விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது November 12, 2018 1 Min Read மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதியில் 1 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மனீஷ் பாண்…
-
- 0 replies
- 351 views
-
-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐ.பி.எல் போட்டியிலிருந்து நீக்குவது குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ-யின் அவசர செயற்குழு கூட்டம் ஜூன் 10ந் தேதி கூடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் ஐ.பி.எல் சூதாட்டம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை இழந்ததாக டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அணியின் மற்றொரு உரிமையாளரும், குந்தராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கப்படும் என விதி இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து நீக்…
-
- 0 replies
- 351 views
-
-
பிபா கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் யூரோ கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் 10 இடங்களும், வேல்ஸ் 15 இடங்களும் முன்னேறியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் முதன்முறையாக கோப்பையை வென்றது. போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கத்துக்குட்டி அணியான வேல்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முன்னேறியதால் பிபா தரவரிசையில் வேல்ஸ் அணி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்குமுன் வேல்ஸ் அணி 26-வது இடத்தில் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட ப…
-
- 0 replies
- 351 views
-
-
111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான் 111 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகளை வெற்றிகொண்டது பாகிஸ்தான். பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டி கள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி சார்ஜாவில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்தப் போட்டிகளில் 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று T20 தொடர் போன்று ஒருநாள் தொடரிலும் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் கோல்டர் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பாட பணித்தார். அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 260 ஓட்டங்கள் பெற்ற …
-
- 0 replies
- 351 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து வொற்சன் வெளியேற்றம் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஷேன் வொற்சன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற போட்டியொன்றில் பந்துவீசிக் கொண்டிருந்த போது, காயமடைந்தார். அவரது அடிவயிற்றுப் பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபெற மாட்டார் எனவும், உடனடியாக அவுஸ்திரேலியா திரும்புவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 த…
-
- 0 replies
- 350 views
-
-
யாழ்ப்பாணம் இனியபாரதி. யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறும் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் , யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இந்திய துணைத்தூதராக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ், இலங்கை சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய , ஞானம் பவுண்டேசனின் உப தலைவர் சுந்தரம் அருமைநாயகம் ஆகி…
-
- 2 replies
- 350 views
-
-
முதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான். பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார். அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது. அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார். எனினும் ஆறாவது விக்கெட்டிற்காக இணைந்த பகர் ஜமானும் பாக்கிஸ்தான் அணியின் தல…
-
- 0 replies
- 350 views
-
-
ஜிடானை வசை பாடிய ரொனால்டோ! தனக்குப் பதிலாக சப்ஸ்டிட்யூட் பிளேயரை களமிறக்கியதால், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானை, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே லா லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் உலகின் செல்வாக்கு மிக்க அணியான ரியல் மாட்ரிட், லாஸ் பல்மாஸ் அணியை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, 72வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக, மாற்று வீரரை களமிறக்கினார் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான். இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். களத்தில் இருந்து சிடுசிடு முகத்துடன் …
-
- 0 replies
- 350 views
-
-
இன்று மே.இ.தீவுகள் டி 20ல் மோதல் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டி 20 ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதில் டி 20 ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ட்ரிட்டில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. அதேவேளையில் வெற்றி ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்…
