விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்தபின் தமது அணியுடன் கொண்டாடும் ஷாகிப் அல் ஹசன் 4 டிசம்பர் 2022 வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டா…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
தேசிய ரீதியிலான கிளிநொச்சி மாணவன் சாதனை! தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார். https://athavannews.com/2022/1314484
-
- 0 replies
- 455 views
-
-
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா தவிர்க்க 1950இல் எடுத்த முடிவுதான் காரணமா? என்ன முடிவு அது? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் 19 நவம்பர் 2022, 13:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கால்பந்து விளையாடி வரும் 32 சிறந்த அணிகளுக்கு இடையிலான பரபரப்பான பந்தயங்களுக்குப் பிறகு கால்பந்து உலகின் மன்னர் யார் என்பது முடிவாகும். நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த உலகக் …
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
கண்டிக்கப்பட்டார் அலெக்ஸ் ஹேல்ஸ் ! இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இலங்கிலாந்தின் கிரிக்கெட் ஒழுக்காற்று ஆணைக்குழுவினால் (சிடிசி) கண்டிக்கப்பட்டுள்ளார். மாணவர் விருந்தில் கருப்பு நிறத்தை பூசிய முகத்துடன் இருக்கும் பழைய புகைப்படமொன்று தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்து, இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ‘தி சன்’ என்ற பத்திரிகையில், ஹேல்ஸ் கறுப்பு முகத்தில் இருப்பதை காட்டும் பழைய புகைப்படம் ஒன்று வெளியானது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு புகைப்படம் வந்த பத்திரிகை மூலம் வெளியானதையடுத்து எழுந்…
-
- 2 replies
- 828 views
-
-
இந்தியா - நியூ ஸிலாந்து முதல் இருபது20 போட்டி கைவிடப்பட்டது By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 02:22 PM இந்தியா மற்றும் நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூ ஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெறவிருந்தது. எனினும், மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட இருபது20 சர்வதேச போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரின் 2 ஆவது போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுன்கானுய் நகரில் நடைபெறவுள்ள…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
FIFA உலகக் கிண்ண வரலாறும் நடந்துமுடிந்த அத்தியாயங்களும் -1 By DIGITAL DESK 2 18 NOV, 2022 | 03:41 PM (நெவில் அன்தனி) சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் வேறொன்றையும் ஒப்பிடமுடியாது. ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி உலகக் கிண்ணப் போட்டிகளின் தரத்தை ஒத்ததாக இருக்கின்ற போதிலும் உலகக் கிண்ணத்துக்கு உள்ள மவுசை அது பெற்றுவிட முடியாது. கத்தாரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள 32 நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றின்போது கால்பந்தாட்டம் எந்தளவு பிரபல்யம் பெற்றிருக்கிறது என்பதை காணக்கூடியத…
-
- 2 replies
- 385 views
- 1 follower
-
-
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 04:56 PM இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற…
-
- 0 replies
- 546 views
- 1 follower
-
-
கத்தார் உலககோப்பை போட்டி : பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை; மீறினால் சிறை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 04:56 PM கத்தாரில் பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிவதற்கும், உடல் உறுப்புகளைக் வெளிகாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது. 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்கின்றன, எனவே தோஹாவில் இறங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும். ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா…
-
- 54 replies
- 3.9k views
- 1 follower
-
-
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் அறிமுகம் By DIGITAL DESK 3 16 NOV, 2022 | 12:31 PM அடுத்த ஒலிம்பிக். மற்றும் பராலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவும் மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் விளையாட்டு விழாவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன. இப்போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ சின்னங்களை, பாரிஸ் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற வைபவத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டது. பிரிஜியன் கெப் (Phrygian cap) எனும் பழங்கால தொப்பிகளின் அடிப்படையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள…
-
- 0 replies
- 343 views
- 1 follower
-
-
12 வருடங்களின் பின் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 11:57 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்படி, 12 வருடங்களுக்கு பின்னர் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரொன்றை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இலங்கை கடைசியாக 4 ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டித் தொடரை 2012 ஆம் ஆண்டில் நடத்தியிருந்தது. அதற்கு முன்னதாக 2011 இல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் இணைந்து உலகக் கிண்…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட் : பயிற்சியாளராக இணைத்தது மும்பை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 10:34 AM ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரான் பொல்லார்ட் அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி துப்பாட்ட வீரர் கிரான் பொல்லார்ட். இவர் மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டுடன் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து இடம் பிடித்தார். அடுத்த ஆண்டு தொடருக்கான வீரர்கள்…
-
- 2 replies
- 366 views
- 1 follower
-
-
மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 10:16 AM மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பநதிப்பதாக பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ கூறியுள்ளார். பிரிட்டனின் டோக் ரீவி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (13) அளித்த செவ்வியொன்றிலேயே ரொனால்டோ இப்பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ 5 தடவைகள் பெலன…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
மகளிர் றக்பி உலகக் கிண்ணத்தை நியூ ஸிலாந்து வென்றது By DIGITAL DESK 3 12 NOV, 2022 | 05:53 PM மகளிர் றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் நியூ ஸிலாந்து அணி சம்பியனாகியது. நியூ ஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 34-31 புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து அணியை நியூ ஸிலாந்து வென்றது. இச்சுற்றுப்போட்டியில் 12 நாடுகள் பங்குபற்றின. இன்றைய இறுதிப் போட்டியை சுமார் 40,000 பேர் நேரில் பார்வையிட்டனர், 1991 முதல் நடைபெறும் மகளிர் றக்பி உலகக் கிண்ண போட்டிகளில் நியூ ஸிலாந்து 6 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற 3 ஆம் இடத்துக்கான ப…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
