிட மெஸ்ஸிக்கும் சில …
-
- 0 replies
- 594 views
-
-
நியூஸி. கிரிக்கெட் நேரலையை 'மறந்த' இந்திய டிவி சேனல்கள்! நியூஸிலாந்தில் நடைபெறும் சர்வதேச இருதரப்பு ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இந்தியத் தொலைக்காட்சியில் எதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதில்லை. ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. உலகக்கோப்பை ஒரு ஐசிசி நிகழ்வு, அதனால் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச போட்டிகள் நேரடி ஒளிபரப்புக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலவரம். கடைசியாக நியூஸிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன, ஆனால் அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வத…
-
- 0 replies
- 570 views
-
-
இலங்கை இளையோர் அணிக்கு அடுத்த தோல்வி By Mohamed Azarudeen - மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று (19) இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணியினர் 44 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அங்கே இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றது. இந்த முத்தரப்பு தொடரில் தாம் விளையாடிய கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கையின் இளம் வீரர்கள் மீண்டும் அவர…
-
- 0 replies
- 915 views
-
-
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்து ஹசரங்க சாதனை Published By: Vishnu 12 Jan, 2026 | 02:33 AM (ரங்கிரி தம்புள்ளை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க நிலைநாட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3ஆவது விக்கெட்டை வீழ்த்தியபோது வனிந்து ஹசரங்க இந்த அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டினார். தனது 92ஆவது போட்டியில் 90ஆவது இன்னிங்ஸிலேயே 150 விக்கெட்களை…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
இந்திய ஒலிம்பிக் வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்..! ரியோ ஒலிம்பிக் கலந்து கொண்டு நாடு திரும்பிய இந்திய தடகள வீராங்கனை ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் தலைநகர் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் ஒ.பி.ஜெய்ஷா பங்கு பெற்று 89வது இடத்தை பிடித்தார். பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விட்டு இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். அப்போது, அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜெய்ஷா மட்டும் அதற்கு ஒத்துழைக்காமல் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார். ஆனாலும், அவரிடம் பரிசோதனை மேற்கொள்ள…
-
- 0 replies
- 469 views
-
-
சொன்னதைச் செய்துகாட்டிய மக்ஸ்வெல் அவுஸ்திரேலியாவின் கிளென் மக்ஸ்வெல், அதிரடியான - பல நேரங்களில் பொறுப்பற்றுவிளையாடும் - துடுப்பாட்ட வீரராக இருந்தாலும், சமூக ஊடக வலையமைப்புகளிலும் ஊடகங்களுடனான சந்திப்புகளிலும், நகைச்சுவையாகவும் எளிமையாகவும் பேசக்கூடிய ஒருவராவார். இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரொன் பின்ச், 18 பந்துகளில் அரைச்சதத்தைப் பெற்று, அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட வேகமான அரைச்சதம் என்ற சாதனையைச் சமப்படுத்தினார். அச்சாதனைக்கு சைமன் ஓ டொனல், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் இதற்கு முன்னர் சொந்தக்காரர்க…
-
- 0 replies
- 589 views
-
-
தோல்வி வெறுப்பல்ல; பாடம் கற்றுத்தரும் அனுபவம்: முஷ்பிகுர் ரஹிம் முஷ்பிகுர் ரஹிம் பேட்டிங். | படம்: ஏ.எஃப்.பி. இங்கிலாந்துக்கு எதிராக அரிய வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி தழுவியது பாடம் கற்றுத்தரும் அனுபவம் என்று வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார். “சில வேளைகளில் தோல்வி ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்தும். 15 மாதங்கள் டெஸ்ட் போட்டியே ஆடாமல் வங்கதேச அணி இப்படி ஆடுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே எங்களால் ஓரளவுக்கு நிரூபிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். இங்கிலாந்து போன்ற ஒரு அனுபவமிக்க அணிக்கு எதிராக நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை தெரிவிக்குமாறு ஆடினோம். தோல்வி வெறுப்பேற்றுகிறது என்ற வார்த்தையை நா…
-
- 0 replies
- 360 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: அர்செனலை 3-1 என வீழ்த்தியது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் அர்செனலை 3-1 என வீழ்த்தியது செல்சியா. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் செல்சியா, அர்செனல் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் செல்சியா அணியின் மார்கஸ் அலோன்சோ முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. பின்னர் 2-வது பாதி நேர …
-
- 0 replies
- 261 views
-