-
- 3 replies
- 350 views
-
-
பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . #Bournemouth 0-0 Tottenham Hotspur புள்ளி பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்த டோட்டன்ஹாம் அணி பெர்னெமௌத் அணியுடனான போட்டியை சமன் செய்ததன் மூலம் 5 புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. #Arsenal 0-0 Middelsbrough ஆர்சனல் அணி அறிமுக அணியான மிடில்ஸ்ப்ரு அணிக்கெதிராக கோல் ஏதும் இல்லாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. #Burnley 2-1 Everton எவெர்ட்டன் அணிக்கெதிராக இறுதி நேர கோல் உதவியுடன் வெற்றியை பெற்றுள்ளது பெர்ன்லி. பெர்ன்லி சார்பாக வொர்க்ஸ் மற்றும் ஆர்ப…
-
- 0 replies
- 350 views
-
-
சம்பியன்களுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு - படங்கள் இணைப்பு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் அபார வெற்றிவாகை சூடிய பாகிஸ்தான் அணிக்கு அவர்களின் தாய்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்ப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் நேற்றுமுன்தினம் சம்பியன்ஸ் கிண்ணத்துடன் நாடு திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது. அத்தோடு வீதியோரங்களில் ரசிகர் கூட்டம் பொங்கிவழிய சம்பியன்ஸ் அணி வலம் வந்தது. …
-
- 1 reply
- 350 views
-
-
விராட் கோலி நடத்தை: சுனில் கவாஸ்கர் அதிருப்தி விராட் கோலி. | படம்: ஏஎப்பி. மொஹாலி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட இறுதியில் விராட் கோலி மைதானத்தில் நடந்து கொண்ட விதம் சுனில் கவாஸ்கரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து செல்லும் போது, விராட் கோலி தனது விரலை வாயில் வைத்து ‘உஷ்’ என்பது போல் செய்கை செய்தார். இந்தச் செய்கை குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “என்ன கூறியிருந்தாலும் சரி, இத்தகைய நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அவுட் ஆகி வெறுப்பில் செல்லும் வீரரின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக செய்வது நாகரிகமல்ல. அவரே அவ…
-
- 0 replies
- 350 views
-
-
உசைன் போல்ட்டின் வேகம் குறைகிறது? உசைன் போல்ட் 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த பிறகு. | படம்: ராய்ட்டர்ஸ். 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தன் வாழ்நாளின் மோசமான ஓட்டமே என்று கூறுகிறார் உசைன் போல்ட் 100 மீ, 200 மீ உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஜமைக்க அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ராண்டல் தீவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் 200 மீ உலக சாதனை 19.19 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடிடாஸ் கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டுள்ளார்.…
-
- 0 replies
- 350 views
-
-
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் MCC அணிக்காக குமார் சங்கக்கார லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்ட MCC அணியின் துடுப்பாட்ட வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான யூனிஸ் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் சர்வதேச மட்டத்தில் 28,922 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள், அண்மையில் இங்கிலாந்து உள்ளூர் பருவகால போட்டிகளில் 1000 ஓட்டங்களை குவித்த குமார் சங்…
-
- 0 replies
- 350 views
-
-
ஜே.பி.எல் போட்டிகள் ஆரம்பம் ஜே.பி.எல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபதுக்கு– 20 கிரிக்கெட் போட்டிகள் இன்று (31) முதல் யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொக்குவில் இந்து கல்லூரிகளின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்தச் சுற்றுப்போட்டி இம்முறை 3 வருடமாக லைக்கா மொபைல் அனுசரணையில் நடத்தப்படுகின்றது. இம்முறை சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குபற்றுவதுடன், அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிறாஸ்கோப்பர்ஸ், சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, திருநெல்வேலி கிரிக்கெட் அணி, ஹாட்லி ஆகியன ஒரு பிரிவாகவும், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், சென்ரல், யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, விங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவாக போட்டி…
-
- 1 reply
- 350 views
-
-
டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வஹாப் ரியாஸ் ஆட்ட நாயகன் விருது பெறுகிறார். | படம்: கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்டில் நேற்று நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விகளை அடுத்து டி20 கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமதுவை கேப்டனாக்கியது பாகிஸ்தான் அணி நிர்வாகம். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஷர்ஜீல் கா…