பளு தூக்கலில் பதக்கங்களை வென்று சாதித்த மாணவிகள் By NANTHINI 12 NOV, 2022 | 12:35 PM பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள். இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும்,…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
இந்திய ரி 20 அணி - அரையிறுதி தோல்விக்கு பின்னர் பல மாற்றங்கள் இடம்பெறலாம் By RAJEEBAN 11 NOV, 2022 | 12:36 PM இந்திய ரி20 அணி அடுத்த இரண்டு வருடங்களில் பாரிய மாற்றங்களை சந்திக்கும் ரோகித் சர்மா விராட்கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் ஓய்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மா விராட்கோலி அஸ்வின் போன்றவர்கள் மெல்ல மெல்ல அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டாரங்களை மேற்கோள்காட் டிதகவல்கள் வெளியாகியுள்ளன. தினேஸ் கார்த்திக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினும் ரி20 போட்டிகளில் தங்களின் இறுதி போட்டிகளை விளையாடியுள்ளனர் பி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வட்டார…
-
- 8 replies
- 343 views
- 1 follower
-
-
ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டு செய்தியாளர் 10 நவம்பர் 2022, 06:18 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. சேத்தன் சர்மா, அஜித் அகர்கர் முதல் இர்பான் பதான், புவனேஷ்வர் குமார் வரை பலர் இந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் - உதாரணமாக, அகர்கர…
-
- 1 reply
- 267 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் கீரன் வைரவநாதன் 08 NOV, 2022 | 09:35 PM (நெவில் அன்தனி) மெல்பர்னில் அடுத்த வருடம் (2023) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் கனிஷ்ட முதல் நிலை வீரர் கீரன் வைரவநாதன் தகுதிபெற்றுள்ளார். இந்த தகுதிகாண் சுற்று ஜப்பானின் யோக்காய்ச்சி டென்னிஸ் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறும். இந்தத் தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஆசிய கடல்சூழ் (Asia/Oceania) பிராந்தியத்திலிருந்து 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் அழைக்கப…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
உலகக் கிண்ண வாய்ப்பு கத்தாருக்கு வழங்கப்பட்டமை தவறு: பீபா முன்னாள் தலைவர் பிளாட்டர் By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 11:14 AM 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டமை ஒரு தவறு என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA - பீபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் கூறியுள்ளார். 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் உலக கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் நாடுகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010 ஆம் ஆண்டு ஏககாலத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றது. 2022 ஆம் ஆண்டின் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு இறுதியாக கத்…
-
- 3 replies
- 291 views
- 1 follower
-
-
இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது 06 NOV, 2022 | 07:04 AM இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றையதினம் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை நாடு திரும்…
-
- 105 replies
- 6.7k views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? நிதின் ஸ்ரீவeஸ்தவா பிபிசி செய்தியாளர், மெல்போர்னில் இருந்து (ஆஸ்திரேலியா) 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து அடிலெய்டுக்கு குவான்டாஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது. இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. ஒரு நாள் முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் எல்லா வீரர்களும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எகானமி பிரிவில் கார்னர் சீட்ட…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
2022 உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் 5 புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
-
- 2 replies
- 1k views
-
-
நேமார் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட்டனர் ஸ்பானிய அதிகாரிகள் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 05:38 PM பிரேஸில் கால்பந்தாட்ட நட்சத்திரமான நேமார், பார்சிலோனா கழகத்தில் இணைந்தமை தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மோசடி குற்றச்சாட்டுகளை ஸ்பானிய அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், 30 வயதான நேமார், அவரின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு எதிராக ஸ்பெய்னின் பார்சிலோனா நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோ அபராதம் ஆகியன விதிக்கப்பட வேண்டும் என ஸ்பானிய அதிகாரிகள் முன்னர் கோரியிருந்தனர். எனினும் வியப்பளிக்கும் வக…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
டி20 உலகக் கோப்பை: விராட் கோலி வேதனையை சாதனைகளாக மாற்றி மறுபிறவி எடுத்தது எப்படி? நிதின் ஸ்ரீவத்ஸவ் பிபிசி செய்தியாளர், ஆஸ்திரேலியாவிலிருந்து 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TREVOR COLLENS நல்ல காலமும் கெட்ட காலமும் மாறி மாறி வருவது இயல்பு தான். காலத்தை விட வலுவானது எதுவுமில்லை. காலம் தலைகீழாக மாறவும் அதிக நேரம் பிடிக்காது. இந்த சொலவடை பழையது தான். ஆனால், நிஜ வாழ்க்கையில், நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் உண்மை தான் இது. இந்திய கிரிக்கெட்டில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. விராட் கோலி தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2…
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
விராட்கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் - கோலி அனுஸ்கா கடும் சீற்றம் By RAJEEBAN 31 OCT, 2022 | 12:45 PM தங்கள் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து அதனை படமெடுத்து வெளியிட்ட நபரை விராட்கோலியும் அவரது மனைவி அனுஸ்கா சர்மாவும் கடுமையாக சாடியுள்ளனர். தங்கள் அந்தரங்கம் மீறப்பட்டுள்ளது என இருவரும் தெரிவித்துள்ளனர். தங்களிற்கு மிகவும் பிடித்தமான வீரர் குறித்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைவதும் பரபரப்பாவதும் அவர்களை சந்திப்பதற்கு துடிப்பதும் எனக்கு தெரியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு விராட்கோலி சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார். நான் அதனை பாரட்டுவேன் ஆனால் இந்த வீடியோ பயங்கரமானது எனது அந்தரங…
-
- 0 replies
- 651 views
- 1 follower
-