-
- 0 replies
- 350 views
-
-
கொல்கத்தாவின் பயிற்சியாளரானார் October 24, 2015 அடுத்த ஆண்டுக்கான ஐ.பி .எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த பெலிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட் டார். இதையடுத்து கலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2481&cat=2
-
- 0 replies
- 350 views
-
-
தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட உத்தியோபூர்வமற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருந்த குசல் பெரேரா இப்போட்டியில் 13 ஓட்டங்களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் மூல…
-
- 0 replies
- 350 views
-
-
ஆஸ்திரேலிய வழியில் ஆடுகிறது இந்தியா; மாற்றத்துக்குக் காரணம் கோலி: ‘மிஸ்டர் கிரிக்கெட்’ புகழாரம் இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கேப்டன் கோலி வெற்றிக்கான தீவிர வேட்கை கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை. கடினமாக ஆடிய இந்திய அணி…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார் : சங்கா இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவர் நான் அணித் தலைவராக செயற்பட்ட காலம் முதல் தனிப்பட்ட முன்விரோதம் மற்றும் பழிவாங்கல் காரணமாக என்னை தொந்தரவு செய்துவருவதாக இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 தொடரில் உள்ளூர் அணிக்காக விளையாடாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட லசித் மலிங்க எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளமை மூலம் இது தெளிவாக புலப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த முறை, iஹாராபாத் அணிக்காக விiளாயட விரும்பிய போதிலும் தன்னுடைய விடயத்தில் கிரிக்கெட் சபையின் ஒரு அதிகார…
-
- 0 replies
- 350 views
-
-
ஹர்திக் பாண்டியா – கேஎல் ராகுல் மீதான தடை நீக்கம்: January 25, 2019 இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்ததனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவர்கள் மீது தடை விதித்திருந்தது. இதனையடுத்து அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பியிருந்ததுடன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதா…
-
- 0 replies
- 350 views
-
-
கிரிக்கெட்டை விடுத்து டென்னிசை பிடிக்கும் கேரள அரசு... ஏன்? திருவனந்தபுரம்: கேரள சுற்றுலா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான விளம்பர தூதராக புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முடிவு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டெஃபி கிராஃபுக்கு அளிக்கப்படும் சம்பளம், சலுகைகள் என்னவென்று அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற சில பிரபலங்களையும் கேரள மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்த அம்மாநில அ…
-
- 0 replies
- 350 views
-
-
பிரச்சினை ஓய்கிறது: ஒருநாள் போட்டிக்கு திரும்பும் கெய்ல், பிராவோ, நரைன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வருவதால் கெய்ல், பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, கீரன் பொல்லார்டு, சுனில் நரைன் ஆகியோர் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் ஏற்பட்டதால், டி20 கிரிக்கெட் போட்டியை தவிர மற்ற விளையாட்டுகளில் பங்கேற்க முடியாமல் இருந்தனர். அதற்குக் காரணம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின்படி ஒ…
-
- 0 replies
- 350 views
-
-
பாகிஸ்தானுக்கு ஆடுவதை விட இங்கிலாந்துக்கு ஆடலாம்: வெறுப்பில் ஜுனைத் கான் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆட பரிசீலித்து வருகிறார். தொடர்ந்து தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு நிர்வாகம் ஒதுக்கி வருவதால் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக ஜுனைத் கான் தெரிவித்தார். 71 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வரிசையில் இவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இருந்தாலும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற…
-
- 0 replies
- 350 views
-
-
Nadia Comaneci: ஒலிம்பிக் சரித்திரத்தை நிரந்தரமாக மாற்றி எழுதிய ஜிம்னாஸ்டிக் நாயகி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக எடை தூக்கியது யார்? அதிக கோல் அடித்தது யார்? அதிக ரன்கள் எடுத்தது யார்? குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தது யார், அதிக தூரம் வீசியது யார்? என எல்லா விளையாட்டுகளிலும் மிகத் தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஆனால் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சில விளையாட்டுகளில் முழுக்க முழுக்க நடுவர்களின் தனிப்பட்ட புள்ளிகளைப் பொறுத்து வெற்றியாளர் தீர்மனிக்கப்படுவார். அப்படிப்பட்ட விளையாட்டில், ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக 10-க்கு 10 புள்ளிகளைப் பெற்று மொத்த உலகையும் வ…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-